Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 20 [FINAL]

Advertisement

S
“என்னங்க..” என்றவளை அவனுக்குப் பக்கத்து அறைக்குள் இழுத்துச் சென்று அவள் கன்னத்தோடு கன்னம் இழைந்து, காதில் ஆழ்ந்து பல வருடங்களுக்கு முன்னால் சொன்னது போலவே சொன்னான்.



“எனக்கு ஃப்லீம்ஃபேர் கிடைச்சிருக்காம்…”



“வாவ்.. சூப்பர்…. எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமா…?” என்றபடி அவனை கட்டிக் கொள்ள



“நீ மட்டும் வரலன்னா எனக்கு எதுவுமே சாத்தியமில்ல மது…. தேங்க்ஸ்….” என்று அவள் நெற்றியில் அழுந்த இதழ் பதித்தவன்



“மது.. நான் அம்மாப்பிள்ளைன்னு உனக்குத் தெரியும் தானே…?”



“அது தான் ஊருக்குத் தெரியுமே… எனக்காத் தெரியாது.. கழுத வயசாகியும் அம்மா சாப்பாடுப் போட்டா தானே சாப்பிடுவீங்க…” என அவள் கிண்டலாய் சொல்ல



“உன்னை…. போடி… அதை விடு… எங்க அம்மா எது சொன்னாலும் நான் தட்டாமல் செஞ்சிடுவேன் இல்லையா..?”



“அய்யோ.. ஆமாங்க… என்ன விஷயம்…?” என அவள் பொறுமையிழந்து கேட்கவும்



“மது.. அம்மா இன்னொரு பேரப்பிள்ளை வேணும்னு கேட்டாங்க…. இல்லையா…” என்றபடி அவளுள் தன்னைத் தொலைக்க முயற்சிக்க, அவன் மயக்கத்தைக் கண்டுக் கொண்டவள் அவனுக்கு முன்னே அவனிடம் கிறங்கி மயங்கிப் போனாள். அவர்களது கண்டதும் கொண்ட மயக்கமல்ல.. கடைசிவரை உள்ள மயக்கம்..!!





கடவுள் நீதானா..?

நான் வரம் தான் கேட்டேனா…?



***********************************************************



ஃப்லிம்ஃபேர் விருதுக்காக வந்திருந்தனர் ராஜ் நந்தனின் குடும்பத்தினர் அனைவரும். மதுரவசனியின் குடும்பம் டீவியில் முன் அமர்ந்திருக்க, அவர்களோ நேரிலே சென்று அவன் விருதை வாங்கப்போவதைக் கண்டனர்.



மதுவின் நல்வாழ்வைப் பார்த்து அவர்கள் வீட்டினர் அனைவருக்கும் பெருமையே. டீவி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்த சரண் கூட,



மனைவியிடம், “என் தங்கச்சியை இப்படி டீவியில பார்த்தா தான் உண்டு… உங்கண்ணா அவளை விட மாட்டேங்கிறார்… நீ என்னடான்னா அவங்க கூப்பிட்டா என்னை விட்டு சென்னைக்குப் போற” எனக் குறைபட



“உங்களுக்கு திறமைப் பத்தலங்க…. எங்க அண்ணா மாதிரி அண்ணியையும் விடாம என்னையும் அவர் இருக்க இடத்துக்கு வர வைக்கிறார்.. அது உங்களால முடியாது மாமா…” எனக் கீர்த்திச் சொல்ல



“அது சரிதான்..” என்றான் ஆமோதிப்பாய்.



அவனது மடியில் அவர்களது மூன்று வயது மகன் ஸ்ரீப்ரசாத் அமர்ந்திருக்க, சுலோச்சனா, பூம்பொழில், மோகனா, ஹரிணி அனைவரும் டீவி முன் இருந்து நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு களித்தனர்.



அங்கு விழா நடக்கும் ஹைதரபாத்தில் தொகுப்பாளர் விருது கொடுத்த பின் ராஜாவைப் பாட சொல்ல அவன் ,



“நேர முள்ளைப் பின் இழுத்தும்

வாரம் எட்டு நாள் கொடுத்தும்

சுற்றும் பூமியைத் தடுத்துமே

போதவில்லையே

போதவில்லையே

உன்னைப் போல் போதை ஏதுமில்லையே…!”



என்று பாடினான். ஆம் அவன் மனம் குரலாய் மாறி அவன் மனைவியின்பால் குழைந்தது. அவனது காதல் போதாது… தீராது…!!



நிகழ்ச்சியெல்லாம் முடிந்தப் பின் அவர்கள் நட்சத்திர விடுதிக்கு வரும் வழி அவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்த மனைவியின் புறம் பார்வையைத் திருப்பாதவன் அவர்கள் அறைக்குள் நுழைந்ததும்,



அவளைப் பற்றி அழுத்தமாய் முகமெங்கும் முத்தங்கள் பதித்தவன் “ஏன் அப்படி பார்க்கிற… விட்டா அங்கேயே கண்ட்ரோல் இழந்து எதாவது செஞ்சிருப்பேன்.. என்னை டார்ச்சர் பண்றதே உனக்கு வேலையாப் போச்சுடி…” என்றபடி அவள் இதழில் முத்தமிட,



“நீங்க இன்னிக்கு அந்த பாட்டு பாடினதும் நான் செம ஹாப்பி தெரியுமா…? உங்க காதல் குறையாதுன்னு தெரியும்.. ஆனா உங்க வாயால கேட்கும்போது இன்னும் சந்தோசம்…. சூப்பருங்க நீங்க,” என்றவள் அவனின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டாள்.



அவளை இறுக்கி அணைத்தவன், “இந்த ராணி ராஜா கூட இருக்க வரைக்கும் ராஜா சூப்பர் தான் டி… உன்னோட இந்த சூப்பருக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்..” என்றான் அவள் கன்னங்களில் இன்னும் முத்தமிட்டவாறே.



“அதை நானும் சொல்வேன்.. இந்த ராஜாவால தான் ராணி ஜெயிக்கிறேன்…” என்றாள் நிறைந்த மனதோடு. பல வருடங்கள் அவள் மனதில் உழன்ற கேள்விக்கு அவளே விடையானாள்.



காதல் வாழ்க்கையோடு இயைந்த ஒன்று. இணைப்பிரியாத ஒன்று. அது உந்து சக்தி… அந்த உந்துதலே அவளை உயிர்ப்போடு வைத்து அவள் வாழ்வின் லட்சியங்களை அடைய உதவுகிறது. அன்பைத் தடைக்கான வேலியாக அமைத்துக் கொள்வதும், பாதுகாப்புக்கான அரணாய் அமைத்துக் கொள்வதும் அவரவர் கையிலே…!



“அது என்னடி ஜெயிக்கிறேன்னு சொல்ற.. ராஜா ராணி ஜெயிக்கிறோம்னு சொல்லு… நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாதாம்.. நாம்.. சொல்லு..” என்றவன் அவளை சொல்ல விடாமல் அவள் இதழ்களைச் சிறைச் செய்தான். நான் அழிந்துப் போய் நாமாய் ஆன அழகிய சங்கமம் அது.



ஆட்டம் நிறைவு!!!





**********************

Heyyyyyyyyyyyyy friendsssssssssssss thanks soooooooooooo much it is going to be 2 years since I have completed Raja Rani....thankssssssssssss for ur support and wishes.......:love::love::love::love::love::love::love:

thankssssssssssssssssssss much
ashokar story apuram neraya episodes my favorite lines elame இந்த கதையில வரதுதான்...ரொம்ப ரொம்ப நன்றிகள்
@Kavyajaya naane maranthalum epi crt ah keta thanga ponne over over daa


:love:?
Super story màm
 
Super finishing mam ????
All characters arumai ya irruthathu ???
Waiting for alar athi plz ud
 
Dear pavi sis....அருமையான கதை... சின்ன வயசு தானே உங்களுக்கு, ஆன ரொம்பவும் பக்குவமான எழுத்து வடிவம்.... Hats off you sis....
 
Top