வணக்கம் சகோதரி. தங்களின் விமர்சனம் பார்த்தேன். மிக்க நன்றி. இது சோழர்கள் கதை. சோழ, பாண்டியர்களை எதிரிகளாகவே பார்த்து இருப்போம். இதில் இவர்கள் நண்பர்கள். ஆலிமா என்னும் கதாபாத்திரம், யவன ராணியின் இருந்தாலும், இங்கு வரும் ஆலிமாவின் பின்புலம் வேறு. இவள் தான் உண்மையில் இந்த கதையின் கதாநாயகி. 4வது பாகம் இதை உங்களுக்கு உணர்த்தும். இன்னமும் முக்கிய கதாபாத்திரமான கிரேக்க இளவரசி ஏதென்னா வரவில்லை. ஏதென்னா வந்த பிறகு கதை இன்னமும் வேகம் எடுக்கும். கரிகால சோழனுக்கு பிறகு அவனுடைய வாரிசுகள் எப்படி ஒரு ராஜ்ஜியத்திற்காக செயல்படுகின்றார்கள் என்பதும், அவர்களின் குணங்களும் அடுத்தடுத்து வருகின்றது.
இதில் கிரேக்க ராஜ்ஜியம் குறித்து வரும் அத்தனை விஷயங்களும் வரலாற்றில் உள்ளவை. வாரிசுகளும் அவர்களின் செயல்களும் மட்டும் கற்பனை.
இது என்னுடைய 6 ஆண்டு கால கனவு படைப்பு. உங்களை போன்றோரின் ஊக்கமும் உற்சாகமும், எனக்கு புதிய தைரியம் தருகின்றது. இன்னும் அழகாக இந்த கதையை தரவேண்டும் என்பதில் பொறுப்பை அதிகரிக்கிறது. அது எனக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது....
தொடர்ந்து படியுங்கள். இன்று மாலை 3ம் பாகம் பதிப்பிக்க உள்ளேன். வாசித்து விட்டு சொல்லுங்கள்.
மிக்க நன்றியும், வாழ்த்துக்களும்....
உங்கள் சகோதரன்,
பாரதிப்பிரியன்