Hi ladies and girliess.. .thanksssssssssss alot....hope you are enjoying the tale.
share your viewsssssss..
ராஜாவோட இயல்பு அப்படி தான்....காதல்...அது இயற்கை...மழை போல்...தென்றல் போல்....ஏன் சொல்றன்னு எபில படிங்க friendss...
here comes the next update
---------------------------------------------------------------------
காதல் 7
அந்த காலை நேரத்தில் டைமண்ட் டவர்ஸ் அதற்குரிய இயல்பான சுறுசுறுப்பில் இயங்கிக் கொண்டிருந்தது. மதுவோ படபடப்பாக காணப்பட்டாள். அதைக் கண்ட ஹம்சா,
“என்னாச்சு டி.. ஏன் உன் முகம் ஒரு மாறியா இருக்கு…?” எனக் கேட்க,
தனது மன உணர்வுகள் வெளியில் தெரியும்படியா இருக்கிறது என நொந்தவள் அதை மறைக்க முயன்றபடியே ,
“எனக்கென்ன..நான் நல்லாதானே இருக்கேன்….” என்றவாறே கணினி திரையில் பார்வையைப் பதித்து தன் வேலையைப் பார்க்கத் துவங்கினாள்.
மதுரவசனி நேற்று இரவு நந்தனிடம் பேசியப் பின் மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். அவனது குரல் நெருக்கத்தில் கேட்டாற் போல் கேட்டதில் பதறியவள் அலைபேசியை அணைத்துத் தூக்கிப் போட்டாள்.
அவனது கேள்வியின் அர்த்தம் புரியாத அளவு அவள் சிறுபெண் இல்லையே..! எந்த விதத்தில் தான் அவனுக்கு உரிமைக் கொடுத்தோம் என்று அவளுக்கு என்ன யோசித்தும் புரியவில்லை.ஆனால் இதை இனி தொடர விடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தாள். ஹம்சாவிடம் இதைப் பற்றி அவள் மூச்சு விடவில்லை. நந்தனின் மனம் புரிந்த நொடி முதல் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதுவும் அவனது குரல் நெஞ்சை உருக்கும் வகையில்..!!
அப்பப்பா…. காதோரம் இன்னும் ஒலிக்கிறதே..!
இப்படி மதுவின் யோசனை ஓடிக் கொண்டிருக்க, தீபனிடமிருந்து அழைப்பு வர அவனறைக்குள் சென்றாள்.
“மது… உங்க போனை ஆன் பண்ணுங்க…” என தீபன் சொல்ல
“நா…நான் ஏன் ஆன் பண்ணனும்…. என் போன்…. என்னிஷ்டம்…… எப்ப ஆன் பண்ணனும்.. ஆஃப் பண்ணனும்னு எனக்குத் தெரியும்…” என அவளுக்கிருந்தப் பதற்றத்தில் படபடவென பொரிய,
தீபனோ, ‘டேய் அண்ணா….. நீ ஒரு இம்சை அரசன்னா… உனக்கு வாய்ச்சது ஒரு இம்சை அரசிடா…. கடவுளே..’ என நொந்தவன்
“ஓகே மது…. இப்போ எங்கிட்ட சொன்னதையெல்லாம் உங்களுக்கு என் அண்ணன் போன் பண்ணுவான் அவன்ட்ட சொல்லிடுங்க… ஓகேவா…?” என அவளோ பயத்தோடு அவனை பார்த்தாள்.
‘நந்தன்….!! ஐயோ… அவனுக்குப் பயந்து தானே நான் போனை ஆஃப் செஞ்சேன்.. இப்படிப் படுத்துறானே.. கடவுளே’ என நினைத்தவள் அப்படியே யோசனையாக நிற்க,
அந்த அறையில் உள்ள தொலைப்பேசி அடிக்க, அதை காதில் வைத்த தீபன் , “நான் சொல்லிட்டேன்……இரு….” என்றவன் அதை மதுவிடம் நீட்ட, அவளும் தயக்கத்தோடு வாங்கிக் கொண்டாள்.
அந்த பக்கம் ஆழ்ந்து ஒலித்தது,
“மதும்மா……..” என்ற நந்தனின் குரல்.
உள்ளம் எல்லாம் பதற்றம் மேலோங்க, இதழ்கள் சிறைப்பட்டிருக்க வார்த்தை வராமல் தடுமாறினாள் மதுரவசனி.
“மது… ப்ளீஸ்டா….. நான் உங்கிட்ட பேசனும்.. ஏன் போனை எடுக்கவே மாட்ற…... உனக்காகப் பாரு நான் இவனுக்கெல்லாம் போன் செய்ய வேண்டியதா இருக்கு…. ப்ளீஸ் மது.. நான் உன் ஆபிஸ் வாசல்ல கார்ல வெயிட் பண்றேன்… கீழ இறங்கி வா……. உங்கிட்ட நான் மனசு விட்டு பேசனும்டா…” என அவன் மென்மையாய் சொல்ல
“உங்ககிட்ட பேச எனக்கு என்ன இருக்கு… சார்… ப்ளீஸ்…. என்னைத் தொல்லை பண்ணாதீங்க……” எனக் கெஞ்ச
“மது… நான் உன்னைப் பார்க்கனும்…. கீழ வா…..” என அவன் அழுத்தமாய் உரைக்க
“என்னால கீழ வர முடியாது…….”
“மது….” என்றவனின் குரலில் கோபம் எட்டிப்பார்க்க
அதை மதுரவசனி சட்டை செய்யவில்லை. அவளது இயல்பு மீண்டு
“என்ன மது…? இதே உங்க வீட்டுப் பொண்ணா இருந்தா… இப்படி தான் கூப்பிடுவீங்களா… என்ன பேசனும்னாலும் நான் இருக்க இடத்துக்கு வந்து பேசுங்க… என்னால கீழ வர முடியாது.. தட்ஸ் இட்…..” எனக் கடுப்பாக உரைக்க
தீபனோ, “ஆஹா… அந்த முரட்டுக்காளைக்கு மூக்காணங்கயிறு மாட்ட சரியான ஆளு இவங்க தான்… அண்ணியாரே.. கலக்குங்க…” எனச் சொல்லிக் கொண்டான் மனதில்.
நந்தனுக்குக் கோபம் இருந்தப் போதிலும் அவளது கூற்றில் இருந்த நியாயம் உணர்ந்தவன்,
“சரி மது…. ஐ வில் கம்… அப்” என்றவன் அன்று போல் பிரத்யேக வழி மூலம் அவர்களது பெர்சனல் அறைக்குள் சென்றான்.
“மது… மேல நம்ம ரூம் இருக்கு….உங்களுக்குத் தெரியுமே…… அந்த ரூம் தான்…” என்று சொல்ல இவள் தலையசைத்து சென்றாள்.
அங்குச் சென்று பார்த்தால் வழக்கத்துக்கு மாறாய் நந்தன் மிஸ்டர்.கூலாக அமர்த்தலாய்க் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தான்.
அவனுக்கு நேர்மாறாய் மதுரவசனியோ, “என்ன… என்ன…. நினைச்சிட்டு இருக்கீங்க…. பார்த்தா எப்படி தெரியுது……. நீங்க என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்னு நினைச்சீங்களா… வான்னா வரனும்.. போன்னா போகனுமா…….. அதுக்கெல்லாம் வேற ஆளப் பாருங்க……..கீழ வா வான்னு சொல்றீங்க…….. ஒரு ஆம்பள கூடத் தனியா நான் பேசினா…… என்னை எல்லாரும் என்ன நினைப்பாங்க………. இனிமே இப்படி எதாவது செஞ்சா…. அவ்வளவுதான்………. எங்க பெரியப்பாட்ட போட்டுக்கொடுத்துடுவேன்…. ஜாக்கிரதை ஆமா…” எனப் பொரிந்து தள்ள
அவன் இன்னும் கூல் கேப்டனாக இருக்க, மதுவுக்குக் கோபம் அதிகரிக்க அங்கிருந்த சோபாவின் குஷனை அவன் மீது அடித்தாள்.
அதை லாவகமாக கேட்ச் செய்தவன், “உஷ்…………… அப்பா…………. என்ன சூடு….” என்றபடியே ரிமோட்டை எடுத்து ஏசி குளிரை அதிகப்படுத்தினான்.
“மது மை ஸ்வீட் மது…………. பேசி முடிச்சிட்டியா.. நான் கூட நீ ரொம்ப சாதுன்னு நினைச்சா… நீ என்ன இவ்வளவு ஹாட்டா…. இருக்க…” என அவளைப் பார்க்க, அவளோ கண்கள் சிவக்க அவனை முறைக்க
“அய்யோ…. அம்மாடி… அப்படில்லாம் நான் தப்பான அர்த்தத்துல சொல்லல மது… கூல் கூல்…. அக்சுவலி… எனக்கு இந்த மதுவை ரொம்பப் பிடிச்சிருக்கு… இந்த ராஜாவுக்கு ஏத்த ராணி.. ஆட்டம் இனி நல்லா இருக்குமில்ல…” என்று கண்ணடித்தவனின் செய்கையில் மங்கையவள் உள்ளம் தாறு மாறாய் தப்பித் துடித்தது.
“ஓகே மது.. கொஞ்ச கொஞ்சமே கொஞ்சம்… நேரம் நான் சொல்றதை கேளு…….. உன்னை கீழ வான்னு சொன்னது தப்புதான்……. எனக்கு புரிஞ்சது.. ஆனா உன்னைப் பார்க்காம இருக்க முடியல… அதனால தான்…. ஒரு நாள் தான் ஆச்சு உன்னை நான் பார்த்து…. ஆனா இனி ஒரு நாளும் உன்னைப் பார்க்காம இருக்க முடியாது மதும்மா… ஐ அம் ஷ்யூர்……… ப்ளீஸ் குறுக்க பேசாத…..” என்று அவளை தடுத்தவன் மேலும் தொடர்ந்தான்.
“என்னோட இத்தனை வருச வாழ்க்கைக்கான அர்த்தம் நீ தான் மது….. ஒருத்தங்களுக்கு உலகத்தில நாம முக்கியமானவங்களா இருக்கோங்க்ற நினைப்பு இருக்கே மது…. நீ நம்ப மாட்ட…… அப்படி அப்படி…… ஒரு சந்தோசம்.. நம்ம பிறப்புக்கே அர்த்தம் தந்த மாதிரி….. நீ எனக்கு அப்படி ஒரு நிம்மதியைத் தந்த மது… ப்ளீஸ் மது.. எப்போ எப்படின்னு தெரில…… நீ……… நீ எனக்குள்ள…. இல்ல… இல்ல…. நான் நான் உனக்குள்ள தொலைஞ்சு போயிட்டேன்……… மது……… நீ எனக்கு வேணும் மது…. வாழ்க்கை முழுசுக்கும்… என்னோட நிம்மதி உங்கிட்ட இருக்கு மது… நீ மட்டும் என் லைஃப்ல இருந்தா போதும் மது…. எனக்கு எதுவுமே தேவையில்ல…….. நேத்து தான் நான் ரொம்ப வருசம் கழிச்சு நிம்மதியா தூங்கினேன் மது….” என்றான் உணர்வுப் பூர்வமாய்.
“ப்ளீஸ் நந்தன்… இதெல்லாம் செட் ஆகாது… நீங்க காவிரி தண்ணியை எதிர்ப்பார்க்கற எங்க டெல்டா ஆளுங்க மாதிரி காத்திட்டே கனவுக் கண்டுட்டே இருக்கனும்……. வேண்டாம்… என் நினைப்பே உங்களுக்கு வேண்டாம்…. உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்காதீங்க…. என் பேச்சை கேளுங்க……” என மதுரவசனி அவனின் எண்ணங்களுக்கு மட்டுமல்லாது அவளது எண்ணங்களுக்கு அணைப் போட முயல,
“கேட்கிறேன் மது… ஆனா நீ என் மனைவியான பின்னாடி தான்……… நான் மட்டுமா கஷ்டப்படுவேன் மது… அப்படியே நான் கஷ்டப்பட்டா உனக்கு என்ன….? சொல்லு…சொல்லு…” என அவன் அவளருகே வந்து ஆவேசமாகக் கேட்க
“இப்போ பேச போறியா இல்லயா நீ…….. ஸ்பீக் அவுட்……” என அவனுக்கு எப்போதும் வரும் அதீத கோபத்தோடுக் கேட்க
அவனுக்குக் கொஞ்சமும் குறையாத சூட்டோடு, “சும்மா…. ஒரு நாள்ல உங்களுக்கு காதல் முளைச்சிடுமா….. சின்னப்புள்ளத்தனமா இல்லயா உங்களுக்கு……? விட்டுக்கொடுக்காத விட்டுப்போகாதான்னு…. டயலாக் அடிக்கிறீங்க……..? நேத்துப் பார்த்தப் பொண்ணுக்கிட்ட இப்படி தான் பட்டுனு பேசுவீங்களா….?” எனக் காட்டமாய்க் கேட்க
“அப்போ.. என்னை வேற என்ன செய்ய சொல்ற நீ….? பத்து நாள் ஹலோ சொல்லி ஒரு மாசம் கழிச்சு ப்ர்ண்ட்ஸ்ன்னு கை நீட்டி அப்புறமா ஒரு ஆறு மாசமோ ஒரு வருசமோ பின்னாடி சுத்தி வந்து பொக்கே டெட்டி பியர் எல்லாம் கொடுத்து லவ் சொல்லனுமா……. சொல்லு….. என்னால அதெல்லாம் முடியாது மது…. எனக்கு உன்னை விட முடியாதுன்னு தோணின செகண்ட்லேர்ந்து உங்கிட்ட என் மனசை சொல்லனும்னு தான் நான் காத்திட்டு இருக்கேன்….”
“என் மனசை மறைச்சு முகமூடிப் போடவெல்லாம் முடியாது மது….. பட்டுன்னு தான் நான் பேசுவேன்… உங்கிட்ட எனக்குத் தோணின ஃபீலீங்க்ஸை மறைச்சிட்டு எதுக்கு நான் நடிக்கனும்… சொல்லு... உன்னைப் பிடிச்சிருக்கு… எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணனும்... அதான் என்னோட எண்ணம்…… இப்போ என்ன ரோஸ் கொடுத்து ப்ரோபோஸ் செஞ்சா ஒத்துப்பியா நீ….” எனச் சொன்னவன் டக்கென அங்கிருந்த பூஜாடியிலிருந்து ஒரு ரோஜாவை எடுத்து நீட்டினான்.
அதைக் கண்டவள் அவனின் திடிர் செய்கையில் அதிர்ந்தப் போதிலும் அவனை அந்த கோலத்தில் கண்டு இதழ்க்கடையில் ரகசியப் புன்னகை உதித்தது. அதை அவளது கண்ணனும் கண்டுக் கொண்டான்.
“என்ன சிரிப்பு மேடம்… சிங்கரா இருக்கான்… சிங்கிள் ரோஸுக்கு வழியில்லாம… இங்கேயிருந்து எடுத்துக் கொடுக்கிறானேன்னு தானே நினைச்ச..” என அவன் தனக்கே உரிய ப்ரேத்யேகமான புன்னகையோடு கேட்க, பேதையவள் தடுமாறித்தான் போனாள்.
அவளது புன்னகை இன்னும் விரிய, “மது ப்ளீஸ் சிரிக்காதடி…” என அவன் சிரிக்க
இப்போது மது முறைக்க, “இல்ல… சும்மாவே நீ அழகு… சிரிச்சா ரொம்ப அழகா…. அதான்.. சிரிக்கிற உன்னை சிறைப்பிடிக்கனும்னு ஆசை வருது மது…”
“நீங்க சிங்கரா இல்ல கவிஞரா…?” என அவள் புருவம் உயர்த்திக் கேட்க,
“அய்யோ மது…. நான் சிங்கர் தான்….. கவிஞர்லாம் இல்லடா…” என அவனும் புன்னகைக்க
“அதான் நானும் சொல்ல வந்தேன்…… நீங்க சிங்கர்.. நான் உங்க ரசிகை….. அதை தாண்டி நமக்குள்ள ஒன்னுமில்ல..” என சீரியசாகச் சொல்ல
நந்தனின் முகம் இவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மை மறைந்து இறுகிப்போய் விட்டது. அவனின் பெருமூச்சுகள் அவன் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த நினைப்பதை உணர்த்தியது.
“லுக் மது….. இவ்வளவு நேரம் நான் பேசுனது நமக்கானது தான்… இதுவரைக்கும் எந்த பொண்ணுக்கிட்டையும் நான் இப்படி பேசினது இல்ல…… அண்ட் பாடுறது என்னோட தொழில்… உனக்குப் பிடிக்கலன்னா நான் அதை விட்டுடுறேன் மது… எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது… நான் இருக்க துறையில அதுக்கான வாய்ப்புகள் இருந்தும் கூட எனக்கு அதுல பெரிசா நாட்டமில்ல…… ஆனா மதுவையே தொடாத நான் ஆசைப்படுற ஒரே மது நீதான்….. எந்த நொடியில நீ என்னை விட்டுக்கொடுக்கலயோ அந்த நொடி நீ எனக்குள்ள ஆழமா வந்துட்ட மது… ப்ளீஸ்…….. உனக்கு என்ன ப்ரச்சனைன்னு சொல்லு மது……”
“ஆனா என்னை நீ விட்டுப்போயிட்டா எனக்கு எதுவுமே இல்ல……. அதை புரிஞ்சிக்கோ…” என அழுத்தமாகச் சொல்ல,
share your viewsssssss..
ராஜாவோட இயல்பு அப்படி தான்....காதல்...அது இயற்கை...மழை போல்...தென்றல் போல்....ஏன் சொல்றன்னு எபில படிங்க friendss...
here comes the next update
---------------------------------------------------------------------
காதல் 7
அந்த காலை நேரத்தில் டைமண்ட் டவர்ஸ் அதற்குரிய இயல்பான சுறுசுறுப்பில் இயங்கிக் கொண்டிருந்தது. மதுவோ படபடப்பாக காணப்பட்டாள். அதைக் கண்ட ஹம்சா,
“என்னாச்சு டி.. ஏன் உன் முகம் ஒரு மாறியா இருக்கு…?” எனக் கேட்க,
தனது மன உணர்வுகள் வெளியில் தெரியும்படியா இருக்கிறது என நொந்தவள் அதை மறைக்க முயன்றபடியே ,
“எனக்கென்ன..நான் நல்லாதானே இருக்கேன்….” என்றவாறே கணினி திரையில் பார்வையைப் பதித்து தன் வேலையைப் பார்க்கத் துவங்கினாள்.
மதுரவசனி நேற்று இரவு நந்தனிடம் பேசியப் பின் மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். அவனது குரல் நெருக்கத்தில் கேட்டாற் போல் கேட்டதில் பதறியவள் அலைபேசியை அணைத்துத் தூக்கிப் போட்டாள்.
அவனது கேள்வியின் அர்த்தம் புரியாத அளவு அவள் சிறுபெண் இல்லையே..! எந்த விதத்தில் தான் அவனுக்கு உரிமைக் கொடுத்தோம் என்று அவளுக்கு என்ன யோசித்தும் புரியவில்லை.ஆனால் இதை இனி தொடர விடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தாள். ஹம்சாவிடம் இதைப் பற்றி அவள் மூச்சு விடவில்லை. நந்தனின் மனம் புரிந்த நொடி முதல் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதுவும் அவனது குரல் நெஞ்சை உருக்கும் வகையில்..!!
அப்பப்பா…. காதோரம் இன்னும் ஒலிக்கிறதே..!
இப்படி மதுவின் யோசனை ஓடிக் கொண்டிருக்க, தீபனிடமிருந்து அழைப்பு வர அவனறைக்குள் சென்றாள்.
“மது… உங்க போனை ஆன் பண்ணுங்க…” என தீபன் சொல்ல
“நா…நான் ஏன் ஆன் பண்ணனும்…. என் போன்…. என்னிஷ்டம்…… எப்ப ஆன் பண்ணனும்.. ஆஃப் பண்ணனும்னு எனக்குத் தெரியும்…” என அவளுக்கிருந்தப் பதற்றத்தில் படபடவென பொரிய,
தீபனோ, ‘டேய் அண்ணா….. நீ ஒரு இம்சை அரசன்னா… உனக்கு வாய்ச்சது ஒரு இம்சை அரசிடா…. கடவுளே..’ என நொந்தவன்
“ஓகே மது…. இப்போ எங்கிட்ட சொன்னதையெல்லாம் உங்களுக்கு என் அண்ணன் போன் பண்ணுவான் அவன்ட்ட சொல்லிடுங்க… ஓகேவா…?” என அவளோ பயத்தோடு அவனை பார்த்தாள்.
‘நந்தன்….!! ஐயோ… அவனுக்குப் பயந்து தானே நான் போனை ஆஃப் செஞ்சேன்.. இப்படிப் படுத்துறானே.. கடவுளே’ என நினைத்தவள் அப்படியே யோசனையாக நிற்க,
அந்த அறையில் உள்ள தொலைப்பேசி அடிக்க, அதை காதில் வைத்த தீபன் , “நான் சொல்லிட்டேன்……இரு….” என்றவன் அதை மதுவிடம் நீட்ட, அவளும் தயக்கத்தோடு வாங்கிக் கொண்டாள்.
அந்த பக்கம் ஆழ்ந்து ஒலித்தது,
“மதும்மா……..” என்ற நந்தனின் குரல்.
உள்ளம் எல்லாம் பதற்றம் மேலோங்க, இதழ்கள் சிறைப்பட்டிருக்க வார்த்தை வராமல் தடுமாறினாள் மதுரவசனி.
“மது… ப்ளீஸ்டா….. நான் உங்கிட்ட பேசனும்.. ஏன் போனை எடுக்கவே மாட்ற…... உனக்காகப் பாரு நான் இவனுக்கெல்லாம் போன் செய்ய வேண்டியதா இருக்கு…. ப்ளீஸ் மது.. நான் உன் ஆபிஸ் வாசல்ல கார்ல வெயிட் பண்றேன்… கீழ இறங்கி வா……. உங்கிட்ட நான் மனசு விட்டு பேசனும்டா…” என அவன் மென்மையாய் சொல்ல
“உங்ககிட்ட பேச எனக்கு என்ன இருக்கு… சார்… ப்ளீஸ்…. என்னைத் தொல்லை பண்ணாதீங்க……” எனக் கெஞ்ச
“மது… நான் உன்னைப் பார்க்கனும்…. கீழ வா…..” என அவன் அழுத்தமாய் உரைக்க
“என்னால கீழ வர முடியாது…….”
“மது….” என்றவனின் குரலில் கோபம் எட்டிப்பார்க்க
அதை மதுரவசனி சட்டை செய்யவில்லை. அவளது இயல்பு மீண்டு
“என்ன மது…? இதே உங்க வீட்டுப் பொண்ணா இருந்தா… இப்படி தான் கூப்பிடுவீங்களா… என்ன பேசனும்னாலும் நான் இருக்க இடத்துக்கு வந்து பேசுங்க… என்னால கீழ வர முடியாது.. தட்ஸ் இட்…..” எனக் கடுப்பாக உரைக்க
தீபனோ, “ஆஹா… அந்த முரட்டுக்காளைக்கு மூக்காணங்கயிறு மாட்ட சரியான ஆளு இவங்க தான்… அண்ணியாரே.. கலக்குங்க…” எனச் சொல்லிக் கொண்டான் மனதில்.
நந்தனுக்குக் கோபம் இருந்தப் போதிலும் அவளது கூற்றில் இருந்த நியாயம் உணர்ந்தவன்,
“சரி மது…. ஐ வில் கம்… அப்” என்றவன் அன்று போல் பிரத்யேக வழி மூலம் அவர்களது பெர்சனல் அறைக்குள் சென்றான்.
“மது… மேல நம்ம ரூம் இருக்கு….உங்களுக்குத் தெரியுமே…… அந்த ரூம் தான்…” என்று சொல்ல இவள் தலையசைத்து சென்றாள்.
அங்குச் சென்று பார்த்தால் வழக்கத்துக்கு மாறாய் நந்தன் மிஸ்டர்.கூலாக அமர்த்தலாய்க் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தான்.
அவனுக்கு நேர்மாறாய் மதுரவசனியோ, “என்ன… என்ன…. நினைச்சிட்டு இருக்கீங்க…. பார்த்தா எப்படி தெரியுது……. நீங்க என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்னு நினைச்சீங்களா… வான்னா வரனும்.. போன்னா போகனுமா…….. அதுக்கெல்லாம் வேற ஆளப் பாருங்க……..கீழ வா வான்னு சொல்றீங்க…….. ஒரு ஆம்பள கூடத் தனியா நான் பேசினா…… என்னை எல்லாரும் என்ன நினைப்பாங்க………. இனிமே இப்படி எதாவது செஞ்சா…. அவ்வளவுதான்………. எங்க பெரியப்பாட்ட போட்டுக்கொடுத்துடுவேன்…. ஜாக்கிரதை ஆமா…” எனப் பொரிந்து தள்ள
அவன் இன்னும் கூல் கேப்டனாக இருக்க, மதுவுக்குக் கோபம் அதிகரிக்க அங்கிருந்த சோபாவின் குஷனை அவன் மீது அடித்தாள்.
அதை லாவகமாக கேட்ச் செய்தவன், “உஷ்…………… அப்பா…………. என்ன சூடு….” என்றபடியே ரிமோட்டை எடுத்து ஏசி குளிரை அதிகப்படுத்தினான்.
“மது மை ஸ்வீட் மது…………. பேசி முடிச்சிட்டியா.. நான் கூட நீ ரொம்ப சாதுன்னு நினைச்சா… நீ என்ன இவ்வளவு ஹாட்டா…. இருக்க…” என அவளைப் பார்க்க, அவளோ கண்கள் சிவக்க அவனை முறைக்க
“அய்யோ…. அம்மாடி… அப்படில்லாம் நான் தப்பான அர்த்தத்துல சொல்லல மது… கூல் கூல்…. அக்சுவலி… எனக்கு இந்த மதுவை ரொம்பப் பிடிச்சிருக்கு… இந்த ராஜாவுக்கு ஏத்த ராணி.. ஆட்டம் இனி நல்லா இருக்குமில்ல…” என்று கண்ணடித்தவனின் செய்கையில் மங்கையவள் உள்ளம் தாறு மாறாய் தப்பித் துடித்தது.
“ஓகே மது.. கொஞ்ச கொஞ்சமே கொஞ்சம்… நேரம் நான் சொல்றதை கேளு…….. உன்னை கீழ வான்னு சொன்னது தப்புதான்……. எனக்கு புரிஞ்சது.. ஆனா உன்னைப் பார்க்காம இருக்க முடியல… அதனால தான்…. ஒரு நாள் தான் ஆச்சு உன்னை நான் பார்த்து…. ஆனா இனி ஒரு நாளும் உன்னைப் பார்க்காம இருக்க முடியாது மதும்மா… ஐ அம் ஷ்யூர்……… ப்ளீஸ் குறுக்க பேசாத…..” என்று அவளை தடுத்தவன் மேலும் தொடர்ந்தான்.
“என்னோட இத்தனை வருச வாழ்க்கைக்கான அர்த்தம் நீ தான் மது….. ஒருத்தங்களுக்கு உலகத்தில நாம முக்கியமானவங்களா இருக்கோங்க்ற நினைப்பு இருக்கே மது…. நீ நம்ப மாட்ட…… அப்படி அப்படி…… ஒரு சந்தோசம்.. நம்ம பிறப்புக்கே அர்த்தம் தந்த மாதிரி….. நீ எனக்கு அப்படி ஒரு நிம்மதியைத் தந்த மது… ப்ளீஸ் மது.. எப்போ எப்படின்னு தெரில…… நீ……… நீ எனக்குள்ள…. இல்ல… இல்ல…. நான் நான் உனக்குள்ள தொலைஞ்சு போயிட்டேன்……… மது……… நீ எனக்கு வேணும் மது…. வாழ்க்கை முழுசுக்கும்… என்னோட நிம்மதி உங்கிட்ட இருக்கு மது… நீ மட்டும் என் லைஃப்ல இருந்தா போதும் மது…. எனக்கு எதுவுமே தேவையில்ல…….. நேத்து தான் நான் ரொம்ப வருசம் கழிச்சு நிம்மதியா தூங்கினேன் மது….” என்றான் உணர்வுப் பூர்வமாய்.
“ப்ளீஸ் நந்தன்… இதெல்லாம் செட் ஆகாது… நீங்க காவிரி தண்ணியை எதிர்ப்பார்க்கற எங்க டெல்டா ஆளுங்க மாதிரி காத்திட்டே கனவுக் கண்டுட்டே இருக்கனும்……. வேண்டாம்… என் நினைப்பே உங்களுக்கு வேண்டாம்…. உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்காதீங்க…. என் பேச்சை கேளுங்க……” என மதுரவசனி அவனின் எண்ணங்களுக்கு மட்டுமல்லாது அவளது எண்ணங்களுக்கு அணைப் போட முயல,
“கேட்கிறேன் மது… ஆனா நீ என் மனைவியான பின்னாடி தான்……… நான் மட்டுமா கஷ்டப்படுவேன் மது… அப்படியே நான் கஷ்டப்பட்டா உனக்கு என்ன….? சொல்லு…சொல்லு…” என அவன் அவளருகே வந்து ஆவேசமாகக் கேட்க
“இப்போ பேச போறியா இல்லயா நீ…….. ஸ்பீக் அவுட்……” என அவனுக்கு எப்போதும் வரும் அதீத கோபத்தோடுக் கேட்க
அவனுக்குக் கொஞ்சமும் குறையாத சூட்டோடு, “சும்மா…. ஒரு நாள்ல உங்களுக்கு காதல் முளைச்சிடுமா….. சின்னப்புள்ளத்தனமா இல்லயா உங்களுக்கு……? விட்டுக்கொடுக்காத விட்டுப்போகாதான்னு…. டயலாக் அடிக்கிறீங்க……..? நேத்துப் பார்த்தப் பொண்ணுக்கிட்ட இப்படி தான் பட்டுனு பேசுவீங்களா….?” எனக் காட்டமாய்க் கேட்க
“அப்போ.. என்னை வேற என்ன செய்ய சொல்ற நீ….? பத்து நாள் ஹலோ சொல்லி ஒரு மாசம் கழிச்சு ப்ர்ண்ட்ஸ்ன்னு கை நீட்டி அப்புறமா ஒரு ஆறு மாசமோ ஒரு வருசமோ பின்னாடி சுத்தி வந்து பொக்கே டெட்டி பியர் எல்லாம் கொடுத்து லவ் சொல்லனுமா……. சொல்லு….. என்னால அதெல்லாம் முடியாது மது…. எனக்கு உன்னை விட முடியாதுன்னு தோணின செகண்ட்லேர்ந்து உங்கிட்ட என் மனசை சொல்லனும்னு தான் நான் காத்திட்டு இருக்கேன்….”
“என் மனசை மறைச்சு முகமூடிப் போடவெல்லாம் முடியாது மது….. பட்டுன்னு தான் நான் பேசுவேன்… உங்கிட்ட எனக்குத் தோணின ஃபீலீங்க்ஸை மறைச்சிட்டு எதுக்கு நான் நடிக்கனும்… சொல்லு... உன்னைப் பிடிச்சிருக்கு… எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணனும்... அதான் என்னோட எண்ணம்…… இப்போ என்ன ரோஸ் கொடுத்து ப்ரோபோஸ் செஞ்சா ஒத்துப்பியா நீ….” எனச் சொன்னவன் டக்கென அங்கிருந்த பூஜாடியிலிருந்து ஒரு ரோஜாவை எடுத்து நீட்டினான்.
அதைக் கண்டவள் அவனின் திடிர் செய்கையில் அதிர்ந்தப் போதிலும் அவனை அந்த கோலத்தில் கண்டு இதழ்க்கடையில் ரகசியப் புன்னகை உதித்தது. அதை அவளது கண்ணனும் கண்டுக் கொண்டான்.
“என்ன சிரிப்பு மேடம்… சிங்கரா இருக்கான்… சிங்கிள் ரோஸுக்கு வழியில்லாம… இங்கேயிருந்து எடுத்துக் கொடுக்கிறானேன்னு தானே நினைச்ச..” என அவன் தனக்கே உரிய ப்ரேத்யேகமான புன்னகையோடு கேட்க, பேதையவள் தடுமாறித்தான் போனாள்.
அவளது புன்னகை இன்னும் விரிய, “மது ப்ளீஸ் சிரிக்காதடி…” என அவன் சிரிக்க
இப்போது மது முறைக்க, “இல்ல… சும்மாவே நீ அழகு… சிரிச்சா ரொம்ப அழகா…. அதான்.. சிரிக்கிற உன்னை சிறைப்பிடிக்கனும்னு ஆசை வருது மது…”
“நீங்க சிங்கரா இல்ல கவிஞரா…?” என அவள் புருவம் உயர்த்திக் கேட்க,
“அய்யோ மது…. நான் சிங்கர் தான்….. கவிஞர்லாம் இல்லடா…” என அவனும் புன்னகைக்க
“அதான் நானும் சொல்ல வந்தேன்…… நீங்க சிங்கர்.. நான் உங்க ரசிகை….. அதை தாண்டி நமக்குள்ள ஒன்னுமில்ல..” என சீரியசாகச் சொல்ல
நந்தனின் முகம் இவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மை மறைந்து இறுகிப்போய் விட்டது. அவனின் பெருமூச்சுகள் அவன் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த நினைப்பதை உணர்த்தியது.
“லுக் மது….. இவ்வளவு நேரம் நான் பேசுனது நமக்கானது தான்… இதுவரைக்கும் எந்த பொண்ணுக்கிட்டையும் நான் இப்படி பேசினது இல்ல…… அண்ட் பாடுறது என்னோட தொழில்… உனக்குப் பிடிக்கலன்னா நான் அதை விட்டுடுறேன் மது… எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது… நான் இருக்க துறையில அதுக்கான வாய்ப்புகள் இருந்தும் கூட எனக்கு அதுல பெரிசா நாட்டமில்ல…… ஆனா மதுவையே தொடாத நான் ஆசைப்படுற ஒரே மது நீதான்….. எந்த நொடியில நீ என்னை விட்டுக்கொடுக்கலயோ அந்த நொடி நீ எனக்குள்ள ஆழமா வந்துட்ட மது… ப்ளீஸ்…….. உனக்கு என்ன ப்ரச்சனைன்னு சொல்லு மது……”
“ஆனா என்னை நீ விட்டுப்போயிட்டா எனக்கு எதுவுமே இல்ல……. அதை புரிஞ்சிக்கோ…” என அழுத்தமாகச் சொல்ல,