அடேய் என்னடா இப்படி ஒரு பொய் ஆனாலும் சரண்யா உன்னோட வேகம் அவனுக்கு சோகம் குழந்தைங்க எதிர் காலத்துக்காகவாவது சேர்ந்து வாழலாம் என்று சொல்லி இருந்தால் கூட சரண்யா கொஞ்சம் யோசிச்சு இருப்பா ஆனால் உன்னை பிடிக்கும் என்று சொல்லி உயிரை ஊசலாட விட்டுட்டியே
அம்மாடி சரண் நீ பாட்டுக்கு கத்தியால் குத்திட்ட இனி இதுக்கும் நீதான் ஃபீல் பண்ணுவ
மூனு வயசிலே கண்ணு முன்னாடி சாப்பாடு இருந்தும் எவ்வளவு பசியிலும் அதை சாப்பிடாமல் இருக்காங்க புது துணிகளை பார்த்தும் எதையும் வாங்கிக்கலஇது எல்லாம் சரண்யா கத்து கொடுக்கல இந்த மூனு வருஷம் சரண் வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை கத்து கொடுத்தது அந்த நிலையில் உன் பிள்ளைகளை விட்டுட்ட
அடேய் இந்த நாலு வருஷமும் சரண்யாவை தான் நினைச்சுகிட்டு இருந்தியா அப்போ நீ வெளி நாட்டில் இருக்கும் போதே அபிக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வைங்க என்று சொல்லி இருக்கணும் ஊருக்கு வந்த பிறகு முதல் வேலை அபியை நேரில் பார்த்து நான் சரண்யா கூட தான் வாழ போறேன் என்று உறுதியா சொல்லி இருக்கலாமே ஆனால் குழந்தைகளை பார்க்கிற வரைக்கும் அபி கிட்ட வேண்டாம் என்று ஒரு வார்த்தை கூட சொல்லலையே மத்த நேரமா இருந்தால் குறைந்த பட்சம் குழந்தைங்க உன் பக்கத்திலாவது வந்திருக்கும் ஆனால் அந்த பொறுக்கி சரண்யா கிட்ட நடந்ததை பக்கத்தில் இருந்து பார்த்து இருக்காங்க அப்போ உன்னையும் அந்த மாதிரி தான் நினைப்பாங்க
சாப்பிட வந்து உட்காருறியே அவ எவ்வளவு மாவு வாங்கி வச்சிருக்கா என்று பார்த்தியா நாமளும் சாப்பிட வந்தால் அவ சாப்பாட்டுக்கு என்ன செய்வா என்று யோசிக்க மாட்டியா
எப்படியோ இந்த ஞாயிறு சரண் அவ பிறந்த வீட்டுக்கு போகல
எப்படி இப்படிப் பொய் சொல்லுகின்றான் இந்த வெற்றி? இந்த நான்கு வருடங்களாக சரண்யாவைப் பற்றியே யோசித்தானாம்…இவனுக்கு கத்திக் குத்து தேவை தான்…better இவனின் நாக்கை இழுத்து வைத்து வெட்டியிருக்கலாம் இந்தப் பொய்யனுக்கு!
வியர்வை வழிய தோசை சுட்டுக் கொடுத்த மனைவியைப் பார்த்து முகம் சுழித்தவன் தோசையை வெக்கமில்லாமலேயே அப்போதும் இப்போதும் சாப்பிடுகின்றான்