தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
மற்ற குழந்தைகளுக்கு மணி செய்த வினை தங்கம், நந்தினி தலையில் விடிஞ்சிருக்கு
நக்குகிற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியாதது போல கோமலை தேடி வந்த நாய்களுக்கு தங்கமும் நந்தினியும் மணியின் தங்கைன்னு தெரியலையா?
இல்லை தெரிஞ்சும் இந்த நாதாரித்தனமான வேலையை செஞ்சாங்களா?
அந்த சாந்தினி மூதேவி இன்னுமா துளசியை நோ நோ கோமலை ஞாபகம் வைச்சிருக்கிறாள்?
அவளோட ஞாபக சக்தியில தீயை வைக்க
அப்போ அந்த சாந்தினி கௌஷி சந்திரா உள்ளிட்ட 24 பேரை சூரசம்ஹாரம் செய்தது மாசிலாமணி அவங்க திரும்ப வருவாங்கன்னு சொன்னதற்காகவா?
அப்போ அது நியாயமான ஒன்றுதான்
அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்தான்
அந்த மானிடப் பதர்களை வேரோடு பிடிங்கி களையெடுத்து மூர்த்தி இப்போ வெற்றிகரமாக திரும்பிக் கொண்டிருக்கிறான்
அவனை வரவேற்று வீரத்திலகமிட்டு ஆரத்தியெடுக்க துளசி உயிரோடு இருக்கிறாளா? இல்லையா?
குழந்தையை மட்டுமாவது காப்பாற்றணும்ன்னு டாக்டர் சொல்லுறாரே
அப்போ துளசி?
அவள் கதியென்ன?