Wow.
இந்த update -ல எத்தனை dimensions -ல கதை நகருது. Superb.
Humour, கோவம், சோகம், ஜெய்யோட தவிப்பு, கடைசி நிமிஷ தைரியம். இறுதியில் அப்படி பாலாவே அடிக்கிற அளவுக்கு என்ன சொல்லி இருப்பானோன்னு suspense.
பாலா எத்தனை மென்மையான மனுஷன். ராஜீவன் பேச்சு முழுக்க முழுக்க கசக்கும் நியாயம்.
இந்த மாதிரி inter-cultural love, அதை எதிர்க்கும் வீட்டு பெரியவங்க, அதனால அந்த lovers and parents சந்திக்கும் பிரச்சனை இதெல்லாம் நூல்க்கண்டு சிக்கல் மாதிரி. எது முதல் யாரு சரி - இதுக்கெல்லாம் விடையே கிடையாது.
Ideally family elders பிள்ளைங்களிடம் எதிர்பார்ப்பை வைக்கவே கூடாது. உரிமை எடுக்காமல், அவங்களுக்கான கடமை வளர்க்கறதுன்னு நினைச்சு செய்யணும். ஏன்னா குழந்தைகளை யாரும் அவங்க அனுமதியோடயோ, விருப்பத்தோடயோ பெத்துக்க முடியாதே. முடிஞ்சா ஒத்து ஒன்னா வாழலாம். இல்லை கொஞ்சம் இடைவெளியோடு நின்னுடணும்.
சொத்து, பாவம் புண்ணியம் இதெல்லாம் சட்டப்படி தர்மப்படி தானாவே வாரிசுகளுக்கு போய் சேர்ந்துடும். ஆனால் கலாச்சாரம் - பழக்க வழக்கங்களும் அப்படி இல்லை. வாரிசுகள் மனசு வெச்சாதான் உண்டு. அவங்க அதுக்கு எல்லா விதத்திலும் மதிப்பளிப்பது மனசுக்கு ரொம்ப இதமாய் பெருமையா இருக்கும். ஆனால் செய்ய விரும்பாதவங்களை காட்டாயப்படுத்துவதில் என்ன லாபம். இழப்பு தான் மிஞ்சும்.
ஏம்மா பவித்ரா,
"தீயினால் சுட்ட புண் உள்ளாரும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு "- இந்த குறள் பொருந்தும் தானே நீங்க கடைசியில் சொன்ன மலையாள மொழிக்கு - English translation மட்டும் தானா? தஞ்சைத் தரணியில் பிறந்தும் இப்படி குறளை கூறாமல் விட்டுடீங்களே.
ஆனாலும் ரொம்ப தான் நீங்க சூர்யா tv பார்க்கறீங்க போங்க.