Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்💞🧡💞🧡💞-விமர்சனம்

Advertisement

Narmadha mf

Well-known member
Member
52358cd76d3c16f666aaf0dd34db8571.jpg
ஆரம்பம் முதல் இறுதி வரை மனதை மிகவும் நெகிழ செய்தது கதைக்களம்💞💞💞💞💞💞.

அருண்மொழி:🤗🤗🤗🤗🤗
சாந்தமே சாந்தம் கொள்ளும் இவனைக் கண்டு🥰🥰🥰🥰🥰🥰.

சிறு வயதிலேயே தன் உறவுகளை மிகக் கொடுமையாக இழந்து பரிதவித்து நின்று மனதை மிகவும் கலங்க செய்தான்🥺🥺🥺🥺🥺


தெய்வத்தாய் அனுஜா மற்றும் அவர்களின் குடும்பத்தின் அன்பான அரவணைப்பில் வளர்ந்து சேவை செய்யும் மருத்துவத் துறையை தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் பல இக்கட்டான உயிர் பயத்தில் வரும் தாய்மார்களை இவன் காத்திட்ட விதம் மனதை மிக மிக நெகிழச் செய்தது🙏🙏🙏🙏🙏🙏.

பேச்சிலும் மென்மை, செயலிலும் விடாமுயற்சி என அன்பால் அனைவரையும் அரவணைத்த செயல் எல்லாம் பிரம்மிப்பையும் மதிப்பையும் உயர்த்தி விட்டது🤗🤗🤗🤗🤗🤗🤗.

தென்றல் மீனா:😍😍😍😍😍😍
நேர்மை, விவேகம், துணிச்சல் என அனைத்திலும் சிறந்து விளங்கிய அழகிய தெளிவு நிறைந்த மங்கை🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

குடும்ப உறவுகளின் பாசத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டு அவர்களுக்காக எதையும் செய்யத் துணியும் இவளது அன்பும் அழகு😘😘😘😘😘😘.

இவளது குழந்தை பருவமும் மிகவும் மனதை ரணப்படுத்தியது🙁🙁🙁🙁🙁🙁 தனது தாய், தந்தையை இழந்து இவள் கதறி துடித்தது எல்லாம் மனதை வலிக்கச் செய்தது🥺🥺🥺🥺.

இவளுக்காக வாழும் மற்ற ஜீவன்களுக்காக ஜீவனை வழங்க மனதில் வலியை மறைத்துக் கொண்டு இறுக்கத்துடனும், நிமிர்வுடனும் நடந்து கொண்ட இவள் செயல்களை என்ன சொல்ல....

தென்றல் மொழி🧡💞🧡💞🧡
இரு மனங்கள் இணைவது தான் காதல்💕💕💕💕 அந்தக் காதலும் இவர்களின் காதலைக் கண்டு பிரம்மித்து நின்றது.. இரு நெஞ்சங்களும் அன்பையும் காதலையும் பரிமாறிக் கொண்டாலும் அந்தக் காதல் திருமண பந்தத்தில் கை கூட இவர்கள் பட்ட உயிர் வலி நெஞ்சம் கணக்க செய்தது. உண்மையான உறவுகளும் இவர்களின் தூய காதலும் இவர்களை திருமண வாழ்வில் ஒன்று சேர்த்து அழகு பார்த்தது💞💛❣️❣️💛💞..

இவர்களின் அழகு கூட்டில் தேன்மொழி, தேன் யாழினி, அருள் மெய்யப்பன் என்ற மூன்று தங்கங்கள் இன்னும் மெருகேற்றி அழகு சேர்த்தது இவர்களின் வசந்தமான வாழ்வில் 🥰🥰🥰🥰🥰.
என்றும் இதே அன்புடன் இவர்கள் வாழ வாழ்த்துக்கள்💐💐💐💐💐.

வெங்கடேசன் -விசாலாட்சி:☺️☺️☺️
வெங்கடேசன் :தன் தம்பி மகளை தம் மகளாய் வலி நிறைந்த காலத்தில் ஆர்த்மார்த்தமுடன் வளர்த்து அவளுக்காக ஒவ்வொரு செயலையும் செய்து அழகு பார்த்தவர். இவரின் அன்பில் துளியும் நஞ்சு இல்லை, தன் மகள் தன்னை மீறி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்த பொழுது மகள் மனதளவில் விலகிச் சென்று விட்டாளோ என்ற பயத்தினால் இவர் செய்ய நினைத்த அபத்தம் தென்றலை உயிருடன் சுவாசமடைக்க செய்தது. அனைத்தையும் நிதானத்துடன் நிதர்சனம் உணர்ந்து இவர் கதறிய பொழுது வருத்தமாக இருந்தது😔😔😔.

விசாலாட்சி: இவரும் வெங்கடேசன் அன்பிற்கு சலித்தவர் இல்லை. பல போராட்டமான தருணங்களில் மகளுக்கு பக்கபலமாக இருந்தார்☺️☺️☺️☺️☺️.

வசுந்தர லட்சுமி:🙏🙏🙏🙏🙏🙏
ணவரையும், உடன் பிறந்தவளையும் தவமாய் தவமிருந்து சுமந்த குழந்தையையும் இழந்து வாழ்வின் கொடிய பக்கத்தை கடந்து வந்த இவரின் உயிர்மூச்சு தென்றல் ஒருவளுக்கு மட்டுமே... இவரது மனம் தெய்வத்திற்கு சமம்🙏🙏🙏🙏🙏.

அனுஜா -கிருஷ்ணமூர்த்தி: 🙏🙏

அனுஜா: இந்தக் கதையில் என் மனதை மிகவும் கவர்ந்த நபர் இவர்🥰🥰🥰🥰🥰🥰.

தன் கண் முன்னே நிராதரவான நிலையில் தவித்து நின்ற மொழியை தன் மடித்தாங்கியதோடு அவனுக்காக உறவுகளையும் உதாசினம் செய்து தன் பிள்ளையாகவே அன்பு கொண்டு அரவணைத்த விதமும், கௌரவமாக நடத்திய விதமும் இவர் மீது பல மடங்கு மரியாதையையும், மதிப்பையும் கொடுத்தது💞🙏💞🙏💞🙏💞.
கிருஷ்ணமூர்த்தி: இவரது அன்பும் மனதை மகிழ்வித்தது☺️☺️.

மாதவன் (மேடி )😍😍😍😍😍
என்ன ஒரு நட்பு, அன்பு என்று வியக்காமல் இருக்க முடியவில்லை இவனது அன்புக்கும் நட்புக்கும் அருள்மொழி புண்ணியம் செய்திருக்க வேண்டும்🥰🥰🥰🥰.

பத்மநாபன்- அழகம்மை:❣️🙏❣️
பத்மநாபன் மற்றும் அழகம்மை பெரியவர்களாய் தன் மக்களின் வாழ்வில் அனைத்து சூழ்நிலைகளையும் கவனமாக கையாள கற்றுக்கொடுத்ததுடன் குடும்பத்தை கௌரவத்துடன் நிலை நிறுத்த உறுதுணையாக இருந்தனர்.

கதையின் நிறைவு மனதிற்கு நிறைவையும் நிம்மதியை கொடுத்தது

@Kanmani Manodheedhan வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
 
Last edited:
அருமை அருமை அருமை 🤗 🤗🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗.
சூப்பரான விமர்சனம் 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 அசத்தலோ அசத்தல்.
சாங் செம செம செம அல்டிமேட் ப்பா 🥰 🥰 🥰 🥰 🥰 🥰.
கலர்கலரா தென்றலை ஸ்வரமாக்கி தேனோடு கலந்தாச்சு.
 

Advertisement

Latest Posts

Top