இந்த கதையின் துவக்கம் அருமையாக இருந்தது. ஆனால் இந்த 2 மனைவி என்பது இந்த காலத்திலும் மிகவும் சாதாரணமாக கடந்து செல்வது தான் என கதையை கொண்டு போவது மிகவும் வருத்தமளிக்கிறது. ஒரு ஆண் அவனால் யதார்த்த வாழ்வை எந்த காதல் தோல்விக்கு பிறகும் கொண்டு செல்லலாம் ஆனால் பெண்கள் மட்டுமே தியாக செம்மல்கள் என்பது மிகவும் ஏற்புடையதாக பெண்கள் மத்திலேயில் இருப்பதை இன்னும் ஸ்ட்ரோங் ஆக்குகிறது இந்த கதை. Sorry If I am saying anything bluntly. ஆனால் இதே ஏன் ஒரு பெண் யதார்த்த வாழ்வை அமைக்க கூடாது.. ராஜன் கல்யாணம் தான் அமுதாவின் ஜென்ம சாபல்யமா? பாவம் தேவி.. இதில் இரண்டு பேரிடமும் ராஜன் குழைவது போல கதைப்போக்கு கொஞ்சம் suffocate ஆகிறது. இதை ஏற்க முடிந்த பெண்களாகிய நாமே பெண்மைக்கு நியாயம் செய்வதில்லை. கதை மாறனையும் நந்தினையும் focus செய்த போது நன்றாக இருந்தது. ஏன் ஒரு பெண்ணின் வைராக்கியத்தின் முடிவு ஆணின் மனைவி ஆவதிலே முடிய வேண்டும் என்று தெரியவில்லை. அதும் இரண்டாவது மனைவியாய். இதே ஒரு பெண் செய்தால் நாம் ஏற்போமா? இல்லையே.. sorry to say...இதுவே நம் சாபக்கேடு...