அத்தியாயம் – 17
இரண்டு நாட்கள் கடந்திருந்தது. ஆனாலும் கமலி வாய் திறக்கவில்லை. வனமாலியோடு பேசுவதை அப்படியே நிறுத்திக்கொண்டாள். அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவள் இருப்பதில்லை. இரவில் அவன் வரும் நேரம் ஒன்று உறங்கிப் போகிறாள் இல்லையோ வேலை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறாள்.
வந்தனா மறுநாளே கேட்டாள் ‘கொடைக்காணல் போகலையா...’ என்று,
சாப்பிடும்போது தான் கேட்டாள், மணிராதாவும் அங்கேதான் இருந்தார், அவரும் ‘அதானே..’ என்று பார்க்க,
கமலியோ பதிலே சொல்லவில்லை. வனமாலியோ அவனின் அம்மாவை பார்த்தவன், பின் வந்தனாவிடம் “அது ஒண்ணுதான் இப்போ குறைச்சல்..” என்றான் கடுப்பாய்..
“ஏன்?? என்னாச்சு?? நேத்து தானே கமலி சொன்னா..” என்று வந்தனா கமலியைப் பார்க்க,
கமலியோ “போகலை வந்தனா..” என்றவள் “நாளைக்கு புதன் கிழமை உங்க இன்விடேசன் வந்திடும்..” என்றுமட்டும் பொதுவாய் சொல்லிவிட்டு அச்சகம் கிளம்பிட,
‘என்னாச்சு இவளுக்கு..’ என்றுதான் பார்த்தாள் வந்தனா..
இத்தனை நாள் நன்றாகத்தானே பேசுவாள். பொதுவாய் மணிராதாவிற்கும் கமலிக்கும் எந்த பேச்சுமே இருக்காது. உன்னை நான் கண்டுகொள்ளவில்லை என்கிற ரீதியில் தான் இருவருமே இருப்பர். வீட்டினரும் இருவரையுமே மாற்ற முயற்சிக்கவில்லை. மாற்றம் என்பது தானாகவே வரவேண்டும்.
ஆக, சரி பமீலா தான் முரண்டு பிடித்து இப்படி அனைவரையும் படுத்துகிறாள் என்று பார்த்தால், இப்போது கமலி முகம் தூக்கி இருப்பது என்னவோ போல் இருந்தது.
வனமாலியோ ‘நான் இப்போ எதுவும் பேசலை..’ என்பதுபோல் இருக்க,
வந்தனாவோ சரி இருவருக்கும் என்னவோ பிரச்சனை போல, சரியானதும் கிளம்புவர் என்று எண்ணியிருந்த அடுத்து வந்த நாட்களும் அப்படியே தான் இருந்தனர். சிவகாமியும் மகளிடம் கேட்டார் தான்.
‘என்ன அவ்வளோ சந்தோசமா வந்து சொல்லிட்டு போன..’ என்று.
கமலி நிஜமாகவே அப்போது சந்தோசமாகத்தானே இருந்தாள், வீட்டிற்கு வந்தும்கூட மகிழ்வுடன் தானே அனைத்தும் எடுத்துவைத்தாள். ஆனால் அவளும் நினைக்காத ஒரு விஷயம் நடக்கவும்தான் இப்படி பழைய படி தன்னை தன்னுள்ளே இறுக்கிக்கொண்டாள்.
ஆம், பழையபடி யாரோடும் அளவோடு வைத்துகொள்ள, வனமாலியோடு முற்றிலும் அனைத்தையும் தவிர்த்தாள். பேசுவது பார்ப்பது என்று அனைத்தையும்..
சிவகாமியிடம் கூட “கல்யாண வேலை இருக்கே..” என்றுவிட்டாள்.
மறந்தும் கூட தன் மனதில் இருக்கும் காரணத்தை சொல்லவில்லை. முன் எப்படியோ இப்போதும் வனமாலியை அவளின் அம்மாவிடம் சொல்லும் எண்ணம் வரவில்லை.. அதன் காரணம் அப்போதும் புரியவில்லை. ஆனால் இப்போது புரிந்தது. கணவன் என்றாலும், அதற்கு முன்னேயே எதோ ஒரு வகையில் அவனின்பால் அவளுக்கு இருந்த சலனம் என்று.
இல்லை என்று மறுத்தாலும் நம் மனதிற்கு அவ்வுண்மை தெரியுமே.. ஆனால் இப்போதோ திருமணத்திற்கு பின்னே கமலி அதனை தனக்கு தானே ஒத்துக்கொண்டாள்.
‘ஆமா.. இப்போ என்ன பிடிச்சிருக்கு..’ என்று.
மணிராதாவின் மகனாய் காணாது வனமாலி என்ற தனி மனிதானாய் அவனை நிரம்பவே பிடித்தது. அதிலும் கோவர்த்தனை அழைத்து ‘இப்போ நீ பமீலாவோட இருக்கணும்..’ என்று சொல்கையில், இவன் எந்நிலையிலும் என்னை விட்டுக்கொடுத்திட மாட்டான் என்ற எண்ணம் அவளுள் ஊர்ஜிதமே ஆனது..
ஆனால் அந்தோ பரிதாபம், வனமாலி கமலி இருவருக்கும் இடையில் இருந்த அந்த அழகான உணர்வை மணிராதாவின் வார்தைகள் இருந்த இடம் தெரியாமல் துடைத்து எறிந்துவிட, வனமாலி என்ன செய்வது என்று திகைக்க, கமலியோ மீண்டும் தனக்குள்ளே சுருங்கிப்போனாள்..
வனமாலியும் எத்தனை எடுத்து சொல்லிப் பார்த்தான், ம்ம்ஹும் கமலி கேட்பதாகவே இல்லை.
“எனக்கு அவங்களை சம்மதிக்க வைக்க வேற வழி தெரியலை கமலி..” என்று வனமாலி தொய்ந்து போய் சொல்ல,
“ஏன்.. அவ்வளோ அவசரம் ஏன்.. ஒரே வாரத்துல கல்யாணம் செய்யனுங்கற அளவுக்கு.. அவ்வளோ சீக்கிரம் உங்கம்மா செஞ்ச பாவத்தை கழுவ நினைசீங்களா...” என்று முறைத்து கேட்க,
“கமலி..!!!” கத்தியேவிட்டான் வனமாலி.
அவனுக்கு அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியவில்லை.. தங்களை சுற்றி யாருமில்லை என்றெண்ணியே இருவரும் பேசியது இப்படி. ஆனால் வீட்டினில் இருந்த வந்தனாவின் கண்களில் இது பட்டுவிட,
‘ஐயோ இதென்ன பேச்சு..’ என்று அவளும் கொஞ்சம் திகைத்துத்தான் போனாள்.
கமலியோ “என் முன்னாடியே வராதீங்க... உங்கள கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் என்னோட பொறுப்பு என்னன்னு எங்கம்மா சொல்லிருக்காங்க.. சோ அதை நான் சரியா செய்வேன்..” என்றுவிட்டு கிளம்பிட,
வனமாலி தோய்ந்து போய் அங்கே இருந்த இருக்கையில் அமர, வந்தனா வேகமாய் வந்தவள் “என்னண்ணா?? என்னதான் நடக்குது..” என்றாள் சங்கடமாய்..
வந்தனாவை ஒரு அடிப்பட்ட பார்வை பார்க்க, எப்போதுமே வனமாலி முகத்தில் தோன்றியிராதா இப்படியான ஒரு பாவனையில் வந்தனா இன்னும் திடுக்கிட்டுப் போனாள்.
“என்னண்ணா...??!!!”
“ம்ம்ச் ஒண்ணுமில்ல வந்தனா...” என்றவனிடம் “என்னண்ணா பொண்டாட்டி வரவும் தங்க்சிக்கிட்ட எதுவும் ஷேர் பண்ணக்கூடாதா??” என்று வந்தனா கிண்டலாய் கேட்டாலும் அவள் முகத்தில் தெரிந்த வருத்தம் கண்டு,
“ஹேய்.. அதெல்லாம் இல்லை..” என்றவன், நடந்தவைகளை சுருக்கமாய் சொல்ல,
“கடவுளே இந்த அம்மாவை என்னன்னு சொல்றது..” என்று தலையில் கை வைத்துக்கொண்டாள்.
“அம்மாவும் அப்போ பர்பஸா சொல்லலை.. பட் அப்படியே பேசிட்டாங்க..”
“ம்ம்ம் கமலிக்கு இதை கேட்கிறப்போ எப்படியிருக்கும்..”
“ரொம்ப ஹர்ட் ஆகிட்டா வந்தனா.. அவ அப்படி வருந்தி பேசி நான் பார்த்ததில்லை அதான் சங்கடமா இருக்கு..” என்றவன்,
“விடு... சிலது எல்லாம் தானா சரியாகணும்...” என்றவனும் தியேட்டர் கிளம்பிட,
“நான் பேசவா???” என்றாள் பின்னோடு வந்து,
“வேணாம்.. எல்லாமே சட்டுன்னு நடக்காது..” என்றவன் சென்றுவிட, அப்போது தான் மணிராதா வீட்டிற்குள் வந்தார்.
அங்கே இந்திராவையும் பமீலாவையும் பார்க்கச் சென்றிருந்தவர், வர, வனமாலி அவரைத் தாண்டி ஒன்றும் பேசாது கிளம்பிச் செல்ல,
“என்னாச்சு இவனுக்கு??!!” என்றார் மகளிடம்..
இரண்டு நாட்கள் கடந்திருந்தது. ஆனாலும் கமலி வாய் திறக்கவில்லை. வனமாலியோடு பேசுவதை அப்படியே நிறுத்திக்கொண்டாள். அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவள் இருப்பதில்லை. இரவில் அவன் வரும் நேரம் ஒன்று உறங்கிப் போகிறாள் இல்லையோ வேலை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறாள்.
வந்தனா மறுநாளே கேட்டாள் ‘கொடைக்காணல் போகலையா...’ என்று,
சாப்பிடும்போது தான் கேட்டாள், மணிராதாவும் அங்கேதான் இருந்தார், அவரும் ‘அதானே..’ என்று பார்க்க,
கமலியோ பதிலே சொல்லவில்லை. வனமாலியோ அவனின் அம்மாவை பார்த்தவன், பின் வந்தனாவிடம் “அது ஒண்ணுதான் இப்போ குறைச்சல்..” என்றான் கடுப்பாய்..
“ஏன்?? என்னாச்சு?? நேத்து தானே கமலி சொன்னா..” என்று வந்தனா கமலியைப் பார்க்க,
கமலியோ “போகலை வந்தனா..” என்றவள் “நாளைக்கு புதன் கிழமை உங்க இன்விடேசன் வந்திடும்..” என்றுமட்டும் பொதுவாய் சொல்லிவிட்டு அச்சகம் கிளம்பிட,
‘என்னாச்சு இவளுக்கு..’ என்றுதான் பார்த்தாள் வந்தனா..
இத்தனை நாள் நன்றாகத்தானே பேசுவாள். பொதுவாய் மணிராதாவிற்கும் கமலிக்கும் எந்த பேச்சுமே இருக்காது. உன்னை நான் கண்டுகொள்ளவில்லை என்கிற ரீதியில் தான் இருவருமே இருப்பர். வீட்டினரும் இருவரையுமே மாற்ற முயற்சிக்கவில்லை. மாற்றம் என்பது தானாகவே வரவேண்டும்.
ஆக, சரி பமீலா தான் முரண்டு பிடித்து இப்படி அனைவரையும் படுத்துகிறாள் என்று பார்த்தால், இப்போது கமலி முகம் தூக்கி இருப்பது என்னவோ போல் இருந்தது.
வனமாலியோ ‘நான் இப்போ எதுவும் பேசலை..’ என்பதுபோல் இருக்க,
வந்தனாவோ சரி இருவருக்கும் என்னவோ பிரச்சனை போல, சரியானதும் கிளம்புவர் என்று எண்ணியிருந்த அடுத்து வந்த நாட்களும் அப்படியே தான் இருந்தனர். சிவகாமியும் மகளிடம் கேட்டார் தான்.
‘என்ன அவ்வளோ சந்தோசமா வந்து சொல்லிட்டு போன..’ என்று.
கமலி நிஜமாகவே அப்போது சந்தோசமாகத்தானே இருந்தாள், வீட்டிற்கு வந்தும்கூட மகிழ்வுடன் தானே அனைத்தும் எடுத்துவைத்தாள். ஆனால் அவளும் நினைக்காத ஒரு விஷயம் நடக்கவும்தான் இப்படி பழைய படி தன்னை தன்னுள்ளே இறுக்கிக்கொண்டாள்.
ஆம், பழையபடி யாரோடும் அளவோடு வைத்துகொள்ள, வனமாலியோடு முற்றிலும் அனைத்தையும் தவிர்த்தாள். பேசுவது பார்ப்பது என்று அனைத்தையும்..
சிவகாமியிடம் கூட “கல்யாண வேலை இருக்கே..” என்றுவிட்டாள்.
மறந்தும் கூட தன் மனதில் இருக்கும் காரணத்தை சொல்லவில்லை. முன் எப்படியோ இப்போதும் வனமாலியை அவளின் அம்மாவிடம் சொல்லும் எண்ணம் வரவில்லை.. அதன் காரணம் அப்போதும் புரியவில்லை. ஆனால் இப்போது புரிந்தது. கணவன் என்றாலும், அதற்கு முன்னேயே எதோ ஒரு வகையில் அவனின்பால் அவளுக்கு இருந்த சலனம் என்று.
இல்லை என்று மறுத்தாலும் நம் மனதிற்கு அவ்வுண்மை தெரியுமே.. ஆனால் இப்போதோ திருமணத்திற்கு பின்னே கமலி அதனை தனக்கு தானே ஒத்துக்கொண்டாள்.
‘ஆமா.. இப்போ என்ன பிடிச்சிருக்கு..’ என்று.
மணிராதாவின் மகனாய் காணாது வனமாலி என்ற தனி மனிதானாய் அவனை நிரம்பவே பிடித்தது. அதிலும் கோவர்த்தனை அழைத்து ‘இப்போ நீ பமீலாவோட இருக்கணும்..’ என்று சொல்கையில், இவன் எந்நிலையிலும் என்னை விட்டுக்கொடுத்திட மாட்டான் என்ற எண்ணம் அவளுள் ஊர்ஜிதமே ஆனது..
ஆனால் அந்தோ பரிதாபம், வனமாலி கமலி இருவருக்கும் இடையில் இருந்த அந்த அழகான உணர்வை மணிராதாவின் வார்தைகள் இருந்த இடம் தெரியாமல் துடைத்து எறிந்துவிட, வனமாலி என்ன செய்வது என்று திகைக்க, கமலியோ மீண்டும் தனக்குள்ளே சுருங்கிப்போனாள்..
வனமாலியும் எத்தனை எடுத்து சொல்லிப் பார்த்தான், ம்ம்ஹும் கமலி கேட்பதாகவே இல்லை.
“எனக்கு அவங்களை சம்மதிக்க வைக்க வேற வழி தெரியலை கமலி..” என்று வனமாலி தொய்ந்து போய் சொல்ல,
“ஏன்.. அவ்வளோ அவசரம் ஏன்.. ஒரே வாரத்துல கல்யாணம் செய்யனுங்கற அளவுக்கு.. அவ்வளோ சீக்கிரம் உங்கம்மா செஞ்ச பாவத்தை கழுவ நினைசீங்களா...” என்று முறைத்து கேட்க,
“கமலி..!!!” கத்தியேவிட்டான் வனமாலி.
அவனுக்கு அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியவில்லை.. தங்களை சுற்றி யாருமில்லை என்றெண்ணியே இருவரும் பேசியது இப்படி. ஆனால் வீட்டினில் இருந்த வந்தனாவின் கண்களில் இது பட்டுவிட,
‘ஐயோ இதென்ன பேச்சு..’ என்று அவளும் கொஞ்சம் திகைத்துத்தான் போனாள்.
கமலியோ “என் முன்னாடியே வராதீங்க... உங்கள கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் என்னோட பொறுப்பு என்னன்னு எங்கம்மா சொல்லிருக்காங்க.. சோ அதை நான் சரியா செய்வேன்..” என்றுவிட்டு கிளம்பிட,
வனமாலி தோய்ந்து போய் அங்கே இருந்த இருக்கையில் அமர, வந்தனா வேகமாய் வந்தவள் “என்னண்ணா?? என்னதான் நடக்குது..” என்றாள் சங்கடமாய்..
வந்தனாவை ஒரு அடிப்பட்ட பார்வை பார்க்க, எப்போதுமே வனமாலி முகத்தில் தோன்றியிராதா இப்படியான ஒரு பாவனையில் வந்தனா இன்னும் திடுக்கிட்டுப் போனாள்.
“என்னண்ணா...??!!!”
“ம்ம்ச் ஒண்ணுமில்ல வந்தனா...” என்றவனிடம் “என்னண்ணா பொண்டாட்டி வரவும் தங்க்சிக்கிட்ட எதுவும் ஷேர் பண்ணக்கூடாதா??” என்று வந்தனா கிண்டலாய் கேட்டாலும் அவள் முகத்தில் தெரிந்த வருத்தம் கண்டு,
“ஹேய்.. அதெல்லாம் இல்லை..” என்றவன், நடந்தவைகளை சுருக்கமாய் சொல்ல,
“கடவுளே இந்த அம்மாவை என்னன்னு சொல்றது..” என்று தலையில் கை வைத்துக்கொண்டாள்.
“அம்மாவும் அப்போ பர்பஸா சொல்லலை.. பட் அப்படியே பேசிட்டாங்க..”
“ம்ம்ம் கமலிக்கு இதை கேட்கிறப்போ எப்படியிருக்கும்..”
“ரொம்ப ஹர்ட் ஆகிட்டா வந்தனா.. அவ அப்படி வருந்தி பேசி நான் பார்த்ததில்லை அதான் சங்கடமா இருக்கு..” என்றவன்,
“விடு... சிலது எல்லாம் தானா சரியாகணும்...” என்றவனும் தியேட்டர் கிளம்பிட,
“நான் பேசவா???” என்றாள் பின்னோடு வந்து,
“வேணாம்.. எல்லாமே சட்டுன்னு நடக்காது..” என்றவன் சென்றுவிட, அப்போது தான் மணிராதா வீட்டிற்குள் வந்தார்.
அங்கே இந்திராவையும் பமீலாவையும் பார்க்கச் சென்றிருந்தவர், வர, வனமாலி அவரைத் தாண்டி ஒன்றும் பேசாது கிளம்பிச் செல்ல,
“என்னாச்சு இவனுக்கு??!!” என்றார் மகளிடம்..