உணர்ச்சிகரமான பதிவு சரண்யா???.படிக்கற பொண்ணு, அவ பெத்தவங்க சம்மதம் இல்லாம நடந்த கல்யாணம்,மைனர் மேரேஜ் யாராவது கேஸ் கொடுத்தா உள்ள வச்சிருவாங்க????.
கடைசி ஆசைன்னு சொல்லி கட்டாயப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சவங்களே, இந்த கல்யாணத்தை பத்தி பேசட்டும்,18வயசாகவும் வந்து கூப்பிடலாம்னு விஜய் சரியா சொன்னான்??
எந்த காட்டுப்பயலோ என் வீட்டுக்கு சம்பந்தமா வரலாமான்னு,ஒரு காட்டுமிராண்டி கேட்கறான்????.எருமை கழுத்தோட தூக்குன விஜய் அப்படியே தூக்கி வீசி கை,காலை உடைச்சிருக்கனும், மனுசனா இவன் ???.பழனி அண்ணன் பேச்சுக்கு தலையாட்டுறான் நெனச்சா,வசந்தி பொண்ண அடிக்கறதையும் தடுக்காம இருக்கானே???.பவியின் நிலை மனம் கனக்க வைக்குது????
நான் தான் வம்படியா கட்டி வச்சேன்,என்னை வேணா கொன்னுடுன்னு மரகதம் கதற???, பெத்தவன்னு நெனைக்காம அதான் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்களேன்னு எருமை ஈவு,இரக்கமில்லாம பேசறானே இவனெல்லாம் என்ன ஜென்மமோ???.
அசிங்கத்தை வாங்கி வந்திருக்காளா???அடிப்பாவி...தாத்தா,பாட்டி சொன்னதை கேட்டதுக்கு, ஒரு அம்மா பேசற பேச்சா பேசறா??.நாலு சுவத்துக்குள்ள நடந்தது வசந்தி தான் தேவையில்லாம பேசி,ஊர் முன்னே ஒப்பாரி வச்சு பொண்ணு பேரையே கெடுத்துட்டா ராட்சஷி????.
மகனுக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தை கொண்டாடியது தான் கடைசியாக சேர்ந்திருப்பது என நினைத்திருக்க மாட்டார்கள் ,கேரளா போனவர்களுக்கு கோவையில்விபத்து ஏற்பட்டது எப்படி???.இது விபத்தா,எருமை செய்த சதியா,என்ன நடந்தது????.