காதல் 20:
ஒரு வருடத்திற்குப் பின்..
தஞ்சாவூரில் உள்ள பிரபல திருமண அரங்கில் ஜோராக நடைப்பெற்றது ஹம்சகீதாவின் வளைகாப்பு வைபவம்.
வேலைப்பார்த்துக் கொண்டிருந்த மதுரவசனியை அழைத்த ராஜா,
“மது…. முதல்ல நீ போய் சாப்பிட்டு வா…” எனச் சொல்ல
“ஆம்பிளைங்க எல்லாம் சாப்பிடுறாங்க.. போய் நீங்களும் சாப்பிடுங்க.. நான் அப்புறமா சாப்பிடுறேன்…” என்றாள் மதுரவசனி.
தன் எட்டு மாதக்குழந்தை ஆதித்யாவைக் கையில் வைத்திருந்த ராஜா,
“மது.. சொன்னா கேளு.. முதல்ல நீ சாப்பிடுடா.. அப்புறமா ஆதி அழ ஆரம்பிச்சிட்டா நீ சரியா சாப்பிட மாட்ட… இவனுக்குப் பால் கொடுக்கனும்.. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல தூக்கத்து அழுவான்.. அதுக்குள்ள நீ சாப்பிட்டுடி..” என அவளிடம் வலியுறுத்திச் சொல்ல,
அங்கே வந்தாள் கீர்த்தி. கீர்த்திக்கும் சரணுக்கும் திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன.
“அண்ணி… அண்ணா உங்களை சாப்பிட வைக்காம போக மாட்டார்.. ஏன் நிக்கிறிங்க… நானும் சாப்பிட போறேன்.. வாங்க…” என அழைக்க
“இல்ல…. கீர்த்தி… நான் சாப்பிட்டு வரதுக்குள்ள இவன் அழ ஆரம்பிச்சிடுவான்… அதுக்கு அப்புறம் தூங்கும்போது இவரைத் தான் தேடுவான்.. இவரும் சாப்பிடாமலே அவனைத் தூக்கிப் போட்டுப்பார்.. அப்படியே எத்தனை நாள் சாப்பிடாம தூங்கியிருக்கார் தெரியுமா… அவனைத் தூக்கிப் படுக்கையிலும் போட மாட்டார்.. கேட்டா தூக்கம் கலைஞ்சிடும்பார்… சண்டைப் போட்டு நான் ஓய்ஞ்சுப் போயிட்டேன்… புள்ளைன்னா இவருக்குக் கண்ணே தெரியாது…” எனக் கணவனின் பிள்ளைப் பாசம் கண்டு அவள் உண்மையை உரைத்தாள்.
ராஜா அப்படித்தான். அவன் மகனைக் கையில் ஏந்திய தருணம் முதல் தாங்கியது அவன் தான். அவனது ரத்த உறவை அப்படி போற்றிப் பாதுகாத்தான். குழந்தை என்று வந்துவிட்டால் அவனுக்குக் கண்ணே தெரியாது. அப்படி ஒரு பாசம்…!! என் குழந்தை என்ற கர்வம்…!
“அண்ணி.. நீங்க பேசுறதைப் பார்த்தா அண்ணா மேல உள்ள அக்கறை மாதிரி தெரியல… என் மருமகன் மேல உள்ள பொறாமை மாதிரி இல்ல தெரியுது…” எனக் கிண்டல் செய்ய
“சரியா சொன்னடா கீது… என் தங்கச்சி புத்திசாலி.” என ராஜா ச
“அண்ணா… நீங்களும் டிமிக்கிக் கொடுக்காம.. பத்து நிமிசம் சேர்ந்தே சாப்பிட்டு வாங்க…. நான் இவனை வைச்சிக்கிறேன்…” எனச் சொல்லவும் இருவரும் சேர்ந்து சாப்பிடச் சென்றனர். ஆனால் பத்து முறை பத்திரம் சொல்லியே தன் மகனைத் தங்கையிடம் விட்டுச் சென்றான் ராஜ் நந்தன்.
குழந்தையைக் கையில் வைத்திருந்த கீர்த்திகாவைத் தேடிய அவள் கணவன் சரண்,
“ஏய்… கீத்து….” என அன்போடு அழைக்க
“கீத்து.. ஓலைன்னு கூப்பிடாதீங்க மாமா…” எனச் சிணுங்க
“சரிடி… சரிடி… ஆமா என்ன சொல்றான் என் மருமகன்…?” என்றபடி குழந்தையை வாங்க முயற்சிக்க, அவனோ கீர்த்தியிடமிருந்து போக மறுத்தான்.
“பார்டா… வர மாட்டியா மாமா கிட்ட….” என அவன் சொடுக்குப் போட்டு அழைக்க
“நீங்க அவனுக்குப் பழக்கமில்ல இல்லையா… நான் அஞ்சு மாசம் அவன் கூடவே இருந்திருக்கேன்.. வயித்துல இருக்கும்போது என் பேச்சைக் கேட்டுட்டே இருந்திருப்பான் இல்லை.. அதான்…” எனக் கீர்த்தி சொல்ல
“ஆமா எங்கடி உங்க பெரியண்ணா பழக விட்டார்…? அவர் தான் என் தங்கச்சியை வீட்டுக்கு அனுப்ப மாட்டாரே…” எனக் குறைபட,
“அவரே அனுப்பினாலும் அண்ணி வரமாட்டாங்க..” என்றாள் கீர்த்தி.
ஐந்து நாட்கள் பிரிந்திருந்ததுக்கே இருவரும் அப்படி ஏங்கிப்போயிருக்க, மதுரவசனி ராஜாவிடம் முன்பே சொல்லிவிட்டாள்,
“வளைக்காப்பு இங்கேயே வைச்சிக்கலாம்… உங்களை விட்டு நான் இரண்டு மாசமெல்லாம் போய் இருக்க மாட்டேன்… அப்படி போகனும்னா நீங்களும் வாங்க… முடியாதுனா எங்க வீட்டுல பேசி சம்மதிக்க வைங்க” என மிரட்டலாக சொல்ல
“நீ சொல்லி நான் செய்யாம இருப்பேனா.. கண்டிப்பா செஞ்சிடுறேன் மது. என் மது எங்கூட இருக்க வைக்கறதை விட வேற என்ன வெட்டி முறிக்கிற வேலை எனக்கு இருக்கு…?” என்றான் பெருமையாக.
இந்த ஒரு வருடத்தில் மது ஊருக்குப் போய் இருந்த நான்கு நாட்களும் ராஜாவும் உடன் வந்திருப்பான். இல்லாவிட்டால் அவள் தனியா செல்லவே மாட்டாள்.
“கீத்து… சீக்கிரமே ஒரு அழகான பொண்ணா பெத்து கொடுத்து என் மருமகனைக் கரெக்ட் செய்யனும்டி..” எனக் கண்ணடித்து சரண் கூற
“அதுக்கு அப்புறம் நீங்க இவனைக் கரெக்ட் செய்யத் தேவையில்ல… இவனே நம்ம பொண்ணை செஞ்சிடுவான்..” எனச் சொல்லி சிரிக்க
அவள் தோளில் கைப்போட்ட வண்ணமே ,
“அதுக்கு முதல்ல உன்னைக் கரெக்ட் செய்யனும்டி..” என்றான் அவள் காதில் ரகசியமாய்.
ஹம்சாவைத் தன் தாய் வீட்டில் விடச் சென்ற தீபன் கிடைத்தத் தனிமையில் மனைவியிடம்,
“ஹம்மு… டெய்லி போன் செய்… ஆபிஸ்ல இருந்தா நான் எடுக்க மாட்டேன்.. கோச்சுக்காத…” எனச் சொல்ல
“அதெல்லாம் நான் கோச்சுக்க மாட்டேன்…”
“சரி ஹம்மு.. இப்ப என்னை லவ் பண்றியா..?” எனக் கேட்க
ஆயிரம் முறையாவது அவன் இக்கேள்வி அவளிடம் இதுவரை சலிக்காமல் கேட்டிருப்பான். அவளும் சலிப்பின்றி பதில் சொன்னாள்.
“உங்களை… லவ் பண்றியாவாம்..? லவ் பண்ணாமத்தான் இப்படி இருக்கேனா…?” என அவனை அருகில் இழுத்துக் கேட்க
“அதை ஒரு நாளாவது சொன்னியா…நீ..?”
“முதல்ல உங்க மேல கோவம் தான்.. அப்புறம்… நான் வேலையை விட்டுப் போனப்போ அக்ரீமெண்ட் படி ஒரு வருசம் முடியாம போனேன்… நீங்க நினைச்சிருந்தா அதை வைச்சு என்னை மிரட்டியிருக்கலாம்… ஆனா செய்யல.. அதுல உங்க மேல மரியாதை வைச்சிருந்தேன்…”
“மரியாதைக் கொடுத்த சரி.. இப்போ..
“இப்ப தான் மனசைக் கொடுத்திட்டேனே..” என்றவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன்
“இது போதும் ஹம்மு.. ஜாக்கிரதை.. டெலிவரிக்கு முன்னாடியே நான் வந்துடுவேன்…. பார்த்து இருடா..” என்றபடி பிரிய மனமே இல்லாமல் மனைவியைப் பிரிந்து சென்றான்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு..
தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற வருடாந்திர பிஸினஸ் கூட்டத்தில் அந்த வருடத்திற்கான சிறந்த தொழிலதிபர் விருது ‘திருமதி.மதுரவசனி ராஜ் நந்தனுக்கு வழங்கப்பட்டது.
பரிசைப் பெற்றக் கையோடு கணவனுக்கு அழைத்தவள், “நந்து… நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்..” எனத் தன் சந்தோசத்தைச் சொல்ல
“ நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்..” என்றான் அவளை விட உற்சாகமான குரலில் அவளது கணவன்.
“அதான் தெரியுமே… நீங்க என்னை விட எல்லாத்திலேயும் அதிகம்னு…” என்றாள் பெருமிதமாகவே.
“சரி மது.. அடுத்து என்ன ப்ளான்…?”
“ம்… இப்ப ஆடிட்டர் கூட மீட்டிங் இருக்கு.. அது முடிச்சதும் ராஜ் டவர்ஸ் போய் கொஞ்சம் ஆபிசைப் பார்த்துட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்துடுவேன்….”
“சரி நான் போய் ஆதியையும் ஆதிராவையும் ஸ்கூல்ல இருந்து அழைச்சிட்டு வீட்டுக்குப் போறேன்… நான் இப்ப ஃப்ரியாத்தான் இருக்கேன்..” என்றான்.
ஆதித்யா ராஜாவின் மகன். ஆதிரா தீபனின் மகள். இருவருமே யூகேஜி படிக்கின்றனர்.
டிரைவர் இருந்தும் சுந்தரும் கூட பேரப்பிள்ளையை அழைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறிய போதும் சம்பாதிப்பது பிள்ளைக்களுக்காகத் தானே நானே அழைத்து வருகிறேன் என்று விட்டான்.
“சரி.. ஆனா பிள்ளைங்க கேட்கிறாங்கன்னு ஐஸ்கீரிமா வாங்கித் தராதிங்க… அப்புறம் சளிப்பிடிச்சா உங்களை சும்மா விட மாட்டேன்” என மிரட்ட
“சரிதான் போடி… என் பசங்களுக்கு நான் வாங்கித் தருவேன்..” என்றான் மானசீகமாய். கத்தி சொன்னால் அவள் அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுவாளே என்ற பயம் தான்.
இப்படி பிள்ளைகள் கேட்கிறார்கள் என்று ஐஸ்கீரிம் வாங்கித் தருபவன் பின்னர் அவர்களுக்கு ஜூரம் வந்தால் மருத்துவர் ஊசிப் போட்டால் ஹாஸ்பிட்டலை ஒரு வழியாக்கி விடுவான். தன் பிள்ளை தம்பி பிள்ளை என்ற பாகுபாடே அவனிடம் கிடையாது. இரு குழந்தைகளும் அவனுக்கு உயிர்.
சாயங்காலம் வீடு திரும்பும் போது காரில் கடந்த கால நினைவுகளோடு பயணித்தாள் மதுரவசனி.
ஒரு வருடத்திற்குப் பின்..
தஞ்சாவூரில் உள்ள பிரபல திருமண அரங்கில் ஜோராக நடைப்பெற்றது ஹம்சகீதாவின் வளைகாப்பு வைபவம்.
வேலைப்பார்த்துக் கொண்டிருந்த மதுரவசனியை அழைத்த ராஜா,
“மது…. முதல்ல நீ போய் சாப்பிட்டு வா…” எனச் சொல்ல
“ஆம்பிளைங்க எல்லாம் சாப்பிடுறாங்க.. போய் நீங்களும் சாப்பிடுங்க.. நான் அப்புறமா சாப்பிடுறேன்…” என்றாள் மதுரவசனி.
தன் எட்டு மாதக்குழந்தை ஆதித்யாவைக் கையில் வைத்திருந்த ராஜா,
“மது.. சொன்னா கேளு.. முதல்ல நீ சாப்பிடுடா.. அப்புறமா ஆதி அழ ஆரம்பிச்சிட்டா நீ சரியா சாப்பிட மாட்ட… இவனுக்குப் பால் கொடுக்கனும்.. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல தூக்கத்து அழுவான்.. அதுக்குள்ள நீ சாப்பிட்டுடி..” என அவளிடம் வலியுறுத்திச் சொல்ல,
அங்கே வந்தாள் கீர்த்தி. கீர்த்திக்கும் சரணுக்கும் திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன.
“அண்ணி… அண்ணா உங்களை சாப்பிட வைக்காம போக மாட்டார்.. ஏன் நிக்கிறிங்க… நானும் சாப்பிட போறேன்.. வாங்க…” என அழைக்க
“இல்ல…. கீர்த்தி… நான் சாப்பிட்டு வரதுக்குள்ள இவன் அழ ஆரம்பிச்சிடுவான்… அதுக்கு அப்புறம் தூங்கும்போது இவரைத் தான் தேடுவான்.. இவரும் சாப்பிடாமலே அவனைத் தூக்கிப் போட்டுப்பார்.. அப்படியே எத்தனை நாள் சாப்பிடாம தூங்கியிருக்கார் தெரியுமா… அவனைத் தூக்கிப் படுக்கையிலும் போட மாட்டார்.. கேட்டா தூக்கம் கலைஞ்சிடும்பார்… சண்டைப் போட்டு நான் ஓய்ஞ்சுப் போயிட்டேன்… புள்ளைன்னா இவருக்குக் கண்ணே தெரியாது…” எனக் கணவனின் பிள்ளைப் பாசம் கண்டு அவள் உண்மையை உரைத்தாள்.
ராஜா அப்படித்தான். அவன் மகனைக் கையில் ஏந்திய தருணம் முதல் தாங்கியது அவன் தான். அவனது ரத்த உறவை அப்படி போற்றிப் பாதுகாத்தான். குழந்தை என்று வந்துவிட்டால் அவனுக்குக் கண்ணே தெரியாது. அப்படி ஒரு பாசம்…!! என் குழந்தை என்ற கர்வம்…!
“அண்ணி.. நீங்க பேசுறதைப் பார்த்தா அண்ணா மேல உள்ள அக்கறை மாதிரி தெரியல… என் மருமகன் மேல உள்ள பொறாமை மாதிரி இல்ல தெரியுது…” எனக் கிண்டல் செய்ய
“சரியா சொன்னடா கீது… என் தங்கச்சி புத்திசாலி.” என ராஜா ச
“அண்ணா… நீங்களும் டிமிக்கிக் கொடுக்காம.. பத்து நிமிசம் சேர்ந்தே சாப்பிட்டு வாங்க…. நான் இவனை வைச்சிக்கிறேன்…” எனச் சொல்லவும் இருவரும் சேர்ந்து சாப்பிடச் சென்றனர். ஆனால் பத்து முறை பத்திரம் சொல்லியே தன் மகனைத் தங்கையிடம் விட்டுச் சென்றான் ராஜ் நந்தன்.
குழந்தையைக் கையில் வைத்திருந்த கீர்த்திகாவைத் தேடிய அவள் கணவன் சரண்,
“ஏய்… கீத்து….” என அன்போடு அழைக்க
“கீத்து.. ஓலைன்னு கூப்பிடாதீங்க மாமா…” எனச் சிணுங்க
“சரிடி… சரிடி… ஆமா என்ன சொல்றான் என் மருமகன்…?” என்றபடி குழந்தையை வாங்க முயற்சிக்க, அவனோ கீர்த்தியிடமிருந்து போக மறுத்தான்.
“பார்டா… வர மாட்டியா மாமா கிட்ட….” என அவன் சொடுக்குப் போட்டு அழைக்க
“நீங்க அவனுக்குப் பழக்கமில்ல இல்லையா… நான் அஞ்சு மாசம் அவன் கூடவே இருந்திருக்கேன்.. வயித்துல இருக்கும்போது என் பேச்சைக் கேட்டுட்டே இருந்திருப்பான் இல்லை.. அதான்…” எனக் கீர்த்தி சொல்ல
“ஆமா எங்கடி உங்க பெரியண்ணா பழக விட்டார்…? அவர் தான் என் தங்கச்சியை வீட்டுக்கு அனுப்ப மாட்டாரே…” எனக் குறைபட,
“அவரே அனுப்பினாலும் அண்ணி வரமாட்டாங்க..” என்றாள் கீர்த்தி.
ஐந்து நாட்கள் பிரிந்திருந்ததுக்கே இருவரும் அப்படி ஏங்கிப்போயிருக்க, மதுரவசனி ராஜாவிடம் முன்பே சொல்லிவிட்டாள்,
“வளைக்காப்பு இங்கேயே வைச்சிக்கலாம்… உங்களை விட்டு நான் இரண்டு மாசமெல்லாம் போய் இருக்க மாட்டேன்… அப்படி போகனும்னா நீங்களும் வாங்க… முடியாதுனா எங்க வீட்டுல பேசி சம்மதிக்க வைங்க” என மிரட்டலாக சொல்ல
“நீ சொல்லி நான் செய்யாம இருப்பேனா.. கண்டிப்பா செஞ்சிடுறேன் மது. என் மது எங்கூட இருக்க வைக்கறதை விட வேற என்ன வெட்டி முறிக்கிற வேலை எனக்கு இருக்கு…?” என்றான் பெருமையாக.
இந்த ஒரு வருடத்தில் மது ஊருக்குப் போய் இருந்த நான்கு நாட்களும் ராஜாவும் உடன் வந்திருப்பான். இல்லாவிட்டால் அவள் தனியா செல்லவே மாட்டாள்.
“கீத்து… சீக்கிரமே ஒரு அழகான பொண்ணா பெத்து கொடுத்து என் மருமகனைக் கரெக்ட் செய்யனும்டி..” எனக் கண்ணடித்து சரண் கூற
“அதுக்கு அப்புறம் நீங்க இவனைக் கரெக்ட் செய்யத் தேவையில்ல… இவனே நம்ம பொண்ணை செஞ்சிடுவான்..” எனச் சொல்லி சிரிக்க
அவள் தோளில் கைப்போட்ட வண்ணமே ,
“அதுக்கு முதல்ல உன்னைக் கரெக்ட் செய்யனும்டி..” என்றான் அவள் காதில் ரகசியமாய்.
ஹம்சாவைத் தன் தாய் வீட்டில் விடச் சென்ற தீபன் கிடைத்தத் தனிமையில் மனைவியிடம்,
“ஹம்மு… டெய்லி போன் செய்… ஆபிஸ்ல இருந்தா நான் எடுக்க மாட்டேன்.. கோச்சுக்காத…” எனச் சொல்ல
“அதெல்லாம் நான் கோச்சுக்க மாட்டேன்…”
“சரி ஹம்மு.. இப்ப என்னை லவ் பண்றியா..?” எனக் கேட்க
ஆயிரம் முறையாவது அவன் இக்கேள்வி அவளிடம் இதுவரை சலிக்காமல் கேட்டிருப்பான். அவளும் சலிப்பின்றி பதில் சொன்னாள்.
“உங்களை… லவ் பண்றியாவாம்..? லவ் பண்ணாமத்தான் இப்படி இருக்கேனா…?” என அவனை அருகில் இழுத்துக் கேட்க
“அதை ஒரு நாளாவது சொன்னியா…நீ..?”
“முதல்ல உங்க மேல கோவம் தான்.. அப்புறம்… நான் வேலையை விட்டுப் போனப்போ அக்ரீமெண்ட் படி ஒரு வருசம் முடியாம போனேன்… நீங்க நினைச்சிருந்தா அதை வைச்சு என்னை மிரட்டியிருக்கலாம்… ஆனா செய்யல.. அதுல உங்க மேல மரியாதை வைச்சிருந்தேன்…”
“மரியாதைக் கொடுத்த சரி.. இப்போ..
“இப்ப தான் மனசைக் கொடுத்திட்டேனே..” என்றவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன்
“இது போதும் ஹம்மு.. ஜாக்கிரதை.. டெலிவரிக்கு முன்னாடியே நான் வந்துடுவேன்…. பார்த்து இருடா..” என்றபடி பிரிய மனமே இல்லாமல் மனைவியைப் பிரிந்து சென்றான்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு..
தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற வருடாந்திர பிஸினஸ் கூட்டத்தில் அந்த வருடத்திற்கான சிறந்த தொழிலதிபர் விருது ‘திருமதி.மதுரவசனி ராஜ் நந்தனுக்கு வழங்கப்பட்டது.
பரிசைப் பெற்றக் கையோடு கணவனுக்கு அழைத்தவள், “நந்து… நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்..” எனத் தன் சந்தோசத்தைச் சொல்ல
“ நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்..” என்றான் அவளை விட உற்சாகமான குரலில் அவளது கணவன்.
“அதான் தெரியுமே… நீங்க என்னை விட எல்லாத்திலேயும் அதிகம்னு…” என்றாள் பெருமிதமாகவே.
“சரி மது.. அடுத்து என்ன ப்ளான்…?”
“ம்… இப்ப ஆடிட்டர் கூட மீட்டிங் இருக்கு.. அது முடிச்சதும் ராஜ் டவர்ஸ் போய் கொஞ்சம் ஆபிசைப் பார்த்துட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்துடுவேன்….”
“சரி நான் போய் ஆதியையும் ஆதிராவையும் ஸ்கூல்ல இருந்து அழைச்சிட்டு வீட்டுக்குப் போறேன்… நான் இப்ப ஃப்ரியாத்தான் இருக்கேன்..” என்றான்.
ஆதித்யா ராஜாவின் மகன். ஆதிரா தீபனின் மகள். இருவருமே யூகேஜி படிக்கின்றனர்.
டிரைவர் இருந்தும் சுந்தரும் கூட பேரப்பிள்ளையை அழைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறிய போதும் சம்பாதிப்பது பிள்ளைக்களுக்காகத் தானே நானே அழைத்து வருகிறேன் என்று விட்டான்.
“சரி.. ஆனா பிள்ளைங்க கேட்கிறாங்கன்னு ஐஸ்கீரிமா வாங்கித் தராதிங்க… அப்புறம் சளிப்பிடிச்சா உங்களை சும்மா விட மாட்டேன்” என மிரட்ட
“சரிதான் போடி… என் பசங்களுக்கு நான் வாங்கித் தருவேன்..” என்றான் மானசீகமாய். கத்தி சொன்னால் அவள் அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுவாளே என்ற பயம் தான்.
இப்படி பிள்ளைகள் கேட்கிறார்கள் என்று ஐஸ்கீரிம் வாங்கித் தருபவன் பின்னர் அவர்களுக்கு ஜூரம் வந்தால் மருத்துவர் ஊசிப் போட்டால் ஹாஸ்பிட்டலை ஒரு வழியாக்கி விடுவான். தன் பிள்ளை தம்பி பிள்ளை என்ற பாகுபாடே அவனிடம் கிடையாது. இரு குழந்தைகளும் அவனுக்கு உயிர்.
சாயங்காலம் வீடு திரும்பும் போது காரில் கடந்த கால நினைவுகளோடு பயணித்தாள் மதுரவசனி.