Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 3

Advertisement

“மாமா குடும்பத்து மேல என்ன திடீர் அக்கறை???!!!!” என்று என்று வந்தனா இரு புருவங்களையும் கிண்டலாய் தூக்கி சிரிக்க,

“ஏய் வாலு.. என்ன??!! என்ன??!!” என்று வனமாலியும் சிரிக்க,

“அதே தான் என்னன்னு நானும் கேட்கிறேன்...” என்று வந்தனா இன்னும் சத்தமாய் சிரித்தாள்.

இவர்கள் இருவரின் சிரிப்பு சத்தமும் வெளியே இருப்பவர்களுக்கு கேட்க, ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அதுமட்டுமே அப்போதைக்கு அவர்களால் செய்ய முடியும். கோவர்த்தன் நியாயமாய் பேசுபவன் தான். ஆனால் எங்கே அதட்டி பேசவேண்டும் என்பது அவனுக்கு தெரியாது.

அதுமட்டும் இல்லாது பமீலா லேசாய் கண்ணை கசக்கினாலே போதும், அதிலும் மணிராதா பேச்சிற்கு அவனிடம் என்றுமே மறுப்பும் இருந்ததில்லை ஆக, அவனின் நியாயங்கள் எல்லாம் அவனின் மனதளவே.

வனமாலி அப்படியில்லை. ஆரம்பத்தில் இருந்தே, மகுடேஸ்வரனோடு இருந்து இருந்து தொழில் பழகி, வெளியே ஆட்களின் பழக்கமும் நிறைய, என்ன ஒரு விஷயமென்றாலும் வீட்டிலும் சரி, வியாபாரத்திலும் சரி எதுவென்றாலும் அது வனமாலியின் பார்வைக்கு வராது நடக்காது, நடக்கவும் முடியாது என்பதால், தன்னபோலவே அவனுக்கு எப்போதும் ஒரு நிமிர்வு இருக்கும்.

பேசும்போது எங்கே எப்படி பேசவேண்டும் என்பதும், தட்டியம் காட்டுவது எங்கே என்றும், தட்டிக்கொடுத்து செல்வது எங்கே என்றும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.

ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லை அல்லவா.. அதுபோலவே ஒரு குடும்பத்தில் இருக்கும் ஆட்களும்.. உருவங்கள் வேறு எப்படியோ அதுபோலவே குணங்களும் வெவ்வேறாய் இருக்கும்.. என்ன சிலர் சிலரை சார்ந்து இருக்கவேண்டிய நிலை. அந்த சார்பு தன்மை என்பது நீங்கும் பட்சத்தில் ஒருவரின் சுயம் எப்படி என்பது வெட்ட வெளிச்சம் ஆகும்..

ஆனால் சிவகாமியோ எப்போதுமே, யாரோடு சார்ந்து இருந்திருந்தாலும் கூட தன் சுயம் என்பது எங்கேயும் அழியாது தான் பார்த்துக்கொண்டார்.. அதுபோலவே கமலியையும் வளர, இப்போது அதுவே தவறு எனப்பட்டது சிவகாமிக்கு.. அவரைப் பொருத்தமட்டில் தன்னுடைய காலம் இதோ பாதிக்கு மேல கடந்துவிட்டது. ஆனால் கமலிக்கு??

அவளுக்கு இனிமேல்தான் வாழ்வே.. அப்படியிருக்க அவளோ யாருமே தனக்கு தேவையில்லை என்பதுபோல் இருப்பது மனதினில் ஒரு வருத்தம் கொடுக்க, நல்ல நேரம் வனமாலி அப்போது வந்து வந்தனா நிச்சயத்திற்கு அழைப்பு விடுக்க, கண்டிப்பாய் கமலியை அழைத்துக்கொண்டே சென்றே ஆகவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உறுதியானது.

“கமலியை ஒருவார்த்தை கூப்பிடேன் வனா..” என்று அனுப்பி வைத்தவரும் அவரே.. அனுப்பியதுமில்லாது, சங்கிலிநாதனுக்கு அழைத்தும் கூட சொல்லிவிட்டார்..

ஆனால் கமலியோ இப்போது அம்மாவை முறைத்தபடி இருக்க சிவகாமியோ “நம்ம சீர் தட்டு வைக்கணும் கமலி.. சேலை எடுக்கணும்.. நகை போடணும்... வந்தனாக்கு என்ன கலர் பிடிக்கும்னு கேட்டு எடுத்துப்போம்.. இல்லை வனாக்கிட்ட சொன்னா அவளை கடைக்கே கூட கூட்டிட்டு வருவான்... அவளுக்கு பிடிச்சதை எடுத்து கொடுத்துடலாம்..” என்று பேசிக்கொண்டே போக,

கமலியோ இந்த அம்மா எத்தனை பட்டாலும் திருந்தவே மாட்டார்களா என்று தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்..

“என்ன கமலி??? நான் பேசிட்டே இருக்கேன்...”

“தேவையே இல்லாத பேச்சும்மா...” என்றவள், “இனிமே இப்படி பண்ணாதீங்க.. என்னை பார்க்க யாரையும் அங்க அனுப்பாதீங்க...” என்றாள் இறுகிப் போன குரலில்..

“ஏன்?? நான் ஏன் பேசக்கூடாது???”

“வேண்டாம்.. பேசி எதுவும் ஆகப் போறதில்ல.. நீ இதெல்லாம் வாங்கினாலும் உன்னை அங்க செய்ய விடப் போறாங்களா என்ன??”

“நான் செய்யலை.. ஆனா நீ செய்யணும்...” என்றார் சிவகாமி திண்ணமாய்..

“ம்மா!!!” என்று கமலி அதிர்ந்து பார்க்க,

“இது சொந்தத்துக்காக மட்டும் நான் போகணும் சொல்லலை கமலி.. வனா வந்து கூப்பிட்டது ஒருப்பக்கம் சந்தோசம் தான்.. ஆனா... யார் நம்மல மதிச்சாலும் இல்லைன்னாலும், நம்ம நம்மளோட நிலைல இருந்து எங்கயும் இறங்கல.. அவர் இல்லைன்னா கூட நாம் செய்றதை சரியா செஞ்சுத்தான் ஆவோம்னு காட்டனும்...” என்று சொல்ல,

அம்மாவின் பேச்சில் கொஞ்சமே கொஞ்சம் வியந்தவள், “நிஜமா இது மட்டும்தான் காரணமா??” என்று கேட்க,

“வேறென்ன நினைச்ச நீ??” என்றார் சிவகாமி பட்டென்று..

“ம்ம்.. ஒண்ணுமில்ல... கடைக்கு போகணும்னா போயிட்டு வாங்க...” என்றவள் எழுந்து சென்றுவிட,

அம்மா மகள் இருவரின் பேச்சையும் அத்தனை நேரம் அமைதியாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த சங்கிலிநாதனின் மகள் ராணி, “என்ன சித்தி.. நிஜமா இதான் காரணமா??” என்று கேட்க,

“கமலி இப்படி சொன்னாதான் வருவா..” என்றார் மெதுவாய் சிரித்து.

“அதானே பார்த்தேன்.. நீ என்னிக்கு இப்படி எல்லாம் யோசிச்சு இருக்கீங்க.. அவங்க என்ன காயப்படுத்தினாலும் சரின்னு தானே இருப்பீங்க..”

“இப்போ ஏன் அந்த பேச்சு ராணி.. எனக்கு அப்புறம் என் பொண்ணுக்கு யார் இருக்கா?? எதோ வனா நல்லா பழகறான்.. அவன் வந்து கூப்பிட்டு நம்ம போகலைன்னா அது அவனுக்கு கஷ்டம் தானே.. அதுவுமில்லாம அவர் பக்கத்து சொந்தம் எல்லாம் வரும்... அதுவும் ஒரு காரணம்..” என்றவர் அடுத்து ஆக வேண்டிய வேலைகளை பார்க்க,

கமலியோ வெகுவாய் சிந்தனையின் பிடியில் சிக்கியிருந்தாள். என்னதான் அம்மா சொன்னதற்கு ஒருவிதமாய் சரி என்று சொல்லி வந்துவிட்டாலும், அவளுக்கு மனது சரியாகவேயில்லை.. அங்கே விசேச வீட்டில் போனால், அனைவரின் பார்வையும் இவர்களின் மேல்தான் இருக்கும்.

என்ன செய்கிறார்கள் என்று ஆரம்பித்து, மணிராதா, இந்திரா எல்லாம் எப்படி பேசுகிறார்கள், அவர்களின் முக மாற்றங்கள் என்று ஒவ்வொன்றாய் இவர்கள் அனைவரையும் வைத்து ஒரு மேடை நாடகம் காண்பர். அதிலும் கமலி, பமீலா ஒப்பீடுகள் எல்லாம் கேட்கவே இவளுக்கு நாராசமாய் இருக்கும்.

ஒருசிலர் வந்து “உன் அக்கா கூட பேசுவியா??” என்று இவளிடமே சின்னதனமாய் கேள்வி எல்லாம் கேட்டு இருக்கிறார்கள்.

பமீலா என் அக்காவா??? ஹா ஹா ஹா என்று சத்தமாய் சிரிக்கத் தோன்றும் இவளுக்கு..

இப்போதும் அது நினைவில் வர, தானாய் சிரித்துக் கொண்டாள் ‘அக்காவா...’ என்று சொல்லியபடி..

Nice Ep
 
Top