Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 2.1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---2

“குட்டிம்மா எழுந்துடுடா..டைம் பத்து ஆகுது பாரு. என்ன தான் காலேஜ் லீவா இருந்தாலும் இவ்வளவு நேரம் எழுந்துக்காம இருப்பது நல்லதில்லைடா. பாட்டி ஊரில் இல்லாததால் நான் தப்பிச்சேன். இல்லன்னா என்னால் தான் கெட்டு போகிறாய் என்று எனக்கு தான் திட்டு விழுகிறது.” என்ற அவன் பேச்சை ஒன்றையும் காதில் வாங்காமல் அவன் அன்பு தங்கை பரினிதா தூங்கிக் கொண்டு இருந்தாள்.

தன் பேச்சிக்கு அவளிடம் எந்த மதிப்பும் கிடைக்கவில்லை என்றாலும் தூங்கும் தன் தங்கையையே பார்த்திருந்தான்.அவள் உடல் மெலிவை பார்த்து மிகவும் வருந்தினான்.நம் படிப்பு நம் பதவி என்று பார்த்து நம் தங்கையை நாம் சரியாக கவனிக்க வில்லையோ என்று வருந்தினான். நம் அம்மா இருந்திருந்தால் தன் பெண்ணை ஊட்டமாக வளர்த்திருப்பாரோ நாம் படிக்க போக பாட்டி ஊரில் உள்ள பஞ்சாலை ,கரும்பாலை, அரிசி ஆலை மற்றும் குத்தகைக்கு விட்ட நிலத்தில் வரும் பணத்தை சரி பார்க்க என்று அனைத்தையும் அவரே பார்க்க வேண்டியிருப்பதால் தன் பேத்தியை அவர் சரியாக கவனிக்க முடியாது என்று பரினிதாவை அவளின் பன்னிரண்டாவது வயது முதலே ஆஸ்டலிலேயே வளர்ந்ததால் இப்படி வீக்காக இருக்கிறாளோ என்று கண் அவளை பார்த்திருந்தாலும் அவனின் நினைவு தன் கடந்த காலத்துக்கு பயணம் ஆனாது.

ஊரே மதிக்கும் அந்த கலெக்டரும் தன் தங்கை என்றால் தன் படிப்பு தன் பதவி என்று அனைத்தையும் மறந்து அவள் நிலையில் இருந்து பழகுவான். அவனுக்கு எல்லாம் அவன் தங்கை தான். தன்னுடைய இருபதாவது வயது வரை கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் தான் தன் தாத்தாவின் வழி காட்டுதளில் வளர்ந்தான்.

அவன் அப்பா அம்மாவுடன் இருந்ததை விட தன் தாத்தாவின் அருகில் இருந்தது தான் அதிகம்.எப்போதும் தன் தாத்தாவின் கைய் பிடித்து தான் அவன் செல்வான். அது போல் அவன் தாத்தாவும் எங்கு சென்றாலும் தன் பேரன் சித்தார்த்தை அழைத்துக் கொண்டு போவார்.

அப்படி ஒரு தடவை ஊரு விஷயமாக கவர்மன்ட் ஆபிஸில் சென்று வந்துக் கொண்டு இருக்கும் போது தான். அவர் தன் பேரனிடம் “சித்தார்த் நம்மிடம் பணம் இருக்கிறது அதை வைத்து நம் ஊருக்கு ஏதாவது நல்லது செய்யலாம் என்று நினைத்தாலும், உடனடியாக செய்ய வேண்டும் என்றால் இந்த கவர்மன்ட் ஆபிஸருக்கு லஞ்சம் கொடுத்தால் தான் முடியும் என்று கூறுகிறார்கள்.

இந்த செயலில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை.அதனால் நம்மிடம் பணம் இருக்கிறது.நீ இந்த கவர்மன்ட் ஆபிஸருடன் உயர்ந்த பதவியில் இருந்தால் தான் நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்யமுடியும். அதனால் நீ உயர்ந்த பதவியான ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.” என்று தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் தன் தாத்தாவின் பேச்சைக் கேட்டு தன் ஆசை லட்சியம் அனைத்தும் ஐ. ஏ. எஸ் ஆவாது தான் என்று முடிவுக்கு வந்து இதோ இப்போது அவர் ஆசையை நிறைவேத்தி விட்டான். ஆனால் அதை பார்க்க தான் அவர் இன்று உயிரோடு இல்லை.

சித்தார்த் சென்னையில் பி .காம் மூன்றாம் வருடம் படிக்கும் போது பொள்ளாச்சியில் இருந்து அவனை பார்க்க வரும் போது தான் விபத்து ஏற்பட்டு தன் அன்னை, தந்தை, குருவுக்கும் மேலான தன் தாத்தாவை பறி கொடுத்தான்.

முதலில் அனைவரும் கிளம்புவதாக தான் இருந்தது. ஆனால் பரினிதா வயிறு வலி என்று சொல்லி விட்டதால் பாட்டிக்கு அந்த வயதுக்கே உண்டான சூழ்ச்சுமத்தில் நான் என் பேத்தியுடன் இருக்கிறேன் என்று சித்தார்த்தின் பாட்டி வரலட்சுமி கூறி விட்டதால் பாட்டி பேத்தியை தவிர அனைவரும் சித்தார்தை பார்க்க சென்னை கிளம்பினார்கள்.ஆனால் சென்னை வரும் வழியில் செங்கல்பட்டில் குடி போதையில் ஒட்டிக் கொண்டு வந்த லாரி ஒன்றினால் பெரும் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சித்தார்த்தின் அப்பா ராஜ் குமார், அம்மா மஞ்சுளா, இறந்து விட்டார்கள்.

ஆனால் சித்தார்த்தின் தாத்தா சுந்தரமூர்த்தி தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தன் பேரனின் வருகைக்காக காத்திருந்தார். தாத்தாவின் அனைத்து ஆசையும் நிறை வேற்றும் சித்தார்த்தும் தன் தாத்தா உயிர் செல்வதற்க்கு முன் சென்று விட்டான்.

சித்தார்த்தை பார்த்த அவர் தாத்தா கடைசியாக இது தான் அவனிடத்தில் சொன்னது. “உன்னை நம்பி தான் அனைத்தையும் விட்டு செல்கிறேன். நீ அனைத்தையும் பார்த்துக் கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .” என்று சொல்லிக் கொண்டே சித்தார்த்தை பார்த்து புன்னைகைத்துக் கொண்டே தன் உயிரை விட்டார்.

அவர் எப்போதும் சிரித்த முகத்துடன் தான் இருப்பார் .அது போலவே சிரித்த முகத்துடன் தன் உயிரை துறந்தார்.பின் அனைத்தும் மிக விரைவில் நடந்து முடிந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தன் பாட்டியை பாராட்டியே ஆக வேண்டும்.தன் பாட்டியை நினைத்து அவனுக்கு பெருமையே விபத்தில் தன் கணவன் மகன் மருமகளை மொத்தமாக பறிகொடுத்தும் தன் பொருட்டும் தன் தங்கையை பொருட்டும் தன் துக்கத்தை காட்டாது.அடுத்து நடக்கும் காரியத்ததை பார்த்தார்.

சித்தார்த்தின் அப்பா, அம்மா, தாத்தாவின் இறுதி காரியம் முடிந்ததும். அன்று இரவு துக்கத்துடன் அனைவரும் ஒவ்வொரு மூலையில் முடங்கியிருந்தனார். ஆனால் பரினிதா மட்டும் சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தாள்.

அதனை பார்த்த சித்தார்த் இருபது வயதான நமக்கே இப்படி இருக்கிறதே பன்னிரண்டு வயதான அந்த சிறுமிக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டே தன் துக்கத்தை மறைத்து அவளை சாமதானம் படுத்த அவள் அறை நோக்கி சென்றான்.

அவள் தலையில் கைய் வைத்து “குட்டிம்மா என்னை பாருடா செல்லம்.இந்த இழப்பு நமக்கு தாங்க முடியாது தான்.ஆனால் நாம் இதில் இருந்து மீண்டு தான் ஆகவேண்டும். நம் பாட்டி வயதானவர்கள் நம் இழப்போடு அவர்கள் இழப்பும் எந்த வகையிலும் குறைந்தது கிடையாது.

ஆனாலும் நம் பொருட்டு அதனை காட்டாது அனைத்து காரியத்தையும் அவர்களே செய்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் நாம் கஷ்டத்தை கொடுக்கலாமா சொல்.இனிமேல் நாம் தான் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அதற்க்கு உன்னுடைய ஒத்துழைப்பும் எனக்கு தேவை. கிடைக்கும் அல்லவா…?” என்ற அண்ணவாவின் பேச்சை கேட்டும் தன் அழுவதை நிறுத்தாமல் அவனை பார்த்து வயிற்றை பிடித்துக் கொண்டே இன்னும் சத்தம் போட்டு தான் அழுதாள்.அதனை பார்த்த சித்தார்த்.

“குட்டிம்மா என்னடா செய்கிறது.”

அதற்க்கு எந்த பதிலும் சொல்லாது தன் அண்ணாவை தயக்கத்துடன் பார்த்துக் கொண்டே வலியை மறைத்து தலை குனிந்தாள்.

“குட்டிம்மா அழதேடா இனி மேல் உனக்கு அப்பா அம்மா தாத்தா அனைத்துமாக நான் இருப்பேன்.சொல்லுடா என்ன வயிறு வலிக்கிறதா.இரு மாத்திரை எடுத்து வருகிறேன் .” என்று செல்பவனை கைய் பிடித்து நிறுத்திய பரினிதா எழுந்து நின்றுக் கொண்டு தன் ப்ராக்கின் பின் பக்கம் படிந்திருந்த கரையைய் காட்டினாள்.

அதனை பார்த்த சித்தார்த் சட்டென்று தன் கண்ணை மூடிக் கொண்டு பரினிதாவோடு பெரும் குரலேடுத்து சத்தம் போட்டு அழ ஆராம்பித்து விட்டான்.அவனுக்கு அனைத்தும் விளங்கி விட்டது.அவன் இருபதின் முடிவில் இருப்பதால் பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகள் அவனுக்கு தெரியும்.அவனுக்கு தன் தங்கை பெரிய மனிஷியாகி விட்டாள் என்று விளங்கி விட்டது.

ஆனால் அவனால் இதை எப்படி கைய்யாள்வது என்று விளங்கவில்லை. அவனுக்கு தெரியும் இந்த சமயத்தில் தான் ஒரு பெண்ணுக்கு தாயின் அரவணைப்பு தேவை என்று. எல்லாமாக நான் இருக்கிறேன் என்று கூறிய மறுநிமிடமே அவளின் தேவையை நம்மால் செய்து கொடுக்க முடிய வில்லையே என்று வருந்தினான்.

தன் அண்ணன் அழுவதை பார்த்த பரினிதா “அண்ணா அழுவாதே அண்ணா...எனக்கு ரொம்ப எல்லாம் வலிக்க வில்லை அண்ணா.” என்று தான் வலிக்கிறது என்று சொன்னதால் தான் தன் அண்ணன் அழுவதாக நினைத்துக் கொண்டு தன் வலியை மறைத்து தன் அண்ணனுக்கு ஆறுதல் கூறினாள்.

தங்கையின் பேச்சைக் கேட்ட சித்தார்த் அவள் தனக்காக தான் தன் வலியை மறைத்து பேசுகிறாள் என்று அவள் முகத்தை வைத்தே தெரிந்துக் கொண்ட சித்தார்த் தன் மனவருத்தைதை மறைத்துக் கொண்டு இப்போது நாம் நம் வருத்தத்தை அவளுக்கு காட்டாக் கூடாது.இனி தான் நான் மிக பொறுப்பாக நடந்துக் கொள்ள வேண்டும். கடைசியாக தன் தாத்தா தன்னிடம் சொன்ன வார்த்தையும் நியாபகத்துக்கு வர இன்றிலிருந்து நாம் அவளுக்கு அண்ணன் மட்டும் அல்ல ஒரு தாயாக நாம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தன் தங்கையை பார்த்தான்.

“குட்டிம்மா இது ஒன்றும் இல்லடா. எல்லா பெண்களுக்கும் இந்த வயதில் ஏற்படும் உடல் மாற்றத்தின் வெளிபாடு தான் இது. இது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை.இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இன்று தான் நீ பெண்ணுக்கான முழுதகுதியும் பெற்று இருக்கிறாய். இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தான்.” என்று அவளுக்கு தைரியம் அளித்து விட்டு தன் அப்பா அம்மா ரூம் நோக்கி சென்றான்.

அங்கு தன் அன்னையின் கப்போடில் இருக்கும் நாப்கினை எடுதுக் கொண்டு தன் பாட்டியை நோக்கி சென்று அவரிடம் அதனை கொடுத்து தங்கையிடம் கொடுத்து அது எப்படி பயன் படுத்துவது என்று சொல்லும் படி கூறிவிட்டு ஒரு முடிவோடு தன் அறை நோக்கி சென்றான்.

அதனை கைய்யில் வாங்கிய வரலஷ்மி ஒன்றும் பேசாமல் தன் பேத்தியின் அறை நோக்கி சென்றாள். பரினிதா வயிறு வலி என்று சொன்னதும் இந்த மாதிரி இருக்கும் என்ற சந்தேகத்தோடு தான் அவர் சென்னைக்கு கிளம்பாமல் தன் பேத்தியோடு இருந்தார். அவர் நினைத்தா மாதிரி தான் நடந்து இருந்தாலும் அவர் அதனை நினைத்து சந்தோஷம் பட முடியவில்லை.

இந்த நிகழ்ச்சியால் அவருக்கு கடமை இன்னும் கூடி விட்டதாக தான் கருதினார். தன் வருத்ததை முகத்தில் காட்டாது அதனை பரினிதாவிடம் கொடுத்து எப்படி பயன் படுத்த வேண்டும் என்று ஒரு இயந்திர கதியில் சொல்லி விட்டு தன் அறை நோக்கி சென்றார்.
 
Top