அத்தியாயம் 22
ஒரு வாரம் சென்ற நிலையில், விஸ்வந்தானின் அறைக்குள் வந்தான் ரிஷிகேஷ்.
"அப்பா... இன்னைக்கு நீங்க டிஸ்ச்சார்ஜ் ஆகிக்கலாம்ன்னு மூர்த்தி அங்கிள் சொல்லிட்டாங்க" என சொன்னபடி அவர் அருகில் அமர்ந்தான்.
அங்கு போடப்பட்டிருந்த அட்டண்டர் கட்டிலில் படுத்து பாட்டு கேட்டுக்கொண்டிருந்த லக்ஷ்மி, "ஏன் அதுக்குள்ள வீட்டுக்கு போகணும்? நம்ம இந்த ஒத்த ரூம்ல இருக்குறதுதான் அந்த மூர்த்திக்கு தொந்தரவா இருக்குதாம்மா? எதுக்கு நம்மளை போக சொல்றான்?" என அவர் போக்கில் பேசிக்கொண்டு போக, "ஐயோ அம்மா, கொஞ்சம் பேசாம இருக்கீங்களா? நம்ம இங்க என்ன டூரிஸ்ட்டா வந்துருக்கோமா? ஆசை தீர தங்குறதுக்கு? ட்ரீட்மென்ட் முடிஞ்சுன்னா வீட்டுக்கு போய்தான் ஆகணும்..." என்றான் ரிஷி.
"உனக்கு ஒண்ணுமே புரியாது. நான் எதுக்கு சொல்றேன்னா..." அவர் மீண்டும் ஏதோ சொல்லத்தொடங்க, "லக்ஷ்மி! எனக்கும் வீட்டுக்கு போகணும் போல இருக்கு... கிளம்புவோம்..." என்றார் விஸ்வநாதன்.
"அங்கிள் காசு கட்ட வேணான்னு தான் சொன்னாரு... ஆனா அது நல்லா இருக்காது... நான் பில் செட்டில் பண்ணிட்டு, ரிபோர்ட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரேன்..." என சொல்லிவிட்டு வெளியே சென்றான் ரிஷி.
"டேய்! அந்த மூர்த்திய வர சொல்லிட்டு போடா..." என ரிஷியை பணிந்தார் லக்ஷ்மி.
அவன் சென்றதும், "நீங்க கூட ஒரு வாரத்துல ஆளே மாறிட்டீங்க... நான் எதுக்கு வீட்டுக்கு போக வேணான்னு சொல்றேன்னு உங்களுக்கு புரியுதா இல்லையா?" என தன கணவரை கேட்டார் காட்டமாய்.
"எதுக்கு?" என அசுவாரசியமாக கேட்டார் விஸ்வநாதன்.
"அந்த மும்பைக்காரி சொத்து முழுக்க அவப்பேருல மாத்தி குடுக்க சொல்லி கேட்டுருக்கா தானே? நல்ல வேளையா உங்களுக்கு நெஞ்சு வலி வந்துச்சு... ஒரு வாரமா அந்த பேச்சு வரல... இப்போ வீட்டுக்கு போய்டா உங்களுக்கு குணமாகிடுச்சுன்னு மறுபடி அந்த பேச்சை எடுத்தாலும் எடுப்பா!! அதுக்குதான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நாளு இங்கயே இருப்போம்..." என்றார்
"இதுக்கு பயந்து இன்னும் எவ்ளோ நாளு ஹாஸ்பிடல்லயே இருக்க முடியும்ன்னு நினைக்குற?" என லக்ஷ்மியை கேட்டார்.
"அதுங்க கதை முடியுற வரைக்கும்...!!! உங்களுக்கு உடம்பு முடியாதப்போ அதுங்களை போட்டு தள்ளிட்டா நம்ம மேல சந்தேகம் வராது..." என சொன்னார் லஷ்மி.
அப்போது கதவை திறந்துக்கொண்டு மூர்த்தி உள்ளே வந்தார்.
"வாப்பா... டாக்டரு... உன் ஹஸ்பிடல்ன்னா எப்போ வேணாலும் எங்களை வெளில போன்னு சொல்லிடுவியா?" என்றார் லட்சுமி குறையாத கோவத்தோடு.
"அக்கா!! லோ பிரஷர்ல வந்த மயக்கத்தை ஹார்ட் அட்டாக்ன்னு பொய் சொல்லி ஒரு வாரம் ஓட்டிட்டேன். ஆனா இனிமே என்னால முடியாது. தினமும் அந்த கெளதம் என்னை தேடி வந்து, இன்னைக்கு என்ன ட்ரீட்மென்ட் கொடுத்தீங்க...? ரிபோர்ட் காட்டுங்கன்னு உயிரை எடுக்குறான்...!! மாட்டிக்காம இருக்கணும்ன்னா நீங்க வீட்டுக்கு போறது தான் நல்லது..." என்றார் மூர்த்தி.
"அவனுக்கு எதுக்கு இந்த வேலை??" என பல்லை கடித்தார் லஷ்மி.
"ஒரு பிரச்சனையும் இல்லை லக்ஷ்மி அக்கா, நான் தெளிவா சொல்லிட்டேன். அவர் மனச பாதிக்குற மாறி எந்த காரியமும் பண்ண கூடாது. அவர் நிம்மதியா இருக்கனும். அவரை ஐஞ்சு நிமிஷத்துக்கு மேல பேச விடாதீங்க. யோசிக்க விடாதீங்கன்னு நெறைய சொல்லிட்டேன். அதனால பயபடாம வீட்டுக்கு போங்க.. அவங்க சொத்து பத்தி பேசுனாலே அவர் உடல்நிலை எடுத்து சொல்லி வாயடச்சுருங்க..." என யோசனை சொன்னார் டாக்டர் மூர்த்தி.
"என்னமோ சொல்ற, நானும் கேக்குறேன். ஹும்ம்.." என சலித்துகொண்டபடி தங்கள் பொருட்களை எடுத்து வைத்தார் லக்ஷ்மி.
இதை எல்லாம் கதவின் பின் நின்று கேட்டுக்கொண்டிருந்த ரிஷிக்கு மனம் வெறுத்து போனது.
"மையு!! போன் அடிக்குது பாரு. வந்து எடு..." என சோபாவில் படுத்துக்கொண்டு டிவி பார்த்தபடி குரல் கொடுத்தான் ராம்.
அவன் குரல் கேட்டு அங்கு வந்த கெளதம், "உனக்கு வந்த வாழ்வுடா!! கைக்கு எட்டுற இடத்துல இருக்க போன் எடுக்க, ஆள் கூப்புடுற நீ!!! ஹும்ம்?" என்றான் அவன் கால் ஆட்டிக்கொண்டு படுத்திருப்பதை கண்டு.
"உன் பேரு மையுவா? இல்லல? போட்ட்ட்டா!!" என டிவி முன்பு மறைத்துக்கொண்டு நின்ற கௌதமை தன் காலால் தள்ளி நிற்க வைத்தான் ராம்.
"ஏய் என்னடா ரொம்ப ஓவரா பண்ற? வெட்டியா தானே இருக்க? போன் எடுத்து பேசுனா என்னடா? உன்னால என் தங்கச்சி மூணு மாசமா அதோட ஆபீஸ் வேலை எதையுமே பார்க்கல... இந்த ஒரு வாரமா தான் கொஞ்சம் கொஞ்சம் பண்ணுது. அது பொறுக்கலையா? இப்படி தொல்லை பண்ற அவளை...." என கடிந்து கொண்டான் கெளதம்.
"நீ சும்மாதனே இருக்க? நீ மையுக்கு ஹெல்ப் பண்ணலாம்ல?" என்றான் ராம் வாயில் சிப்ஸ்ஐ நொறுக்கியபடி.
"என்னடா? எகத்தாளமா?? எனக்கு எப்படிடா அது பார்க்குற வேலை தெரியும். நான் டாக்டர்க்கு தானே படிச்சுருக்கேன்...??" என்றான் கெளதம்.
"ஐயையோ இல்லனா மட்டும் அப்படியே செஞ்சு கிழிச்சுடுவ? டிவிய மறைக்காம போடா அங்குட்டு" என கத்தினான் ராம்.
"டேய் என் பொறுமைய ரொம்ப சோதிக்குறடா நீ!!! ரொம்ப ஆடாத!! நான் எப்பவும் ஒரே மாறி இருக்கமாட்டேன்!!" என எச்சரித்தான் கெளதம்.
"ஏன்? பொழுது சாஞ்சதும் பொக்கிமேன்னா மாறிடுவியா?" என அவனுக்கு தூபம் போட்டான் ராம்.
"ஏய்!!" என கெளதம் கத்தவும், மாடியில் இருந்து மைதிலி இறங்கி வரவும் சரியாக இருந்தது.
"அண்ணா?? இப்போ என்ன சண்டை ராம் கூட? இவ்ளோ சத்தமா இருக்கு...!" என கேட்டுக்கொண்டே ஹாலிற்கு வந்தாள் மையு..
"இங்க இவன்கிட்டேயே இருக்க போன்ன அட்டென்ட் பண்ணறதுக்கு, வேலை பார்த்துட்டு இருக்க உன்னை கூப்டுறான். ஓவரா தெரியலையா இவனுக்கு?" என குற்றம் சாட்டினான் கெளதம்.
இவர்கள் சண்டையில் நான்கு முறை அடித்து ஓய்ந்து போயிருந்தது அந்த தொலைபேசி.
"இவனோட சண்டை போட்ட நேரத்துக்கு, நீங்க கால் அட்டென்ட் பண்ணிருந்தா நான் என் வேலைய பார்த்துட்டு இருந்துருப்பேன்ல?" என மைதிலி கோவமாய் கேட்கவும், "ஹிஹி" என அசடு வழிந்தான் கெளதம்.
இம்முறை தொலைபேசி ஓலமிட, அதை தன் காதுக்கு கொடுத்த மைதிலி, "ஓ!! ஹ்ம்ம்.... சரி... ஓகே...!!" என சொல்லிவிட்டு வைத்தாள்.
"யாரு?" என கெளதம் கேட்க, "உங்க அங்கிளும் ஆன்ட்டியும் தான். வீட்டுக்கு வராங்களாம். கார் அனுப்ப சொல்றாங்க ஹாஸ்பிட்டல்க்கு.." என சொல்லிவிட்டு அவர்களை அழைத்து வர, சந்தோஷை அனுப்பிவைத்தாள்.
"அண்ணா... ஜஸ்ட் டூ திஸ் பார் மீ. இதுல இருக்குறதை ப்ரிண்ட் அவுட் போட்டு கொண்டு வாங்க.. கொஞ்சம் வேலை இருக்கு..." என தன் பென்டிரைவை அவனிடம் தந்தாள் மைதிலி.
அவர்கள் சென்றதும் உள்ளே செல்ல திரும்பியவள், சோபாவில் படுத்தபடி கால் ஆட்டிக்கொண்டிருக்கும் ராமை கண்டு அருகில் சென்றாள்.
"ஒய்... என்ன அசையாம படுத்துருக்க? உன் மாமாவும் அத்தையும் ஆன் தி வே.." என்றாள் அவனை பார்த்து.
"எங்களுக்கு தெரியும்.. ஹும்ம்" என திருப்பிக்கொண்டான் ராம்.
"பார்ரா!!!!" என்றபடி தன் வேலையை பார்க்க சென்றுவிட்டாள் மைதிலி.
வாசலில் கார் சத்தம் கேட்கவே தன் நிலையில் இருந்து எழுந்து அறைக்குள் ஓடினான் ராம்..
"மையு.... கார் வந்துடுச்சு..." என்றான்.
அவனை நிதானமாய் ஏறிட்டவள், "எங்களுக்கு தெரியும்" என்றாள் அவனைப்போலவே.
"வந்து பாரு!!" என்றான்.
அவள் மீண்டும், "எங்களுக்கு தெரியும்!" என்றாள்.
நின்று புசுபுசுவென மூச்சை இழுத்து விட்டவன், பின் "ஹும்ம்... போடி" என சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
"'டீ'யா...ஹஹா சார்க்கு கோவம் போல!" என எண்ணியபடி தன் மடிகணினியை இறக்கி வைத்துவிட்டு வெளியே சென்றாள் மையு.
சந்தோஷ் தன் கைகளில் அவர்களுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு வர, பின்னால் நன்றாக நடந்து வந்த விஸ்வநாதனை வேண்டுமென்றே இழுத்து பிடித்து தாங்கியபடி அழைத்து வந்தார் லக்ஷ்மி.
அவர்களிடம் சென்ற மைதிலி, "என்னாச்சு? கால்ல அடி பட்டுருக்கா?" என்றாள் சிரியாமல்.
"உடம்பு முடியாதவரு. பாத்து பத்திரமா கூட்டிட்டு போங்கன்னு டாக்டர் சொல்லிருக்காரு... இவர் இல்லன்னா எனக்கு யாரு இருக்கா? என் கவலை எனக்கு..." என விசும்பியபடி சொல்லிக்கொண்டு அவர் அறைக்கு அழைத்து சென்றார் லக்ஷ்மி.
"விட்டா இடுப்புலயே தூக்கி வச்சுக்கும்... அவ்வளவு லவ்வு புருஷன் மேல...!" என சந்தோஷ் சொல்ல, "அப்படியா?" என புருவம் தூக்கினாள் மைதிலி.
"அட ஏன் மைதிலி.. நீ வேற!!! ஒரு வாரம் பேஷன்ட்டா இருந்தவர்க்கே ஒரு பேக் தான்... என்கிட்ட இருக்க மீதி எல்லாம் அந்த அம்மாவோடது... என்னத்ததான் வச்சுருக்கோ.. தெரியல..!? ஹாஸ்பிடல்ல உட்காந்து மெஹந்தி போட்டுருக்கு... பேஸ் பாக் போட்டுருக்கு...!! திவ்யா என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டா!!!" என சலிப்போடு சொன்னான் சந்தோஷ்.
"ஹஹா தேன்க் காட் சந்தோஷ். திருந்திடாங்களோன்னு நினைச்சு பயந்துட்டேன்... ஹஹா" என சிரித்தாள் மையு.
சந்தோஷ், "ஹஹா திருந்திட்டா தான் கதை முடிஞ்சுடுமே!! சரி நான் இதெல்லாம் கொடுத்துட்டு வரேன். அப்புறம் நான் ரெடி பண்ணிட்டு இருந்த டாக்குமென்ட் அப்பாக்கு அனுப்பிடு. அர்ஜென்ட்ன்னு கேட்டாரு...." என்றான். இவர்கள் இல்லாத ஒரு வாரத்தில் சந்தோஷுக்கு வேலை கொடுத்திருந்தார் கேசவன்.
"நீ போனதுமே பேலன்ஸ் வொர்க் முடிச்சு அனுப்பி வச்சுட்டேன். நீ போ... தேட போறாங்க.." என அனுப்பி வைத்தாள்.
நேரம் செல்ல, கெளதம் இன்னும் வராததை எண்ணி அவள் வெளியே வர, அந்நேரம் அவன் வீட்டிற்க்குள் நுழைந்தான்.
"இன்னும் காணோமேன்னு நினைச்சேன் அண்ணா... கரெக்டா வந்துட்டேன்களே!?" என புகழ்ந்தபடி அவன் கையை பார்த்தாள்.
அவள் பார்வையை உணர்ந்தபடி "என்னம்மா?" என்றான்.
"பிரின்டவுட் போட்டுட்டு வர சொன்னேனே?" என கேட்டாள் அவனின் வெற்று கைகளை கண்டு குழம்பியபடி.
"வெறும் பிரின்டவுட் மட்டும் போட்டா போதுமா?" என அவன் கேட்கவும், சிறிது யோசித்தவள், "சாரி அண்ணா..." என்றபடி தன் நுனி நாக்கை கடித்துக்கொண்டாள். "அப்போ?" என அவள் கேள்வியாய் தொடங்க, "ஈவனிங் வாங்கிட்டு வரேன்.." என சொல்லிவிட்டு "கூடவே தான் இருக்கேன்.. நீ என்ன பண்றன்னு எனக்கே தெரியாமாட்டேங்குது..." என சிரிப்புடன் சொல்லிவிட்டு சென்றான்.
அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை மனதால் ஒத்திகை பார்த்தபடி சில நிமிடங்கள் நின்றாள் மைதிலி. "ராம் எங்க? ஆளே காணோம்?" என கேட்டுக்கொண்டு வீட்டுனுள் அவள் தேட, தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து வானை வெறித்துக்கொண்டிருந்தான் ராம்.
வீடு முழுக்க தேடி கிடைக்காமல் எதேச்சையாய் பின்புறம் அவள் வர, அங்கு நான் இருப்பதை கண்டு, "இங்க என்ன பண்ற ராம்? உன் மாமாவ பார்க்கலையா??" என்றாள்..
"பார்த்துக்கலாம்..."
"சரி உள்ள வா.. சாப்பிடலாம்..." என அவள் அழைக்க,
"நான் வரேன். நீ போ.." என்றான்.
"இன்னும் கோவம் போலையா? நான் சும்மா விளையாண்டேன் ராம். செல்லம்ல? உள்ள வாங்க... சாப்பிடலாம்..."
அவளை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவன், "அந்த பயம் இருக்கணும்.." என் சொல்லிவிட்டு உடன் சென்றான்.
இரவு உணவு முடித்து அனைவரும் கூடத்தில் ஒன்று கூட, விஸ்வநாதன் சோர்ந்த முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் எதிரே இருந்த சோபாவில் சென்று அமர்ந்த மைதிலி, "என்ன பண்ணுது? ரொம்ப முடியலையா?" என்றாள் பரிவாய்.
"ஒன்னும் இல்லம்மா.. சரி ஆகிடும் எல்லாம்..." என்றார் விஸ்வநாதன்.
"அவரை பேச விடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க..." மைதிலி அவரிடம் பேசுவதை கண்டு பயத்துடன் விரைந்து வந்து அவரருகில் நின்றுகொண்டார் லக்ஷ்மி.
"ஓ! எவ்ளோ நாளுக்கு இப்படி பேசாம இருக்கணும்..." என கதை கேட்க்கும் தோரணையில் விசாரித்தாள் மைதிலி.
கெளதம், ராம், ரிஷி மூவரும் சற்று தள்ளி ஒன்றாக அமர்ந்திருந்தனர்.
"அது எவ்ளோ நாளுக்குன்னு எல்லாம் சொல்லல... ஆனா பேசக்கூடாது.." என்றார் லக்ஷ்மி.
"ஓஹோ... சரி வேற என்னெல்லாம் பண்ண கூடாது...?" என்றாள் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு.
"வேற?? வேற? ஹான்!!! அவரு பேச கூடாது, யோசிக்க கூடாது. எந்த பிரச்சனையும் அவர் காதுக்கே எட்டக்கூடாது. அவர் எப்பவும் நிம்மதியா இருக்கணும்..." என்றார் லக்ஷ்மி முன்யோசனையாய்.
அதுவரை அவர் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த கெளதம், "இதெல்லாம் மாசிவ் அட்டாக் வந்து ஆபரேஷன் பண்ணவங்களுக்கு சொல்றது...! இவருக்கு மைல்ட் அட்டாக் தான். சோ இன்னும் கொஞ்ச நாள்ல ரெக்கவர் ஆகிடுவாரு.." என்றான்.
அவனை உச்சகட்ட கடுப்பில் பார்த்தவர், "நீ நரம்புக்கு தானே படிச்ச? உனக்கு ஹார்ட்ட பத்தி என்ன தெரியும்?" என்றார்.
"அவனுக்கு நரம்ப பத்தியே ஒன்னும் தெரியாது. ஹீஹீ.." என மெதுவாய் சொல்லி சிரித்தான் ராம். கெளதம் அவனை முறைத்து கொண்டிருக்க, அடுத்து அங்கு என்ன நடக்கும் என அறிந்த மைதிலி, லக்ஷ்மியிடம், "சப்போஸ் அவர் பேசுன்னா, யோசிச்சா, டென்ஷன் ஆனா என்ன ஆகும்?" என்றாள்.
அவள் அப்படி கேட்கவும் ஓஓஓவென கத்தினார் லக்ஷ்மி. "என்னம்மா இப்படி கேக்குற? நான் நூறு வருஷம் வாழனும்... சுமங்கலியா தான் சாகனும்...ஆஆஆ" என அழுதபடியே சொன்னார்.
அவர் பதிவிரதத்தன்மையை எண்ணி புருவம் உயர்த்திய மைதிலி, திரும்பி கௌதமிடம் கண் காட்டினாள். அவன் எழுந்து சென்றதும், "அழாதீங்க... நீங்க அழுதா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. ப்ளீஸ்..." என அவருக்கு சமமாய் அமர்ந்து தேற்றினாள் மைதிலி.
தன்னை நம்பிவிட்டதாக எண்ணி மகிழ்ந்த லக்ஷ்மி, தன்னை தானே மெச்சிக்கொண்டு மீண்டும் அழுதார்.
"அழாதீங்க..!! உங்களுக்கு ஒரு உதவி பண்ணலாம்னு இருக்கேன்... கண்டிப்பா நீங்க சந்தோஷப்படுவீங்க...!" என சொன்னாள் மைதிலி.
சட்டென அழுகை நிற்க, "என்ன உதவிம்மா?" என்றாள்..
அவர் கேட்கும்போது அங்கு வந்த கெளதம் கைகளில் இருந்த கோப்பை வாங்கி, "உங்க கஷ்டத்தை குறைக்கத்தான் இந்த முடிவு.." என சொன்னபடி அதை திறந்து விஸ்வநாதன் முன் வைத்தாள் மைதிலி.
முதலில் அதை சாதரணமாக பார்த்த விஸ்வநாதனின் முகம், மெல்ல மெல்ல மாறியது.. தன் கணவனின் முகமாற்றத்தை கண்டு அவரருகில் சென்றவர் , "என்னங்க ஆச்சு? என்ன போட்டுருக்கு இதுல?" என்றார் பதற்றமாய்.
அவர் ஒன்றும் சொல்லாமல் இருக்க, "நான் சொல்றேன்.. இவரோட உடல்நிலை ரொம்ப மோசமா இருக்க நிலையில, கம்பெனி டீலிங்ஸ், மீடிங்க்ஸ், ப்ராப்ளம்ஸ் அண்ட் அதுக்கான சொல்யுஷன். இது எதுவுமே இனி பண்ண முடியாது. அதனால ராம் பங்கோட சேர்த்து, ரிஷி பேருல இருக்க முப்பது பர்சண்டேஜ் ஷேரையும் நானே ஹான்டில் பண்ணலாம்னு நினைக்குறேன். அதுக்கான உரிமை பத்தரம் தான் இது. ஒரு கையெழுத்து போடுங்க போதும்..." என்றாள் மைதிலி நிதானமாய்.
அதை கேட்ட லக்ஷ்மிக்கு நெஞ்சுவலியே வரும் போல இருந்தது.. ராமின் எழுபது சதவீதம் பறிபோய்விட கூடாது என நினைத்தவருக்கு, தன் கையில் இருந்த முப்பது சதவீதமும் பறிபோக போவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
"அவரால ஏன் முடியாது? இவ்ளோ நாளும் அவர்தானே இதெல்லாம் கட்டிக்காப்பாத்துனாரு. இனிமேலும் அவரே நல்லா பார்த்துப்பாரு!" என்றார் வேகமாய்.
"அதெப்படி முடியும்... இனிமே அவர் பேச, யோசிக்க, டென்ஷன் ஆக கூடாதுல்ல?!! நீங்க வேற சுமங்கலியா சாகனும்... எல்லாம் உங்களுக்காக தான் பண்றேன்.." என்றாள் மைதிலி குரலில் சக்கரையை தடவி.
சொத்து பேச்சு எழ கூடாது என எண்ணி தான் சொன்னவை தனக்கே திரும்பியதை எண்ணி மனதுள் கொந்தளித்தார் லக்ஷ்மி.
பின்பு, "சரி உங்க பங்கு சொத்தை நீ பார்த்துக்கோ. எதுக்கு என் புள்ள பங்கையும் கேக்குற?" என அவர் கேட்டதும் மைதிலி அங்கு இருந்த ரிஷியை திரும்பி பார்த்தாள்.
அவள் பார்வையை உணர்ந்ததை போல, "எனக்கு பிசினஸ் பார்க்க இண்ட்ரஸ்ட் இல்லை, அதபத்தி ஒன்னும் தெரியாது. நான் எல்லாம் கத்துக்குற வரைக்கும், அதெல்லாம் அக்கா கன்ட்ரோல்ல இருக்கட்டும்..." என்றான்.
அவன் சொல்லிமுடித்ததும் மைதிலி, 'சரிதானே' என்பதை போல லக்ஷ்மியை பார்க்க,, அவர் தன் கண்களால் ரிஷியை எரித்துகொண்டிருந்தார்.
மீண்டும் கோவத்துடன் அவர் ஏதோ சொல்ல வாயெடுக்க, நடப்பதைஎல்லாம் மௌனமாய் இறுகிய முகத்துடன் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த விஸ்வநாதன், மனைவி கைகளை பிடித்து தடுத்தார்.
பின்பு, அங்கிருந்த பத்திரத்தில் தன் கையெழுத்துக்களை வேகமாய் போட்டுவிட்டு, தன் மனைவி திமிர திமிர கேட்காமல் அவருடைய கட்டைவிரல் ரேகையை வைத்து, மைதிலியிடம் கொடுத்தார்.
"ரிஷி கிட்டயும் சைன் வாங்கிக்கோம்மா..." என சொல்லிவிட்டு மனைவியுடன் அறைக்கு சென்றார் விஸ்வநாதன்.
அங்கிருந்த அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சி. மைதிலிக்குமே சிறிது அதிர்ச்சியாய் இருந்தது.
"என்ன தங்கச்சி.. சப்புன்னு முடிஞ்சுருச்சு? நீ இன்னும் கொஞ்சம் ஆக்ட் பண்ணுவ... பாக்கலாம்ன்னு நினைச்சேன்..." என சொன்னபடி கேள்வியாய் அவர்கள் அறை வாயிலை பார்த்தான் கெளதம்.
"எனக்குமே சந்தேகமாதான் இருக்கு..." என்றாள்.
"அக்கா!! நீங்க போய் தூங்குங்க.. நான் என்னனு தெரிஞ்சுகிட்டு வரேன்..." என சொல்லிவிட்டு தன் தந்தை அறைக்குள் சென்றான் ரிஷி.
"முதல்ல இவனே நல்லவனா, இல்லை நடிக்குரானான்னு தெரியல..." என செல்லும் ரிஷியை பார்த்து சொல்லிவிட்டு சென்றான் கெளதம். அவன் சென்றதும் ராமுடன் தன் அறைக்கு சென்றுவிட்டாள் மைதிலி.
"எதுக்குங்க கையெழுத்து போட்டீங்க? ஹய்யோ எல்லாம் போச்சு.. எல்லாம் போச்சு. நம்ம இனிமே ரோடுல தான் நிக்கணும்... லைன்ஸ் கிளப் ஆளுங்களை எல்லாம் இனி எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு சந்திப்பேன்? என் பகட்டு வாழ்கை போச்சே! இனி ஒருத்தியும் என்னை மதிக்க மாட்டா!! நான் இவ்ளோ பேசுறேன்.. நீங்க பால்கனில நின்னு காத்து வாங்குறீங்களா?" என அவரை போட்டு உலுக்கினார் லக்ஷ்மி.
அறைக்குள் நுழைந்த ரிஷி, தன் அன்னை பேசியதை கேட்டு அப்படியே நின்றான். அவன் வந்ததை கவனியாதவர் மேலும் தொடர்ந்தார்.
"வாயத்தொறந்து பேசுங்க.... எனக்கு என்ன செய்வீங்கன்னு தெரியாது.. எல்லா சொத்தும் நாளைக்கே என் பேருக்கு வரணும்.. அவங்களை அடிச்சு வாங்குவீங்களோ, இல்லை ஒரே அடியா தீர்த்துகட்டுவீங்களோ,, அதெல்லாம் தெரியாது... எனக்கு சொத்து வேணும்..." என வெறித்தனமாய் கத்தினார்.
கோவம் சுள்ளென ஏற அவரை திட்ட வாயெடுத்த ரிஷி, தன் தந்தையின் குரலில் வாய்மூடினான்.
"ஏன் இப்படி வெறிபிடிச்சு அலையுற? காசு புத்தியை மழுங்கடிக்குதா? ஹான்??" என ஆங்காரமாய் குரல் உயர்த்தினார் விஸ்வநாதன்.
முதலில் அதிர்ந்த லக்ஷ்மி, "யோவ்.. என்னய்யா?? நானும் ஒரு வாரமா பார்க்குறேன்... ரொம்ப நல்லவன் மாறி பேசுற? நீயும் நானும் தானே இத்தனை வருஷமும் இந்த சொத்துக்காக போராடுனோம். இப்போ என்னன்னா சிலிர்த்துகுற?" என்றார் கணவனின் மாற்றம் புரியாமல்.
"இத்தனை வருஷமும் பணம் பணம்ன்னு அலைஞ்சோம்... இதுவரைக்கும் பணம் தான் நமக்கு எல்லாமே.. ஆனா இந்த பணம் நம்ம கண்ணை மறைச்சுடுச்சு... கண்ணுக்கு முன்னாடி நம்ம பாசத்துக்குக்காக ஏங்குன்ன நம்ம பையனை இந்த பணம், நம்ம கண்ணுல இருந்து மறைச்சுடுச்சு..." என்றார் விஸ்வநாதன் உணர்ச்சிவசப்பட்டு.
"என்ன புதுசா என்னனவோ பேசுறீங்க? எப்போ இருந்து இந்த ஞானோதயம்??" என்றார் இளக்காரமாய்.
"போன வாரம், நம்ம பையன் கையை கிழிச்சுட்டு கடந்தானே? அப்போ வந்துச்சு, நீ சொல்ற ஞானோதயம்... அப்போ உரைச்சுது என் மண்டைல. வாழ்க்கைக்கு எது முக்கியம்ன்னு... நீதான் இவ்வளவு நடந்தும் மாறமா இருக்க!! கண்ணை திறந்து பாரு.. நமக்காக ஒரு உயிர் இருக்குனு நினைச்சுப்பாரு... காசு மட்டுமே உலகம் இல்லன்னு புரியும்...." என அவர் கண்களை பார்த்து சொன்னார் விஸ்வநாதன்.
தன் கணவன் கண்களில் இருந்த ஏதோ ஒன்று லக்ஷ்மியை பதில் பேச விடாது கட்டிப்போட்டது. ரிஷி வந்த சுவடே இல்லாமல் வியர்த்த கண்களுடன் வெளியேறினான்.
ஒரு வாரம் சென்ற நிலையில், விஸ்வந்தானின் அறைக்குள் வந்தான் ரிஷிகேஷ்.
"அப்பா... இன்னைக்கு நீங்க டிஸ்ச்சார்ஜ் ஆகிக்கலாம்ன்னு மூர்த்தி அங்கிள் சொல்லிட்டாங்க" என சொன்னபடி அவர் அருகில் அமர்ந்தான்.
அங்கு போடப்பட்டிருந்த அட்டண்டர் கட்டிலில் படுத்து பாட்டு கேட்டுக்கொண்டிருந்த லக்ஷ்மி, "ஏன் அதுக்குள்ள வீட்டுக்கு போகணும்? நம்ம இந்த ஒத்த ரூம்ல இருக்குறதுதான் அந்த மூர்த்திக்கு தொந்தரவா இருக்குதாம்மா? எதுக்கு நம்மளை போக சொல்றான்?" என அவர் போக்கில் பேசிக்கொண்டு போக, "ஐயோ அம்மா, கொஞ்சம் பேசாம இருக்கீங்களா? நம்ம இங்க என்ன டூரிஸ்ட்டா வந்துருக்கோமா? ஆசை தீர தங்குறதுக்கு? ட்ரீட்மென்ட் முடிஞ்சுன்னா வீட்டுக்கு போய்தான் ஆகணும்..." என்றான் ரிஷி.
"உனக்கு ஒண்ணுமே புரியாது. நான் எதுக்கு சொல்றேன்னா..." அவர் மீண்டும் ஏதோ சொல்லத்தொடங்க, "லக்ஷ்மி! எனக்கும் வீட்டுக்கு போகணும் போல இருக்கு... கிளம்புவோம்..." என்றார் விஸ்வநாதன்.
"அங்கிள் காசு கட்ட வேணான்னு தான் சொன்னாரு... ஆனா அது நல்லா இருக்காது... நான் பில் செட்டில் பண்ணிட்டு, ரிபோர்ட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரேன்..." என சொல்லிவிட்டு வெளியே சென்றான் ரிஷி.
"டேய்! அந்த மூர்த்திய வர சொல்லிட்டு போடா..." என ரிஷியை பணிந்தார் லக்ஷ்மி.
அவன் சென்றதும், "நீங்க கூட ஒரு வாரத்துல ஆளே மாறிட்டீங்க... நான் எதுக்கு வீட்டுக்கு போக வேணான்னு சொல்றேன்னு உங்களுக்கு புரியுதா இல்லையா?" என தன கணவரை கேட்டார் காட்டமாய்.
"எதுக்கு?" என அசுவாரசியமாக கேட்டார் விஸ்வநாதன்.
"அந்த மும்பைக்காரி சொத்து முழுக்க அவப்பேருல மாத்தி குடுக்க சொல்லி கேட்டுருக்கா தானே? நல்ல வேளையா உங்களுக்கு நெஞ்சு வலி வந்துச்சு... ஒரு வாரமா அந்த பேச்சு வரல... இப்போ வீட்டுக்கு போய்டா உங்களுக்கு குணமாகிடுச்சுன்னு மறுபடி அந்த பேச்சை எடுத்தாலும் எடுப்பா!! அதுக்குதான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நாளு இங்கயே இருப்போம்..." என்றார்
"இதுக்கு பயந்து இன்னும் எவ்ளோ நாளு ஹாஸ்பிடல்லயே இருக்க முடியும்ன்னு நினைக்குற?" என லக்ஷ்மியை கேட்டார்.
"அதுங்க கதை முடியுற வரைக்கும்...!!! உங்களுக்கு உடம்பு முடியாதப்போ அதுங்களை போட்டு தள்ளிட்டா நம்ம மேல சந்தேகம் வராது..." என சொன்னார் லஷ்மி.
அப்போது கதவை திறந்துக்கொண்டு மூர்த்தி உள்ளே வந்தார்.
"வாப்பா... டாக்டரு... உன் ஹஸ்பிடல்ன்னா எப்போ வேணாலும் எங்களை வெளில போன்னு சொல்லிடுவியா?" என்றார் லட்சுமி குறையாத கோவத்தோடு.
"அக்கா!! லோ பிரஷர்ல வந்த மயக்கத்தை ஹார்ட் அட்டாக்ன்னு பொய் சொல்லி ஒரு வாரம் ஓட்டிட்டேன். ஆனா இனிமே என்னால முடியாது. தினமும் அந்த கெளதம் என்னை தேடி வந்து, இன்னைக்கு என்ன ட்ரீட்மென்ட் கொடுத்தீங்க...? ரிபோர்ட் காட்டுங்கன்னு உயிரை எடுக்குறான்...!! மாட்டிக்காம இருக்கணும்ன்னா நீங்க வீட்டுக்கு போறது தான் நல்லது..." என்றார் மூர்த்தி.
"அவனுக்கு எதுக்கு இந்த வேலை??" என பல்லை கடித்தார் லஷ்மி.
"ஒரு பிரச்சனையும் இல்லை லக்ஷ்மி அக்கா, நான் தெளிவா சொல்லிட்டேன். அவர் மனச பாதிக்குற மாறி எந்த காரியமும் பண்ண கூடாது. அவர் நிம்மதியா இருக்கனும். அவரை ஐஞ்சு நிமிஷத்துக்கு மேல பேச விடாதீங்க. யோசிக்க விடாதீங்கன்னு நெறைய சொல்லிட்டேன். அதனால பயபடாம வீட்டுக்கு போங்க.. அவங்க சொத்து பத்தி பேசுனாலே அவர் உடல்நிலை எடுத்து சொல்லி வாயடச்சுருங்க..." என யோசனை சொன்னார் டாக்டர் மூர்த்தி.
"என்னமோ சொல்ற, நானும் கேக்குறேன். ஹும்ம்.." என சலித்துகொண்டபடி தங்கள் பொருட்களை எடுத்து வைத்தார் லக்ஷ்மி.
இதை எல்லாம் கதவின் பின் நின்று கேட்டுக்கொண்டிருந்த ரிஷிக்கு மனம் வெறுத்து போனது.
"மையு!! போன் அடிக்குது பாரு. வந்து எடு..." என சோபாவில் படுத்துக்கொண்டு டிவி பார்த்தபடி குரல் கொடுத்தான் ராம்.
அவன் குரல் கேட்டு அங்கு வந்த கெளதம், "உனக்கு வந்த வாழ்வுடா!! கைக்கு எட்டுற இடத்துல இருக்க போன் எடுக்க, ஆள் கூப்புடுற நீ!!! ஹும்ம்?" என்றான் அவன் கால் ஆட்டிக்கொண்டு படுத்திருப்பதை கண்டு.
"உன் பேரு மையுவா? இல்லல? போட்ட்ட்டா!!" என டிவி முன்பு மறைத்துக்கொண்டு நின்ற கௌதமை தன் காலால் தள்ளி நிற்க வைத்தான் ராம்.
"ஏய் என்னடா ரொம்ப ஓவரா பண்ற? வெட்டியா தானே இருக்க? போன் எடுத்து பேசுனா என்னடா? உன்னால என் தங்கச்சி மூணு மாசமா அதோட ஆபீஸ் வேலை எதையுமே பார்க்கல... இந்த ஒரு வாரமா தான் கொஞ்சம் கொஞ்சம் பண்ணுது. அது பொறுக்கலையா? இப்படி தொல்லை பண்ற அவளை...." என கடிந்து கொண்டான் கெளதம்.
"நீ சும்மாதனே இருக்க? நீ மையுக்கு ஹெல்ப் பண்ணலாம்ல?" என்றான் ராம் வாயில் சிப்ஸ்ஐ நொறுக்கியபடி.
"என்னடா? எகத்தாளமா?? எனக்கு எப்படிடா அது பார்க்குற வேலை தெரியும். நான் டாக்டர்க்கு தானே படிச்சுருக்கேன்...??" என்றான் கெளதம்.
"ஐயையோ இல்லனா மட்டும் அப்படியே செஞ்சு கிழிச்சுடுவ? டிவிய மறைக்காம போடா அங்குட்டு" என கத்தினான் ராம்.
"டேய் என் பொறுமைய ரொம்ப சோதிக்குறடா நீ!!! ரொம்ப ஆடாத!! நான் எப்பவும் ஒரே மாறி இருக்கமாட்டேன்!!" என எச்சரித்தான் கெளதம்.
"ஏன்? பொழுது சாஞ்சதும் பொக்கிமேன்னா மாறிடுவியா?" என அவனுக்கு தூபம் போட்டான் ராம்.
"ஏய்!!" என கெளதம் கத்தவும், மாடியில் இருந்து மைதிலி இறங்கி வரவும் சரியாக இருந்தது.
"அண்ணா?? இப்போ என்ன சண்டை ராம் கூட? இவ்ளோ சத்தமா இருக்கு...!" என கேட்டுக்கொண்டே ஹாலிற்கு வந்தாள் மையு..
"இங்க இவன்கிட்டேயே இருக்க போன்ன அட்டென்ட் பண்ணறதுக்கு, வேலை பார்த்துட்டு இருக்க உன்னை கூப்டுறான். ஓவரா தெரியலையா இவனுக்கு?" என குற்றம் சாட்டினான் கெளதம்.
இவர்கள் சண்டையில் நான்கு முறை அடித்து ஓய்ந்து போயிருந்தது அந்த தொலைபேசி.
"இவனோட சண்டை போட்ட நேரத்துக்கு, நீங்க கால் அட்டென்ட் பண்ணிருந்தா நான் என் வேலைய பார்த்துட்டு இருந்துருப்பேன்ல?" என மைதிலி கோவமாய் கேட்கவும், "ஹிஹி" என அசடு வழிந்தான் கெளதம்.
இம்முறை தொலைபேசி ஓலமிட, அதை தன் காதுக்கு கொடுத்த மைதிலி, "ஓ!! ஹ்ம்ம்.... சரி... ஓகே...!!" என சொல்லிவிட்டு வைத்தாள்.
"யாரு?" என கெளதம் கேட்க, "உங்க அங்கிளும் ஆன்ட்டியும் தான். வீட்டுக்கு வராங்களாம். கார் அனுப்ப சொல்றாங்க ஹாஸ்பிட்டல்க்கு.." என சொல்லிவிட்டு அவர்களை அழைத்து வர, சந்தோஷை அனுப்பிவைத்தாள்.
"அண்ணா... ஜஸ்ட் டூ திஸ் பார் மீ. இதுல இருக்குறதை ப்ரிண்ட் அவுட் போட்டு கொண்டு வாங்க.. கொஞ்சம் வேலை இருக்கு..." என தன் பென்டிரைவை அவனிடம் தந்தாள் மைதிலி.
அவர்கள் சென்றதும் உள்ளே செல்ல திரும்பியவள், சோபாவில் படுத்தபடி கால் ஆட்டிக்கொண்டிருக்கும் ராமை கண்டு அருகில் சென்றாள்.
"ஒய்... என்ன அசையாம படுத்துருக்க? உன் மாமாவும் அத்தையும் ஆன் தி வே.." என்றாள் அவனை பார்த்து.
"எங்களுக்கு தெரியும்.. ஹும்ம்" என திருப்பிக்கொண்டான் ராம்.
"பார்ரா!!!!" என்றபடி தன் வேலையை பார்க்க சென்றுவிட்டாள் மைதிலி.
வாசலில் கார் சத்தம் கேட்கவே தன் நிலையில் இருந்து எழுந்து அறைக்குள் ஓடினான் ராம்..
"மையு.... கார் வந்துடுச்சு..." என்றான்.
அவனை நிதானமாய் ஏறிட்டவள், "எங்களுக்கு தெரியும்" என்றாள் அவனைப்போலவே.
"வந்து பாரு!!" என்றான்.
அவள் மீண்டும், "எங்களுக்கு தெரியும்!" என்றாள்.
நின்று புசுபுசுவென மூச்சை இழுத்து விட்டவன், பின் "ஹும்ம்... போடி" என சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
"'டீ'யா...ஹஹா சார்க்கு கோவம் போல!" என எண்ணியபடி தன் மடிகணினியை இறக்கி வைத்துவிட்டு வெளியே சென்றாள் மையு.
சந்தோஷ் தன் கைகளில் அவர்களுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு வர, பின்னால் நன்றாக நடந்து வந்த விஸ்வநாதனை வேண்டுமென்றே இழுத்து பிடித்து தாங்கியபடி அழைத்து வந்தார் லக்ஷ்மி.
அவர்களிடம் சென்ற மைதிலி, "என்னாச்சு? கால்ல அடி பட்டுருக்கா?" என்றாள் சிரியாமல்.
"உடம்பு முடியாதவரு. பாத்து பத்திரமா கூட்டிட்டு போங்கன்னு டாக்டர் சொல்லிருக்காரு... இவர் இல்லன்னா எனக்கு யாரு இருக்கா? என் கவலை எனக்கு..." என விசும்பியபடி சொல்லிக்கொண்டு அவர் அறைக்கு அழைத்து சென்றார் லக்ஷ்மி.
"விட்டா இடுப்புலயே தூக்கி வச்சுக்கும்... அவ்வளவு லவ்வு புருஷன் மேல...!" என சந்தோஷ் சொல்ல, "அப்படியா?" என புருவம் தூக்கினாள் மைதிலி.
"அட ஏன் மைதிலி.. நீ வேற!!! ஒரு வாரம் பேஷன்ட்டா இருந்தவர்க்கே ஒரு பேக் தான்... என்கிட்ட இருக்க மீதி எல்லாம் அந்த அம்மாவோடது... என்னத்ததான் வச்சுருக்கோ.. தெரியல..!? ஹாஸ்பிடல்ல உட்காந்து மெஹந்தி போட்டுருக்கு... பேஸ் பாக் போட்டுருக்கு...!! திவ்யா என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டா!!!" என சலிப்போடு சொன்னான் சந்தோஷ்.
"ஹஹா தேன்க் காட் சந்தோஷ். திருந்திடாங்களோன்னு நினைச்சு பயந்துட்டேன்... ஹஹா" என சிரித்தாள் மையு.
சந்தோஷ், "ஹஹா திருந்திட்டா தான் கதை முடிஞ்சுடுமே!! சரி நான் இதெல்லாம் கொடுத்துட்டு வரேன். அப்புறம் நான் ரெடி பண்ணிட்டு இருந்த டாக்குமென்ட் அப்பாக்கு அனுப்பிடு. அர்ஜென்ட்ன்னு கேட்டாரு...." என்றான். இவர்கள் இல்லாத ஒரு வாரத்தில் சந்தோஷுக்கு வேலை கொடுத்திருந்தார் கேசவன்.
"நீ போனதுமே பேலன்ஸ் வொர்க் முடிச்சு அனுப்பி வச்சுட்டேன். நீ போ... தேட போறாங்க.." என அனுப்பி வைத்தாள்.
நேரம் செல்ல, கெளதம் இன்னும் வராததை எண்ணி அவள் வெளியே வர, அந்நேரம் அவன் வீட்டிற்க்குள் நுழைந்தான்.
"இன்னும் காணோமேன்னு நினைச்சேன் அண்ணா... கரெக்டா வந்துட்டேன்களே!?" என புகழ்ந்தபடி அவன் கையை பார்த்தாள்.
அவள் பார்வையை உணர்ந்தபடி "என்னம்மா?" என்றான்.
"பிரின்டவுட் போட்டுட்டு வர சொன்னேனே?" என கேட்டாள் அவனின் வெற்று கைகளை கண்டு குழம்பியபடி.
"வெறும் பிரின்டவுட் மட்டும் போட்டா போதுமா?" என அவன் கேட்கவும், சிறிது யோசித்தவள், "சாரி அண்ணா..." என்றபடி தன் நுனி நாக்கை கடித்துக்கொண்டாள். "அப்போ?" என அவள் கேள்வியாய் தொடங்க, "ஈவனிங் வாங்கிட்டு வரேன்.." என சொல்லிவிட்டு "கூடவே தான் இருக்கேன்.. நீ என்ன பண்றன்னு எனக்கே தெரியாமாட்டேங்குது..." என சிரிப்புடன் சொல்லிவிட்டு சென்றான்.
அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை மனதால் ஒத்திகை பார்த்தபடி சில நிமிடங்கள் நின்றாள் மைதிலி. "ராம் எங்க? ஆளே காணோம்?" என கேட்டுக்கொண்டு வீட்டுனுள் அவள் தேட, தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து வானை வெறித்துக்கொண்டிருந்தான் ராம்.
வீடு முழுக்க தேடி கிடைக்காமல் எதேச்சையாய் பின்புறம் அவள் வர, அங்கு நான் இருப்பதை கண்டு, "இங்க என்ன பண்ற ராம்? உன் மாமாவ பார்க்கலையா??" என்றாள்..
"பார்த்துக்கலாம்..."
"சரி உள்ள வா.. சாப்பிடலாம்..." என அவள் அழைக்க,
"நான் வரேன். நீ போ.." என்றான்.
"இன்னும் கோவம் போலையா? நான் சும்மா விளையாண்டேன் ராம். செல்லம்ல? உள்ள வாங்க... சாப்பிடலாம்..."
அவளை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவன், "அந்த பயம் இருக்கணும்.." என் சொல்லிவிட்டு உடன் சென்றான்.
இரவு உணவு முடித்து அனைவரும் கூடத்தில் ஒன்று கூட, விஸ்வநாதன் சோர்ந்த முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் எதிரே இருந்த சோபாவில் சென்று அமர்ந்த மைதிலி, "என்ன பண்ணுது? ரொம்ப முடியலையா?" என்றாள் பரிவாய்.
"ஒன்னும் இல்லம்மா.. சரி ஆகிடும் எல்லாம்..." என்றார் விஸ்வநாதன்.
"அவரை பேச விடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க..." மைதிலி அவரிடம் பேசுவதை கண்டு பயத்துடன் விரைந்து வந்து அவரருகில் நின்றுகொண்டார் லக்ஷ்மி.
"ஓ! எவ்ளோ நாளுக்கு இப்படி பேசாம இருக்கணும்..." என கதை கேட்க்கும் தோரணையில் விசாரித்தாள் மைதிலி.
கெளதம், ராம், ரிஷி மூவரும் சற்று தள்ளி ஒன்றாக அமர்ந்திருந்தனர்.
"அது எவ்ளோ நாளுக்குன்னு எல்லாம் சொல்லல... ஆனா பேசக்கூடாது.." என்றார் லக்ஷ்மி.
"ஓஹோ... சரி வேற என்னெல்லாம் பண்ண கூடாது...?" என்றாள் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு.
"வேற?? வேற? ஹான்!!! அவரு பேச கூடாது, யோசிக்க கூடாது. எந்த பிரச்சனையும் அவர் காதுக்கே எட்டக்கூடாது. அவர் எப்பவும் நிம்மதியா இருக்கணும்..." என்றார் லக்ஷ்மி முன்யோசனையாய்.
அதுவரை அவர் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த கெளதம், "இதெல்லாம் மாசிவ் அட்டாக் வந்து ஆபரேஷன் பண்ணவங்களுக்கு சொல்றது...! இவருக்கு மைல்ட் அட்டாக் தான். சோ இன்னும் கொஞ்ச நாள்ல ரெக்கவர் ஆகிடுவாரு.." என்றான்.
அவனை உச்சகட்ட கடுப்பில் பார்த்தவர், "நீ நரம்புக்கு தானே படிச்ச? உனக்கு ஹார்ட்ட பத்தி என்ன தெரியும்?" என்றார்.
"அவனுக்கு நரம்ப பத்தியே ஒன்னும் தெரியாது. ஹீஹீ.." என மெதுவாய் சொல்லி சிரித்தான் ராம். கெளதம் அவனை முறைத்து கொண்டிருக்க, அடுத்து அங்கு என்ன நடக்கும் என அறிந்த மைதிலி, லக்ஷ்மியிடம், "சப்போஸ் அவர் பேசுன்னா, யோசிச்சா, டென்ஷன் ஆனா என்ன ஆகும்?" என்றாள்.
அவள் அப்படி கேட்கவும் ஓஓஓவென கத்தினார் லக்ஷ்மி. "என்னம்மா இப்படி கேக்குற? நான் நூறு வருஷம் வாழனும்... சுமங்கலியா தான் சாகனும்...ஆஆஆ" என அழுதபடியே சொன்னார்.
அவர் பதிவிரதத்தன்மையை எண்ணி புருவம் உயர்த்திய மைதிலி, திரும்பி கௌதமிடம் கண் காட்டினாள். அவன் எழுந்து சென்றதும், "அழாதீங்க... நீங்க அழுதா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. ப்ளீஸ்..." என அவருக்கு சமமாய் அமர்ந்து தேற்றினாள் மைதிலி.
தன்னை நம்பிவிட்டதாக எண்ணி மகிழ்ந்த லக்ஷ்மி, தன்னை தானே மெச்சிக்கொண்டு மீண்டும் அழுதார்.
"அழாதீங்க..!! உங்களுக்கு ஒரு உதவி பண்ணலாம்னு இருக்கேன்... கண்டிப்பா நீங்க சந்தோஷப்படுவீங்க...!" என சொன்னாள் மைதிலி.
சட்டென அழுகை நிற்க, "என்ன உதவிம்மா?" என்றாள்..
அவர் கேட்கும்போது அங்கு வந்த கெளதம் கைகளில் இருந்த கோப்பை வாங்கி, "உங்க கஷ்டத்தை குறைக்கத்தான் இந்த முடிவு.." என சொன்னபடி அதை திறந்து விஸ்வநாதன் முன் வைத்தாள் மைதிலி.
முதலில் அதை சாதரணமாக பார்த்த விஸ்வநாதனின் முகம், மெல்ல மெல்ல மாறியது.. தன் கணவனின் முகமாற்றத்தை கண்டு அவரருகில் சென்றவர் , "என்னங்க ஆச்சு? என்ன போட்டுருக்கு இதுல?" என்றார் பதற்றமாய்.
அவர் ஒன்றும் சொல்லாமல் இருக்க, "நான் சொல்றேன்.. இவரோட உடல்நிலை ரொம்ப மோசமா இருக்க நிலையில, கம்பெனி டீலிங்ஸ், மீடிங்க்ஸ், ப்ராப்ளம்ஸ் அண்ட் அதுக்கான சொல்யுஷன். இது எதுவுமே இனி பண்ண முடியாது. அதனால ராம் பங்கோட சேர்த்து, ரிஷி பேருல இருக்க முப்பது பர்சண்டேஜ் ஷேரையும் நானே ஹான்டில் பண்ணலாம்னு நினைக்குறேன். அதுக்கான உரிமை பத்தரம் தான் இது. ஒரு கையெழுத்து போடுங்க போதும்..." என்றாள் மைதிலி நிதானமாய்.
அதை கேட்ட லக்ஷ்மிக்கு நெஞ்சுவலியே வரும் போல இருந்தது.. ராமின் எழுபது சதவீதம் பறிபோய்விட கூடாது என நினைத்தவருக்கு, தன் கையில் இருந்த முப்பது சதவீதமும் பறிபோக போவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
"அவரால ஏன் முடியாது? இவ்ளோ நாளும் அவர்தானே இதெல்லாம் கட்டிக்காப்பாத்துனாரு. இனிமேலும் அவரே நல்லா பார்த்துப்பாரு!" என்றார் வேகமாய்.
"அதெப்படி முடியும்... இனிமே அவர் பேச, யோசிக்க, டென்ஷன் ஆக கூடாதுல்ல?!! நீங்க வேற சுமங்கலியா சாகனும்... எல்லாம் உங்களுக்காக தான் பண்றேன்.." என்றாள் மைதிலி குரலில் சக்கரையை தடவி.
சொத்து பேச்சு எழ கூடாது என எண்ணி தான் சொன்னவை தனக்கே திரும்பியதை எண்ணி மனதுள் கொந்தளித்தார் லக்ஷ்மி.
பின்பு, "சரி உங்க பங்கு சொத்தை நீ பார்த்துக்கோ. எதுக்கு என் புள்ள பங்கையும் கேக்குற?" என அவர் கேட்டதும் மைதிலி அங்கு இருந்த ரிஷியை திரும்பி பார்த்தாள்.
அவள் பார்வையை உணர்ந்ததை போல, "எனக்கு பிசினஸ் பார்க்க இண்ட்ரஸ்ட் இல்லை, அதபத்தி ஒன்னும் தெரியாது. நான் எல்லாம் கத்துக்குற வரைக்கும், அதெல்லாம் அக்கா கன்ட்ரோல்ல இருக்கட்டும்..." என்றான்.
அவன் சொல்லிமுடித்ததும் மைதிலி, 'சரிதானே' என்பதை போல லக்ஷ்மியை பார்க்க,, அவர் தன் கண்களால் ரிஷியை எரித்துகொண்டிருந்தார்.
மீண்டும் கோவத்துடன் அவர் ஏதோ சொல்ல வாயெடுக்க, நடப்பதைஎல்லாம் மௌனமாய் இறுகிய முகத்துடன் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த விஸ்வநாதன், மனைவி கைகளை பிடித்து தடுத்தார்.
பின்பு, அங்கிருந்த பத்திரத்தில் தன் கையெழுத்துக்களை வேகமாய் போட்டுவிட்டு, தன் மனைவி திமிர திமிர கேட்காமல் அவருடைய கட்டைவிரல் ரேகையை வைத்து, மைதிலியிடம் கொடுத்தார்.
"ரிஷி கிட்டயும் சைன் வாங்கிக்கோம்மா..." என சொல்லிவிட்டு மனைவியுடன் அறைக்கு சென்றார் விஸ்வநாதன்.
அங்கிருந்த அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சி. மைதிலிக்குமே சிறிது அதிர்ச்சியாய் இருந்தது.
"என்ன தங்கச்சி.. சப்புன்னு முடிஞ்சுருச்சு? நீ இன்னும் கொஞ்சம் ஆக்ட் பண்ணுவ... பாக்கலாம்ன்னு நினைச்சேன்..." என சொன்னபடி கேள்வியாய் அவர்கள் அறை வாயிலை பார்த்தான் கெளதம்.
"எனக்குமே சந்தேகமாதான் இருக்கு..." என்றாள்.
"அக்கா!! நீங்க போய் தூங்குங்க.. நான் என்னனு தெரிஞ்சுகிட்டு வரேன்..." என சொல்லிவிட்டு தன் தந்தை அறைக்குள் சென்றான் ரிஷி.
"முதல்ல இவனே நல்லவனா, இல்லை நடிக்குரானான்னு தெரியல..." என செல்லும் ரிஷியை பார்த்து சொல்லிவிட்டு சென்றான் கெளதம். அவன் சென்றதும் ராமுடன் தன் அறைக்கு சென்றுவிட்டாள் மைதிலி.
"எதுக்குங்க கையெழுத்து போட்டீங்க? ஹய்யோ எல்லாம் போச்சு.. எல்லாம் போச்சு. நம்ம இனிமே ரோடுல தான் நிக்கணும்... லைன்ஸ் கிளப் ஆளுங்களை எல்லாம் இனி எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு சந்திப்பேன்? என் பகட்டு வாழ்கை போச்சே! இனி ஒருத்தியும் என்னை மதிக்க மாட்டா!! நான் இவ்ளோ பேசுறேன்.. நீங்க பால்கனில நின்னு காத்து வாங்குறீங்களா?" என அவரை போட்டு உலுக்கினார் லக்ஷ்மி.
அறைக்குள் நுழைந்த ரிஷி, தன் அன்னை பேசியதை கேட்டு அப்படியே நின்றான். அவன் வந்ததை கவனியாதவர் மேலும் தொடர்ந்தார்.
"வாயத்தொறந்து பேசுங்க.... எனக்கு என்ன செய்வீங்கன்னு தெரியாது.. எல்லா சொத்தும் நாளைக்கே என் பேருக்கு வரணும்.. அவங்களை அடிச்சு வாங்குவீங்களோ, இல்லை ஒரே அடியா தீர்த்துகட்டுவீங்களோ,, அதெல்லாம் தெரியாது... எனக்கு சொத்து வேணும்..." என வெறித்தனமாய் கத்தினார்.
கோவம் சுள்ளென ஏற அவரை திட்ட வாயெடுத்த ரிஷி, தன் தந்தையின் குரலில் வாய்மூடினான்.
"ஏன் இப்படி வெறிபிடிச்சு அலையுற? காசு புத்தியை மழுங்கடிக்குதா? ஹான்??" என ஆங்காரமாய் குரல் உயர்த்தினார் விஸ்வநாதன்.
முதலில் அதிர்ந்த லக்ஷ்மி, "யோவ்.. என்னய்யா?? நானும் ஒரு வாரமா பார்க்குறேன்... ரொம்ப நல்லவன் மாறி பேசுற? நீயும் நானும் தானே இத்தனை வருஷமும் இந்த சொத்துக்காக போராடுனோம். இப்போ என்னன்னா சிலிர்த்துகுற?" என்றார் கணவனின் மாற்றம் புரியாமல்.
"இத்தனை வருஷமும் பணம் பணம்ன்னு அலைஞ்சோம்... இதுவரைக்கும் பணம் தான் நமக்கு எல்லாமே.. ஆனா இந்த பணம் நம்ம கண்ணை மறைச்சுடுச்சு... கண்ணுக்கு முன்னாடி நம்ம பாசத்துக்குக்காக ஏங்குன்ன நம்ம பையனை இந்த பணம், நம்ம கண்ணுல இருந்து மறைச்சுடுச்சு..." என்றார் விஸ்வநாதன் உணர்ச்சிவசப்பட்டு.
"என்ன புதுசா என்னனவோ பேசுறீங்க? எப்போ இருந்து இந்த ஞானோதயம்??" என்றார் இளக்காரமாய்.
"போன வாரம், நம்ம பையன் கையை கிழிச்சுட்டு கடந்தானே? அப்போ வந்துச்சு, நீ சொல்ற ஞானோதயம்... அப்போ உரைச்சுது என் மண்டைல. வாழ்க்கைக்கு எது முக்கியம்ன்னு... நீதான் இவ்வளவு நடந்தும் மாறமா இருக்க!! கண்ணை திறந்து பாரு.. நமக்காக ஒரு உயிர் இருக்குனு நினைச்சுப்பாரு... காசு மட்டுமே உலகம் இல்லன்னு புரியும்...." என அவர் கண்களை பார்த்து சொன்னார் விஸ்வநாதன்.
தன் கணவன் கண்களில் இருந்த ஏதோ ஒன்று லக்ஷ்மியை பதில் பேச விடாது கட்டிப்போட்டது. ரிஷி வந்த சுவடே இல்லாமல் வியர்த்த கண்களுடன் வெளியேறினான்.