நல்லா பண்டிகைக்கு முதல் நாளே கமலேஷ்க்கு பொங்கல் வெச்சுட்டீங்களே. அருமை.
டேய் கமலேஷ் ஹர்ஷாக்கு உன் மேல கோவப்படக் காரணம் இருக்கு. உனக்கு இன்னும் என்ன இருக்கு? கொஞ்சம் பொறுமையா பேசிப்பழகு. உனக்கு குழந்தைகளிடம் பாசமும் இருக்கு, உரிமையும் இருக்கு ஆனாலும் அது அவன் பிள்ளைடா. அவனுக்கு அதுக்கான துடிப்பு தானா வரும். அதை நீ கொஞ்சம் புரிஞ்சு பதில் பேசி இருக்கணும்.
போகட்டும் விடு, நாலு தடவை அவன் முன்னாடி உன் காதியோட கொஞ்சம் Romance பண்ணு. அவனுக்கு கொஞ்சம் மூளை சூடு குறைஞ்சுடும். அதுக்கப்புறம் கொஞ்சம் நிதானமா உன்கிட்ட பேசினாலும் பேசுவான்.
ஜோதிக்கு என்ன ஒரு தொழில் பக்தி. பதி பக்தி வராவிட்டாலும் பதி மேல கொஞ்சம் பற்றாவது வந்தா நல்லா இருக்கும். பார்ப்போம்.
ஆமாம் ஆதித்யா ஏன் முறைக்கறான்? உண்மை தெரிஞ்ச பின்ன ஷாஷா உன்னைத்தான் துண்டு துண்டா வெட்டப்போறா பார்த்துக்கோ.
இந்த ஜீவிதாக்கு கொஞ்சம் கூட guilt இருக்காதா. எப்படி ஹர்ஷாவை ஏதோ அநியாயக்காரன் மாதிரி பார்க்கலாம். உன் தங்கைகிட்ட அவன் பேசலை. அவனோட
wife-கிட்ட பேசிட்டு இருக்கான். அந்த இங்கீதம் உனக்கு தான் இல்லை. உன் மேலையும் தப்பு சொல்லல முடியாது, ஏன்னா உன் தங்கச்சி இப்ப வரைக்கும் தன் கணவனுக்காக எதுவுமே உன்கிட்ட பேசினதில்லை. அதுதான்.
வந்த fits correct - ஆ ஹர்ஷா பொண்ணுக்கு வந்தது பாருங்க. அது தான் விதியின் சதி.