Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 2.2

Advertisement

Admin

Admin
Member
தன் அறைக்கு வந்த வரலஷ்மிக்கோ நாளை தொழிற்சாலையில் தொழிற்சங்க தலைவரிடம் எப்படி பேச வேண்டும் என்று தன் மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டு இருந்தார்.

ஒரு மணி நேரத்துக்கு முன் தான் தங்கள் தொழிற்சாலையின் மனேஜர் வீட்டுக்கு வந்து சட்டென்று சின்ன முதலாளியும், பெரிய முதலாளியும், இறந்து விட்டதால் நமக்கு எதிரானவர்கள் இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்த பார்க்கிறார்கள். நம் தொழிற்சங்க தலைவர்களிம் பேசி மொத்தமாக நம் தொழிற்சாலையை மூடுவதற்க்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்று கேள்வி பட்டதிலிருந்து அதை எப்படி கையாள்வது என்ற சிந்தனையிலேயே இருப்பதால் அவர் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

அந்த தொழிற்சாலையை காப்பது தான் தன் கணவருடன் வாழ்ந்த இத்தனை வருட வாழ்க்கைக்கு பெருமை சேர்ப்பது என்று கருதினார்.அவர் இந்த தொழிற்சாலைகளை ஆராம்பித்ததே தன் ஊர் மக்கள் வேலைக்காக வெளியிடத்திற்க்கு சென்று கஷ்டப்படகூடாது என்று கருதி தான் ஆராம்பித்தார்.அவர் எப்போதும் இது தான் சொல்வார் நான் மறைந்தாலும் நம் தொழிற்சாலை எப்போதும் போல நடக்க வேண்டும் என்று கூறுவார்.

தன் கணவரின் எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு அவர் தன் பேத்தியை சென்னையில் உள்ள ஒரு நல்ல ரெசிடென்ஸியில் சேர்த்து விட்டு பேரனை தன் கணவரின் ஆசையான ஐ.ஏ. எஸ். கோச்சிங் சென்டரில் சேர்த்து விட்டு அவரின் அறுபது வயதில் தன் கணவர் மகன் பார்த்த தொழிற்சாலையை தொடர்ந்து நடத்தி அதில் வெற்றியும் பெற்றார்.

இதோ இந்த எட்டு வருடத்தில் தாத்தாவின் ஆசையான சித்தார்த் ஐ.ஏ.எஸ் ஆகிவிட்டான்.பாட்டி ஊரில் உள்ள தொழிற்சாலையை தன் தந்தை, தாத்தாவோடு திறம்பட லாபத்தோடு நடத்திக் கொண்டு வருகிறார்.

ஆனால் இதனை எல்லாம் ஒழுங்காக செய்து நம் தங்கையை கவனிக்க தவறி விட்டோமோ என்று வருந்தினான். பரினிதா இப்போ மூன்று மாதமாக தான் தன் அண்ணனுடன் பங்களாவில் இருக்கிறாள். அவள் தன் பன்னிரண்டு வயதிலிருந்து மூன்று மாதம் முன் வரை ஆஸ்ட்டல் வாசம் தான். அங்கு சாப்பாடு தான் கொடுப்பார்கள் அன்போடு பரிமாற யாரும் இல்லாமல் தன் விருப்பம் போல் சாப்பிட்டு கொஞ்சம் வீக்காக தான் இருப்பாள்.

ஆம் அவன் வருந்துவது சரியே பரினிதா காலேஜீன் மூன்றாம் ஆண்டில் இருந்தாலும் பார்ப்பதற்க்கு பள்ளி இறுதியாண்டு மாணவி போல் தான் தோன்றுவாள்.

இந்த நினைவோடு தன் தங்கையின் மெலிந்த கையைய் தடவி விட்டுக் கொண்டு இருந்தான். பரினிதா ஐந்தரை அடி உயரத்தில் இருந்தாலும் உயரத்துக்கு ஏற்ற உடல் இல்லாததால் இன்னும் உயரமாக தெரியும்.

அவள் முகமும் கன்னத்தில் சதைபற்று இல்லாததால் கண் இன்னும் பெரியதாக தோன்றும்.முடியும் அவள் வளரவிடாமல் வெட்டி வெட்டி விடுவதால் போனி டேரியல் போடும் அளவுக்கு தான் இருக்கும். இதனின் மொத்த வடிவமாக பார்த்தால் அவளுக்கு வயது குறைந்து தான் மற்றவர்கள் பார்ப்பார்கள்.

அவள் வயது குறைந்து காணப்படுவதற்க்கு அவள் தோற்றம் ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் அவளின் நடவடிக்கைகள். அவள் எப்போதும் சிறு பிள்ளைகளோடு தான் விளையாடுவாள். இந்த வயதிற்க்கு உரிய செயல் பாடு எதுவும் அவளிடத்தில் இருக்காது. பேசுவதும் அப்படி தான் யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் வள வளத்துக் கொண்டு இருப்பாள்.மொத்தத்தில் வளர்ந்த குழந்தை என்றே சொல்லலாம்.

சித்தார்த் இந்த நினைவோடு தன் தங்கையையே பார்த்துக் கொண்டு இருக்கும் போது தன் செல்லின் அழைப்பால் தன் நினைவுகளை கலைத்து செல்லை ஆன் செய்துக் கொண்டே பால்கனி நோக்கி நகர்ந்தான்.

செல்லில் அந்த பங்களாவின் வாச்மேன் தான் அழைத்து இருந்தான். அவன் ஆபிஸ் வண்டி காத்திருப்பதாக கூறியதும் இதோ வந்து விடுகிறேன் என்று கூறிக் கொண்டே தங்கையின் டிரஸ்ஸிங் டேபிளிலேயே தன்னை சரிசெய்துக் கொண்டிருக்கும் போது அப்போது தான் கண்முழித்த பரினிதா தன் அண்ணனை விழியாகளாது பார்த்திருந்தாள்.

தன்னை சரி படுத்துக் கொண்டு தன் தங்கையை பார்த்த சித்தார்த அவள் தன்னையே பார்த்திருப்பதை பார்த்து “குட்டிம்மா எழுந்துட்டிங்களா…..இன்னிக்கி காலேஜ் லீவா இருந்தாலும் எட்டு மணிக்காவது எழுந்துக்கலாம் இல்லையா…? பாரு காலையில் இவ்வளவு நேரம் வெரும் வாயித்தோடு இருப்பது சரியில்லை.” என்று கூறியதற்க்கு எதுவும் கூறாமல் எழுந்து வந்து தன் அண்ணனின் பக்கத்தில் நின்றுக் கொண்டு கண்ணாடியில் தன் இருவர் உருவத்தையும் பார்த்திருந்தாள்.

அவள் செயலை பார்த்த சித்தார்த் “என்னடா குட்டி செல்லம் பார்க்கிறாய்.”

அண்ணணின் கேள்விக்கு பதில் அளிக்காமல் இன்னும் தன் அண்ணனை அருகில் வந்து நின்றுக் கொண்டு “என் அண்ணா எவ்வளவு ஹான்சம். பார்த்தாலே தெரியும். என் அண்ணன் கலெக்டர் என்று.” ஆம் அவள் சொல்வது சரி தான். சித்தார்த் ஐந்தடி பத்து அங்குலத்திலும் அதற்க்கு ஏற்ற உடல் எடையிலும், மொழு மொழு கன்னத்தோடும் பார்ப்பதற்க்கு இந்தி பட கதாநாயகன் போல் காட்சி அளிப்பான்.

“என் குட்டிம்மா மட்டும் என்ன? பார்ப்பதற்க்கு ஏஞ்சல் மாதிரி பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்கிறாய்.” என்றதற்க்கு.

“ஆம் ஏஞ்சல் மாதிரி தான் இருக்கிறேன். என்ன ஒன்று வீக்கான ஏஞ்சல்.”

“குட்டிம்மா உன் உடம்பு போல் இருப்பதற்க்கு மாடலிங் எல்லாம் எப்படி டையட் அது இது என்று சிரமம் படுகிறார்கள் தெரியுமா..? என்று தன் தங்கையிடம் கூறினாலும். மனதுக்குள் இவள் கொஞ்சம் சதை போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கருதினான்.

அவன் எண்ணம் இப்படி போகும் போது திரும்பவும் செல்லின் இசையில் எடுத்து பார்த்து அதனை கட் செய்து விட்டு “சரிம்மா என் ஆபிஸ் வண்டி ரொம்ப நேரமா காத்திட்டு இருக்கு நீ போய் பிரஷ்ஷாகி விட்டு சமையல் அம்மா செய்து வைத்திருப்பதை சாப்பிட்டு கொஞ்சமாவது படிம்மா எட்டு சப்ஜெக்ட் அரியஸ் வைத்திருக்கிறாய். அதை கிளியர் செய்கிறாயோ இல்லையோ இன்னும் விழாமலாவது பார்த்துக் கொள்ளு குட்டிம்மா.” என்று சொல்லிக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறும் போது வழி மறைத்த பரினிதா.

“ அதெல்லாம் இருக்கட்டும் போன வாரம் நீங்க என்ன சொன்னீங்க.”

அவள் கேட்டவுடன் தான் என்ன சொன்னோம் என்று நியாபகத்துக்கு வந்தாலும் அதனை காட்டிக் கொள்ளாமல் “என்ன சொன்னேன். எனக்கு நியாபகம் இல்லையே…”

“ என் விஷயம் அது எப்படி உங்களுக்கு நியாபகம் வரும்.அதுவே ஊரு விஷயமுன்னா நியாபகத்தில் இருப்பதோடு அதை செய்தும் குடித்திருப்பீர்கள். இதே நான் ஊருக்குல் யாருக்காவது தங்கச்சியா இருந்திருந்தலாவது என்னை கவனித்து நான் கேட்டதை செய்து முடித்திருப்பீர்கள் போல்.” என்று இடுப்பில் கைய் வைத்துக் கொண்டு மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்க தன் அண்ணனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் பேசும் குழந்தைதனமான பேச்சை ரசித்தாலும் இப்போது எல்லாம் அவளின் இந்த செயலால் சித்தார்த்துக்கு புது கவலை ஏற்பட்டு இருந்தது.இவள் செயல் அனைத்தும் வயதுக்கு ஏத்த மாதிரி இல்லையோ… அவள் செயல் அனைத்திலும் இன்னும் குழந்தை தனத்துடன் இருப்பது போல் தான் அவனுக்கு தோன்றியது.

அவள் உடைக்கூட அப்படி தான் இருக்கும். இப்போது இருக்கும் பெண்கள் விரும்பி அணியும் சுடிதார்,ஜீன்ஸை அணியா மாட்டாள். அவள் பெரும்பாலும் உடுத்துவது புள்ஸ்கட் தான் அது இன்னும் அவளை வயது குறைத்து காண்பிக்கும்.

சரி ஒரு வேளை நமக்கு தான் அவள் குழந்தை போல் தோன்றுகிறாளோ என்று நினைத்தால் போன மாதம் தன் ஊரில் நடக்கும் திருவிழாவில் கலந்துக் கொள்ள பாட்டி அங்கிருந்து போன் செய்து கண்டிப்பாக இந்த தடவை நீயும் பரினிதாவும் வரவேண்டும் என்று கூறிவிட்டதால் இவன் பரினிதாவை கூட்டிக் கொண்டு ஊருக்கு சென்ற போது ஒருத்தர் பாக்கி இல்லாமல் அனைவரும் இது தான் கூறினார்கள்.

பரினிதா ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறாள். அதுவும் இல்லாமல் அவள் செயல் இன்னும் குழந்தை தனத்துடன் தான் இருக்கிறது என்று அவர்கள் கூறியதில் இருந்து அவன் கவலை இன்னும் அதிகம் தான் ஆகிவிட்டது.அதனோடு அவனுக்கு குற்ற உணர்ச்சியும் அதிகமாகி விட்டது.

தன் பாட்டி தொழிலை பார்க்கிறேன் என்று அவர்களும் நான் மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று என் வேலையிலும் தங்கையை கவனிக்காமல் விட்டு விட்டோமோ…என்று அவன் மனசாட்சியே அவனை குற்றம் சாட்டியது.

இந்த மூன்று மாதத்தில் அவன் தங்கையின் பேச்சில் தெரிந்துக் கொண்டது இது தான். அவள் ஆஸ்ட்டலில் சாப்பாடு ருசியாக இல்லாத காரணத்தால் சரியாக உண்ணாமல் இருந்திருக்கிறாள் என்பதும் .பின் ஆஸ்ட்டலின் பக்கத்தில் பூங்கா இருப்பதால் அங்கு சென்று பூங்காவில் விளையாட வரும் குழந்தைகளிடம் தன் நேரத்தை செலவிட்டு இருக்கிறாள் என்பதும்.

ஒரு சமயம் சாப்பாடு சரியில்லாமல் ஒல்லியாக இருப்பதாலும்,அவளின் பெரும் நேரத்தை குழந்தைகளுடம் செலவிட்டதால் தான் அவள் செயல் இப்படி இருக்கிறதோ என்று யோசிக்க ஆராம்பித்திருந்தான்.

பரினிதாவோ தன் பேச்சிக்கு எந்த பதிலும் கொடுக்காமல் இருக்கும் தன் அண்ணனின் தோள் பற்றி உலுக்கினாள்.

அவள் உலுக்கலில் பரினிதாவை பார்த்த சித்தார்த் இனிமேல் நாம் இவளுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற முடிவோடு “ என் குட்டி செல்லம் சொன்னது எனக்கு மறக்குமா…? இப்போ என்ன நீ போகனும் என்று சொன்ன சொர்க்க பூமிக்கி கண்டிப்பாக அடுத்த வாரம் கூட்டிட்டு போகிறேன். எனக்கு இன்னும் ஒன்றும் நியாபகத்தில் இருக்கு நீ சொன்ன ஆஸ்ரமத்து பிள்ளைகளையும் கூட்டிட்டு போகனும் என்று சொன்னது.

அதற்க்காக தான் நான் டைம் கேட்கிறேன். அவ்வளவு குழந்தைகளை கூட்டிட்டு போகும் போது அதற்க்கு உண்டான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திட்டு தான் நாம் போகனும்.” என்று கூறிக் கொண்டே “சரி குட்டிம்மா நான் கிளம்புகிறேன். நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும். சாப்பிட்டு கொஞ்சம் படிடா” என்ற வார்த்தைக்கு தலையை பலமாக ஆட்டியதிலிருந்தே அவள் படிக்காமல் கார்ட்டூன் தான் பார்ப்பாள் என்று அவன் மனதுக்கு தெரிந்தது.

இருந்தும் இதற்க்கு மேல் சித்தார்த்துக்கு நேரம் இல்லாததால் டைம் பாத்துக் கொண்டே அவன் காரை நோக்கி சென்றான்.பரினிதாவும் சித்தார்த் சென்றவுடன் சமையல் அம்மா செய்ததை எதுவும் சாப்பிடாமல் தானே மேகி செய்து சாப்பிட்டு விட்டு அன்று லீவ் என்பதால் பக்கத்தில் உள்ள பிள்ளைகளை போனின் மூலம் அழைத்து தன் அண்ணன் வரும் வரையில் தன் ரூமில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்.
 
சொர்க்க பூமிக்கா....ஆசிக் ரொம்ப சுலபமா கலெக்டரோட பலவீனத்த பயன்படுத்தப் போறான்....ப்ரணிதா தன்னோட நேரம் செலவழிக்க யாருமில்லைனு வருத்தப்பட்டுட்டு இருக்குறதை ஆசிக் அவனோட பலமா மாத்தப் போறான்.....
 
Top