இங்கு அபி கூட கொஞ்சம் திமிராக நிமிர்ந்து நிற்கலாம்… என்னைத்தான் காதலித்தான்…இப்போது பிள்ளைகளுக்காகத் தானே சரண்யாவை சேர்த்துக் கொள்ளப் போகின்றானென்று.
ஆனால், இங்கு சரண்யாவின் மதிப்பென்ன? அவளுக்குத் தன்மானமில்லையா? அப்படியென்ன அவள் இழிந்து விட்டாள்? அவளின் விதி இப்படி ஒரு வழுவாடியை கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள்
என்னைப் பொறுத்தவரை இந்த சின்ன வயதிலேயே உயர்ந்த குணம் கொண்டவள் அவள் தான்.
She made a commitment and still keeping it the best way she could. During this period she has lost so much in terms of self respect, self confidence and happiness. She is slowly gaining her confidence. She deserves better life going forward with her kids.
இந்த வெற்றி சொல்வது போல் சமுதாயத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி தான். இங்கு மூவருக்கும் பாதுகாப்பு தேவை தான்… ஆனாலும் சரண்யாவின் தன்மானமும் மரியாதையும் கூட முக்கியம் தானே.
இதில் இந்த வெற்றி சொல்லுகின்றான் அபியிடம் நான் உனக்கு மட்டும் துரோகியாக இருக்கின்றேனென்று…இவன் சரண்யாவுக்கு செய்தது இன்னும் துரோகமாகவே தெரியவில்லையா
ஒருத்தியைக் காதலித்து இன்னொருத்தியை கல்யாணம் செய்து காதலியை மனதில் வைத்துக் கொண்டே மனைவியோடு வாழ்ந்து அவளை வார்த்தைகளால் வதைத்து, மூன்று மாத கர்ப்பமாக இருந்தவளை இல்லாத்தை பொல்லாத்தை சொல்லி நடுஇரவில் வீட்டை விட்டுத் துரத்தி, பிள்ளையை கருவிலேயே அழிக்கச் சொல்லியதெல்லாம் இந்த இராட்சசனுக்குத் துரோகமாகவே படவில்லையா