அத்தியாயம் – 4
வந்தனா - முரளி நிச்சய விழா ஆரம்பித்திருக்க, ‘கருடா...’ திருமண மண்டபமே அத்தனை கூட்டம் நிரம்பி வழிந்தது..
இத்தனை பேரை அழைத்ததற்கு திருமணமே செய்திருக்கலாம்.. என்று நினைக்காதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது என்பதாய் அத்தனை அழகாய் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்திருந்தனர்.. வனமாலியும், கோவர்த்தனும் ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை.
கண் காட்டினால் போதும் செய்வதற்கு ஆட்கள் அத்தனை பேர் இருந்தாலும், தாங்களே ஒவ்வொன்றையும் பார்த்து செய்தால் தானே அது தகும் என்பதுபோல் இருவரும் காலில் சக்கரம் கட்டியதாய் திரிய, வனமாலிக்கோ அவ்வப்போது பார்வை வாசலுக்கு சென்று வந்தது எனலாம்.
வனமாலிக்கு மட்டுமல்ல, மேடையில் அலங்காரத்தில் அமர்ந்திருந்த வந்தனாவும் சரி அவளருகே தோள் பெண்ணாய் நின்றிருந்த பமீலாவும் சரி அவ்வப்போது வாசலைப் பார்க்க, மணிராதாவும், இந்திராவும் கூட இதே தான் செய்துகொண்டனர்..
‘எப்போது வருவார்கள்...’ என்றும் ‘வந்துவிடுவார்களோ..’ என்றும் ஒவ்வொருவரின் உணர்வு ஒவ்வொன்றாய் இருக்க,
“என்ன மணி.. சிவகாமியை கூப்பிடலையா???” என்றார் உறவில் வயதான பெண் ஒருவர்.
இந்திரா அமைதியாய் இருக்க, “இந்திரா, நீ மட்டும் வந்திருக்க, எப்படி செய்முறை எல்லாம் சேர்ந்து செய்றீங்களா?? இல்லை தனி தனியாவா??” என்று மற்றொரு பெண் கேள்வி கேட்க,
“சொத்தெல்லாம் இன்னும் பிரிக்கலையே.. பின்ன எப்படி தனி தனியா செய்ய முடியும்...” எனும்போதே, இந்திரா மணிராதாவைப் பார்க்க, அவரோ நீ எதுவும் பேசாதே என்று சைகை செய்தார்.
“என்ன இருந்தாலும் தாய் மாமா வீட்டு சேலை வந்த அப்புறம் தான் மாப்பிள்ளை வீட்ல சேலை கொடுக்க முடியும்.. இந்திரா நீயும் தட்டு வச்சிருக்க போலவே.. ஆனா சிவகாமிதானே முதல்ல செய்யணும்...” என்று மணிராதாவின் கணவர் வழி உறவில் வந்து ஒருவர் சொல்ல, மண்டபத்தில் சல சலப்பு அடங்கி திடீரென ஒரு அமைதி சூழ்வதாய் இருக்க, என்னவென்று எல்லாம் திரும்பிப் பார்க்க, சிவகாமி முன்னே வர, அவருக்கு கொஞ்சம் தள்ளி பின்னே கமலி வர, அவர்களுக்கு பின்னே வரிசையாய் பெண்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு சீர் தட்டு வைத்திருக்க, சேலை, நகை, மாலை வைத்திருந்த தட்டு கமலி ஏந்தி வந்தாள். எப்படியும் ஐம்பத்தியோரு தட்டாவது இருக்கும். சிவகாமி ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் என்பது பார்த்ததுமே தெரிய, இத்தனை நேரம் ஆளுக்கு ஒன்றாய் பேசியவர்களின் வாய் அப்படியே மூடாது திறந்திருக்க, இந்திராவோ திகைத்துப் போய் பார்த்துக்கொண்டு இருந்தார்.
மணிராதா கூட உள்ளே அசந்துப் போனார் என்றுதான் சொல்ல வேண்டும். அழைத்ததற்கு என்று வெறுமெனே சிவகாமி மட்டும் வந்து செல்வார், இதையே சாக்காய் வைத்து வனமாலியிடம் பேசவேண்டும் என்று எண்ணியிருக்க, சிவகாமியோ இப்படி முறைப்படி அனைத்தும் செய்யவும் அவரால் எதுவுமே செய்ய முடியாது போனது.
வனமாலிக்கே ஆச்சர்யம்தான். நம்ப முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏறக்குறைய அவனும் மணிராதா போலவே தான் எண்ணினான். அழைத்ததற்கு வருவார்கள் என்று எண்ணியவன், இதனை கொஞ்சமும் நினைக்கவில்லை. அதிலும் கமலி.. அவள் வருவாள் என்பது அவனுக்கு இப்போது வரைக்குமே நம்பிட முடியவில்லை.
“வா... வங்கத்தை....” என்று வனமாலி முதலில் சென்று அழைக்க, “ரொம்ப லேட்டாகிடுச்சா வனா??” என்றபடி சிவகாமி வர, அவனின் பார்வையோ அவருக்கு பின்னே வந்தே கமலி மீது படிந்து மீள,
அவளோ மேடையில் இருந்த வந்தனாவை பார்த்து லேசாய் புன்னகை சிந்துவதாய் இருந்தது.
“அண்ணி என்னண்ணி...” என்று இந்திரா கேட்க, அதற்குள் முரளி வீட்டினரும் அனைவரும் அங்கே வந்திட,
“வாங்க வாங்க...” என்று முரளியின் அப்பாவோ சிவாகாமியை அப்படியொரு வரவேற்பு செய்தார்.
“நல்லா இருக்கீங்களா??” என்று சிவகாமி விசாரிக்க, அந்த மனிதரோ தன் மனைவியிடம் “யார்னு தெரியுதா?? இவங்க அப்பாதான் முதன் முதல்ல எனக்கு தொழில் தொடங்கி கொடுத்தார்...” என, அவ்வளோதான் மணிராதா அங்கே வாய் திறக்கவே முடியாது எனும் சூழல்.
அதற்குள் பமீலா மேடையில் இருந்து இறங்கி இந்திராவிடம் வந்தவள் “ம்மா நீ வா.. முதல்ல வந்து வந்தனாக்கு சேலை எடுத்து கொடு..” என்றழைக்க, அதற்குள் சிவகாமி அங்கே கமலியை மேலே போ என்று சொல்ல,
கமலியோ பமீலாவையும், இந்திராவையும் தாண்டி மேடையின் படிகளை ஏற,
“என்ன வனா இது, வந்தனா மட்டும் தனியா இருக்கா?? இப்படிதான் விடுறதா??” என்று கேட்க, மணிராதாவோ பமீலாவை முறைக்க,
“அது.. அத்தை.. நீ.. நீங்களும் வாங்களேன்..” என்று சிவகாமியை அழைத்தபடி வனமாலியும் மேடையேற, வரிசையாய் அழகாய் அங்கே சீர் தட்டுகள் அடுக்கி வைக்கவும், சிவகாமி யாரையும் எதுவும் கேட்கவில்லை. மணிராதா இந்திரா என்று யாரையும் கண்டுகொள்ளவில்லை. செய்யட்டுமா என்றும் கேட்கவில்லை, வீண் பிரச்சனையோ என்று ஒதுங்கியும் நிற்கவில்லை, ஒவ்வொன்றையும் கமலியிடம் சொல்ல, அவளே அனைத்தையும் செய்தாள்.
“பரவால்லையே...” என்று பலர் வாய் முணுமுணுக்க,
வந்தனாவோ “தேங்க்ஸ் அத்தை.. தேங்க்ஸ் கமலி..” என, “அட இதென்ன..” என்றவர்,
“எப்பவும் நல்லாருக்கணும்..” என்றுசொல்லி வாழ்த்த, கமலியோ “ஆல் தி பெஸ்ட் வந்தனா...” என்றாள் நிமிர்வாய்.
அங்கே பமீலாவிற்கும், இந்திராவிற்கும் தர்ம சங்கடமாய் போனது. இதற்குமேல் தாங்கள் போய் முறை செய்தால், அது அசிங்கமாய் இருக்கும். ஆனால் அப்படியே செய்யாது கிளம்பினாலும் இவர்களிடம் தோற்றதாய் ஆகிவிடும். என்ன செய்வது என்பது தெரியாது நிற்க, மணிராதாவோ அனைத்தையும் வேடிக்கைப் பார்ப்பதாய் பார்த்துகொண்டு இருந்தார்..
“பொண்ண, தாய் மாமா வீட்டு சேலை கட்டி வர சொல்லுங்கப்பா..” என்று பொதுவில் ஒருவர் சொல்ல, சிவகாமியோ “வந்தனா.. ஹெல்ப்க்கு ஆள் இருக்காங்களா??” என்று அவளைப் பார்க்கவும்,
“கமலி வரட்டுமே அத்தை..” என்றாள் வந்தனாவும்.
இதெல்லாம் கீழிருந்த பமீலாவின் உணர்வுகளை தூண்டிவிட, “ம்மா வா நம்ம கிளம்பலாம்..” என்று இந்திராவை அழைக்க, மணிராதாவிற்கு பக்கென்று இருந்தது.
“என்ன பேசற நீ???”
“இதுக்குமேல என்னால ஒரு நிமிஷம் இருக்க முடியாது அத்தை..”
“ஆமா பொசுக்குனு மேடைல இருந்து உன்னை யார் இறங்கி வர சொன்னது.. நீ வரவும் தானே அவ அங்க நிக்கிறா??” என்று கமலியை கை காட்டி சொல்ல,
பமீலாவோ “யார் நின்னாலும் சரி.. நான் இங்க நிக்க மாட்டேன்..” என்று பிடிவாதம் செய்யும் போதே, வனமாலி மேடையில் இருந்தே கோவர்தனுக்கு ‘இங்கே வந்து என்னவென்று பார்..’ என்று கண் காட்ட,
அவன் வந்தவனோ “ம்மா அடுத்து மாப்பிள்ளை வீட்ல இருந்து சீர் தட்டு அடுக்க வருவாங்க.. நீங்க எல்லாம் இப்படி நின்னா எப்படி.. போங்க மேடைக்கு போங்க.. பமீ நீ போ.. மேல போ..” என்று கொஞ்சம் அழுத்தம் திருத்தமாகவே சொல்ல, அப்போதும் இந்திராவும், பமீலாவும் தயங்கி நின்றனர்.
இந்திரா இப்போது வரைக்கும் சிவகாமியை நேருக்கு நேராய் முகம் பார்த்ததில்லை.. பேசியதுமில்லை.. திருமணமான சமயத்தில் இருந்தே இப்படிதான்.. மனதில் ஒரு நெருடல் ஆரம்பத்தில்.. பின் சிவகாமி வெளியேறியதும் ஒரு மிதப்பு.. இப்போதோ பயம்.. எந்த நேரத்திலும் சிவகாமியும் கமலியும் அந்த வீட்டிற்கு வருவரோ என்று.
இன்றோ அதற்கு ஏற்றார் போலவே சிவகாமி வந்து முறை செய்துவிட, அதுவும் யாரையும் சிறிதும் சட்டை செய்யாது அனைத்தையும் செய்துவிட, உள்ளே ஆடித்தான் போனார்.. மணிராதாவோ, இது மகளின் விசேசம் என்பதால் வாய் திறக்காது நிற்க, பமீலா முரண்டு செய்துகொண்டு இருந்தார்.
இங்கே இத்தனை நடக்க, அதற்குள் கமலி, வந்தனாவிற்கு புடவை மாற்றி அழைத்து மேடைக்கு வந்து அமர்த்திட, அதன் பின்னே தான் வனமாலி இறங்கியவன் “என்ன பண்றீங்க??” என்று அம்மாவைப் பார்த்து பல்லைக் கடிக்க,
“இல்ல வனா அது...”
“வந்தனா நிச்சயம் விட உங்களுக்கு மத்தது தான் முக்கியம்னா எல்லாரும் அப்படியே கிளம்புங்க.. என் தங்கச்சிக்கு எப்படி செய்யனும்னு எனக்குத் தெரியும்..” என்றவன், பமீலாவை ஒரு முறை முறைக்க, மணிராதாவோ மகன் தன்னையும் சேர்த்து கிளம்பு என்றதில் ஆடிப் போய்விட்டார்..
“வனா??!!!!”
“ஒண்ணு அமைதியா எல்லாம் இருக்கணும்.. இல்ல கிளம்புங்க..” என்றவன், முரளியின் அப்பா அழைக்கிறார் என்று ஒருவர் வந்து சொல்லவும் அவரைப் பார்க்க செல்ல,
“பமீலா நீ மேடைக்கு போ..” என்று கோவர்தனும் சொல்ல, இந்திரா என்ன நினைத்தாரோ “போ பமீ..” என, அவளோ வேண்டா வெறுப்பாய் போய் வந்தனாவின் மறுபக்கம் நிக்க,
சிவகாமி மகளைப் பார்த்தவர், நான் கீழ இருக்கேன் என்பதுபோல சொல்லி இறங்கி வந்து முதல் வரிசையில் அமர்ந்துவிட்டார். வனமாலி இப்படி சொல்லிச் செல்லவும், மணிராதாவும் இந்திராவும் வேண்டா வெறுப்பாய் அங்கேயே அமர, மேடையிலோ பமீலா முகத்தை தூக்கி வைத்து நிற்க, கமலியோ புன்னகை முகமாய் நின்றிருந்தாள்.
சிவகாமிக்கே இது ஆச்சர்யம் தான்.. ஏனெனில் கிளம்பும் வரைக்கும் கூட கமலி ஒருவித இறுக்கத்தில் தான் இருந்தாள்.
‘ம்மா இப்போவே சொல்லிட்டேன். அங்க வந்து எதுக்கும்... எதுக்குமே என்னை கம்பல் பண்ணக் கூடாது...’ என்று அத்தனை சொன்னவள், இங்கேயே அனைத்தையும் சொல்ல சொல்ல அழகாய் செய்வது கண்டு சிவகாமிக்கு ஆச்சர்யமே. அதிலும் மேடையில் வந்தனாவோடு வேறு நிற்கிறாள் என்றால்??
‘கடவுளே பெரியவங்க பிரச்சனை பெரியவங்களோட போகட்டும்.. சின்ன பசங்களாவது ஒத்துமையா இருக்கட்டுமே...’ என்று அவர் எண்ணும்போதே,
“சிவகாமி... உன் பொண்ணு அப்படியே மகுடனும் நீயும் கலந்த கலவை.. ரெண்டுபேர் ஜாடையுமே அப்படியே இருக்கு...” என்று சிவகாமியிடம் ஒரு பெண்மணி சொல்ல, இது அத்தனையும் இந்திராவின் காதிலும் விழுந்து வைத்தது.
அவருக்கோ முள் மீது நிற்கும் நிலை போல் இருக்க, அதற்குள் மாப்பிள்ளை வீட்டினர் வந்து வந்தனாவிற்கு நிச்சய புடவை கொடுத்து முறை செய்ய, அடுத்து அடுத்து என்று அனைத்துமே நல்லவிதமாகவே நடந்துக்கொண்டு இருந்தது.
பமீலாவின் முகத்தினை பார்த்து வந்தனாவே சொல்லிவிட்டாள் “கொஞ்சம் சிரியேன் பமீ...” என்று,
அவளோ “அதான் சிரிச்சிட்டே நிக்க, ஒருத்தி இருக்காளே.. பின்ன என்ன??” என்று நேரடியாவே கமலியைப் பார்த்து சொல்ல, கமலியோ நீ பேசுவது எல்லாம் என் காதில் விழவே விழாது என்பதுபோல் நின்றிருந்தாள்.
இதெல்லாம் கீழிருந்தே கவனித்துக்கொண்டு இருந்த சிவகாமிக்கு அப்போது தான் புரிந்தது மகள் எதையோ மனதில் வைத்தே இங்கே வந்திருக்கிறாள் என்று. தாய் அறியாத சூழா.. அடுத்த நொடி சிவகாமி மனதிலோ கமலி எப்போது என்ன செய்ய காத்திருக்கிறாளோ என்றே கவனமிருக்க,
முரளி வந்து மோதிரம் போட்டு, வந்தனா சென்று அவளின் நிச்சய புடவை கட்டி வந்து முரளியும் அவளும் ஜோடியாய் அமரவும், சிவகாமி மகளை “கீழ வா...” என்று சைகை செய்தார்..
“எதுக்கும்மா...??!!” என்று அவள் மேலிருந்தே கேட்க,
“போதும் வா...” என்று கையை சிவகாமி காட்ட, இதெல்லாம் அந்த பக்கம் வந்த வனமாலியின் கண்களில் விழுந்து, ஒருவேளை கிளம்புகிரார்களோ என்று தோன்றியது..
“அத்தை என்ன கிளம்பப் போறீங்களா???” என்றபடி வந்து சிவகாமியின் அருகே அவன் அமர,
“இல்ல வனா.. கமலிய கீழ வந்து உட்கார சொன்னேன்..” என,
“ஏன்?? நிக்கட்டுமே...” என்றவன் பார்வையும் மேடையில் இருந்த கமலியை தொட்டது.
வந்தனா - முரளி நிச்சய விழா ஆரம்பித்திருக்க, ‘கருடா...’ திருமண மண்டபமே அத்தனை கூட்டம் நிரம்பி வழிந்தது..
இத்தனை பேரை அழைத்ததற்கு திருமணமே செய்திருக்கலாம்.. என்று நினைக்காதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது என்பதாய் அத்தனை அழகாய் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்திருந்தனர்.. வனமாலியும், கோவர்த்தனும் ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை.
கண் காட்டினால் போதும் செய்வதற்கு ஆட்கள் அத்தனை பேர் இருந்தாலும், தாங்களே ஒவ்வொன்றையும் பார்த்து செய்தால் தானே அது தகும் என்பதுபோல் இருவரும் காலில் சக்கரம் கட்டியதாய் திரிய, வனமாலிக்கோ அவ்வப்போது பார்வை வாசலுக்கு சென்று வந்தது எனலாம்.
வனமாலிக்கு மட்டுமல்ல, மேடையில் அலங்காரத்தில் அமர்ந்திருந்த வந்தனாவும் சரி அவளருகே தோள் பெண்ணாய் நின்றிருந்த பமீலாவும் சரி அவ்வப்போது வாசலைப் பார்க்க, மணிராதாவும், இந்திராவும் கூட இதே தான் செய்துகொண்டனர்..
‘எப்போது வருவார்கள்...’ என்றும் ‘வந்துவிடுவார்களோ..’ என்றும் ஒவ்வொருவரின் உணர்வு ஒவ்வொன்றாய் இருக்க,
“என்ன மணி.. சிவகாமியை கூப்பிடலையா???” என்றார் உறவில் வயதான பெண் ஒருவர்.
இந்திரா அமைதியாய் இருக்க, “இந்திரா, நீ மட்டும் வந்திருக்க, எப்படி செய்முறை எல்லாம் சேர்ந்து செய்றீங்களா?? இல்லை தனி தனியாவா??” என்று மற்றொரு பெண் கேள்வி கேட்க,
“சொத்தெல்லாம் இன்னும் பிரிக்கலையே.. பின்ன எப்படி தனி தனியா செய்ய முடியும்...” எனும்போதே, இந்திரா மணிராதாவைப் பார்க்க, அவரோ நீ எதுவும் பேசாதே என்று சைகை செய்தார்.
“என்ன இருந்தாலும் தாய் மாமா வீட்டு சேலை வந்த அப்புறம் தான் மாப்பிள்ளை வீட்ல சேலை கொடுக்க முடியும்.. இந்திரா நீயும் தட்டு வச்சிருக்க போலவே.. ஆனா சிவகாமிதானே முதல்ல செய்யணும்...” என்று மணிராதாவின் கணவர் வழி உறவில் வந்து ஒருவர் சொல்ல, மண்டபத்தில் சல சலப்பு அடங்கி திடீரென ஒரு அமைதி சூழ்வதாய் இருக்க, என்னவென்று எல்லாம் திரும்பிப் பார்க்க, சிவகாமி முன்னே வர, அவருக்கு கொஞ்சம் தள்ளி பின்னே கமலி வர, அவர்களுக்கு பின்னே வரிசையாய் பெண்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு சீர் தட்டு வைத்திருக்க, சேலை, நகை, மாலை வைத்திருந்த தட்டு கமலி ஏந்தி வந்தாள். எப்படியும் ஐம்பத்தியோரு தட்டாவது இருக்கும். சிவகாமி ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் என்பது பார்த்ததுமே தெரிய, இத்தனை நேரம் ஆளுக்கு ஒன்றாய் பேசியவர்களின் வாய் அப்படியே மூடாது திறந்திருக்க, இந்திராவோ திகைத்துப் போய் பார்த்துக்கொண்டு இருந்தார்.
மணிராதா கூட உள்ளே அசந்துப் போனார் என்றுதான் சொல்ல வேண்டும். அழைத்ததற்கு என்று வெறுமெனே சிவகாமி மட்டும் வந்து செல்வார், இதையே சாக்காய் வைத்து வனமாலியிடம் பேசவேண்டும் என்று எண்ணியிருக்க, சிவகாமியோ இப்படி முறைப்படி அனைத்தும் செய்யவும் அவரால் எதுவுமே செய்ய முடியாது போனது.
வனமாலிக்கே ஆச்சர்யம்தான். நம்ப முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏறக்குறைய அவனும் மணிராதா போலவே தான் எண்ணினான். அழைத்ததற்கு வருவார்கள் என்று எண்ணியவன், இதனை கொஞ்சமும் நினைக்கவில்லை. அதிலும் கமலி.. அவள் வருவாள் என்பது அவனுக்கு இப்போது வரைக்குமே நம்பிட முடியவில்லை.
“வா... வங்கத்தை....” என்று வனமாலி முதலில் சென்று அழைக்க, “ரொம்ப லேட்டாகிடுச்சா வனா??” என்றபடி சிவகாமி வர, அவனின் பார்வையோ அவருக்கு பின்னே வந்தே கமலி மீது படிந்து மீள,
அவளோ மேடையில் இருந்த வந்தனாவை பார்த்து லேசாய் புன்னகை சிந்துவதாய் இருந்தது.
“அண்ணி என்னண்ணி...” என்று இந்திரா கேட்க, அதற்குள் முரளி வீட்டினரும் அனைவரும் அங்கே வந்திட,
“வாங்க வாங்க...” என்று முரளியின் அப்பாவோ சிவாகாமியை அப்படியொரு வரவேற்பு செய்தார்.
“நல்லா இருக்கீங்களா??” என்று சிவகாமி விசாரிக்க, அந்த மனிதரோ தன் மனைவியிடம் “யார்னு தெரியுதா?? இவங்க அப்பாதான் முதன் முதல்ல எனக்கு தொழில் தொடங்கி கொடுத்தார்...” என, அவ்வளோதான் மணிராதா அங்கே வாய் திறக்கவே முடியாது எனும் சூழல்.
அதற்குள் பமீலா மேடையில் இருந்து இறங்கி இந்திராவிடம் வந்தவள் “ம்மா நீ வா.. முதல்ல வந்து வந்தனாக்கு சேலை எடுத்து கொடு..” என்றழைக்க, அதற்குள் சிவகாமி அங்கே கமலியை மேலே போ என்று சொல்ல,
கமலியோ பமீலாவையும், இந்திராவையும் தாண்டி மேடையின் படிகளை ஏற,
“என்ன வனா இது, வந்தனா மட்டும் தனியா இருக்கா?? இப்படிதான் விடுறதா??” என்று கேட்க, மணிராதாவோ பமீலாவை முறைக்க,
“அது.. அத்தை.. நீ.. நீங்களும் வாங்களேன்..” என்று சிவகாமியை அழைத்தபடி வனமாலியும் மேடையேற, வரிசையாய் அழகாய் அங்கே சீர் தட்டுகள் அடுக்கி வைக்கவும், சிவகாமி யாரையும் எதுவும் கேட்கவில்லை. மணிராதா இந்திரா என்று யாரையும் கண்டுகொள்ளவில்லை. செய்யட்டுமா என்றும் கேட்கவில்லை, வீண் பிரச்சனையோ என்று ஒதுங்கியும் நிற்கவில்லை, ஒவ்வொன்றையும் கமலியிடம் சொல்ல, அவளே அனைத்தையும் செய்தாள்.
“பரவால்லையே...” என்று பலர் வாய் முணுமுணுக்க,
வந்தனாவோ “தேங்க்ஸ் அத்தை.. தேங்க்ஸ் கமலி..” என, “அட இதென்ன..” என்றவர்,
“எப்பவும் நல்லாருக்கணும்..” என்றுசொல்லி வாழ்த்த, கமலியோ “ஆல் தி பெஸ்ட் வந்தனா...” என்றாள் நிமிர்வாய்.
அங்கே பமீலாவிற்கும், இந்திராவிற்கும் தர்ம சங்கடமாய் போனது. இதற்குமேல் தாங்கள் போய் முறை செய்தால், அது அசிங்கமாய் இருக்கும். ஆனால் அப்படியே செய்யாது கிளம்பினாலும் இவர்களிடம் தோற்றதாய் ஆகிவிடும். என்ன செய்வது என்பது தெரியாது நிற்க, மணிராதாவோ அனைத்தையும் வேடிக்கைப் பார்ப்பதாய் பார்த்துகொண்டு இருந்தார்..
“பொண்ண, தாய் மாமா வீட்டு சேலை கட்டி வர சொல்லுங்கப்பா..” என்று பொதுவில் ஒருவர் சொல்ல, சிவகாமியோ “வந்தனா.. ஹெல்ப்க்கு ஆள் இருக்காங்களா??” என்று அவளைப் பார்க்கவும்,
“கமலி வரட்டுமே அத்தை..” என்றாள் வந்தனாவும்.
இதெல்லாம் கீழிருந்த பமீலாவின் உணர்வுகளை தூண்டிவிட, “ம்மா வா நம்ம கிளம்பலாம்..” என்று இந்திராவை அழைக்க, மணிராதாவிற்கு பக்கென்று இருந்தது.
“என்ன பேசற நீ???”
“இதுக்குமேல என்னால ஒரு நிமிஷம் இருக்க முடியாது அத்தை..”
“ஆமா பொசுக்குனு மேடைல இருந்து உன்னை யார் இறங்கி வர சொன்னது.. நீ வரவும் தானே அவ அங்க நிக்கிறா??” என்று கமலியை கை காட்டி சொல்ல,
பமீலாவோ “யார் நின்னாலும் சரி.. நான் இங்க நிக்க மாட்டேன்..” என்று பிடிவாதம் செய்யும் போதே, வனமாலி மேடையில் இருந்தே கோவர்தனுக்கு ‘இங்கே வந்து என்னவென்று பார்..’ என்று கண் காட்ட,
அவன் வந்தவனோ “ம்மா அடுத்து மாப்பிள்ளை வீட்ல இருந்து சீர் தட்டு அடுக்க வருவாங்க.. நீங்க எல்லாம் இப்படி நின்னா எப்படி.. போங்க மேடைக்கு போங்க.. பமீ நீ போ.. மேல போ..” என்று கொஞ்சம் அழுத்தம் திருத்தமாகவே சொல்ல, அப்போதும் இந்திராவும், பமீலாவும் தயங்கி நின்றனர்.
இந்திரா இப்போது வரைக்கும் சிவகாமியை நேருக்கு நேராய் முகம் பார்த்ததில்லை.. பேசியதுமில்லை.. திருமணமான சமயத்தில் இருந்தே இப்படிதான்.. மனதில் ஒரு நெருடல் ஆரம்பத்தில்.. பின் சிவகாமி வெளியேறியதும் ஒரு மிதப்பு.. இப்போதோ பயம்.. எந்த நேரத்திலும் சிவகாமியும் கமலியும் அந்த வீட்டிற்கு வருவரோ என்று.
இன்றோ அதற்கு ஏற்றார் போலவே சிவகாமி வந்து முறை செய்துவிட, அதுவும் யாரையும் சிறிதும் சட்டை செய்யாது அனைத்தையும் செய்துவிட, உள்ளே ஆடித்தான் போனார்.. மணிராதாவோ, இது மகளின் விசேசம் என்பதால் வாய் திறக்காது நிற்க, பமீலா முரண்டு செய்துகொண்டு இருந்தார்.
இங்கே இத்தனை நடக்க, அதற்குள் கமலி, வந்தனாவிற்கு புடவை மாற்றி அழைத்து மேடைக்கு வந்து அமர்த்திட, அதன் பின்னே தான் வனமாலி இறங்கியவன் “என்ன பண்றீங்க??” என்று அம்மாவைப் பார்த்து பல்லைக் கடிக்க,
“இல்ல வனா அது...”
“வந்தனா நிச்சயம் விட உங்களுக்கு மத்தது தான் முக்கியம்னா எல்லாரும் அப்படியே கிளம்புங்க.. என் தங்கச்சிக்கு எப்படி செய்யனும்னு எனக்குத் தெரியும்..” என்றவன், பமீலாவை ஒரு முறை முறைக்க, மணிராதாவோ மகன் தன்னையும் சேர்த்து கிளம்பு என்றதில் ஆடிப் போய்விட்டார்..
“வனா??!!!!”
“ஒண்ணு அமைதியா எல்லாம் இருக்கணும்.. இல்ல கிளம்புங்க..” என்றவன், முரளியின் அப்பா அழைக்கிறார் என்று ஒருவர் வந்து சொல்லவும் அவரைப் பார்க்க செல்ல,
“பமீலா நீ மேடைக்கு போ..” என்று கோவர்தனும் சொல்ல, இந்திரா என்ன நினைத்தாரோ “போ பமீ..” என, அவளோ வேண்டா வெறுப்பாய் போய் வந்தனாவின் மறுபக்கம் நிக்க,
சிவகாமி மகளைப் பார்த்தவர், நான் கீழ இருக்கேன் என்பதுபோல சொல்லி இறங்கி வந்து முதல் வரிசையில் அமர்ந்துவிட்டார். வனமாலி இப்படி சொல்லிச் செல்லவும், மணிராதாவும் இந்திராவும் வேண்டா வெறுப்பாய் அங்கேயே அமர, மேடையிலோ பமீலா முகத்தை தூக்கி வைத்து நிற்க, கமலியோ புன்னகை முகமாய் நின்றிருந்தாள்.
சிவகாமிக்கே இது ஆச்சர்யம் தான்.. ஏனெனில் கிளம்பும் வரைக்கும் கூட கமலி ஒருவித இறுக்கத்தில் தான் இருந்தாள்.
‘ம்மா இப்போவே சொல்லிட்டேன். அங்க வந்து எதுக்கும்... எதுக்குமே என்னை கம்பல் பண்ணக் கூடாது...’ என்று அத்தனை சொன்னவள், இங்கேயே அனைத்தையும் சொல்ல சொல்ல அழகாய் செய்வது கண்டு சிவகாமிக்கு ஆச்சர்யமே. அதிலும் மேடையில் வந்தனாவோடு வேறு நிற்கிறாள் என்றால்??
‘கடவுளே பெரியவங்க பிரச்சனை பெரியவங்களோட போகட்டும்.. சின்ன பசங்களாவது ஒத்துமையா இருக்கட்டுமே...’ என்று அவர் எண்ணும்போதே,
“சிவகாமி... உன் பொண்ணு அப்படியே மகுடனும் நீயும் கலந்த கலவை.. ரெண்டுபேர் ஜாடையுமே அப்படியே இருக்கு...” என்று சிவகாமியிடம் ஒரு பெண்மணி சொல்ல, இது அத்தனையும் இந்திராவின் காதிலும் விழுந்து வைத்தது.
அவருக்கோ முள் மீது நிற்கும் நிலை போல் இருக்க, அதற்குள் மாப்பிள்ளை வீட்டினர் வந்து வந்தனாவிற்கு நிச்சய புடவை கொடுத்து முறை செய்ய, அடுத்து அடுத்து என்று அனைத்துமே நல்லவிதமாகவே நடந்துக்கொண்டு இருந்தது.
பமீலாவின் முகத்தினை பார்த்து வந்தனாவே சொல்லிவிட்டாள் “கொஞ்சம் சிரியேன் பமீ...” என்று,
அவளோ “அதான் சிரிச்சிட்டே நிக்க, ஒருத்தி இருக்காளே.. பின்ன என்ன??” என்று நேரடியாவே கமலியைப் பார்த்து சொல்ல, கமலியோ நீ பேசுவது எல்லாம் என் காதில் விழவே விழாது என்பதுபோல் நின்றிருந்தாள்.
இதெல்லாம் கீழிருந்தே கவனித்துக்கொண்டு இருந்த சிவகாமிக்கு அப்போது தான் புரிந்தது மகள் எதையோ மனதில் வைத்தே இங்கே வந்திருக்கிறாள் என்று. தாய் அறியாத சூழா.. அடுத்த நொடி சிவகாமி மனதிலோ கமலி எப்போது என்ன செய்ய காத்திருக்கிறாளோ என்றே கவனமிருக்க,
முரளி வந்து மோதிரம் போட்டு, வந்தனா சென்று அவளின் நிச்சய புடவை கட்டி வந்து முரளியும் அவளும் ஜோடியாய் அமரவும், சிவகாமி மகளை “கீழ வா...” என்று சைகை செய்தார்..
“எதுக்கும்மா...??!!” என்று அவள் மேலிருந்தே கேட்க,
“போதும் வா...” என்று கையை சிவகாமி காட்ட, இதெல்லாம் அந்த பக்கம் வந்த வனமாலியின் கண்களில் விழுந்து, ஒருவேளை கிளம்புகிரார்களோ என்று தோன்றியது..
“அத்தை என்ன கிளம்பப் போறீங்களா???” என்றபடி வந்து சிவகாமியின் அருகே அவன் அமர,
“இல்ல வனா.. கமலிய கீழ வந்து உட்கார சொன்னேன்..” என,
“ஏன்?? நிக்கட்டுமே...” என்றவன் பார்வையும் மேடையில் இருந்த கமலியை தொட்டது.