Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 22

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 22

ஒரு வாரம் சென்ற நிலையில், விஸ்வந்தானின் அறைக்குள் வந்தான் ரிஷிகேஷ்.
"அப்பா... இன்னைக்கு நீங்க டிஸ்ச்சார்ஜ் ஆகிக்கலாம்ன்னு மூர்த்தி அங்கிள் சொல்லிட்டாங்க" என சொன்னபடி அவர் அருகில் அமர்ந்தான்.

அங்கு போடப்பட்டிருந்த அட்டண்டர் கட்டிலில் படுத்து பாட்டு கேட்டுக்கொண்டிருந்த லக்ஷ்மி, "ஏன் அதுக்குள்ள வீட்டுக்கு போகணும்? நம்ம இந்த ஒத்த ரூம்ல இருக்குறதுதான் அந்த மூர்த்திக்கு தொந்தரவா இருக்குதாம்மா? எதுக்கு நம்மளை போக சொல்றான்?" என அவர் போக்கில் பேசிக்கொண்டு போக, "ஐயோ அம்மா, கொஞ்சம் பேசாம இருக்கீங்களா? நம்ம இங்க என்ன டூரிஸ்ட்டா வந்துருக்கோமா? ஆசை தீர தங்குறதுக்கு? ட்ரீட்மென்ட் முடிஞ்சுன்னா வீட்டுக்கு போய்தான் ஆகணும்..." என்றான் ரிஷி.

"உனக்கு ஒண்ணுமே புரியாது. நான் எதுக்கு சொல்றேன்னா..." அவர் மீண்டும் ஏதோ சொல்லத்தொடங்க, "லக்ஷ்மி! எனக்கும் வீட்டுக்கு போகணும் போல இருக்கு... கிளம்புவோம்..." என்றார் விஸ்வநாதன்.

"அங்கிள் காசு கட்ட வேணான்னு தான் சொன்னாரு... ஆனா அது நல்லா இருக்காது... நான் பில் செட்டில் பண்ணிட்டு, ரிபோர்ட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரேன்..." என சொல்லிவிட்டு வெளியே சென்றான் ரிஷி.

"டேய்! அந்த மூர்த்திய வர சொல்லிட்டு போடா..." என ரிஷியை பணிந்தார் லக்ஷ்மி.
அவன் சென்றதும், "நீங்க கூட ஒரு வாரத்துல ஆளே மாறிட்டீங்க... நான் எதுக்கு வீட்டுக்கு போக வேணான்னு சொல்றேன்னு உங்களுக்கு புரியுதா இல்லையா?" என தன கணவரை கேட்டார் காட்டமாய்.

"எதுக்கு?" என அசுவாரசியமாக கேட்டார் விஸ்வநாதன்.

"அந்த மும்பைக்காரி சொத்து முழுக்க அவப்பேருல மாத்தி குடுக்க சொல்லி கேட்டுருக்கா தானே? நல்ல வேளையா உங்களுக்கு நெஞ்சு வலி வந்துச்சு... ஒரு வாரமா அந்த பேச்சு வரல... இப்போ வீட்டுக்கு போய்டா உங்களுக்கு குணமாகிடுச்சுன்னு மறுபடி அந்த பேச்சை எடுத்தாலும் எடுப்பா!! அதுக்குதான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நாளு இங்கயே இருப்போம்..." என்றார்

"இதுக்கு பயந்து இன்னும் எவ்ளோ நாளு ஹாஸ்பிடல்லயே இருக்க முடியும்ன்னு நினைக்குற?" என லக்ஷ்மியை கேட்டார்.

"அதுங்க கதை முடியுற வரைக்கும்...!!! உங்களுக்கு உடம்பு முடியாதப்போ அதுங்களை போட்டு தள்ளிட்டா நம்ம மேல சந்தேகம் வராது..." என சொன்னார் லஷ்மி.

அப்போது கதவை திறந்துக்கொண்டு மூர்த்தி உள்ளே வந்தார்.

"வாப்பா... டாக்டரு... உன் ஹஸ்பிடல்ன்னா எப்போ வேணாலும் எங்களை வெளில போன்னு சொல்லிடுவியா?" என்றார் லட்சுமி குறையாத கோவத்தோடு.

"அக்கா!! லோ பிரஷர்ல வந்த மயக்கத்தை ஹார்ட் அட்டாக்ன்னு பொய் சொல்லி ஒரு வாரம் ஓட்டிட்டேன். ஆனா இனிமே என்னால முடியாது. தினமும் அந்த கெளதம் என்னை தேடி வந்து, இன்னைக்கு என்ன ட்ரீட்மென்ட் கொடுத்தீங்க...? ரிபோர்ட் காட்டுங்கன்னு உயிரை எடுக்குறான்...!! மாட்டிக்காம இருக்கணும்ன்னா நீங்க வீட்டுக்கு போறது தான் நல்லது..." என்றார் மூர்த்தி.

"அவனுக்கு எதுக்கு இந்த வேலை??" என பல்லை கடித்தார் லஷ்மி.

"ஒரு பிரச்சனையும் இல்லை லக்ஷ்மி அக்கா, நான் தெளிவா சொல்லிட்டேன். அவர் மனச பாதிக்குற மாறி எந்த காரியமும் பண்ண கூடாது. அவர் நிம்மதியா இருக்கனும். அவரை ஐஞ்சு நிமிஷத்துக்கு மேல பேச விடாதீங்க. யோசிக்க விடாதீங்கன்னு நெறைய சொல்லிட்டேன். அதனால பயபடாம வீட்டுக்கு போங்க.. அவங்க சொத்து பத்தி பேசுனாலே அவர் உடல்நிலை எடுத்து சொல்லி வாயடச்சுருங்க..." என யோசனை சொன்னார் டாக்டர் மூர்த்தி.

"என்னமோ சொல்ற, நானும் கேக்குறேன். ஹும்ம்.." என சலித்துகொண்டபடி தங்கள் பொருட்களை எடுத்து வைத்தார் லக்ஷ்மி.

இதை எல்லாம் கதவின் பின் நின்று கேட்டுக்கொண்டிருந்த ரிஷிக்கு மனம் வெறுத்து போனது.

"மையு!! போன் அடிக்குது பாரு. வந்து எடு..." என சோபாவில் படுத்துக்கொண்டு டிவி பார்த்தபடி குரல் கொடுத்தான் ராம்.

அவன் குரல் கேட்டு அங்கு வந்த கெளதம், "உனக்கு வந்த வாழ்வுடா!! கைக்கு எட்டுற இடத்துல இருக்க போன் எடுக்க, ஆள் கூப்புடுற நீ!!! ஹும்ம்?" என்றான் அவன் கால் ஆட்டிக்கொண்டு படுத்திருப்பதை கண்டு.

"உன் பேரு மையுவா? இல்லல? போட்ட்ட்டா!!" என டிவி முன்பு மறைத்துக்கொண்டு நின்ற கௌதமை தன் காலால் தள்ளி நிற்க வைத்தான் ராம்.

"ஏய் என்னடா ரொம்ப ஓவரா பண்ற? வெட்டியா தானே இருக்க? போன் எடுத்து பேசுனா என்னடா? உன்னால என் தங்கச்சி மூணு மாசமா அதோட ஆபீஸ் வேலை எதையுமே பார்க்கல... இந்த ஒரு வாரமா தான் கொஞ்சம் கொஞ்சம் பண்ணுது. அது பொறுக்கலையா? இப்படி தொல்லை பண்ற அவளை...." என கடிந்து கொண்டான் கெளதம்.

"நீ சும்மாதனே இருக்க? நீ மையுக்கு ஹெல்ப் பண்ணலாம்ல?" என்றான் ராம் வாயில் சிப்ஸ்ஐ நொறுக்கியபடி.

"என்னடா? எகத்தாளமா?? எனக்கு எப்படிடா அது பார்க்குற வேலை தெரியும். நான் டாக்டர்க்கு தானே படிச்சுருக்கேன்...??" என்றான் கெளதம்.

"ஐயையோ இல்லனா மட்டும் அப்படியே செஞ்சு கிழிச்சுடுவ? டிவிய மறைக்காம போடா அங்குட்டு" என கத்தினான் ராம்.

"டேய் என் பொறுமைய ரொம்ப சோதிக்குறடா நீ!!! ரொம்ப ஆடாத!! நான் எப்பவும் ஒரே மாறி இருக்கமாட்டேன்!!" என எச்சரித்தான் கெளதம்.

"ஏன்? பொழுது சாஞ்சதும் பொக்கிமேன்னா மாறிடுவியா?" என அவனுக்கு தூபம் போட்டான் ராம்.

"ஏய்!!" என கெளதம் கத்தவும், மாடியில் இருந்து மைதிலி இறங்கி வரவும் சரியாக இருந்தது.

"அண்ணா?? இப்போ என்ன சண்டை ராம் கூட? இவ்ளோ சத்தமா இருக்கு...!" என கேட்டுக்கொண்டே ஹாலிற்கு வந்தாள் மையு..

"இங்க இவன்கிட்டேயே இருக்க போன்ன அட்டென்ட் பண்ணறதுக்கு, வேலை பார்த்துட்டு இருக்க உன்னை கூப்டுறான். ஓவரா தெரியலையா இவனுக்கு?" என குற்றம் சாட்டினான் கெளதம்.

இவர்கள் சண்டையில் நான்கு முறை அடித்து ஓய்ந்து போயிருந்தது அந்த தொலைபேசி.

"இவனோட சண்டை போட்ட நேரத்துக்கு, நீங்க கால் அட்டென்ட் பண்ணிருந்தா நான் என் வேலைய பார்த்துட்டு இருந்துருப்பேன்ல?" என மைதிலி கோவமாய் கேட்கவும், "ஹிஹி" என அசடு வழிந்தான் கெளதம்.

இம்முறை தொலைபேசி ஓலமிட, அதை தன் காதுக்கு கொடுத்த மைதிலி, "ஓ!! ஹ்ம்ம்.... சரி... ஓகே...!!" என சொல்லிவிட்டு வைத்தாள்.

"யாரு?" என கெளதம் கேட்க, "உங்க அங்கிளும் ஆன்ட்டியும் தான். வீட்டுக்கு வராங்களாம். கார் அனுப்ப சொல்றாங்க ஹாஸ்பிட்டல்க்கு.." என சொல்லிவிட்டு அவர்களை அழைத்து வர, சந்தோஷை அனுப்பிவைத்தாள்.

"அண்ணா... ஜஸ்ட் டூ திஸ் பார் மீ. இதுல இருக்குறதை ப்ரிண்ட் அவுட் போட்டு கொண்டு வாங்க.. கொஞ்சம் வேலை இருக்கு..." என தன் பென்டிரைவை அவனிடம் தந்தாள் மைதிலி.

அவர்கள் சென்றதும் உள்ளே செல்ல திரும்பியவள், சோபாவில் படுத்தபடி கால் ஆட்டிக்கொண்டிருக்கும் ராமை கண்டு அருகில் சென்றாள்.

"ஒய்... என்ன அசையாம படுத்துருக்க? உன் மாமாவும் அத்தையும் ஆன் தி வே.." என்றாள் அவனை பார்த்து.

"எங்களுக்கு தெரியும்.. ஹும்ம்" என திருப்பிக்கொண்டான் ராம்.

"பார்ரா!!!!" என்றபடி தன் வேலையை பார்க்க சென்றுவிட்டாள் மைதிலி.

வாசலில் கார் சத்தம் கேட்கவே தன் நிலையில் இருந்து எழுந்து அறைக்குள் ஓடினான் ராம்..

"மையு.... கார் வந்துடுச்சு..." என்றான்.

அவனை நிதானமாய் ஏறிட்டவள், "எங்களுக்கு தெரியும்" என்றாள் அவனைப்போலவே.

"வந்து பாரு!!" என்றான்.

அவள் மீண்டும், "எங்களுக்கு தெரியும்!" என்றாள்.

நின்று புசுபுசுவென மூச்சை இழுத்து விட்டவன், பின் "ஹும்ம்... போடி" என சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

"'டீ'யா...ஹஹா சார்க்கு கோவம் போல!" என எண்ணியபடி தன் மடிகணினியை இறக்கி வைத்துவிட்டு வெளியே சென்றாள் மையு.

சந்தோஷ் தன் கைகளில் அவர்களுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு வர, பின்னால் நன்றாக நடந்து வந்த விஸ்வநாதனை வேண்டுமென்றே இழுத்து பிடித்து தாங்கியபடி அழைத்து வந்தார் லக்ஷ்மி.

அவர்களிடம் சென்ற மைதிலி, "என்னாச்சு? கால்ல அடி பட்டுருக்கா?" என்றாள் சிரியாமல்.

"உடம்பு முடியாதவரு. பாத்து பத்திரமா கூட்டிட்டு போங்கன்னு டாக்டர் சொல்லிருக்காரு... இவர் இல்லன்னா எனக்கு யாரு இருக்கா? என் கவலை எனக்கு..." என விசும்பியபடி சொல்லிக்கொண்டு அவர் அறைக்கு அழைத்து சென்றார் லக்ஷ்மி.

"விட்டா இடுப்புலயே தூக்கி வச்சுக்கும்... அவ்வளவு லவ்வு புருஷன் மேல...!" என சந்தோஷ் சொல்ல, "அப்படியா?" என புருவம் தூக்கினாள் மைதிலி.

"அட ஏன் மைதிலி.. நீ வேற!!! ஒரு வாரம் பேஷன்ட்டா இருந்தவர்க்கே ஒரு பேக் தான்... என்கிட்ட இருக்க மீதி எல்லாம் அந்த அம்மாவோடது... என்னத்ததான் வச்சுருக்கோ.. தெரியல..!? ஹாஸ்பிடல்ல உட்காந்து மெஹந்தி போட்டுருக்கு... பேஸ் பாக் போட்டுருக்கு...!! திவ்யா என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டா!!!" என சலிப்போடு சொன்னான் சந்தோஷ்.

"ஹஹா தேன்க் காட் சந்தோஷ். திருந்திடாங்களோன்னு நினைச்சு பயந்துட்டேன்... ஹஹா" என சிரித்தாள் மையு.

சந்தோஷ், "ஹஹா திருந்திட்டா தான் கதை முடிஞ்சுடுமே!! சரி நான் இதெல்லாம் கொடுத்துட்டு வரேன். அப்புறம் நான் ரெடி பண்ணிட்டு இருந்த டாக்குமென்ட் அப்பாக்கு அனுப்பிடு. அர்ஜென்ட்ன்னு கேட்டாரு...." என்றான். இவர்கள் இல்லாத ஒரு வாரத்தில் சந்தோஷுக்கு வேலை கொடுத்திருந்தார் கேசவன்.

"நீ போனதுமே பேலன்ஸ் வொர்க் முடிச்சு அனுப்பி வச்சுட்டேன். நீ போ... தேட போறாங்க.." என அனுப்பி வைத்தாள்.

நேரம் செல்ல, கெளதம் இன்னும் வராததை எண்ணி அவள் வெளியே வர, அந்நேரம் அவன் வீட்டிற்க்குள் நுழைந்தான்.

"இன்னும் காணோமேன்னு நினைச்சேன் அண்ணா... கரெக்டா வந்துட்டேன்களே!?" என புகழ்ந்தபடி அவன் கையை பார்த்தாள்.

அவள் பார்வையை உணர்ந்தபடி "என்னம்மா?" என்றான்.

"பிரின்டவுட் போட்டுட்டு வர சொன்னேனே?" என கேட்டாள் அவனின் வெற்று கைகளை கண்டு குழம்பியபடி.

"வெறும் பிரின்டவுட் மட்டும் போட்டா போதுமா?" என அவன் கேட்கவும், சிறிது யோசித்தவள், "சாரி அண்ணா..." என்றபடி தன் நுனி நாக்கை கடித்துக்கொண்டாள். "அப்போ?" என அவள் கேள்வியாய் தொடங்க, "ஈவனிங் வாங்கிட்டு வரேன்.." என சொல்லிவிட்டு "கூடவே தான் இருக்கேன்.. நீ என்ன பண்றன்னு எனக்கே தெரியாமாட்டேங்குது..." என சிரிப்புடன் சொல்லிவிட்டு சென்றான்.

அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை மனதால் ஒத்திகை பார்த்தபடி சில நிமிடங்கள் நின்றாள் மைதிலி. "ராம் எங்க? ஆளே காணோம்?" என கேட்டுக்கொண்டு வீட்டுனுள் அவள் தேட, தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து வானை வெறித்துக்கொண்டிருந்தான் ராம்.

வீடு முழுக்க தேடி கிடைக்காமல் எதேச்சையாய் பின்புறம் அவள் வர, அங்கு நான் இருப்பதை கண்டு, "இங்க என்ன பண்ற ராம்? உன் மாமாவ பார்க்கலையா??" என்றாள்..

"பார்த்துக்கலாம்..."

"சரி உள்ள வா.. சாப்பிடலாம்..." என அவள் அழைக்க,

"நான் வரேன். நீ போ.." என்றான்.

"இன்னும் கோவம் போலையா? நான் சும்மா விளையாண்டேன் ராம். செல்லம்ல? உள்ள வாங்க... சாப்பிடலாம்..."

அவளை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவன், "அந்த பயம் இருக்கணும்.." என் சொல்லிவிட்டு உடன் சென்றான்.

இரவு உணவு முடித்து அனைவரும் கூடத்தில் ஒன்று கூட, விஸ்வநாதன் சோர்ந்த முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் எதிரே இருந்த சோபாவில் சென்று அமர்ந்த மைதிலி, "என்ன பண்ணுது? ரொம்ப முடியலையா?" என்றாள் பரிவாய்.

"ஒன்னும் இல்லம்மா.. சரி ஆகிடும் எல்லாம்..." என்றார் விஸ்வநாதன்.

"அவரை பேச விடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க..." மைதிலி அவரிடம் பேசுவதை கண்டு பயத்துடன் விரைந்து வந்து அவரருகில் நின்றுகொண்டார் லக்ஷ்மி.

"ஓ! எவ்ளோ நாளுக்கு இப்படி பேசாம இருக்கணும்..." என கதை கேட்க்கும் தோரணையில் விசாரித்தாள் மைதிலி.

கெளதம், ராம், ரிஷி மூவரும் சற்று தள்ளி ஒன்றாக அமர்ந்திருந்தனர்.

"அது எவ்ளோ நாளுக்குன்னு எல்லாம் சொல்லல... ஆனா பேசக்கூடாது.." என்றார் லக்ஷ்மி.

"ஓஹோ... சரி வேற என்னெல்லாம் பண்ண கூடாது...?" என்றாள் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு.

"வேற?? வேற? ஹான்!!! அவரு பேச கூடாது, யோசிக்க கூடாது. எந்த பிரச்சனையும் அவர் காதுக்கே எட்டக்கூடாது. அவர் எப்பவும் நிம்மதியா இருக்கணும்..." என்றார் லக்ஷ்மி முன்யோசனையாய்.

அதுவரை அவர் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த கெளதம், "இதெல்லாம் மாசிவ் அட்டாக் வந்து ஆபரேஷன் பண்ணவங்களுக்கு சொல்றது...! இவருக்கு மைல்ட் அட்டாக் தான். சோ இன்னும் கொஞ்ச நாள்ல ரெக்கவர் ஆகிடுவாரு.." என்றான்.

அவனை உச்சகட்ட கடுப்பில் பார்த்தவர், "நீ நரம்புக்கு தானே படிச்ச? உனக்கு ஹார்ட்ட பத்தி என்ன தெரியும்?" என்றார்.

"அவனுக்கு நரம்ப பத்தியே ஒன்னும் தெரியாது. ஹீஹீ.." என மெதுவாய் சொல்லி சிரித்தான் ராம். கெளதம் அவனை முறைத்து கொண்டிருக்க, அடுத்து அங்கு என்ன நடக்கும் என அறிந்த மைதிலி, லக்ஷ்மியிடம், "சப்போஸ் அவர் பேசுன்னா, யோசிச்சா, டென்ஷன் ஆனா என்ன ஆகும்?" என்றாள்.

அவள் அப்படி கேட்கவும் ஓஓஓவென கத்தினார் லக்ஷ்மி. "என்னம்மா இப்படி கேக்குற? நான் நூறு வருஷம் வாழனும்... சுமங்கலியா தான் சாகனும்...ஆஆஆ" என அழுதபடியே சொன்னார்.

அவர் பதிவிரதத்தன்மையை எண்ணி புருவம் உயர்த்திய மைதிலி, திரும்பி கௌதமிடம் கண் காட்டினாள். அவன் எழுந்து சென்றதும், "அழாதீங்க... நீங்க அழுதா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. ப்ளீஸ்..." என அவருக்கு சமமாய் அமர்ந்து தேற்றினாள் மைதிலி.

தன்னை நம்பிவிட்டதாக எண்ணி மகிழ்ந்த லக்ஷ்மி, தன்னை தானே மெச்சிக்கொண்டு மீண்டும் அழுதார்.

"அழாதீங்க..!! உங்களுக்கு ஒரு உதவி பண்ணலாம்னு இருக்கேன்... கண்டிப்பா நீங்க சந்தோஷப்படுவீங்க...!" என சொன்னாள் மைதிலி.

சட்டென அழுகை நிற்க, "என்ன உதவிம்மா?" என்றாள்..

அவர் கேட்கும்போது அங்கு வந்த கெளதம் கைகளில் இருந்த கோப்பை வாங்கி, "உங்க கஷ்டத்தை குறைக்கத்தான் இந்த முடிவு.." என சொன்னபடி அதை திறந்து விஸ்வநாதன் முன் வைத்தாள் மைதிலி.

முதலில் அதை சாதரணமாக பார்த்த விஸ்வநாதனின் முகம், மெல்ல மெல்ல மாறியது.. தன் கணவனின் முகமாற்றத்தை கண்டு அவரருகில் சென்றவர் , "என்னங்க ஆச்சு? என்ன போட்டுருக்கு இதுல?" என்றார் பதற்றமாய்.

அவர் ஒன்றும் சொல்லாமல் இருக்க, "நான் சொல்றேன்.. இவரோட உடல்நிலை ரொம்ப மோசமா இருக்க நிலையில, கம்பெனி டீலிங்ஸ், மீடிங்க்ஸ், ப்ராப்ளம்ஸ் அண்ட் அதுக்கான சொல்யுஷன். இது எதுவுமே இனி பண்ண முடியாது. அதனால ராம் பங்கோட சேர்த்து, ரிஷி பேருல இருக்க முப்பது பர்சண்டேஜ் ஷேரையும் நானே ஹான்டில் பண்ணலாம்னு நினைக்குறேன். அதுக்கான உரிமை பத்தரம் தான் இது. ஒரு கையெழுத்து போடுங்க போதும்..." என்றாள் மைதிலி நிதானமாய்.

அதை கேட்ட லக்ஷ்மிக்கு நெஞ்சுவலியே வரும் போல இருந்தது.. ராமின் எழுபது சதவீதம் பறிபோய்விட கூடாது என நினைத்தவருக்கு, தன் கையில் இருந்த முப்பது சதவீதமும் பறிபோக போவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

"அவரால ஏன் முடியாது? இவ்ளோ நாளும் அவர்தானே இதெல்லாம் கட்டிக்காப்பாத்துனாரு. இனிமேலும் அவரே நல்லா பார்த்துப்பாரு!" என்றார் வேகமாய்.

"அதெப்படி முடியும்... இனிமே அவர் பேச, யோசிக்க, டென்ஷன் ஆக கூடாதுல்ல?!! நீங்க வேற சுமங்கலியா சாகனும்... எல்லாம் உங்களுக்காக தான் பண்றேன்.." என்றாள் மைதிலி குரலில் சக்கரையை தடவி.

சொத்து பேச்சு எழ கூடாது என எண்ணி தான் சொன்னவை தனக்கே திரும்பியதை எண்ணி மனதுள் கொந்தளித்தார் லக்ஷ்மி.

பின்பு, "சரி உங்க பங்கு சொத்தை நீ பார்த்துக்கோ. எதுக்கு என் புள்ள பங்கையும் கேக்குற?" என அவர் கேட்டதும் மைதிலி அங்கு இருந்த ரிஷியை திரும்பி பார்த்தாள்.

அவள் பார்வையை உணர்ந்ததை போல, "எனக்கு பிசினஸ் பார்க்க இண்ட்ரஸ்ட் இல்லை, அதபத்தி ஒன்னும் தெரியாது. நான் எல்லாம் கத்துக்குற வரைக்கும், அதெல்லாம் அக்கா கன்ட்ரோல்ல இருக்கட்டும்..." என்றான்.

அவன் சொல்லிமுடித்ததும் மைதிலி, 'சரிதானே' என்பதை போல லக்ஷ்மியை பார்க்க,, அவர் தன் கண்களால் ரிஷியை எரித்துகொண்டிருந்தார்.

மீண்டும் கோவத்துடன் அவர் ஏதோ சொல்ல வாயெடுக்க, நடப்பதைஎல்லாம் மௌனமாய் இறுகிய முகத்துடன் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த விஸ்வநாதன், மனைவி கைகளை பிடித்து தடுத்தார்.

பின்பு, அங்கிருந்த பத்திரத்தில் தன் கையெழுத்துக்களை வேகமாய் போட்டுவிட்டு, தன் மனைவி திமிர திமிர கேட்காமல் அவருடைய கட்டைவிரல் ரேகையை வைத்து, மைதிலியிடம் கொடுத்தார்.

"ரிஷி கிட்டயும் சைன் வாங்கிக்கோம்மா..." என சொல்லிவிட்டு மனைவியுடன் அறைக்கு சென்றார் விஸ்வநாதன்.

அங்கிருந்த அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சி. மைதிலிக்குமே சிறிது அதிர்ச்சியாய் இருந்தது.

"என்ன தங்கச்சி.. சப்புன்னு முடிஞ்சுருச்சு? நீ இன்னும் கொஞ்சம் ஆக்ட் பண்ணுவ... பாக்கலாம்ன்னு நினைச்சேன்..." என சொன்னபடி கேள்வியாய் அவர்கள் அறை வாயிலை பார்த்தான் கெளதம்.

"எனக்குமே சந்தேகமாதான் இருக்கு..." என்றாள்.

"அக்கா!! நீங்க போய் தூங்குங்க.. நான் என்னனு தெரிஞ்சுகிட்டு வரேன்..." என சொல்லிவிட்டு தன் தந்தை அறைக்குள் சென்றான் ரிஷி.

"முதல்ல இவனே நல்லவனா, இல்லை நடிக்குரானான்னு தெரியல..." என செல்லும் ரிஷியை பார்த்து சொல்லிவிட்டு சென்றான் கெளதம். அவன் சென்றதும் ராமுடன் தன் அறைக்கு சென்றுவிட்டாள் மைதிலி.

"எதுக்குங்க கையெழுத்து போட்டீங்க? ஹய்யோ எல்லாம் போச்சு.. எல்லாம் போச்சு. நம்ம இனிமே ரோடுல தான் நிக்கணும்... லைன்ஸ் கிளப் ஆளுங்களை எல்லாம் இனி எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு சந்திப்பேன்? என் பகட்டு வாழ்கை போச்சே! இனி ஒருத்தியும் என்னை மதிக்க மாட்டா!! நான் இவ்ளோ பேசுறேன்.. நீங்க பால்கனில நின்னு காத்து வாங்குறீங்களா?" என அவரை போட்டு உலுக்கினார் லக்ஷ்மி.

அறைக்குள் நுழைந்த ரிஷி, தன் அன்னை பேசியதை கேட்டு அப்படியே நின்றான். அவன் வந்ததை கவனியாதவர் மேலும் தொடர்ந்தார்.

"வாயத்தொறந்து பேசுங்க.... எனக்கு என்ன செய்வீங்கன்னு தெரியாது.. எல்லா சொத்தும் நாளைக்கே என் பேருக்கு வரணும்.. அவங்களை அடிச்சு வாங்குவீங்களோ, இல்லை ஒரே அடியா தீர்த்துகட்டுவீங்களோ,, அதெல்லாம் தெரியாது... எனக்கு சொத்து வேணும்..." என வெறித்தனமாய் கத்தினார்.

கோவம் சுள்ளென ஏற அவரை திட்ட வாயெடுத்த ரிஷி, தன் தந்தையின் குரலில் வாய்மூடினான்.

"ஏன் இப்படி வெறிபிடிச்சு அலையுற? காசு புத்தியை மழுங்கடிக்குதா? ஹான்??" என ஆங்காரமாய் குரல் உயர்த்தினார் விஸ்வநாதன்.

முதலில் அதிர்ந்த லக்ஷ்மி, "யோவ்.. என்னய்யா?? நானும் ஒரு வாரமா பார்க்குறேன்... ரொம்ப நல்லவன் மாறி பேசுற? நீயும் நானும் தானே இத்தனை வருஷமும் இந்த சொத்துக்காக போராடுனோம். இப்போ என்னன்னா சிலிர்த்துகுற?" என்றார் கணவனின் மாற்றம் புரியாமல்.

"இத்தனை வருஷமும் பணம் பணம்ன்னு அலைஞ்சோம்... இதுவரைக்கும் பணம் தான் நமக்கு எல்லாமே.. ஆனா இந்த பணம் நம்ம கண்ணை மறைச்சுடுச்சு... கண்ணுக்கு முன்னாடி நம்ம பாசத்துக்குக்காக ஏங்குன்ன நம்ம பையனை இந்த பணம், நம்ம கண்ணுல இருந்து மறைச்சுடுச்சு..." என்றார் விஸ்வநாதன் உணர்ச்சிவசப்பட்டு.

"என்ன புதுசா என்னனவோ பேசுறீங்க? எப்போ இருந்து இந்த ஞானோதயம்??" என்றார் இளக்காரமாய்.

"போன வாரம், நம்ம பையன் கையை கிழிச்சுட்டு கடந்தானே? அப்போ வந்துச்சு, நீ சொல்ற ஞானோதயம்... அப்போ உரைச்சுது என் மண்டைல. வாழ்க்கைக்கு எது முக்கியம்ன்னு... நீதான் இவ்வளவு நடந்தும் மாறமா இருக்க!! கண்ணை திறந்து பாரு.. நமக்காக ஒரு உயிர் இருக்குனு நினைச்சுப்பாரு... காசு மட்டுமே உலகம் இல்லன்னு புரியும்...." என அவர் கண்களை பார்த்து சொன்னார் விஸ்வநாதன்.

தன் கணவன் கண்களில் இருந்த ஏதோ ஒன்று லக்ஷ்மியை பதில் பேச விடாது கட்டிப்போட்டது. ரிஷி வந்த சுவடே இல்லாமல் வியர்த்த கண்களுடன் வெளியேறினான்.
 
ராமின் பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களும் மைதிலியின் பெயருக்கு கைமாறி இன்றோடு பத்து நாட்கள் கடந்துவிட்டது. தினம் ஒரு இடம் என, அவர்களின் கட்டுமான பணி நடக்கும் இடங்களை மேற்பார்வையிட்டு முடித்த மைதிலி, செய்ய வேண்டிய திருத்தங்களையும், குறைகளையும் பட்டியலிட்டு கொடுத்து சீர் படுத்த சொன்னாள்.

காணாமல் போன ராம், திடீரென ஒரு பெண்ணுடன் வந்திருப்பதை பலர் அவள் காது படவே தவறாய் சித்தரிக்க, அவள் பொறுப்பை கையில் எடுத்த இரண்டாம் நாளே அவர்கள் அலுவலகத்தில் ஒரு பொதுக்கூட்டம் கூட்டபட்டது. அதில் ஊழியர்கள் முதல் சப்ளையர்ஸ், வாடிக்கையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

அதில் தன்னுடைய பின்புலத்தை எடுத்து சொன்னவள், தாங்கள் விருப்பப்பட்டு திருமணம் செய்துக்கொண்டதாகவும், விரைவில் அனைவரையும் தங்கள் திருமண வரவேற்ப்பிற்க்கு அழைக்க இருப்பதாகவும் சொல்ல, முழுதாக இல்லாவிடினும், பெரும்பான்மையானோர் 'பெரிய வீட்டு சமாச்சாரம்' என வாயை மூடிக்கொண்டனர்.

அங்கிருந்த பத்து நாட்களும் ராமை பற்றிய நிறைய தகவல்கள் அவள் காதிற்குள் கேட்காமலே நுழைந்தது.

ராம் கம்பெனி விவகாரத்தில் ஒரு நாளும் மூக்கை நுழைத்ததில்லை. மாதம் ஒருமுறை இங்கு வரும்போதும் கூட, அனைவரையும் வேலை செய்ய விடாமல் தொல்லை செய்து கொண்டு இருப்பதையே தன் முக்கிய வேலையாக கொண்டிருந்திருக்கிறான்.

அவன் வரும் நாட்களில் மட்டும் அங்கு இருக்கும் பெண்களுக்கு ரெக்கை முளைத்தது போல ஆகிடும். அவனை வால் பிடித்துகொண்டு சுற்றுவது தான் அவர்களின் அன்றைய முக்கிய வேலை.

அங்கிருக்கும் அனைவரையும் தன் குறும்புத்தனத்தால் அன்பர்கலாக்கி வைத்திருந்தான் ராம். மைதிலியுடன் ராம் அங்கு சென்ற போது, அவர்கள் அறை வாயிலில் ஒரு கூட்டமே கூடிவிட்டது. அவனை பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு அனைவரிடமும் நெருக்கமாய் பழகி இருந்திருக்கிறான் ராம். பெண்களை சொல்லவே வேண்டாம். மைதிலிக்காக பயந்து சற்று தள்ளி நின்றனர்.

கட்டிட வேலை நடக்கும் இடத்திற்கு சென்றால், அங்கிருக்கும் கொத்தனார், சித்தாள் கூட ராமை தழுவி கண்ணீர் விடுகையில் மைதிலிக்கே ஆச்சர்யமாய் இருந்தது.

அந்நேரம் சந்தோஷ் அவளிடம் முன்பு சொன்னது நினைவில் வர, "நான் ஜெய்பூர்ல இருந்தபோ, நீ ஒருமுறை சொன்ன...! ராமை பற்றி விசாரிச்சேன், யாரும் நல்லா விதமா சொல்லலன்னு. நான் பார்த்த வரைக்கும் அப்படி யாரும் சொல்லிருக்க வாய்ப்பே இல்லையே??" என்றாள் அவன் கண்களை பார்த்து.

"ஹிஹி.. அதுவா மைதிலி? நீ அவனை லவ் பண்றேன்னு சொல்லவும், ஒரு பைத்தியத்தை......" என அவன் தொடங்க மைதிலி முறைப்பதை கண்டு, "இல்லை இல்லை... நீ மென்டல்லி டிஸ்டர்ப்டு பெர்சன்ன எப்படி லவ் பண்ணலான்னு உன்னை டைவேர்ட் பண்ண அப்படி சொன்னேன். ஆனா எல்லாரும் நல்லா விதமா தான் சொன்னாங்க.." என சொல்லிவிட்டு குனிந்து கொண்டான் தவறு செய்த சிறுவன் போல.

அவனை முடிந்தமட்டும் முறைத்தவள், "இங்கிலிஷ்ல சொன்னாலும் தமிழ்ல சொன்னாலும் அர்த்தம் ஒண்ணுதான்.." என்றதோடு சென்றுவிட்டாள்.

இன்றும் அதேபோல் அவள் கிளம்பி கீழே வர, ஹாலில் இருந்த விஸ்வநாதன் அவளை சிரிப்புடன் ஏறிட்டார்.

"என்னம்மா? கிளம்பியாச்சா?"

"ம்ம்ம்... இன்னைக்கு ஆடிட்டிங் இருக்கு.. சீக்கிரம் போகணும்.." என்றாள் அவளும் சிரித்த முகமாய்.

"நல்லது.. சாப்புட்டு கிளம்பு... லக்ஷ்மி? மைதிலிக்கு டிபன் எடுத்து வை.." என உள்ளிருக்கும் தன் மனைவியை பணிந்தார் விஸ்வநாதன்.

உணர்ச்சி இல்லாத முகத்துடன் வந்த லக்ஷ்மி, அவளுக்கு வேண்டியதை பரிமாறிவிட்டு மீண்டும் சென்று விட்டார். இது சில நாட்களாய் தினமும் நடப்பதுதான் என்பதால் மைதிலி அதை ஒரு பொருட்டாய் எண்ணாமல் உண்டு முடித்து கிளம்பினாள்.

அலுவலகத்தில் தனக்கு முன் காத்திருந்த ஆடிட்டரை கண்டு அவசர புன்னகை சிந்தினாள் மைதிலி. "ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனா?" என்ற சம்பிரதாய கேள்வியுடன் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

"இல்லம்மா.. இப்போதான் வந்தேன்.." என சொல்லிவிட்டு அவளை பார்த்தவர், "ராம் தம்பிக்கு பொருத்தமா இருக்கம்மா..." என்றார்.

அவர் அப்படி சொல்லவும் பார்த்துக்கொண்டிருந்த பைலில் இருந்து தலையை நிமிர்த்தியவள், புன்சிரிப்புடன், "நான் வந்த பத்து நாள்ல அதிகமா கேட்ட வரி இதுதான்..." என சொல்லி சிரித்தாள்.

"பார்க்குற எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கு... அதான் சொல்றாங்க..." என்றவருக்கு புன்னகையை மட்டும் பரிசாய் தந்து தன் வேலையை தொடர்ந்தாள் மைதிலி.

கோப்புகளில் லயித்திருந்த அவள் திடீரென, "அங்கிள்...? என்ன இதெல்லாம்?" அவள் பைலை அவர் முன் நீட்ட, "இத்தனை வருஷம் இங்க நடந்த மோசடிக்கான தொகுப்பு" என்றார் அவர் குற்றவுணர்வோடு.

"எல்லாம் தெரிஞ்சும் எதுக்காக இவ்ளோ நாள் சும்மா இருந்தீங்க? ராம் அப்பா இருந்தபோவே அவர்கிட்ட சொல்லிருக்கலாமே?" என்றாள் கோவமாய்.

"அந்த வக்கீல் வரதன் என்னை மிரட்டுனான். வெளியூர்ல படிக்குற என் பொண்ணு வேணுமா வேணாமானு கேட்டான். பயமா இருந்துச்சும்மா. அதுல வாய மூடுன நான் இதபத்தி யார்ட்டையும் சொல்லாம விட்டுட்டேன்..." என்றார் சிறிய குரலில்.

"ஹும்ம்!! ஹௌ க்ரூவல் த்தே ஆர்....!!! இவ்ளோ பெரிய விஷயம்... மாமா எப்படிதான் கவனிக்காம விட்டாரோ தெரியல. தெரிஞ்சுருந்தா இத்தனை ப்ராப்ளம் வந்துருக்காது...!! " என தலையில் கைவைத்துக்கொண்டாள் மைதிலி.

"ஆனா,, இதைபத்தி ராம் கிட்ட சொன்னேன்ம்மா..." என அவர் சொன்னதும் விலுக்கென நிமிர்ந்தவள், "ராம்க்கு இதெல்லாம் தெரியுமா?" என்றாள் வியப்பாய்.

"ரவிச்சந்திரன் சார் தவறினதும், எனக்கு மனசே சரி இல்லமா போச்சு. அவர்கிட்ட விஸ்வநாதன் பண்றதெல்லாம் சொல்லிருந்தா ஒரு வேளை அவர் ஜாக்கிரதையா இருந்துருப்பாரோன்னு நினைச்சேன். அதனால ராம்கிட்ட எல்லாத்தையும் சொல்லி அவரையாது பாதுகாப்பா இருக்க சொல்லனும்ன்னு முடிவு பண்ணி பெங்களூர் போனேன்" என்றார்.

"ராம் வொர்க் பண்ணிட்டு இருந்த ஹாஸ்பிடல்க்கா??" என்றாள் மைதிலி.

"ஆமா... அவரை நேருல பார்த்து சொன்னப்போ முதல்ல நம்பல... அப்பறம் இந்த பைல்ல காட்டுனப்போ ரொம்ப நொறுங்கிட்டாறு... விஸ்வநாதன் இப்படி பண்ணுவாருன்னு அவர் எதிர்பார்கலன்னு அவர் முகத்துலயே தெரிஞ்சுது எனக்கு... இதையே அவரால தாங்கிக்க முடில.. இதுல ரவிச்சந்திரன் சார் சாவுக்கு விஸ்வநாதன்தான் காரணம்ன்னு எப்படி சொல்லுரதுன்னு தெரியாம அதை எனக்குள்ளையே முழுங்கிட்டேன்.. அடுத்த ரெண்டு நாள்ல அவர் சென்னை வந்தாருன்னு கேள்விப்பட்டேன்.. அதுக்கு அப்பறம் அவரை நான் ஹாஸ்பிடல்ல மனநிலை சரியில்லாதவராதான் பாத்தேன்" என சொல்லிமுடித்தார்.

"ஓ... அப்போ விஷயம் தெரிஞ்சு தான் ராம் இங்க வந்தாரா?" என கேட்கவும் அவர் அதை ஆமோத்திப்பதாய் தலை அசைத்தார்.

அதற்குமேல் அவள் வேலைகள் இயந்திரகதியில் நடந்து முடிக்க, உடல்சோர்வையுடன் மனசோர்வும் ஒன்றுசேர வீட்டிற்க்கு சென்றாள் மையு.

கார் வீட்டிற்க்குள் நுழைந்ததும், "ஊஊஊஊ... மையு வந்துட்டா!! உஹூ..." என கத்திக்கொண்டு வந்தான் ராம்.

சிறுப்பிள்ளையென அவன் துள்ளி வருவதை கண்டு சிரித்தபடி நின்ற மைதிலி,
அவன் பின்னால் கௌதமும் ஓடிவருவதை கண்டு, 'ஐயோ சண்டையா?' என நொடியில் கலவரமானாள் மைதிலி.

வேகமாக ஓடிவந்த ராம், என்ஜின் மீது ஏறி அமர்ந்தபடி "நாந்தான் பர்ஸ்ட்... எப்ப்ப்ப்பபூடி?" என்றான் கௌதமை பார்த்து.

"ஏன்டா ஓடி வரப்போ என்னை தள்ளிவிட்ட? பிராடு பண்ணி ஜெய்ச்சுட்டு, பெருமை வேற! ஹும்ம்!!" என்றான் கெளதம்.

"இதெல்லாம் ராஜதந்திரம்... போடா மங்குனி..."

"சொந்தமா பேசகூட தெரியல.. படம் பார்த்துட்டு பிட் அடிச்சு பேசுறான்.. இதுல இவன் என்னை மங்குனின்னு சொல்றான்...." என கெளதம் பதிலுக்கு சொல்ல, "உனக்கு எல்லாம் பிட் அடிச்ச டயலாக்யே அதிகம்.. என் ரேஞ்க்கு உன்கிட்ட எல்லாம் பேசவே கூடாது... அப்புடி ஓரமா நில்லு போ..." என்றான் ராம் காரில் சாய்ந்து அமர்ந்தபடி.

சந்தோஷ் கிடைத்த கேப்பில் நகர்ந்து விட, மைதிலி இவர்களிடம் மாட்டிகொண்டு நின்றாள். சோர்ந்து போய் வந்தவளுக்கு, இவர்களின் சண்டை மண்டைக்குள் சுத்தியலால் தட்டுவதை போல இருந்தது.

அதற்க்கு பிறகு அவர்கள் பேசுவதெல்லாம் குய்யோ முய்யோ என ஹை ஸ்பீடில் ஓட, கண்கள் இருட்டுவது போல இருந்தது. சிரமப்பட்டு தன் கண்களை விரித்து பார்த்தவள், ராமுடன் கெளதம் சரிக்கு சரி வாயாடுவதை கண்டு, "ஸ்டாப் திஸ் அண்ணா... எப்போபாரு ராமை வம்புக்கு இழுத்துகிட்டு... உள்ளே போங்க!" என கௌதமை திட்டிவிட்டு, "வா ராம்... லஞ்ச் சாப்பிட்டியா ஒழுங்கா?" என்றாள்.

அதற்க்கு பதில் சொல்லாமல் ராம் நமட்டு சிரிப்புடன் கௌதமை பார்த்துக்கொண்டிருப்பதை கண்ட மைதிலி, "என்னாச்சு?" என திரும்ப அங்கு கெளதம் ப்ரீஸ் ஆனதை போல மைதிலியையே பார்த்துக்கொண்டு நின்றான்.

"என் தங்கச்சி நியாயத்தின் பக்கம் தான் நிற்ப்பா... எனக்குதான் சப்போர்ட் பண்ணுவான்னு கெத்தா சொல்லிருந்தேன்... இப்படி அசிங்கப்படுத்திடியே தங்கச்சி!"

"உங்களை யாரு அப்படி சொல்ல சொன்னது?" என சொல்லி மேலும் அவனை பப்பி ஷேம் ஆக்கிவிட்டு ராமுடன் உள்ளே சென்றாள் மைதிலி.

மைதிலியுடன் சென்றுக்கொண்டிருந்த ராம், பக்கவாட்டில் இருந்த சந்தோஷை பார்க்க, அவன் தலையாட்டியபடி சிரித்தான். (ஏன்னு கேக்காதீங்க)

தன்னறைக்குள் சென்ற மைதிலி அலுப்பு தீர குளித்துவிட்டு ஹாலிற்கு வர, அங்கு கைகளில் காபியுடன் நின்றிருந்தான் ராம்.

வெகுநாட்களுக்கு பிறகு அவனிடம் இருந்து கிடைக்கும் காஃபி. அவனிடமிருந்து அதை வாங்கிக்கொண்டு அவனருகே அமர்ந்தாள் மைதிலி.

"இன்னைக்கு ஆடிட்டிங் எப்படி இருந்துச்சு மைதிலி..?" என விசாரித்தபடி வந்தார் விஸ்வநாதன். "டாலி பண்றதுல தான் கொஞ்சம் சிரமமாகிடுச்சு" என சொன்னபடி அவரை கவனித்தாள்.

"ஏன்ம்மா? ஆடிட்டர் எப்பவும் சரியா செஞ்சுடுவாறே!?" என வினவ, "நான் பழைய கணக்கை சொன்னேன்...!" என்றாள் அவர் முகம் பார்த்து.

அதில் அவர் முகம் கூம்பிவிட, "என்னை மன்னிச்சுடும்மா... எல்லாம் அறிவில்லாம பண்ணுனது...." என அவர் கைகூப்ப, "ஹய்யோ என்ன நீங்க?" என அவர் கையை இறக்கிவிட்டவள், "தப்பு பண்றது இயல்பு தான்... அதை திருத்திக்காம இருக்குறது தான் தப்பு... பரவல்ல.. விடுங்க..." என்றாள்.

அந்நேரம் ஹாலின் மத்தியில் இருந்த தொலைபேசி தன் இருப்பை உணர்த்த, அதை எடுத்து தன் காதுக்கு கொடுத்தான் ரிஷிகேஷ்.

"எப்படி ஆச்சு? என்ன செய்ய போறீங்க இப்போ? சரி நான் வந்து பாக்குறேன்.." என பேசிவிட்டு வைத்தான் ரிஷி.

அவன் பேச்சில் கவனம் சிதற, அவன் ரிசீவரை கீழேவைத்ததும் "என்னாச்சு ரிஷி? எனி ப்ரோப்ளம்?" என கேட்டாள் மைதிலி.

"சின்ன ப்ரோப்ளம் தான் அக்கா... எண்ணூர் பக்கத்துல இருக்க நம்ம பழைய கம்பனிய ரீமாடல் பண்ணிட்டு இருக்கோம்... அதுல வச்சுருக்க சில மெசின் இப்போ பொகஞ்சுடுச்சாம்... மெக்கானிக்கு சொல்லிடாங்கலாம்... இருந்தாலும் நான் வந்து பார்க்குறேன்னு சொன்னேன்.." என சொல்லிமுடித்தான் ரிஷி.

"பழைய கம்பனியா? சொல்லவே இல்லை என்கிட்ட" என மைதிலி கேள்வியாய் கேட்க, "ராம் அப்பா முதன்முதல்ல அங்கதான் கம்பனி ஆரம்பிச்சாரு... அதுக்கு பிறகு தான் இப்போ இருக்க கம்பனி... பழச விடகூடாதுன்னு அதை சீர்படுத்தி உபயோகத்துல வச்சுக்கனும்ன்னு அவர் அடிக்கடி சொல்லுவாரு.. அதான் இப்போ அதை புதுப்பிக்குறோம்..." என அவளுக்கு பதில் சொன்னார் விஸ்வநாதன்..

"ஹோ!! இப்போ நீ அங்க போக போறியா ரிஷி?" என்றாள் மைதிலி.

அவன் 'ஆம்' என்றதும், "எனக்கும் அதை பார்க்கணும் போல இருக்கு... உன்னோட நானும் வரேன்" என்றாள்.

"மணி இப்போவே ஆறாச்சு... நாளைக்கு போயி பார்த்துக்கலாம்.... நீங்க போறதுக்குள்ள இருட்டிடும்..." என விஷ்வநாதன் தடுத்தும் கேளாமல் "கார்ல போய்ட்டு கார்ல வந்துட போறேன்? ரிஷி கூடவே தானே இருப்பான். பின்ன என்ன? நான் போய்ட்டு டின்னர்க்கு சரியா வந்துடுவேன்... வா ரிஷி போலாம்..." என கிளம்பினாள் மைதிலி.

"மைதிலி... இரு.. நானும் வரேன்.. நீ தனியா போக வேணாம்..." என கெளதம் சொல்லவும், "நீங்க ராமை பார்த்துக்கோங்க அண்ணா.. நான் வந்துடுவேன்..." என அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே தன் அரைக்கால் சட்டையை முழுகாலுக்கு மாற்றிக்கொண்டு வந்தான் ராம்.

"மையு... நானு ரெடி... வா போகலாம்..." என்றான் அவளருகில் வந்து. அவனை செல்லமாய் முறைத்தவள் "உன்னை நான் கிளம்ப சொன்னேனா?" என்றாள்.

"ஹீஹீ.... என்னையும் கூட்டிட்டு போ மையு..." என அவன், அவளை சுரண்டவும், "அவன் வந்தா நானும் வருவேன்" என்றான் கெளதம்.

"எதுக்கு? அங்க வந்தும் பேசியே என் தலையை உடைக்க தானே?? ஹும்ம்... வாங்க... வந்துத்தொலைங்க.." என வெளிப்படையாக திட்டிவிட்டு அவர்களை கூட்டி சென்றாள் மைதிலி.

ரிஷி வழி காட்ட, சந்தோஷ் காரை ஓட்டிசென்றான். அவர்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்ததும், இறங்கி அவ்விடத்தை நோட்டமிட்டாள் மைதிலி.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் தொங்கிய கட்டைகள் கட்டிட சுற்றுவேலை நடப்பதை தெளிவாய் காட்ட, வெளியில் இருந்த காம்பவுண்ட் கேட்டை மூடிவிட்டு இவர்கள் அருகில் வந்தான் ரிஷி.

"இதான் அக்கா.. நம்ம கம்பனி..! முக்கால்வாசி வேலை முடிஞ்சுது... ரெண்டு மாசத்துல திறப்புவிழா வச்சிடலாம்ன்னு பிளான் பண்ணோம்..." என கட்டிடத்தை பார்த்துக்கொண்டு நின்ற மைதிலியிடம் சொன்னான் ரிஷி.

"ம்ம்ம்... வொர்கர்ஸ் எல்லாம் இல்லையா??" என்றாள் சுற்றிலும் பார்த்தபடி.

"நேரமாச்சுல்ல அக்கா.. அதான் எல்லாரும் கிளம்பிட்டாங்க... வாங்க உள்ளே போவோம்..." என ரிஷியுடன் ராம் கெளதம் முன்செல்ல பின் தங்கினாள் மைதிலி.

காரின் அருகே நின்ற சந்தோஷிடம், "நீயும் வா சந்தோஷ்" என்றாள். சில நொடி தயங்கியவன் பின்பு, 'சரி' என சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

அனைவரும் சென்றதும், சற்று தள்ளி காம்பவுண்டின் வெளியே எட்டி பார்த்தவள், மெதுவாய் உள்ளே சென்றாள். (இதும் ஏன்னு கேக்காதீங்க)

அங்கே டைல்ஸ் போடப்பட்ட தரையில் வேலை நடப்பதற்க்கான அடையாளமாய் புழுதி படிந்து கிடந்தது. இன்னும் கைப்பிடி சுவர் வைக்கப்படாத அந்த மாடிபடிகட்டுகளை நிமிர்ந்து பார்த்தபடி அந்த நீண்ட தளத்தை சுற்றி வந்தாள் மைதிலி.

அருகில் பேச்சுக்குரல் கேட்க, தரைதளத்தின் இறுதிக்கு சென்றாள். அங்கே பாதி எரிந்த ஒரு இயந்திரத்தை நால்வரும் தங்கள் பேச்சினால் ஆராய்ச்சி செய்ய, இடைப்புகுந்தாள் மைதிலி.

"என்ன பிரசன்னை இங்க?" என கேட்டுக்கொண்டே அந்த மெஷினை பார்த்தாள் மைதிலி.

"இதுல யாரு முதல்ல கை வைக்குறதுன்னு பேசிட்டு இருக்கோம்..." என்றான் சந்தோஷ்.

"கையை வைக்குறீங்களோ, கால்ல வைக்குறீங்களோ...!!! முதல்ல மெய்ன் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு வைங்க..." என சொன்னவள் "ராம் இவங்களோட நீ நிக்காத... என்னோட வா.." என அவனை தன்னுடன் இழுத்துக்கொண்டாள்.

"எங்களுக்கு என்ன ஆனாலும் பரவால்ல... உன் ஆளு தான் உனக்கு முக்கியம்? நல்லா வருவ தங்கச்சி நீ...!!!" என கெளதம் புலம்பிய கேப்பில் ரிஷி மெயின் சுவிட்ச்ஐ நிறுத்திவிட்டு வந்தான்.

"மைதிலி எனக்கு ஒரு ஐடியா...!!!" என கத்தினான் கெளதம்.

"தயவுசெஞ்சு சொல்லாதீங்க... உங்களுக்குள்ளயே வச்சுக்கோங்க.." என மைதிலி பட்டென சொல்லிவிட, "தொப்பி தொப்பி, ஹாஹா....." என ஆடவர் மூவரும் சிரிக்கதொடங்கினர்.

"நல்லது சொல்ல வந்தா கேட்டுக்கணும்... இப்படி அசிங்கப்படுத்த கூடாது" என அவன் சொல்ல, "நீ என்னனு சொல்லு, அது யாருக்கு நல்லதுன்னு நாங்க சொல்றோம்..." என்றான் சந்தோஷ்.

"அன்னைக்கு திவ்யா சொன்னமாறி, நம்ம ராம்க்கு ஷாக் அடிச்சு தானே இப்படி ஆச்சு... மறுபடி ஒரு ஷாக் கொடுத்து, முள்ளை முள்ளால எடுத்தா என்ன...?" என கேட்டுவிட்டு ராமை பார்த்து விஷமமாய் சிரித்தான் கெளதம்.

ராம் அவனை அடிக்க தொடங்க, ஆளில்லாத அவ்விடத்தில் அவர்களின் குரல் பெரும்முழக்கமாய் அதிர்ந்தது.

அனைவரும் சிரித்து விளையாடிக்கொண்டிருந்த நேரம், அவர்கள் நாசியை வினோதமான நெடி வந்து தாக்கியது. என்னவென்று சுதாரிக்கும் முன்னர் ஒருவர் பின் ஒருவராய் நினைவு தப்பி மயங்கி விழ தொடங்கினர்.

-தொடரும்...
 
Aiyyayo என்ன aachi யாரு avangala மயக்கி இருப்பா... Mythili ஏன் போகும் pothu appadi paaththutu போனா... Athe maari santhosh ஏன் first தயங்கி appram உள்ள வந்தான்... எல்லா சொத்து yum mythili per la maaththiyaachaa.... விஸ்வநாதன் Nizama திருந்தி taaraa இல்ல நடிக்கிறாரா nu puriyala இப்போ யாரும் அவங்களுக்கு மயக்கம் மருந்து கொடுத்து இருபாங்க... Mythili yum எல்லாம் சரி pannikite வரா... பெங்களூர் laye ram ku எல்லாம் விஷயமும் ஆடிட்டர் muliyamaa therinji இருக்கு... இப்போ என்ன aaga pooguthoo தெரியல ah... Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
 
Top