Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 15

Advertisement

Nandhu romba naal thanga matan....madhuku munadi ivane anga poyiduvanu thonuthu....aana pontatikita odane othukita gethu ennakirathu...
 
madhu samayam paththu adikkira :whistle:

nanthan oththukitta ok ego pudichchavan oththupana? :unsure:
 
Kathai moolama IPA kooda Avan wife mattum than yosikkuran... Avanga family pathi yosikkala.... Avangaloda samathanama poganum nu yosikkala...very cunning fellow... :mad::mad:
 
“இப்ப சொல்லு ஆத்தா.. அப்படி ஒட்டடக் குச்சியா இருந்த அசோகர் எப்படி சக்ரவர்த்தி சாம்ராட் அசோகரா ஆனாரு…?” என்றான் ஆர்வமாய்.

“ராசா… அவருக்கு அடிக்கடி கைவலி கழுத்து வலினு ரொம்ப நோவு… எப்பவும் போர்வைக்குள்ளேயே சுருண்டு கிடக்க ,யாருக்கும் அவர் அப்பா பிந்துசாரர்க்கும் பிடிக்காம போச்சு.. பின்ன வயசுப்புள்ளனா சுறுசுறுன்னு இருக்கனும்ல… மந்தமா இருக்கலாமா.. ஒரு ராஜா.. அசோகருக்கு இதனால் ரொம்ப மன வருத்தமாகிப் போச்சு.. அப்புறம் என்னை எல்லாரும் இப்படி பரிகாசம் செஞ்சு ரேக்காறாவோளே(கிண்டல்) அவங்களை சும்மா விடுறதான்னு… போர்வையைச் சுருட்டி எரிஞ்சிட்டு வாளை சுத்தினார்.. வாள் அவரோட ஆறாவது விரல் போல அவரோடு ஒட்டிக்கிச்சு.. அதுக்கு அப்புறம் என்ன… அவர் கிண்டல் செஞ்சவங்களை எல்லாம் சிறையில அடைச்சாராம்..”

“அப்புறம்.. என்ன ஆச்சு ஆத்தா?” என்றான் ஆர்வமாக அமுதன். கூடவே ப்ரியா, ஆயூஷும் வந்து அமர்ந்திருந்தனர். ராஜாவும் அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டிருந்தான்.

ஸ்ரீராம் ஃபைல்ஸை பார்க்க வேண்டி அவன் அறைக்குச் சென்று விட, மற்ற மூன்று மகன்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஸ்ரீவத்சனும் பன்னிரெண்டாம் வகுப்பு என்பதால் அவன் அறைக்குள் புகுந்துப் படிக்கத் தொடங்கினான்.

மதுரவசனி கையில் பாலை வைத்துக் கொண்டு குடிக்க முடியாமல் தவிப்போடு அமர்ந்திருக்க,

ராஜா, “கதை சொல்றாங்க இல்ல.. கேட்டுட்டே குடி.. எங்க ஆத்தாவும் இப்படி தான் தெனைக்கும் கதை சொல்லும்..” என்று இயல்புப் போல் சொல்லி விட்டுக் கதையைக் கவனிக்கலானான்.

பேரப்பிள்ளைகளின் ஆர்வம் கண்டு மதுரவல்லியும் கதையைத் தொடர்ந்தார்.
“அப்படியே அவர் பெரிய மாவீரர் ஆகிட்டார்… அவரைக் கண்டாலே எல்லாரும் பயப்பட ஆரம்பிச்சாங்க… இப்படித்தான் அசோகர் வீர தீரமிக்க ராஜாவானார்.. ஆனால் ஏன் நம்ம அசோகரை மட்டும் இன்னும் ஞாபகத்துல வைச்சிருக்கோம்..”

“ஏன் ஆத்தா.?” என்று ப்ரியா கேட்க

“ஏனா… எல்லா அரசருமே இப்படித்தான் பெரிய போர் வீரர்களா இருந்தாங்க.. ஆனா அசோகர் அப்படி இல்லை… கலிங்கப் போர் அவர் வாழ்க்கையை மாதிச்சு… எல்லாருக்கும் ஒரு நாள் வரும்.. நம்ம வாழ்க்கையை மாத்தி நல்லபடியா அமைச்சிக்க… அப்படித்தான் அவருக்கு லட்சக்கணக்கான மக்களோட இறப்பைப் பார்த்து இரக்கம் வந்துச்சு.. போரோட நோக்கம் வெற்றிதான்.. ஆனால் அதை எல்லா அரசரும் தான் செய்வாங்க… வெட்டு.. குத்து ரத்தம்.. போர்..!! இப்படியா என்னோட வாழ்க்கையையும் மக்கள் பேசனும்னு நினைச்சார்..”

இப்படி ஆத்தா கதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மதுரவசனி பாலைக் குடித்து விட்டுப் படுக்கச் செல்ல, ராஜாவோ கதை கேட்டு விட்டு வருவதாகச் சொன்னான்.

“என்னைப் பார்த்து பயந்தா போதுமா…? இதுவா என்னோட சாதனை…? முன்னாடி என்னைப் பார்த்துப் பரிகாசிச்சாங்க… இப்ப பயப்படுறாங்க.. ரத்த நிறத்தில் மாறிப்போன வாளைப் பார்த்தார்.. அதுவா கம்பீரம்..? என்னை வெறுத்தவங்களை நான் வெறுக்கலாம்… அவங்களை அழிக்கலாம்…”

“வெறுக்கறவங்களை அழிக்கலாம்.. ஆனா வெறுப்பை அழிக்க முடியுமா..? வெறுக்கறவங்களை அழிக்கிறத விட வெறுப்பை அழிக்கக் கஷ்டம் இல்லையா…? எல்லாரும் நம்மைப் பார்த்துப் பயப்படுறது எளிது.. ஆனா நேசிப்பது கஷ்டம் இல்லையா…? போர் செய்ய ஒரு நிமிசம் போதும்.. ஆனா சமாதானம்…. அது கஷ்டம்.. ஆனால் எல்லாரையும் அன்பால் வெல்ல முடியும்… அப்புறம் இதை உணர்ந்த அசோகர் ஒரு முடிவு எடுத்தார்..”

“என்ன முடிவு..?” என்றான் ராஜ் நந்தன்.

“மாப்பிள்ளைத் தம்பி நீங்களுமா கேட்கிறீங்க..?” என்றார் மதுரவல்லி.

“ஆமா ஆத்தா.. கதை நல்லா இருக்கு.. எங்க ஆத்தா கூட இப்படி தான் கதை சொல்வாங்க.,,”

“அதுக்கு அப்புறம் அசோகர்… என்னோட வாளை மட்டுமில்ல.. என்னோட கருத்தையும் நான் யார் மேலயும் திணிக்க மாட்டேன்… என்னோடு முரண்படுகிறவர்களை நான் வரவேற்பேன். பலவீனமானவர்களை என் நாடு அரவணைக்கும்.. அப்படின்னு சொல்லி வாளைத் தூக்கிப் போட்டார்.. கடைசி வரைக்கும் எடுக்கல…. அதனால் தான் அவரோட அன்பு காட்டுற குணத்தால தான் அவரோட புகழ் நிலைச்சு நிக்குது….” என்று கதையை முடித்தவர்,

“சரி பிள்ளைங்களா.. நாழி ஆவுது.. போய் வெள்ளனுமே படுங்க… இனிமேலாவது யார்கிட்டையும் சண்டைப் போடக்கூடாது… சரியா… அன்பா இருந்தா தான் அசோகர் மாதிரி வர முடியும்… சரியா…. படிச்சா மட்டும் போதாது.. அதன்படி நடக்கனும்…” என்றார் மதுரவல்லி.
அமுதனோ “ஆத்தா.. எனக்கு நாளைக்கு இந்த கொஸ்டின் தான் டெஸ்ட்.. இப்ப புரிஞ்சிடுச்சு… எங்க மிஸ்… டக்குனு மாறிட்டாரு சொன்னாங்க.. இந்த கதையெல்லாம் தெரியல… நீயே பேசாம டீச்சர் ஆகியிருக்கலாம் ஆத்தா.. நான் நாளைக்கு இந்த கதையை க்ளாஸ்ல சொல்லி நல்ல பேர் வாங்கிடுவேன்… இப்பப் படிச்சிட்டு நான் தூங்கப்போறேன்..” என்றான் நல்ல பிள்ளையாய்.

ராஜாவும் தூங்கப் போனான். படியேறும் போது அவன் மனதில் ஆத்தா சொன்ன வார்த்தைகளே ஒலித்தன.

“என்னோட கருத்தையும் நான் யார் மேலயும் திணிக்க மாட்டேன்..
வெறுக்கறவங்களை அழிக்கலாம்.. ஆனா வெறுப்பை அழிக்க முடியுமா..?”

இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தன.. மதுரவசனி சொன்னது போல் தன் கருத்தை அவள் மேல் திணிப்பது கூடத் தவறுதானோ என்று சிந்திக்கத் தொடங்கினான். அசோகருக்கே அந்த நிலை என்றால் நான் சாதாரண மனிதன். நான் ஏன் என்னை வளர்த்த என் தாய் தந்தையோடு இன்னமும் பிடிவாதமாகப் பேசாமல் இருக்கிறேன். ஏன் இப்படி வெறுப்பை சுமக்கிறேன்..? எனஒ பலவாறு யோசனை செய்த வண்ணம் மெத்தையில் விழுந்தான்.

மனைவியைக் கண்டதும் அவள் மாலையில் அவனுக்காக உருகி வீணை மீட்டியது நினைவில் வர அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன்
“ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மது… அப்பாவாகப் போறேன் இல்லையா.. இப்ப ஒரு அமைதி இருக்கு மனசுல… உனக்கு என்ன வேணுமோ கேளுடா..” என்றான் காதலுடன்.

“என்ன கேட்டாலும் தருவீங்களா…?அப்புறம் மாட்டேன்னு சொன்னா…”

“ நான் கொடுத்த வாக்கைக் காப்பாத்துவேன் மது…” என்றான் அழுத்தமாக.


“எனக்கு நம்ம எல்லாரும்… அத்தை வீட்டுக்கே போய் பழையபடி ஒன்னா இருக்கனும்னு ஆசை….நிறைவேத்துவீங்களா..?” என்றாள் கேள்வியாய்.

அவள் கேள்வியில் அவன் உடல் ஒரு கணம் இறுகிப் போனது. ராஜ் நந்தன் மனைவியைக் கூர்மையாகக் குற்றம் சாட்டும் பார்வைப் பார்த்தான்.

ஆட்டம் தொடரும்…!!!


This is a beautiful rendition....My favorite????


இது எபில வர song...veena portion.


Happiee readinggg:love::love::love::love:

thanksss alll
super mam episode
 
Top