'ம்மா நீங்க அழறதுக்காக ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு காலம் முழுக்க நான் அழ முடியாது புரியுதா..??' என்று வசீகரன் சற்று உரத்த குரலில் கூறவும்....
'வசீ...' என்ற அதட்டல் திருவிடம் !
'கரண் என்ன பேசுற?' என்று பசுபதியும் பதற,
'சித்தப்பா நீங்களாவது புரிஞ்சுக்கோங்க...' என்றவனருகே வந்த விஜய் நண்பனை தோளோடு அணைத்து 'மச்சான் பொறுமையா பேசுடா..' என்றான்.
நெற்றியை நீவிவிட்டவன் அப்படியே நாற்காலியில் கண்களை மூடிக்கொண்டு அமர அபிராமி அவனுக்கு தண்ணீர் கொடுத்து 'தம்பு இப்படியே ஒவ்வொரு பெண்ணா தட்டி கழிச்சிட்டு இருந்தா எப்படி..?? வயசு போனா திரும்ப வராது... காலாகாலத்துல நடந்தா தான் எதுவும் அழகு ! புரிஞ்சிக்கோ'
'வாழ்க்கை போனாலும் திரும்ப வராது அபிம்மா.. வாழ்க்கை துணைங்கிறது நீங்க நினைக்கிற மாதிரி இல்லன்னு நானும் எத்தனைமுறை தான் சொல்றது..?? ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க?'
'கரண் உன் மனசுல என்னதான் இருக்கு தெளிவா சொல்லு.. அதைவிட்டுட்டு ஒவ்வொருமுறை ஒவ்வொரு காரணம் சொல்லி இப்படி தட்டிகழிச்சிட்டு இருந்தா இதுக்கு முடிவு தான் என்ன..??' என்று பசுபதி கேட்க,
'நீ பிறந்ததுல இருந்து உன்னை சுத்தி மட்டும் தான் அக்கா மாமாவோட உலகமே இயங்குது தம்பு கொஞ்சம் அக்காவை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு' என்றிட...
'அபிம்மா.. அபிம்மா !' என்று மூச்சை இழுத்துவிட்டவன் தண்ணீரை எடுத்து ஒரே மூச்சாக வாயில் சரித்து கொண்டு தன் எதிரே இருந்த திருவையும் நாயகியையும் ஒரு பார்வை பார்த்தவன்,
'சரி உங்க எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்றேன் கேட்டுக்கோங்க' என்றதுமே என்றுமில்லாத வகையில் இன்று புதிதாக வேறென்ன சொல்ல போகிறானோ என்று அனைவரும் அவனை பார்க்க...
'ஜாதகம் பொருந்தி இருக்கு, வசதி இருக்கு, படிப்பு இருக்கு, பணமிருக்கு, அழகிருக்கு அந்தஸ்து இருக்குன்னு நீங்க சொல்ற காரணத்துக்காக எல்லாம் நான் அவசரபட்டு கல்யாணம் பண்ணிக்க முடியாது'
'இதெல்லாம் தவிர புதுசா வேற என்னடா இருக்கணும்' என்று அவன் பேச்சு புரியாமல் அபி கேட்க,
'என் குழந்தையை சுமக்க போறவளுக்குன்னு ஒரு தகுதி இருக்கணும்' என்றவன் அடுத்த நொடி வீட்டில் இருந்து வெளியேற மொத்த குடும்பமும் வசீகரனின் வார்த்தையில் ஸ்தம்பித்து போனது!!
ஹாய் செல்லகுட்டீஸ்...
இன்னைக்கு குட்டி டீசர் போட்டிருக்கேன் படிச்சுட்டு சொல்லுங்க நான் தீவிரமான ஹீரோ ஆர்மி என்பதாலும் அவரை திட்டினா என்னோட பிஞ்சு மனசு தாங்காது என்பதாலும் ஹீரோயின் ஆர்மி பெரிய மனதோடு ஹீரோவுக்கு இதமாக பதமாக சர்க்கரை பொங்கல் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
Last edited: