Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(14)

Advertisement

ஒரு சண்டைக்கான காரணம் தெரிஞ்சுடுச்சு இனி சிந்தியா பிளாஷ்பேக் அடுத்து செல்வியோடதா :unsure: :unsure: :unsure:
Thanks sis ( kathai flashbacklaiye poitum polaiye??)
 
தென்றல் என்ன வேலைக்காரியா இருக்கேன்னு சொல்றா இந்த திரு மாமனாரும் சரின்னுட்டு போறாரே. இந்த ரெண்டு அத்தைகளும் அடங்கவே மாட்டாங்கலா. இவங்கள பற்றி எப்ப தான் திரு அண்ணாக்கு புரியுமோ. பாவம் ஜானுவும் தென்றலும். அருமையான பதிவு :love: :love: :love:
 
தென்றல் என்ன வேலைக்காரியா இருக்கேன்னு சொல்றா இந்த திரு மாமனாரும் சரின்னுட்டு போறாரே. இந்த ரெண்டு அத்தைகளும் அடங்கவே மாட்டாங்கலா. இவங்கள பற்றி எப்ப தான் திரு அண்ணாக்கு புரியுமோ. பாவம் ஜானுவும் தென்றலும். அருமையான பதிவு :love: :love: :love:
Thanks sis
 
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(14)

தென்றல் கலங்கி கொண்டிருப்பது அறியாது ஜானவி ருத்திரனின் அருகில் இருந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த டாக்டர் விஜயன்,

“ ஜானவிமா அதான் ருத்ரனுக்கு சுயநினைவு வந்துடுச்சுல. அப்புறம் எதுக்கு இப்படி அழற??”

“ இல்ல அண்ணா இத்தனை நாளு என் மகன் குணமாகிடுவான்னு எனக்குள்ள மந்திரமாதிரி சொல்லி சொல்லி என்னைய நானே தேத்திக்குவேன். இன்னைக்கு என் மகன் உண்மையாவே குணமாகிட்டான். என்னால சந்தோச தாங்க முடியல” என ஜானவி கூற திருவாசகமும் கலங்கிய விழிகளை துடைத்தார்.

அதனை கண்ட விஜயன் “ ஏண்டா அதான் உன் ஜோஸ்யக்காரன் சொன்னான்ல ருத்ரனுக்கு கல்யாணம் பண்ணிவைச்சா குணமாகிடும்ன்னு. அது மாதிரி ஆகிடுச்சு. நீ சும்மாவே ஜோசியம்ன்னா அப்படி நம்புவ. இனி ஜோசியாக்காரனுக்கு கோவிலே கட்டிடுவ போல”

“ இதுல என்னடா சந்தேகம் உனக்கு” என திருவாசகம் சிரிப்புடன் கூற

“ அதுக்கு முன்னாடி எனக்கு பில்லை கட்டிடுடா” என பாவம் போல கிண்டலுடன் கூறிய விஜயனை பார்த்து

“ அட நீங்க வேற அண்ணா இனிமே அவரு குளிக்கனும்னாகூட ஜோஸ்யரைதான் கேட்க போறாரு” என ஜானவி சிரிப்புடன் கூற அதற்கு பதில் ஏதும் கூறாது திருவாசகமும் அமைதியாக சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.

அவர் அறிவார் ருத்ரன் குணமடைந்ததால்தான் மூன்று வருடம் சண்டையை மறந்து பழைய ஜானவியாக தன்னை கிண்டல் செய்தது. எனவே அதனை பெரிதுபண்ண விரும்பாமல் திருவாசகமும் அமைதியாக நிற்க;

அதனை கண்டு ‘ இவங்க சண்டையும் சீக்கிரம் முடிவுக்கு வந்தா எல்லாம் நல்லா இருக்கும்’ என இவர்களின் குடும்ப சண்டை தெரிந்த விஜயனும் எண்ணிக்கொண்டு தனது பணியை தொடர்ந்தார்.

ஆனால் ஜானவி திருவாசகத்துடன் சகஜமாக பேசியதை பார்த்து,

“ அக்கா இந்த அண்ணனும் ஜானவியும் மறுபடியும் ஒன்னு சேர்ந்துடுவாங்க போல. நாம எவ்வளவு பேசி அண்ணனை உசுப்பேத்தி ரெண்டு பேரையும் பிரிச்சுவச்சா இந்த அண்ணனும் ஒன்னும் சொல்லாம கம்முன்னு இருக்கு” என லீலாவதி மாயாவதியின் காதில் கிசுகிசுக்க

“ ம்ப்ச் இப்போ அது பெரிய விஷயம் இல்ல. நான் அடுத்து சொல்ல போற விஷயம் ஜானவிக்கு எவ்வளவு அதிர்ச்சின்னு பாரு” என மாயா கூறியதை கேட்ட லீலாவதி

“ அக்கா என்ன பேச போற??”

“ பாரேன்….” என கூறிவிட்டு திருவாசகத்தை நோக்கி

“ அண்ணா” என அழைக்க

“ என்ன மாயா??”

“ அண்ணா ருத்ரன் குணமாகப்போறதா நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆனா…..”

“ என்ன மாயா ஆனா….???”

“ இல்ல இப்போவே இவன் சின்னுன்னு சொல்லி அலறுறான். ஒரு வேளை நல்லா சுயநினைவு வந்தப்புறம் நாம கல்யாணம் விஷயம் சொன்னா நிச்சயம் அவனுக்கு அது மன அழுத்தம் குடுக்கும்” என மாயாவதி கூறிக்கொண்டிருக்கையில்

“ ஏன் இதை அண்ணனும் தங்கச்சிகளும் ருத்ரன் கோமாவுல இருக்கையிலே கல்யாணம் பண்ணிவைக்குறப்போ தெரியலையோ??” என கோவமாக இடைமறித்து ஜானவி கூற

“ ம்ப்ச் அது இல்ல அண்ணி அப்போ ருத்ரன் பிழைச்சா போதும்ன்னு ஜோசியர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணி வச்சோம். இப்போ எதார்த்தத்தை பார்க்கணும்ல” என மாயா கூறுகையில் மறுபடியும் ஜானவி ஏதோ கூற வருகையில்,

“ நீ இப்போ என்ன சொல்ல வர மாயா??” என திருவாசகம் இடைபுகுந்து வினவ

“ அதான் அண்ணா விஜயன் சார் இங்கதான் இருக்காரு அவருக்கிட்டையே கேளு. இந்தமாதிரி நீ மயக்கத்துல இருக்கையிலே இப்போ கல்யாணம் ஆகிடுச்சு. அப்பிடின்னு ருத்ரன்ட சொன்னா அவனுக்கு அது மன அழுத்தத்தை கொடுக்குமா இல்லையான்னு” என பாவம் போல மாயாவதி கூற

திருவாசகம் எதுவும் கூறாது விஜயனை நோக்கினார்.

“ ஹ்ம்ம் ஆமா திரு. இப்போவே அவன் எழுந்தவுடன் எப்படி நம்மகிட்ட நடந்துக்க போறான்னு தெரியல. சிந்தியாவை பத்தி வேற நாம சொல்லணும். இதுல கல்யாணம் ஹ்ம்ம்…….. இதை கொஞ்ச நாள் கழிச்சு சொன்னா நல்லதுன்னு தோணுது. ஏன்னா கோமாவுல இருந்து உடனே சரி ஆகிடமுடியாது இல்லையா.

மூளை கொஞ்சம் கொஞ்சமா நடப்பையும் கடந்த காலத்தையும் ஏத்துக்கணும். அதுக்கு நாம கொஞ்சம் நேரம் குடுக்கணும். அதனால மாயா சொல்றமாதிரி இப்போதைக்கு அவனுடைய கல்யாணத்தை பத்தி சொல்ல வேணாம்” என விஜயன் கூறி முடிக்க; உடனே லீலாவதி,

“ ஆமா அண்ணா நாம இப்போதைக்கு எதுவும் அவனுக்கு சொல்லவேணாம். நமக்கு ருத்ரனோட நலன்தான் முதல்ல முக்கியம்” என லீலாவதியும் கூற சரி எனும் விதமாக திருவாசகம் தலை அசைத்தார். இதனை கண்டு பல்லை கடித்த ஜானவி,

“ அப்போ இந்த பொண்ண என்ன பண்றதாம்??” என தென்றலின் அருகில் சென்று கேட்க

“ பேசாம எல்லாம் சரி ஆகுறவரைக்கும் அவுங்க பாட்டி வீட்டுல இருக்கட்டும். இங்க இருந்தா நாம என்னன்னு சொல்லி அறிமுகபடுத்தறதாம். சொந்தகாரங்ன்னு சொல்ல முடியாது. பார்த்த சுத்த பட்டிகாட்டுன்னு தெரியுது. வேலைக்கு வந்தவன்னு சொல்ல முடியாது. ஏன்னா படிக்கவும் இல்ல. வேணும்ன்னா வேலைக்காரின்னு சொல்லலாம். அதுக்கு நீங்க ஒத்துக்க மாட்டிங்க” என லீலாவதி பேசிக்கொண்டிருக்கையில்

“ இல்ல நான் இங்க வேலைகாரியாவே இருக்கேன் ம்மா…” என அதுவரை அமைதியாக இருந்த தென்றல் கூற

“ ம்ப்ச் தென்றல் நீ வேற ஏன்ம்மா??. உன்னைய நான் இங்க எஜமானின்னு சொல்லிக்கிட்டு இருக்கே. ரொம்ப சாதரணமா வேலைக்காரியா இருக்கேன்னு சொல்ற” என ஜானவி சலிப்புடன் கூற

“ இல்லமா நான் எங்க ஊருக்கு போறதுக்கு பதிலா இங்க ஏதாவது உதவிமாதிரி செஞ்சுகிட்டு உங்க கூடவே இருக்கேன்மா”

“ நீ ஏன் ஊருக்கு போகணும்??. இவுங்க சொன்னா போயிருவியா??. இல்ல போகவிட்டுடுவேனா. நீ என்ன பேசிகிட்டுஇருக்க. இல்ல உங்க சின்னஆத்தாதான் சும்மா விட்டுடுவாங்களா??.” என ஜானவி பேசிக்கொண்டிருகையில்

மாயாவதி, “ அண்ணா பேசாம இவளை ருத்ரன் பார்க்கமுடியாம பார்த்துக்குவோம். ஒருவேளை இவளை பார்த்து யாருன்னு கேட்டுடா வேலைக்காரின்னு சொல்லிக்கலாம் கொஞ்ச நாள்தானே இவளும் இங்க இருந்தமாதிரி ஆச்சு நம்ம ருத்ரனக்கு பிரச்சனை இல்ல” என கூற, அதற்கு எதுவும் கூறாது திருவாசகம் தென்றலை காண,

“ நா…. நான்… இவங்க சொன்னமாதிரியே இருக்கேனுங்க” என மெல்லிய குரலில் கூற திருவாசகம் எதுவும் கூறாது சரி எனும்விதமாக தலை ஆட்டிவிட்டு சென்றுவிட்டார். விஜயனும் அடுத்து சென்றுவிட, தென்றலை முறைத்து கொண்டிருந்த ஜானவியை பார்த்து மாயாவதி லீலாவதியிடம்,

“ ஏன் லீலா இந்த பரம்ம்ம்பரை தாலியை பத்தி நீ என்ன நினைக்குற??”

“ அட!!... நீ வேற அக்கா. என்ன தான் நாம நல்லது பண்ண நினைச்சாலும் சிலருக்கு தலையில என்ன இருக்கோ அப்படித்தானே நடக்கும். வா நாம போவோம்” என கூறிக்கொண்டு அங்கிருந்து இருவரும் நகர்ந்தனர் தென்றல் ஜானவியை நெருங்கி,

“ அம்மா அது….”

“ நீ எதுவும் பேசாத தென்றல். நான் ஒன்னு நினைச்சா நீ உன் இஷ்டத்துக்குத்தான் இருக்க”

“ அப்படி இல்லமா நீங்க எனக்கு நல்லது பண்ணத்தான் நினைக்குறிங்க ஆனா இப்போ என்னையைவிட சாரோட உடம்புதான் முக்கியம். அதனால தயவுசெய்து கோவப்படாதிங்கமா” என தென்றல் கெஞ்ச

அதற்கு ஜானவி எதுவும் கூறாது அமைதியாக ருத்ரனை பார்த்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார் . தென்றல் ருத்ரனை நெருங்கினாள்.

“ சார் நீங்க குணமானதை நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. இப்போவே உங்களுக்கும் உங்க வாழ்க்கைக்கும் கொஞ்சம் கூட தகுதி இல்லாத நான் போயிருப்பேன் சார். ஆனா நன்றி கடனா கொஞ்ச நாளைக்கு உங்களுக்கு வேலைக்காரியா இருந்துட்டு அப்புறம் போயிடுறேன் சார்” என கூறிவிட்டு அறையைவிட்டு வெளியேறி ஜானவியை தேட,

அவர் தோட்டத்தில் இருப்பதை பொன்னி மூலம் அறிந்து அங்கு சென்றாள். அப்போது ஜானவி தோட்டத்தில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்து யாருக்கோ போன் செய்துக்கொண்டிருந்தார். அதனை கண்டு தென்றல் அங்கிருந்து செல்ல எண்ணுகையில்,

‘ தென்றல் இங்க வா’ என விதமாக தந்து இடதுகையை அசைத்து அழைக்க

“ இல்லமா நீங்க பேசிட்டு கூப்புடுங்க. நான் இங்க இருக்கேன்”

“ நீ வா நான் உன் ஆத்தாவுக்குத்தான் பேசப்போறேன்” என போனை காதில் இருந்து எடுத்துவிட்டு தென்றலிடம் கூற

தென்றல் வேகமாக ஜானவியை நெருங்கவும் கண்ணன் போனை எடுக்கவும் சரியாக இருந்தது.

“ ஹலோ நான் சென்னையில் இருந்து தென்றல் மாமியார் ஜானவி பேசுறேன். கண்ணன்….”

“ ஹ்ம்ம் நான் கண்ணன்தான் பேசுறேனுங்க. அங்க தென்றல் நல்லா இருக்காளா??”

“ ஹ்ம்ம் நல்லா இருக்கா. நான் சின்னாத்தா அத்தைகிட்ட பேசணுமே இப்போ பேசலாங்களா??.”

“ ஹ்ம்ம் இப்போ மத்திய சாப்பாட்டுக்கு வீட்டுக்குத்தான் வந்துருக்கேன். இருங்க அம்மாகிட்ட கொடுக்குறேன்”

“ ஹ்ம்ம்”

“ அம்மா…. அம்மா….” என திண்ணையில் அமர்ந்து இருந்த சின்னாத்தாவை உரக்க அழைத்த கண்ணன்

“ இந்தாம்மா” என போனை speaker ல் போட்டு சின்னாத்தாவின் காதின் அருகில் வைத்தான்

“ அம்மா தென்றல் மாமியார் பேசுறாங்க சென்னையில இருந்து” என சத்தமாக கூற கண்ணனின் சத்தம் கேட்டு சுந்தரியும் திண்ணைக்கு வந்தாள்.

“அப்படியா??. ஹல்லோ…. நான் பூந்தென்றல் செல்வி புள்ளையோட பாட்டி சின்னாத்தா பேசுறேன்”

“ அத்தை நான் ஜானவி பேசுறேன். கேட்குதா??”

“ சாவியா??. எப்பிடித்தா இருக்க??. நல்ல இருக்கியா??. எம்புட்டு பேத்தி எப்பிடி இருக்கு?. கொஞ்சம் சத்தமா பேசுத்தா” என சின்னாத்தா பேச

“ ஹம்ம்ஹும்speaker ல போட்டே இந்த கிழவிக்கு கேட்கமாட்டேன்குது . இதுல
இதுகிட்ட அப்படி என்னத்தை பேச போறாங்க” என சலித்துக்கொண்டு சுந்தரி
இவர்களின் உரையாடலை கவனிக்க ஆரம்பித்தாள்.

“ ஹ்ம்ம் நான் நல்லா இருக்கேன் அத்தை. தென்றலும் நல்லா இருக்கா. நான்
உங்ககிட்ட ஒரு நல்ல செய்தி சொல்லத்தான் போன் பண்ணுனே”

“ ஆத்தி !!!......கல்யாணம் ஆகி ரெண்டு நாளுக்குள்ள நல்ல செய்தியா??” என சுந்தரி
சத்தமாக கூற

அதனை கவனித்த சின்னாத்தா,

“ சாவி செத்த இருத்தா. இங்க ஒரு பல்லி சத்தம் போடுது அடிச்சு தூக்கிப்போட்டு
வரேன்.” என ஜானவியிடம் கூறிவிட்டு
Nice ep
 

Advertisement

Top