Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 17

Advertisement

ஒரு மாதம் கடந்த பின்..

“who is he who is he?

Why he came..?
Laughing…..admiring for me and me…
What happened to me..?
I don’t know..
My breath ‘ s fever didn’t reduce

I am caught….!!”
என படிக்கட்டுகளில் துள்ளிக்குதித்த வண்ணம் பாட்டு பாடிக்கொண்டே குதித்தாள் கீர்த்தி.

அவள் செய்யும் சேட்டைகளைப் பார்த்த மதுரவசனி,
“என்ன பாட்டு இது கீர்த்தி… நீ இங்கிலிஷ் பாட்டு கூட கேட்பியா..?” என விசாரிக்க

“அய்யோ அண்ணி.. இது எங்க ப்ரண்ட்ஸ்லாம் சேர்ந்து தமிழ் பாட்டை இங்கிலிஷ்ல ட்ரான்ஸ்லேட் செஞ்சு விளையாடுவோம்..." என விளக்க

“அப்படின்னா.. ஹூ இஸ்..ஹி…?” என நாத்தானாரைக் கிண்டலடிக்க

“அய்யோ போங்கண்ணி. .யாருமில்ல” என வெட்கப்பட்டுக் கொண்டே சென்றவளைப் பார்த்த சுந்தரத்துக்கு மகளுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

ராஜ் நந்தனை அழைத்தவர் ,

“சாப்பிட்டியா ராஜா..?” எனக் கேட்டார்

“சாப்பிட்டேன்பா… என்ன விஷயம்.. தனியா கூப்பிட்டு இருக்கீங்க..?”

“அது நம்ம கீர்த்தி படிச்சி முடிச்சிட்டா இல்ல… ரிசல்ட் வரப்போ வரட்டும்… என்னோட ப்ரண்ட்.. வேதசுப்ரமணியம் இருக்கான் இல்ல.. அவன் பையன் சுரேந்தருக்கு நம்ம கீர்த்தியைக் கேட்டான்…. சுரேந்தர் நான் பார்த்து வளர்ந்த பையன்…. எம்பிஏ முடிச்சிட்டு அவங்க அப்பா பிஸீனஸ்ல இன்ட்ரெஸ்ட் இல்லாம தனியா பிஸீனஸ் செய்றான்.. ரொம்ப நல்ல பையன் டா.. அதான் இவளுக்குப் பார்க்கலாம்னு தோணுது.. எனக்கு அப்புறம் நீதான் இவங்க இரண்டு பேரையும் பார்க்கனும்.. சீக்கிரமே அவளுக்கு ஒரு கல்யாணம் முடிஞ்சிட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்டா.. நீ என்ன சொல்றா.. உனக்குத் தெரிஞ்ச நல்ல வரன் இருந்தாலும் சொல்லு…” என மகனிடமும் ஆலோசனைக் கேட்க
“என்னப்பா.. கீது குழந்தை இல்ல…?”

“என்ன ராஜா நீ… அவள் காலேஜ் முடிச்சிட்டா…”

“சரிப்பா.. உங்க இஷ்டம்.. நானும் சுரேந்தர் பத்தி விசாரிக்கிறேன்.. நம்ம கீது வாழ்க்கை.. அதனால் கொஞ்சம் யோசிச்சே செய்யலாம்பா.. வேற நல்ல வரன் இருந்தாலும் பார்ப்போம்..” எனச் சொல்ல

“இதுக்குத்தான் டா உன்னைக் கேட்கனும்… நல்லா யோசிச்சு செய்.. நீ கீதுக்கு என்னை விட நல்லா செய்வேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்றவரின் பேச்சிலும் கண்களிலும் தெரிந்த நம்பிக்கையில் ராஜாவுக்கு கர்வமாய் இருந்தது.

“அப்புறம் ராஜா… அப்பாவுக்கு வயசாச்சுடா… தீபனே எல்லாத்தையும் பார்த்துக்கிறான்… என்னடா அப்பா இப்ப கூப்பிடுறார்.. முன்னாடி வராதேன்னு சொன்னவர் தானேன்னு நினைக்காதடா… நீயே சொல்லு.. நாளைக்கு உன் புள்ளை சொல்றானு அப்பாவை விடுவியா…? சீக்கிரமே கம்பெனிக்கு வந்து சார்ஜ் எடுத்துக்கோப்பா..” எனச் சொல்ல

“கொஞ்சம் டைம் கொடுங்கப்பா” என மென்மையாக அவன் சொல்ல, அவரும் சரி என்றார்.

அதன்பின் அன்று மதுவுக்கு செக்க அப் இருப்பதால் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான் ராஜா.

மருத்துவர் சோதனைகள் செய்தப்பின் குழந்தை நலமாக இருப்பதாக சொல்ல, மனைவியை வெளியே விட்டு விட்டு அவன் மருத்துவரிடம் அவளை எப்படி பார்த்துக் கொள்வது எனக் கேட்டுத் தெரிந்துக் கொண்டு வர, மதுவோ அங்குள்ள சோஃபாவில் தூங்கிக் கொண்டிருக்க,

“ஏய்.. மது.. என்னமா செய்யுது..?” என அவன் அக்கறையாகக் கேட்க

“உம்ம்.. வந்தாச்சா… தூக்கம் வந்துடுச்சு…” எனத் தூக்கக் கலக்கத்தோடு சொல்ல

“ப்ச்.. இதுக்குத் தான் நல்லா சாப்பிடச் சொல்றது… பாரு அதுக்குள்ள டய்ர்ட் ஆகி தூங்குற..” எனக் கணவன் கவலைக் கொள்ள

“உங்களை… உள்ளே போய் அரைமணி நேரமாச்சு.. பாவம் டாக்டர் காதுல ரத்தம் வந்திருக்கும்… சும்மா எல்லாரையும் நொச்சுப் பண்ணாதிங்க…” என அதட்ட

“ஹே! என்ன நான் ஃபீஸ் கட்டுறேன்… டவுட் கேட்கிறேன்….. என் பொண்டாட்டியும் பிள்ளையும் எப்படி ஜாக்கிரதையாப் பார்க்கிறதுன்னு கேட்டா என்ன தப்பு… அப்படியே தப்புன்னாலும் நான் கேட்பேன்…. சரியா… நீ.. வா…” என அவள் கைப்பிடித்து அழைத்துச் செல்ல, வழக்கம்போல் அவன் காதலில் கரைந்தே போனாள் காரிகையவள்.

அவனோடு காரில் செல்கையில் ராஜா கீர்த்திக்கு மாப்பிள்ளைப் பார்ப்பதை பற்றி சொன்னான்.

“வாவ்.. சூப்பர்ங்க….” என அவள் மகிழ
“ப்ச்… இல்ல நானும் வரதுக்கு முன்னாடி கீதுட்ட இது பத்தி பேசினேன்… ஆனா அவ சொன்னது தான் இடிக்குது…”

“என்ன..?”

“அவளுக்கு உங்கண்ணா சரணைப் பிடிச்சிருக்காம்…”

“ஓஹ்… பாருடா… ஒரே நாள்ல லவ்ஸாமா.. அதுல என்ன இடிக்குது உங்களுக்கு சரணுக்கு என்ன ஓட்டை…?”

“ஓட்டையும் இல்ல… ஒன்னுமில்ல.. ஆனா என் தங்கச்சிக்கு எப்படி உங்கண்ணா செட் ஆவான்.. அவன் அன்னிக்கே அப்படி கத்துறான்… அது மட்டுமில்லாம அவ சிட்டியில வளர்ந்த பொண்ணு… அதான்..” என்று சொல்லி முடிக்கவில்லை .. சீறி விட்டாள் மது.

“என்ன சிட்டி.. சிட்டினா…? நான் இங்க வந்து இல்ல… என்ன கத்துறான் அவன்….. அவளைக் காப்பாத்தத் தானே செஞ்சான்….” என அண்ணனுக்காக வாதாட

“மதும்மா.. ப்ராக்டிகலா யோசி… நீ ரொம்பப் பொறுமைசாலி நான் செய்றத பொறுத்துப்பா.. கீர்த்தி அப்படி இல்ல… ரொம்ப செல்லம்… அதான்.. உங்க வீட்ல எல்லாரும் வேலை செய்யனும்.. இவளுக்கு சமைக்கவே தெரியாது.. ஆனா அவ எங்கிட்ட கெஞ்சுறா… சரண் வேணும்னு..” எனப் பொறுமையாகவே மனைவியிடம் சொல்ல

“ஹ்ம்ம்ம்… முதல்ல சரணுக்கு இப்ப கல்யாணம் செய்வாங்களா…அதை யோசிங்க…” என மது சொல்ல

“செய்ய வைப்பேன் மது..” என்றவனின் முகத்தில் அதை செய்து காட்டும் தீவிரம் இருக்க, அதைக் கண்ட மதுவுக்கு இதனால் எந்த பிரச்சனையையும் இவன் இழுத்துக் கொள்ளக் கூடாதே என்ற கவலை மிகுதியாக இருந்தது.

ஆட்டம் தொடரும்…!!!

-----------------------------------------------------------


Heyyyyyyyyyyy friendsss.
Last update was one of my favorite one.....and அசோகர் கதை கூட it was true.நமக்கு தெரிஞ்சு அசோகர் ஒரு மாவீரர் அது தான் கதைகள்ல இருக்கும்...அதுக்கு பின்னாடி இருக்க இந்த சம்பவம் உண்மை..
வெறுக்கறவங்களை அழிக்க முடியும்..வெறுப்பை அழிக்க முடியாது உண்மைதானே?
then you ll find peace when you ll accept the apology you ve never got..

எனக்கு ரொம்ப பிடிச்ச லைன்ஸ்....


அப்படியே who is he எந்த தமிழ் பாட்டுன்னு கெஸ் செய்யுங்க பார்ப்போம்...எனோட ப்ரண்ட் அப்படிதான் பாடுவா....lets see who ll find
thanksssssssssssssssssssssssssss allll for ur wordsss...and the love for raja rani has never faded in these yearsss❤
superb mam
 
இவன் யாரோ, இவன் யாரோ, வந்தது எதற்காக?
சிரிக்கின்றான், ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே புரியவில்லை உள் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை என்ன இது, என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிச்சிருக்கா, பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன், நான் யாரிடம் கேட்டு சொல்வேன்?
 
Top