Enaku அவங்க கல்யாணத்துலயே விருப்பமில்ல. நந்தினி செல்பிஷ் எப்படி தேவி லாவி எல்லாரையும் பாத்ததுக்கு அப்புறம் இப்படி ஒரு ரெக்வுவஸ்ட் ராஜன்கிட்ட வைக்க முடியும்.கிரிஜா,
எனக்கு முக்கோணக் காதல் கதைகள் பிடிப்பதில்லை. இந்தக் கதையில் அமுதாவும் ராஜனும் தங்கள் காதலை கல்யாணத்துக்கு முன் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது அவர்கள் பிழையே. அதிலும் அமுதா ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அதை செய்தது மிகப் பெரிய பிழை. பிழை செய்தவர்கள் தண்டனை அனுபவித்தால் நியாயமே. ஆனால் தேவிக்கு ஏன் தண்டனை? அமுதாவுக்கான அங்கீகாரம் இந்த திருமணத்தினால் கிடைத்ததே பெரிய விஷயம். நந்தினிக்காக அதைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனாலும் இதற்கு மேலும் ராஜன் அமுதா உறவை நீடிப்பது ராஜன் தேவி வாழ்க்கையை கொச்சைப் படுத்துவது ஆகும். வாழ்க்கையில் நாம் எடுக்கும் சில முடிவுகள் வாழ்க்கையையே புரட்டிப் போடும். அதற்கான விளைவுகளை நாம் தான் அனுபவிக்க வேண்டும். அதனால் மற்றவர்கள் துன்பம் அனுபவிக்கக் கூடாது. இருவருக்கும் சம அந்தஸ்து இந்த உறவில் கொடுப்பது என்பது சாத்தியமில்லை என்பதோடு அப்படி செய்ய முனைந்தால் தேவி தான் இதனால் மரியாதை குறைவார் and she doesn't deserve that.
ராஜன் மாறன் நந்தினி மூணு பேரை பாத்தாலே எனக்கு பிபி ஏறுது. இந்த வயசுல எனக்கு ஹாட் அட்டாக் வந்துரும் போல.