மதியோட கோவம் நியாயம் தானே சின்ன பிள்ளையா இருந்தாலும் நாலு சொந்த பந்தங்கள் முன்னாடி வயசுல பெரியவரை உருவத்தை வச்சு மட்டம் தட்டுறது தப்பு தான் மதி ரொம்ப நல்லவர் அவரோட வெளித்தோற்றத்தை வச்சு பூரணி அசிங்க படுத்தி இருக்கா நடராஜன் பார்க்க அழகா இருக்காரு அவனை நம்பி போய் ஏமாந்திருக்கா
பூரணிக்கு எல்லாரும் தன்னை பெருமையா பேசினதும் தான் எடுக்குற முடிவு எல்லாம் சரியா தான் இருக்கும் என்ற எண்ணம் ஆனால் எல்லாம் தப்பா போனதை காலம் கடந்து தான் புரிஞ்சிருக்கா
மதி கோவத்தில் நியாயம் இருந்தாலும் பூரணி கணவன் இறந்து கஷ்ட படும் போது கொஞ்சம் இறங்கி வந்திருக்கலாம்
மதியோட அம்மாவும் தன் பிள்ளைய அவமான படுத்திட்டா என்று தான் இப்போ வரை பூரணிய வெறுக்குறாங்க போல
சிவத்தை கல்யாணம் செய்யுறதுக்கு முன்ன வரை பூரணியும் கொஞ்சம் திமிரா தான் இருந்து இருக்காங்க
வனஜா அதான் உன் உறவே வேண்டாம் என்று சொல்லியாச்சுல்ல ஒழுங்கா ஓடிடு ஆனால் நிரூபா இந்த உறவை எல்லாம் நீ என்னைக்கோ வெட்டி விட்டுருக்கணும்
மதுரா கவின் சமாதானம் ஆகிட்டாங்க மோகன் விருப்பம் இல்லாமல் இருக்கான் மதுரா கல்யாணம் ஆனா சரியாகிடுவான் என்று சொல்றா
மதியும் பாவம் நல்லவர் தான்... சூழ்நிலை அவரை அந்த நேரத்தில் அப்படி பேச வச்சிட்டு... ஆனாலும் பூரணி சும்மா சொல்ல கூட எல்லாரையும் செமையா ட்ரில் வாங்கி இருக்கீங்க... அது தான் எல்லா காண்டா சுத்தி இருக்காங்க....