Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Karisal Kaathal - 30 (Final)

Advertisement

Dear sis...ஒரு அழகான கிராமத்து குடும்பத்தை கண் முன்னே கொண்டு வந்துட்டிங்க... Nice story... Eagerly waiting for your next story....
 
Super ...
Sumathi and muthu jodi purithal pathi konjam sollirukalaamo.. sumathi intha mudivu eduthathan nokkam...
Mani and mathi vaazhkkai vanna mayama maariyaachu...

Vino track.. new story???
 
? nice ending romba nalla irundhuchu story title kagave padichen next ud vino story eppo start pannuvinga eagerly waiting
 
“சாரி மாமா..! எனக்கு அப்போ, வேற வழி தெரியலை. ஆனா, உங்களை எனக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த வயசுல தெரியலை. ஆனா, சீக்கிரமே தெரிஞ்சுகிட்டேன் மாமா..!” என்றவள், அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

எனக்கும் அது தெரியும் மதி. அதான், தேடி வந்து, மறுபடியும் மேரேஜ் பண்ணேன். எப்படி இருந்தாலும், இந்த முகிலனுக்கு நீ மட்டும் தான் மனைவி...அப்படிங்கிற ஒரு விஷயத்துல நான் உறுதியா இருந்தேன்.

“என்மேல உங்களுக்கு கோபம் வரலையா..?” என்றாள்.

“கோபம் இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, உன்னோட முகத்துக்கு முன்னாடி, என்னோட கோபம் எல்லாம் புஸ்வானம் தான். யோசிச்சுப் பார்த்தா, நடந்த எல்லா பிரச்சனைக்கும் நீ காரணமில்லை. சுத்தி இருந்த உறவுகள் தான் காரணம். நானும் கூட ஒருவகையில் காரணம். அதனால இனி மனசைப் போட்டுக் குழப்பிக்காம, முகிலன் மனைவி மதியா மட்டும் இரு. நம்மளைப் பத்தி மட்டும் யோசி..!” என்றான்.

“ம்ம் சரி மாமா..! ஆனா, முத்து பாவம் இல்லையா..?” என்றாள், அப்போதும் நண்பனை விட்டுக் கொடுக்காமல்.

“உண்மைதான்...ஆனா, அதுக்கும் வழி பிறந்திடுச்சு. உன் தங்கச்சி சுமதி...முத்துவைக் கட்டிக்கிறாளாம்..! மதியம் அம்மா சொன்னாங்க..!” என்றான்.

“என்ன மாமா சொல்றிங்க..? சுமதியா...?” என்றாள் அதிர்ச்சியுடன்.

“ஆமா...! எனக்கும் கேட்டப்ப, உன்னை மாதிரி அதிர்ச்சியா தான் இருந்தது. ஆனா, சுமதி உறுதியா சொல்லும் போது...நம்ம என்ன செய்ய முடியும்...?” என்றான்.

“சுமதிக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆரம்பிக்கலை..!” என்றாள் யோசனையுடன்.

“இப்போ பேசி முடுச்சுட்டு, ஆறு மாசம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்கலாம்ன்னு பேசியிருக்காங்க..!” என்றான்.

“அதுக்குள்ளவா...? என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலை..!” என்று மதி முகத்தைத் தூக்க,

“இப்ப எதுக்கு மூஞ்சியைத் தூக்குற..? நல்ல விஷயத்தை எப்ப பண்ணினா என்ன...? அவங்க என்னை வச்சு தான் பேசுனாங்க..! அதுக்காகத் தான், மதியமே வீட்டுக்குப் போனேன். அப்பா, போன் பண்ணியிருந்தார்.இல்லைன்னா, ஈவ்னிங் வரைக்கும் இருந்து, உன்னைக் கூட்டிட்டு வந்திருப்பேனே..?” என்றான்.

“முத்து சம்மதம் சொன்னானா மாமா..?” என்றாள்.

எங்க..? அவனை சமாளிக்கிறது தான் கொஞ்சம் கஷ்ட்டமா போய்டுச்சு. கடைசி வரைக்கும் அவன் தலையை ஆட்டவே இல்லை. கடைசியா, இது மதியோட விருப்பம்ன்னு நான் சொன்ன உடன் தான், சரின்னு சொன்னான்.

“அடப்பாவிங்களா..?”

“உங்க அம்மா தான் அப்படி சொல்ல சொன்னாங்க..! நானும் சொன்னேன். அவனும், உன் பேரை சொன்ன பிறகு தான் சரின்னு சொன்னான்..!” என்றான்.

“இது நடந்தா சந்தோசம் தான். ஆனா, நல்லா படியா நடக்கணும். எந்த பிரச்சனையும் இல்லாம..” என்றாள்.

“நம்மை மீறி, இனி எதுவும் நடக்காது..!” என்று உறுதியளித்தான் முகிலன்.

“நான் வீட்டுக்குப் போன உடனே, சுமதியைப் போய் பார்க்கணும்..!” என்றாள்.

“அடியேய்..! இதுவரைக்கும் மனுஷனா இருக்கேன். என்னை மிருகமா மாத்திடாத. இன்னைக்கு மாமன் புல்பார்ம்ல இருக்கேன்..! அதனால, உன்னோட கவனம் வேற எங்கயும் போக கூடாது. மாமன் மேல மட்டும் தான் இருக்கணும்..!” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, பேருந்து நிறுத்தமும் வந்து விட்டிருந்தது.

அவளுடன் இறங்கி, அந்த சாலையில் நடப்பது கூட அவனுக்கு புது விதமான ஒரு அனுபவம்.

“இப்படியே, உன்கையைப் பிடிச்சுகிட்டே...காலம் முழுசுக்கும் நடக்கணும் மதி..!” என்று அவன் காதலுடன் சொல்ல,

“கால் வலிக்கும் மாமா..!” என்றபடி அவளை அப்பாவியாய்ப் பார்த்தாள்.

“இந்த காதல் வசனம் உனக்குத் தேவையா..?” என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவன்,

“அப்படியா மதி..! நான் வேணுமின்னா தூக்கிக்கவா...?” என்றபடி, அவளை பட்டென்று தூக்கி விட்டான்.

“இறக்கி விடுங்க..! யாராவது பார்த்தா..என்ன நினைப்பாங்க..?” என்றாள் கூச்சத்துடன்.

“அட சும்மா இருடி..! எவன் பார்த்தா எனக்கென்ன..?”என்றபடி, அவளைத் தூக்கிக் கொண்டு நடக்க, அவனின் காதலில் கரைந்து தான் போனாள் வண்ண மதி.

“நான் உங்களை காதலிக்கிறேன்னு நினைக்கிறேன் மாமா..!” என்றாள், அவனைப் பார்த்தபடி.

“இன்னும் நினைக்கத்தான் செய்றியா..? ஆனா, நான் உன்னை ரொம்ப லவ் பண்றேண்டி. என் உயிர் இருக்குற வரைக்கும், என் மூச்சுக் காத்தே நீதான்..!”

“மணி மாமா..! ஐலவ் யு...!” என்றவள், அவனின் கன்னத்தில் முத்தமிட, அதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் திலகா. அவரால் இனி பார்க்க மட்டும் தான் முடியும்.

அருகில் வந்தவுடன், அவர் திலகா தான் என்று கண்டு கொண்ட மதி...

“மாமா..! எனக்கு ரெட்டைப் புள்ளைங்க வேணும்..!” என்றாள் சத்தமாக.

“பொண்டாட்டி கேட்டு, நிறைவேத்த தானே, இந்த மாமன் இருக்கேன்..பிராக்டிகல் கிளாசை ஸ்டார்ட் பண்ணிடுவோம்..!” என்றபடி அவன் சிரிக்க, அந்த காட்சியைப் பார்க்க, அந்திவானமாய்... வண்ணங்களாய் இருந்தது.

ஒரு மாதத்திற்குப் பிறகு...........

“என்னப்பா...? எல்லாரும் வந்தாச்சா...?” என்று ஒருவர் கேட்டுக் கொண்டிருக்க,

“இன்னும் முகிலனும், மதியும் தான் வரணும்..!” என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

“நேரம் ஆகுதுப்பா...! சீக்கிரம் வர சொல்லுங்க..!” என்று கத்திக் கொண்டிருந்தனர்.

“ஏங்க..! விடுங்க..!எல்லாரும் கிளம்பிட்டாங்க..!” என்று முகிலனிடம் இருந்து தப்பிக்கும் வழி தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் வண்ண மதி.

மதியின் முகத்தில், முகிலன் உதடுகள் ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்க,

“மாமன் வேலையா இருக்கேன்..! தொந்தரவு பண்ணாம பேசாம இருடி..!” என்றவன், அவன் வேலையைத் தொடர,

“மதி..!” என்று மலரின் குரல் அருகில் கேட்க, பட்டென்று அவனை விட்டு விலகினால் மதி.

“அத்தை..!”

“சீக்கிரம் வாங்கம்மா..! முகூர்த்ததுக்கு நேரம் ஆச்சு..!” என்றார் மலர்.

“இதோ கிளம்பிட்டோம் அத்தை..!” என்று அவள் அசடு வழிய, அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றார் மலர்.

தனப்பாண்டிக்கும், குணப்பாண்டிக்கும் அன்று திருமணம். அதனால் எல்லாரும் கிளம்பியிருந்தனர்.

சுமதி கிளம்பி வெளியே வர, முத்துவும் வெளியே வந்தான். ஆனால் சுமதியிடம் பேசவில்லை. அவனுக்கு கொஞ்சம் தயக்கம் இருக்கவே செய்தது.

“முத்து மாமா..! இந்த சட்டை உங்களுக்கு நல்லா இருக்கு...!” என்றாள் சுமதி, எந்த விகல்பமும் இல்லாமல்.

“தேங்க்ஸ் சுமதி..! உனக்கும் கூட, இந்த புடவை நல்லா இருக்கு..!” என்றான் முதன் முறையாக.

“நிஜமாவா மாமா..!” என்றவளுக்கு அப்படி ஒரு சந்தோசம். பார்வதியும்,வினோதினியும் வெளியே வரவும், வாயை மூடிக் கொண்டாள்.

இந்த திருமணத்தில், எல்லா சொந்தங்களும் ஒன்று கூடியிருந்தது. திலகாவும் வந்திருந்தார். ஆனால், யாரின் வம்புக்கும் போவதில்லை. அதற்காக திருந்திவிட்டார் என்று சொல்ல முடியாது. கணபதியின் கட்டுப் பாட்டில் இருந்தார். பிறவி குணத்தை மாற்றவா முடியும்.

“மதி ..! ஒரு விஷயத்தை நோட் பண்ணியா..?” என்றான் முகிலன்.

“என்ன விஷயம்..?”

“பெரிய பொண்ணு வீடு இந்த பக்கம், சின்ன பொண்ணு வீடு அந்த பக்கம், நடுவுல உங்க அம்மா வீடு. யாருக்காவது இப்படி ஒரு குடுப்பினை வாய்க்குமா..? இல்லை, இப்படி இரண்டு அடிமைகள் தான் சிக்குவோமா...?” என்றான் முகிலன் சிரிக்காமல்.

“உங்களை..!” என்று மதி முறைக்க,

“நானும் யோசிச்சேன் முகிலன் அண்ணா..!” என்றான் முத்து.

“நம்மால யோசிக்க மட்டும் தாண்டா முடியும் தம்பி...” என்று முகிலன் சிரிக்க, அவர்களுடன், மதியும், சுமதியும் இணைந்து கொண்டனர்.

“இன்னும் நான் மட்டும் தான் முரட்டு சிங்கிளா இருக்கேன்..! என்னோட பாவம் உங்களை சும்மா விடாது..!” என்றாள் வினோதினி முறைத்தபடி.

“என்ன வினோ, இப்படி சொல்ற..?”

“பின்ன என்னடி..? என்னைவிட சுமதி எவ்வளவு சின்னவ. அவளுக்கே கல்யாணம் பேசி முடுச்சுட்டிங்க..? என்னைப் பத்தி யோசிச்சிங்களா..?” என்றாள், வராத கண்ணீருடன்.

“உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்துடலாம்..!”

“நோ..! நான் எப்பவும் சிங்கிள் தான்.எனக்கு, வேற தனிக் கதை வேணும்...உங்க டிராக்ல நான் ஓட மாட்டேன்..!” என்றாள்.

“அவ்வளவு தான...? செஞ்சிடுவோம்..!” என்றாள் மதி.

அவர்கள் பேசி சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தப் பார்வதிக்கும் ஆனந்தத்தில் கண்கள் கலங்கிப் போனது. பெற்றவர்களுக்கு இதைத் தவிர வேறென்ன வேண்டும்..???

முகிலினங்களுக்கு இடையில் தோன்றும் மதி நிலவாய், மணி முகிலனின் வாழ்வில், வண்ணம் சேர்க்க...அவனுள் வந்தவள் தான் வண்ண மதி. வெண்மதியில் இருந்து வேறுபட்ட வண்ண மதி. அவளின் பெயரைப் போலவே, இனி அவள் வாழ்வும் வண்ணங்களால் ஜொலிக்கும்.

வாழ்த்தி விடை பெறுவோம்...!!!!


Super story dear...
 
Top