இது நான் ரொம்ப நாளா யோசிச்சிருக்குற ஒரு தியரி சகோ...
முன்னாடிலாம் கடவுள் நேர்லயே வந்து அருள் பண்ணிருக்கார்... இங்கயே வாழ்ந்துட்டுலாம் போயிருக்கார்... அப்புறம் வர வர அது குறைஞ்சுக்கிட்டே வந்துடுச்சு...
இப்பலாம் ஏன் கடவுள் வரதே இல்ல?
உலகம் என்பது கடவுளைப் பொறுத்தவரை அவர் உருவாக்கின ஒரு இயந்திரம் / மென்பொருள் மாதிரி...
நாம் உருவாக்குற இயந்திரங்கள் / மென்பொருள்களே ஒரு கட்டதுக்கு மேல சிக்கலானதா (complex) ஆயிட்டா நம்மால அத முழுசாக் கட்டுப்படுத்த இயலாது... அது மாதிரி இதுவும்னு ஒரு தியரி...
வேதாளப் பட்டன் இதைச் சொல்லும் போது இடைல ‘அப்படினு நான் நினைக்குறேன்’னும் சொல்லிருப்பான்...
ஒரு ஊகந்தான்... நீங்க சொல்றா மாதிரி மாகாளி ‘நீங்க விளையாடுங்கடா’னு சும்மா வேடைக்கை கூட பார்க்கலாம்... அவளுக்கு இதுக்கு மேல இதுல தலையிட வேணாம்னு தோன்யிருக்கலாம்... இதுவும் ஒரு ஊகந்தான்...
குழந்தைப் பருவத்தில மொத்தமா தாங்கியிருக்கிற பெற்றோர், வளர்ந்தப்பறம், விலகியிருந்து நமக்கொரு இன்னல்ன்னா மட்டும் தலையிட்டு வழிகாட்ட, அதுவும் ஒரு கட்டத்துக்கு மேலே, மகனே உன் சமர்த்துன்னு விட்டுட்டு போயிருவாங்க... அப்படித்தான் பார்க்கிறேன் கடவுளை.
இப்ப விட்டாச்சு, நீங்களே பார்த்துக்கோங்க. அறவழியெல்லாம் சொல்லிக் குடுத்தாச்சு. உபயோகிப்பதும், உதாசீனப்படுத்துவதும் இனி உங்க கையில்ன்னு வேடிக்கை மட்டுமே பாற்கிறாரோ கடவுள் ?
வித்தியாசமான ஒரு கதைக்கு நன்றி Prof.