அத்தியாயம் - 3
மகுடேஸ்வரனுக்கும் கமலிக்குமான உறவு என்பது தாமரையிலை நீர் போலேதான். ஒட்டியும் ஒட்டாத ஓர் உறவு.. அதுவும் கூட சிவகாமிக்காக மட்டுமே இந்நிலை.. இல்லையெனில் கமலியைப் பொருத்தமட்டில் அதுவுமில்லை.
முதலில் எதுவும் தெரியவில்லை ஆனால் அப்பாவிற்கு அம்மாவும் நானும் மட்டுமல்ல, எங்களைப் போலவே இன்னொரு குடும்பமும் இருக்கிறது என்று தெரியவுமே, அப்பாவின் மீதிருந்த அந்த ஒரு பிணைப்பு முதலில் அறுந்தது.
மகுடேஸ்வரனோ பமீலாவையும், கமலியையும் ஒட்ட வைக்க எத்தனையோ முயன்றார். பமீலாவை இங்கு அழைத்து வருவார். கமலியை அங்கே அழைத்துப் போவார். ஆனால் அதெல்லாம் சிறிது நாட்கள் தான். ஒருமுறை பமீலாவை இங்கே சிவகாமி வீட்டிற்கு அழைத்து வர, அன்று இரவே அவளுக்கு காய்ச்சல் வந்து அவதிப்பட,
“அச்சோ பிள்ளைக்கு கண்ணு பட்டுப்போச்சே..” என்று இந்திராவை விட, அழுதது மணிராதா தான்.
அதன்பின்னோ இந்திரா அங்கே அழைத்து செல்ல ஒருபோதும் விடவில்லை. நேரடியாய் மறுக்கவில்லை என்றாலும் சொல்வதற்கு காரணங்களா இருக்காது.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி மறுக்க, அது மகுடேஸ்வரனுக்கு புரிய கொஞ்சம் நாள் பிடித்தது.
“வீண் பிரச்சனை வேணாங்க..” என்று சிவகாமியும் சொல்லிட, கமலியோ கொஞ்சம் கொஞ்சமாய் மகுடேஸ்வரனிடம் இருந்து விலக தொடங்கினாள்.
தெரிந்தவர், உறவுகள் என்று யார் வீட்டு விசேசத்திற்கு போனாலும், கமலியிடம் யார் வீட்டு பெண் என்று விசாரிக்கையில் மகுடேஸ்வரனின் மகள் எனும்போது அடுத்த கேள்வி அம்பென பாய்ந்து வரும்.
“யாரோட மக.. சிவகாமியா?? இல்லை இந்திராவா??” என்று..
இக்கேள்வி அவளை எப்படி நோகடிக்கும் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
வீட்டு விசேஷங்கள் ஒவ்வொன்றிலும், சிவகாமி ஒதுக்கப்படும் போதெல்லாம், கமலி எதிர்க்கத் தொடங்கினாள் அதுவும் மகுடேஸ்வரனிடம்..
“இதுக்கு நீங்க அம்மாவை டைவர்ஸ் பண்ணிருக்கலாம்.. தனியா நிம்மதியா இருந்திருப்பாங்க..” என்பது தான் அவள் அவரிடம் கடைசியாய் பேசியது.
அதன்பின்னே பேசவுமில்லை.. அப்பா என்று அழைத்ததுமில்லை. ‘அவர்...’ என்ற அழைப்பு மட்டுமே மகுடேஸ்வரனை குறிப்பதாய் இருக்கும் அவளிடம். சிவகாமி எத்தனையோ சொல்லிப் பார்த்தார். மகளை கெஞ்சிப் பார்த்தார்.. அடித்து திட்டிப் பார்த்தார். ம்ம்ஹும் கமலி எதற்கும் மசிவதாய் இல்லை.
“விட்டுடு சிவா.. ஒருநாள் கமலிக்கு புரியும்...” என்று மகுடேஸ்வரன் சொல்ல, அந்த ஒருநாள் என்பது எப்போதுமே வராது என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
வயது கூட கூட, கமலி வீட்டில் அதிகம் பிடிவாதம் செய்ய, சிவகாமி பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் அவளை விடுதியில் சேர்த்துவிட்டார்.
“என்ன சிவா இதெல்லாம்???” என்ற மகுடேஸ்வரனுக்கோ,
“அவளுக்கு கொஞ்சம் உலகம் புரியணும்.. என்னையே சுத்திட்டு இருக்கா.. எனக்கு அப்புறம் அவளா நிக்கணும்...” என, மகுடேஸ்வரனுக்கு முதல் முறையாய் அப்போது தான் சிவகாமியின் ஆழ் மனத்தில் இருக்கும் வருத்தம் புரிந்தது.
“சிவா...!!!!” என்று அதிர்ந்தவரை,
“ஒன்னுமில்லைங்க... அவ யார்கிட்டவும் ஓட்டுறது இல்லைல அதான்...” என்றுவிட, அதன் பிறகு மகுடேஸ்வரன் மனதில் பெரும் கவலை பெருக்கு.
சுயநலமாய் இருந்துவிட்டோமோ என்று தன்னை தானே சுய ஆலோசனை செய்ய, பமீலா எப்படி வளர்கிறாள் என்பதும், கமலி எப்படி இருக்கிறாள் என்பதுமே அவருக்கு பெரும் வித்தியாசத்தை காட்டியது.
வனமாலி ஒருவன் மட்டுமே, சிவகாமி வீட்டிற்கு வருபவன்.. அதற்குமேல் அங்கே வந்து போவது என்பது சிவகாமி பக்கத்து உறவுகளும், சங்கிலிநாதன் குடும்பத்தினருமே..
‘எல்லாம் சரியாகும்...’ என்று காலத்தின் மீது பொறுப்பினை சுமத்தி சும்மாயிருந்தது தவறோ என்று அவருக்கு தோன்றிய நேரம் காலம் கடந்து விட்டிருந்தது.
அவருக்கான பூவுலக காலமும் முடிந்திருந்தது.
அந்த ஒரு மனிதரின் மரணம்.. பலருக்கு மனத்தில் பெரும் பாற்றங்களை உண்டு செய்தது. மணிராதாவிற்கு தம்பியின் இறப்பு என்பது ஒரு கை ஒடிந்தநிலை. இந்திராவிற்கோ இன்னும் மணிராதவை சார்ந்து நிற்கும் நிலை.
சிவகாமியோ, மரத்துப் போன உணர்வு.. இனி என்னாகும்??? இந்த கேள்வி அவருள் பூதாகாரம் பூண்டிருந்தது. வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தவர் தான். அழுதாரா என்பதுகூட தெரியவில்லை. கமலியும் அப்படியே.. துளி நீரளவு இல்லை கண்களில்.
சொந்தங்கள் எல்லாம் “அழுது தீர்த்துடுங்க..” எனும்போது, இன்னமும் மனம் இறுகியது கமலிக்கு என்றுதான் சொல்லுதல் வேண்டும்.
அப்பா என்ற உறவு... இன்றில்லை. அதன் பாதிப்பு இருந்தது. ஆனால் அதற்குமேல் பமீலா போல, கதறி அழுது.. மயக்கம் செய்ய எல்லாம் எதுவுமில்லை என்பதே கமலியின் நிலை. இந்திராவும் அப்படியே அவரின் சத்தம் தான் நிறைய இருக்க, சிவகாமியோ, மகுடேஸ்வரன் உடலருகே, அமைதியாய் அவரின் முகம் பார்த்து அமர்ந்திருந்தார்.
அந்த அமைதி.. ஆயிரம் பாசைகள் பேசியது, மகுடேஸ்வரனின் ஆன்மாவிற்கு மட்டுமே தெரியும்.
வனமாலி தான் அனைத்தும் எடுத்து செய்து பார்த்தது. கோவர்த்தன் அவனுக்கு உதவியாய் இருக்க, ஒருவழியாய் அனைத்து சாங்கியங்களும் நன்கு முடிய, அன்றைய இரவே சிவகாமி கிளம்பிவிட்டார்..
“அத்தை என்ன இது??” என்று வனமாலி அதிர்ந்து கேட்க, அவனைப் பார்த்தவர் ஒரு வெற்று சிரிப்பு அவ்வளவே.
“அத்தை இனிதான் நீங்க இங்க இருக்கணும்...” என்று வனமாலி கட்டாயம் செய்ய,
சங்கிலிநாதனோ “சிவகாமி.. இதுக்கு முன்னாடி எப்படியோ.. இனியும் நீயும் பொண்ணும் தனியா இருக்கக்கூடாது...” என,
“ம்ம்.. அவர் இருக்கும்போதே நாங்க தனிதான்.. இது அவர் வாழ்ந்த வீடு. தேவையில்லாத சச்சரவு எப்பவும் இருக்கக் கூடாது..” என்றவர் மகளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
அதன் பின்னே கமலி சிவகாமி அச்சகத்தின் பொறுப்பினை ஏற்றுகொள்ள, சிவகாமிக்கு வீட்டு வாசம் மட்டுமே நிரந்தரமானது.
வந்தனாவிற்கு பேசி முடித்திருக்கிறார்கள் என்று தெரியும் ஆனால் வனமாலி வந்து அழைப்பு வைத்தது அதிசயமே.. அடிக்கடி வரவில்லை என்றாலும், வனமாலி இவர்களோடு சுமுகமாய் தானே இருப்பான். ஆக அவன் வந்து அழைத்தது சிவகாமிக்கு சந்தோசமே.
ஆனால் அந்த சந்தோசம், வனமாலி வீட்டினில் இல்லை.
அதிலும் அவன் சென்று கமலியையும் அழைத்திருக்கிறான் என்றதும் பமீலாவிற்கு பகீரென்றது.
அவள் வந்தால், உறவுகள் மத்தியில் அனைவருமே, சிவகாமியையும் கமலியையும் தான் முன்னிருத்துவர். என்னதான் பமீலா உடன் பிறந்தவன் மனைவி என்றாலும், அங்கே சிவகாமி கமலிகே அவர்களின் உறவில் மதிப்பு அதிகம் என்பது அனைவருக்குமே தெரியும்.
மணிராதா சொன்னதை கேட்டதுமே, பமீலாவிற்கு மனதில் ஒருவித பயமும் கோபமும் எழ,
“அத்தை.. வனா மாமா நல்லா கேட்டுக்கோங்க.. வந்தனா நிச்சயத்துக்கு அந்த கமலியோ இல்லை அவங்க அம்மாவோ வந்தா.. கண்டிப்பா நான் வர மாட்டேன்.. அப்போ.. அங்கவே எல்லார் முன்னாடியும் கிளம்பி வந்திடுவேன்...” என்று பமீலா கத்த,
வனமாலி அப்போதும் பதில் சொல்லாது, தன் தம்பியைத் தான் பார்த்தானே தவிர வேறொன்றும் பேசவில்லை.
அண்ணனின் பார்வை புரிந்தவனோ “பமீ.. சும்மா இரு.. இது நம்ம வீட்டு விசேசம்...” என்று மனைவியை அதட்ட,
“அதையே தான்டா நானும் சொல்றேன்.. இது நம்ம வீட்டு விசேசம். நமக்கு தேவையானவங்களை மட்டும் தான் கூப்பிடனும்... அவங்களை ஏன் கூப்பிட்ட..” என்று மணிராதா குரலை உயர்த்தினார்.
வந்தனவோ “ம்மா.. வீட்ல தேவையில்லாத சண்டை வேண்டாமே ம்மா.. அவங்க வந்தா வந்துட்டு போகட்டுமே... எத்தனையோ பேர் வர்றாங்க.. அப்படி நினைச்சுக்கோ...” என்றுசொல்ல,
“அதெப்புடி....” என்று வேகமாய் முன்னே வந்தாள் பமீலா..
கோவர்த்தனோ ‘இதெல்லாம் தேவையா..’ என்று வனமாலியைப் பார்க்க, அவனோ நீ சும்மா இரு என்று சைகை செய்துவிட்டான். வனமாலிக்கு தெரியும், இவர்கள் என்ன சொன்னால் அடங்குவார்கள் என்று. ஆனால் பேசட்டும் என்று விட்டுவிட்டான். பேசினால் தானே சில பல விஷயங்கள் எல்லாம் வெளிவரும்.
“பமீலா... இதெல்லாம் வேண்டாதா பிரச்சனை தரும். மாமா இருந்திருந்தா கூப்பிட்டிருப்போம் தானே..” என்று வந்தனா சொல்லிட,
“அப்பா தான் இல்லையே.. அப்புறம் என்ன??” என்றாள் பமீலா..
“மகுடா இருந்திருந்தாலும், நான் என் பொண்ணு விசேசத்துக்கு அவங்களை கூப்பிட்டு இருக்கமாட்டேன்.. எனக்கு தேவையில்லாத உறவு வேண்டவே வேணாம்..” என்று மணிராதாவும் சொல்லிட,
“அத்தை, வந்தா விசேசத்துக்கு அம்மாதான் முறை செய்வாங்க.. அவங்க முன்னாடி நிக்க தயங்குவாங்க.. அதனால நானும் இவரும்தான் அப்பா வீட்டு சார்பா செய்வோம்..” என்று பமீலா சொல்ல,
“சரி அப்போ என் சார்பாவும் எல்லாமே நீயே பண்ணிடு கோவர்த்தனா...” என்றபடி வனமாலி எழ,
அனைவருமே ‘என்ன சொல்றான்...’ என்று திகைத்துப் பார்க்க,
“என்ன?? என்ன பாக்குறீங்க எல்லாம்... என் தங்கச்சிக்கு நான் முன்ன நின்னு செய்ற முதல் விசேசம்.. நம்ம வீட்டு விசேசம்.. அதான் கூப்பிட்டேன்.. மாமா இருந்தாலும் சரி இல்லைன்னாலும் சரி அவங்களும் நம்ம சொந்தம் தான். அதையும் மீறி நான் அங்க நிக்கணும்னா...” என்றவன் மேற்கொண்டு பேச்சினை முடிக்காமலேயே அங்கிருந்து நகர்ந்துவிட,
“வனா.. வனா...” என்று மணிராதா அழைத்த அழைப்பிற்கு பதிலே இல்லை.
“பார்த்தீங்களா அத்தை... விசேசத்துக்கு கூப்பிட்டு வந்ததுக்கே நம்ம வீட்ல இப்போ இவ்வளோ நடக்குது.. இனி அவங்க வந்து போயிட்டா என்னென்ன நடக்குமோ?? எங்கப்பா பாவம் நீங்க சொன்ன வார்த்தையை கேட்டுதான் இப்போ வரைக்கும் இருக்காங்க.. ஆனா இதெல்லாம் என்னத்தை??” என்று பமீலா கண்ணீர் வடிக்க ஆரம்பிக்க,
“ம்மா... முதல்ல உங்க பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்கப் போகுதுன்னு சந்தோசப்படுங்க.. எல்லார் ஆசீர்வாதமும் எனக்கு கிடைக்கனும்னு நினைங்க.. அதைவிட்டு...” என்று எல்லாரையும் ஒரு பார்வை பார்த்த வந்தனாவோ, அவளும் வனமாலி போலவே பேச்சை முடிக்காது நகர்ந்துவிட,
மணிராதாவோ செய்வது அறியாது அமர்ந்துவிட்டார்.. பிள்ளைகளின் இருமுனை தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை.. வந்தனா எப்போதாவது ஏதாவது சொல்வாள் தான். ஆனால் இன்று அவளும் வனமாலியோடு சேர்ந்து பேசவும், இதை மேலே வளர விடக்கூடாது என்றே தோன்றியது மணிராதாவிற்கு.
அவர் அப்படியே யோசனையாகவே அமர்ந்திருக்க, வந்தனாவோ வனமாலியிடம் சென்றவள்,
“என்னண்ணா நீயும் இப்படி பேசிட்ட??” என,
“சாரி வந்தனா.. உனக்கு ஒரு நல்லது நடக்குது.. நமக்கு எல்லார் வாழ்த்தும் வேணும்.. குடும்பத்துல ஒருத்தரை விட்டு எப்படி நல்லது பண்றது.. அப்படியே பண்ணாலும் வர்றவங்க எல்லாம் சும்மா இருப்பாங்களா??” என்று அவனும் வருந்த,
“ஹ்ம்ம் இதையே தான் இப்போ நானும் சொல்லிட்டு வந்தேன்.. ஆனா உனக்குத்தான் இவங்களைப் பத்தி தெரியுமேண்ணா..” என்றாள் வந்தனாவும்..
“அதுக்காக அப்படியே விட முடியுமா?? மாமா இதெல்லாம் சரி பண்ணிருக்கணும்.. ஆனா விட்டுட்டார்...”
“ம்ம்ம்...” என்று வந்தனா லேசாய் சிரிக்க, “என்ன???” என்றான் இவனும்..
மகுடேஸ்வரனுக்கும் கமலிக்குமான உறவு என்பது தாமரையிலை நீர் போலேதான். ஒட்டியும் ஒட்டாத ஓர் உறவு.. அதுவும் கூட சிவகாமிக்காக மட்டுமே இந்நிலை.. இல்லையெனில் கமலியைப் பொருத்தமட்டில் அதுவுமில்லை.
முதலில் எதுவும் தெரியவில்லை ஆனால் அப்பாவிற்கு அம்மாவும் நானும் மட்டுமல்ல, எங்களைப் போலவே இன்னொரு குடும்பமும் இருக்கிறது என்று தெரியவுமே, அப்பாவின் மீதிருந்த அந்த ஒரு பிணைப்பு முதலில் அறுந்தது.
மகுடேஸ்வரனோ பமீலாவையும், கமலியையும் ஒட்ட வைக்க எத்தனையோ முயன்றார். பமீலாவை இங்கு அழைத்து வருவார். கமலியை அங்கே அழைத்துப் போவார். ஆனால் அதெல்லாம் சிறிது நாட்கள் தான். ஒருமுறை பமீலாவை இங்கே சிவகாமி வீட்டிற்கு அழைத்து வர, அன்று இரவே அவளுக்கு காய்ச்சல் வந்து அவதிப்பட,
“அச்சோ பிள்ளைக்கு கண்ணு பட்டுப்போச்சே..” என்று இந்திராவை விட, அழுதது மணிராதா தான்.
அதன்பின்னோ இந்திரா அங்கே அழைத்து செல்ல ஒருபோதும் விடவில்லை. நேரடியாய் மறுக்கவில்லை என்றாலும் சொல்வதற்கு காரணங்களா இருக்காது.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி மறுக்க, அது மகுடேஸ்வரனுக்கு புரிய கொஞ்சம் நாள் பிடித்தது.
“வீண் பிரச்சனை வேணாங்க..” என்று சிவகாமியும் சொல்லிட, கமலியோ கொஞ்சம் கொஞ்சமாய் மகுடேஸ்வரனிடம் இருந்து விலக தொடங்கினாள்.
தெரிந்தவர், உறவுகள் என்று யார் வீட்டு விசேசத்திற்கு போனாலும், கமலியிடம் யார் வீட்டு பெண் என்று விசாரிக்கையில் மகுடேஸ்வரனின் மகள் எனும்போது அடுத்த கேள்வி அம்பென பாய்ந்து வரும்.
“யாரோட மக.. சிவகாமியா?? இல்லை இந்திராவா??” என்று..
இக்கேள்வி அவளை எப்படி நோகடிக்கும் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
வீட்டு விசேஷங்கள் ஒவ்வொன்றிலும், சிவகாமி ஒதுக்கப்படும் போதெல்லாம், கமலி எதிர்க்கத் தொடங்கினாள் அதுவும் மகுடேஸ்வரனிடம்..
“இதுக்கு நீங்க அம்மாவை டைவர்ஸ் பண்ணிருக்கலாம்.. தனியா நிம்மதியா இருந்திருப்பாங்க..” என்பது தான் அவள் அவரிடம் கடைசியாய் பேசியது.
அதன்பின்னே பேசவுமில்லை.. அப்பா என்று அழைத்ததுமில்லை. ‘அவர்...’ என்ற அழைப்பு மட்டுமே மகுடேஸ்வரனை குறிப்பதாய் இருக்கும் அவளிடம். சிவகாமி எத்தனையோ சொல்லிப் பார்த்தார். மகளை கெஞ்சிப் பார்த்தார்.. அடித்து திட்டிப் பார்த்தார். ம்ம்ஹும் கமலி எதற்கும் மசிவதாய் இல்லை.
“விட்டுடு சிவா.. ஒருநாள் கமலிக்கு புரியும்...” என்று மகுடேஸ்வரன் சொல்ல, அந்த ஒருநாள் என்பது எப்போதுமே வராது என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
வயது கூட கூட, கமலி வீட்டில் அதிகம் பிடிவாதம் செய்ய, சிவகாமி பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் அவளை விடுதியில் சேர்த்துவிட்டார்.
“என்ன சிவா இதெல்லாம்???” என்ற மகுடேஸ்வரனுக்கோ,
“அவளுக்கு கொஞ்சம் உலகம் புரியணும்.. என்னையே சுத்திட்டு இருக்கா.. எனக்கு அப்புறம் அவளா நிக்கணும்...” என, மகுடேஸ்வரனுக்கு முதல் முறையாய் அப்போது தான் சிவகாமியின் ஆழ் மனத்தில் இருக்கும் வருத்தம் புரிந்தது.
“சிவா...!!!!” என்று அதிர்ந்தவரை,
“ஒன்னுமில்லைங்க... அவ யார்கிட்டவும் ஓட்டுறது இல்லைல அதான்...” என்றுவிட, அதன் பிறகு மகுடேஸ்வரன் மனதில் பெரும் கவலை பெருக்கு.
சுயநலமாய் இருந்துவிட்டோமோ என்று தன்னை தானே சுய ஆலோசனை செய்ய, பமீலா எப்படி வளர்கிறாள் என்பதும், கமலி எப்படி இருக்கிறாள் என்பதுமே அவருக்கு பெரும் வித்தியாசத்தை காட்டியது.
வனமாலி ஒருவன் மட்டுமே, சிவகாமி வீட்டிற்கு வருபவன்.. அதற்குமேல் அங்கே வந்து போவது என்பது சிவகாமி பக்கத்து உறவுகளும், சங்கிலிநாதன் குடும்பத்தினருமே..
‘எல்லாம் சரியாகும்...’ என்று காலத்தின் மீது பொறுப்பினை சுமத்தி சும்மாயிருந்தது தவறோ என்று அவருக்கு தோன்றிய நேரம் காலம் கடந்து விட்டிருந்தது.
அவருக்கான பூவுலக காலமும் முடிந்திருந்தது.
அந்த ஒரு மனிதரின் மரணம்.. பலருக்கு மனத்தில் பெரும் பாற்றங்களை உண்டு செய்தது. மணிராதாவிற்கு தம்பியின் இறப்பு என்பது ஒரு கை ஒடிந்தநிலை. இந்திராவிற்கோ இன்னும் மணிராதவை சார்ந்து நிற்கும் நிலை.
சிவகாமியோ, மரத்துப் போன உணர்வு.. இனி என்னாகும்??? இந்த கேள்வி அவருள் பூதாகாரம் பூண்டிருந்தது. வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தவர் தான். அழுதாரா என்பதுகூட தெரியவில்லை. கமலியும் அப்படியே.. துளி நீரளவு இல்லை கண்களில்.
சொந்தங்கள் எல்லாம் “அழுது தீர்த்துடுங்க..” எனும்போது, இன்னமும் மனம் இறுகியது கமலிக்கு என்றுதான் சொல்லுதல் வேண்டும்.
அப்பா என்ற உறவு... இன்றில்லை. அதன் பாதிப்பு இருந்தது. ஆனால் அதற்குமேல் பமீலா போல, கதறி அழுது.. மயக்கம் செய்ய எல்லாம் எதுவுமில்லை என்பதே கமலியின் நிலை. இந்திராவும் அப்படியே அவரின் சத்தம் தான் நிறைய இருக்க, சிவகாமியோ, மகுடேஸ்வரன் உடலருகே, அமைதியாய் அவரின் முகம் பார்த்து அமர்ந்திருந்தார்.
அந்த அமைதி.. ஆயிரம் பாசைகள் பேசியது, மகுடேஸ்வரனின் ஆன்மாவிற்கு மட்டுமே தெரியும்.
வனமாலி தான் அனைத்தும் எடுத்து செய்து பார்த்தது. கோவர்த்தன் அவனுக்கு உதவியாய் இருக்க, ஒருவழியாய் அனைத்து சாங்கியங்களும் நன்கு முடிய, அன்றைய இரவே சிவகாமி கிளம்பிவிட்டார்..
“அத்தை என்ன இது??” என்று வனமாலி அதிர்ந்து கேட்க, அவனைப் பார்த்தவர் ஒரு வெற்று சிரிப்பு அவ்வளவே.
“அத்தை இனிதான் நீங்க இங்க இருக்கணும்...” என்று வனமாலி கட்டாயம் செய்ய,
சங்கிலிநாதனோ “சிவகாமி.. இதுக்கு முன்னாடி எப்படியோ.. இனியும் நீயும் பொண்ணும் தனியா இருக்கக்கூடாது...” என,
“ம்ம்.. அவர் இருக்கும்போதே நாங்க தனிதான்.. இது அவர் வாழ்ந்த வீடு. தேவையில்லாத சச்சரவு எப்பவும் இருக்கக் கூடாது..” என்றவர் மகளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
அதன் பின்னே கமலி சிவகாமி அச்சகத்தின் பொறுப்பினை ஏற்றுகொள்ள, சிவகாமிக்கு வீட்டு வாசம் மட்டுமே நிரந்தரமானது.
வந்தனாவிற்கு பேசி முடித்திருக்கிறார்கள் என்று தெரியும் ஆனால் வனமாலி வந்து அழைப்பு வைத்தது அதிசயமே.. அடிக்கடி வரவில்லை என்றாலும், வனமாலி இவர்களோடு சுமுகமாய் தானே இருப்பான். ஆக அவன் வந்து அழைத்தது சிவகாமிக்கு சந்தோசமே.
ஆனால் அந்த சந்தோசம், வனமாலி வீட்டினில் இல்லை.
அதிலும் அவன் சென்று கமலியையும் அழைத்திருக்கிறான் என்றதும் பமீலாவிற்கு பகீரென்றது.
அவள் வந்தால், உறவுகள் மத்தியில் அனைவருமே, சிவகாமியையும் கமலியையும் தான் முன்னிருத்துவர். என்னதான் பமீலா உடன் பிறந்தவன் மனைவி என்றாலும், அங்கே சிவகாமி கமலிகே அவர்களின் உறவில் மதிப்பு அதிகம் என்பது அனைவருக்குமே தெரியும்.
மணிராதா சொன்னதை கேட்டதுமே, பமீலாவிற்கு மனதில் ஒருவித பயமும் கோபமும் எழ,
“அத்தை.. வனா மாமா நல்லா கேட்டுக்கோங்க.. வந்தனா நிச்சயத்துக்கு அந்த கமலியோ இல்லை அவங்க அம்மாவோ வந்தா.. கண்டிப்பா நான் வர மாட்டேன்.. அப்போ.. அங்கவே எல்லார் முன்னாடியும் கிளம்பி வந்திடுவேன்...” என்று பமீலா கத்த,
வனமாலி அப்போதும் பதில் சொல்லாது, தன் தம்பியைத் தான் பார்த்தானே தவிர வேறொன்றும் பேசவில்லை.
அண்ணனின் பார்வை புரிந்தவனோ “பமீ.. சும்மா இரு.. இது நம்ம வீட்டு விசேசம்...” என்று மனைவியை அதட்ட,
“அதையே தான்டா நானும் சொல்றேன்.. இது நம்ம வீட்டு விசேசம். நமக்கு தேவையானவங்களை மட்டும் தான் கூப்பிடனும்... அவங்களை ஏன் கூப்பிட்ட..” என்று மணிராதா குரலை உயர்த்தினார்.
வந்தனவோ “ம்மா.. வீட்ல தேவையில்லாத சண்டை வேண்டாமே ம்மா.. அவங்க வந்தா வந்துட்டு போகட்டுமே... எத்தனையோ பேர் வர்றாங்க.. அப்படி நினைச்சுக்கோ...” என்றுசொல்ல,
“அதெப்புடி....” என்று வேகமாய் முன்னே வந்தாள் பமீலா..
கோவர்த்தனோ ‘இதெல்லாம் தேவையா..’ என்று வனமாலியைப் பார்க்க, அவனோ நீ சும்மா இரு என்று சைகை செய்துவிட்டான். வனமாலிக்கு தெரியும், இவர்கள் என்ன சொன்னால் அடங்குவார்கள் என்று. ஆனால் பேசட்டும் என்று விட்டுவிட்டான். பேசினால் தானே சில பல விஷயங்கள் எல்லாம் வெளிவரும்.
“பமீலா... இதெல்லாம் வேண்டாதா பிரச்சனை தரும். மாமா இருந்திருந்தா கூப்பிட்டிருப்போம் தானே..” என்று வந்தனா சொல்லிட,
“அப்பா தான் இல்லையே.. அப்புறம் என்ன??” என்றாள் பமீலா..
“மகுடா இருந்திருந்தாலும், நான் என் பொண்ணு விசேசத்துக்கு அவங்களை கூப்பிட்டு இருக்கமாட்டேன்.. எனக்கு தேவையில்லாத உறவு வேண்டவே வேணாம்..” என்று மணிராதாவும் சொல்லிட,
“அத்தை, வந்தா விசேசத்துக்கு அம்மாதான் முறை செய்வாங்க.. அவங்க முன்னாடி நிக்க தயங்குவாங்க.. அதனால நானும் இவரும்தான் அப்பா வீட்டு சார்பா செய்வோம்..” என்று பமீலா சொல்ல,
“சரி அப்போ என் சார்பாவும் எல்லாமே நீயே பண்ணிடு கோவர்த்தனா...” என்றபடி வனமாலி எழ,
அனைவருமே ‘என்ன சொல்றான்...’ என்று திகைத்துப் பார்க்க,
“என்ன?? என்ன பாக்குறீங்க எல்லாம்... என் தங்கச்சிக்கு நான் முன்ன நின்னு செய்ற முதல் விசேசம்.. நம்ம வீட்டு விசேசம்.. அதான் கூப்பிட்டேன்.. மாமா இருந்தாலும் சரி இல்லைன்னாலும் சரி அவங்களும் நம்ம சொந்தம் தான். அதையும் மீறி நான் அங்க நிக்கணும்னா...” என்றவன் மேற்கொண்டு பேச்சினை முடிக்காமலேயே அங்கிருந்து நகர்ந்துவிட,
“வனா.. வனா...” என்று மணிராதா அழைத்த அழைப்பிற்கு பதிலே இல்லை.
“பார்த்தீங்களா அத்தை... விசேசத்துக்கு கூப்பிட்டு வந்ததுக்கே நம்ம வீட்ல இப்போ இவ்வளோ நடக்குது.. இனி அவங்க வந்து போயிட்டா என்னென்ன நடக்குமோ?? எங்கப்பா பாவம் நீங்க சொன்ன வார்த்தையை கேட்டுதான் இப்போ வரைக்கும் இருக்காங்க.. ஆனா இதெல்லாம் என்னத்தை??” என்று பமீலா கண்ணீர் வடிக்க ஆரம்பிக்க,
“ம்மா... முதல்ல உங்க பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்கப் போகுதுன்னு சந்தோசப்படுங்க.. எல்லார் ஆசீர்வாதமும் எனக்கு கிடைக்கனும்னு நினைங்க.. அதைவிட்டு...” என்று எல்லாரையும் ஒரு பார்வை பார்த்த வந்தனாவோ, அவளும் வனமாலி போலவே பேச்சை முடிக்காது நகர்ந்துவிட,
மணிராதாவோ செய்வது அறியாது அமர்ந்துவிட்டார்.. பிள்ளைகளின் இருமுனை தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை.. வந்தனா எப்போதாவது ஏதாவது சொல்வாள் தான். ஆனால் இன்று அவளும் வனமாலியோடு சேர்ந்து பேசவும், இதை மேலே வளர விடக்கூடாது என்றே தோன்றியது மணிராதாவிற்கு.
அவர் அப்படியே யோசனையாகவே அமர்ந்திருக்க, வந்தனாவோ வனமாலியிடம் சென்றவள்,
“என்னண்ணா நீயும் இப்படி பேசிட்ட??” என,
“சாரி வந்தனா.. உனக்கு ஒரு நல்லது நடக்குது.. நமக்கு எல்லார் வாழ்த்தும் வேணும்.. குடும்பத்துல ஒருத்தரை விட்டு எப்படி நல்லது பண்றது.. அப்படியே பண்ணாலும் வர்றவங்க எல்லாம் சும்மா இருப்பாங்களா??” என்று அவனும் வருந்த,
“ஹ்ம்ம் இதையே தான் இப்போ நானும் சொல்லிட்டு வந்தேன்.. ஆனா உனக்குத்தான் இவங்களைப் பத்தி தெரியுமேண்ணா..” என்றாள் வந்தனாவும்..
“அதுக்காக அப்படியே விட முடியுமா?? மாமா இதெல்லாம் சரி பண்ணிருக்கணும்.. ஆனா விட்டுட்டார்...”
“ம்ம்ம்...” என்று வந்தனா லேசாய் சிரிக்க, “என்ன???” என்றான் இவனும்..