ரொம்ப ரொம்ப நிறைவான கதை சிஸ்
"எண்டே கேரளம் எத்தர சுந்தரம்" , கோடை விடுமுறைக்காக காத்திருந்து என் மகளுடன் ஊருக்கு போகையில் என்னுடைய பால்யகால ஊரின் சந்தோஷங்களோ நிறைவோ இப்பொழுது என் மகளுக்கு இல்லையே என்ற ஏக்கம் எப்பொழுதும் உண்டு.
குடும்பத்தில் அனைவரும் சொந்த மண்ணில் தங்கிவிட நான் மட்டும் திருமணம் முடிந்து இங்கிருப்பது முதலில் ஒரு வித மன அழுத்தத்தை தந்தது இப்பொழுது அது ஏக்கமாக மாறி நிற்கிறது.
ரயில் பயணத்தில் எப்பொழுதும் அதிகாலையே விழித்து இருளில் கூட அந்த மண்ணின் குளுமையையும் இயற்கையையும் பார்த்துக்கொண்டே செல்கையில் இப்பொழுதும் விழிகள் நிறையும்.
என்னுடைய "அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்" கதை என்னுடைய பால்யகால நினைவுகளின் பெட்டகமே , அந்த கதை எழுதியபோது கிடைத்த அதே உணர்வு இதிலும் கிட்டியது .
இந்த கதையும் அப்படி ஒரு உணர்வை தந்தது , நாம் எங்கு சென்றாலும் பிறந்து வளர்ந்த இடம் கொடுக்கும் உணர்வு வேறுதானே , பாட்டு எல்லாம் சூப்பர்
எல்லாமே பிடித்த பாட்டுக்கள் கதாப்பாத்திரங்கள் அத்தனையும் நிறைவு லவ் யு