Nalla kathai kuduthimga dear azhaga konduponimga pa nice thanks saranya dear
உங்கள் விமர்சனம் வெகு அருமை.மிகவும் அருமையான நாவல்,
சரண்யா ஹேமா டியர்
பெற்றோரின் கஷ்டம் தெரிந்து அனுசரணையாக இருக்கும் தாமரை நிவேதா போன்ற பெண்கள் கிடைப்பது வரம்தான்
அதை விட பையனை பெற்று விட்டாலே ஏதோ பெரிய மஹாராணி போலே வெட்டி பந்தா பண்ணி ஸீன் காட்டும் மாமியார்களுக்கிடையே யமுனா ஒரு வைரக்கல்
அங்கையர்க்கரசி or அங்கையர்க்கண்ணி அவங்க முழுப் பெயர் எதுவாக இருந்தாலும் அங்கை கிடப்பதற்கரிய ஒரு அருமையான உறவு
யமுனாக்கள் இருக்கும் வரை மருமகள்களுக்கு ஒரு கஷ்டமும் வராது
உங்கள் விமர்சனம் வெகு அருமை.மிகவும் அருமையான பதிவு சரண்யா???.அடப்பாவி...தர்ஷூ, நிவியோட கல்யாணம் வேணாம்னு சொல்றதுக்கான காரணம் என்னனு நெனச்சா தாமரையா???.கொழுந்தனா இருக்கறப்போவே அல்லு விடுது,தங்கச்சி வீட்டுக்காரனா ஆகிட்டா, இனி யாரையும் பார்த்து ஜொள்ளு விட முடியாதுன்ற கவலையா????.
தாமரை,நிவியின் படிப்பு முக்கியம்னு பேசியது சரிதான்.இந்த குடும்பத்துல வந்தா அதை பற்றிய கவலைபட வேண்டிய அவசியம் இல்லை என தர்ஷனுக்கு தான் புரியலை???.யமுனா,நிவிய பத்தி சொல்லும் போது பேசாம இருந்துட்டு,நிச்சயத்துக்கு நாள் குறிச்சு வந்ததுக்கு அப்புறம் ஷாக்ல இருந்தேன்னு சொல்றீயே தர்ஷூ????.
நிச்சயத்தை பண்ணிட்டு கல்யாணத்தை தள்ளி வைக்கிறதை பத்தி பேச வந்தவன்,இப்படியா தர்ஷன் தான் போடனும் தண்டாயுதபாணி போடக்கூடாதுன்னு இவனே பத்திரிகையில் பேர் போடறத பத்தி பேசி வந்த விஷயத்தை மறந்துட்டானே???.எள்ளுவய பூக்கலையேன்னு பாட்டு வேற???.
திருமணமும் நல்லபடியாக நடந்திருக்க,சோமநாதன் திருமண மேடையில் தன் வீட்டு பத்திரத்தை இரு பெண்களையும் சேர்த்து நிற்க வைத்து கொடுத்து ஊரார் வாயை அடைக்க,தாமரைக்கு இதில் பெருமை தான்????.நிவியோடு கல்யாணம் வேணாம்னு சொன்னவன்,கல்யாணம் முடிஞ்சதும்
சீராக வீடு வரவும் தனிக்குடித்தனம் போலாமான்னு கேட்கறானே????.
திருமணத்துக்கு பார்க்கும் பெண்களை எல்லாம் குறை சொல்லும் கதிர்,வீட்டு சூழ்நிலை காரணமாக திருமணம் வேண்டாம் என சொல்லும் தாமரை இவர்கள் திருமணம் நிச்சயமாக,கல்யாண வீட்டில் நகை,பணம் திருடு போவதால் கல்யாணம் நடக்குமா,நடக்காதா என்ற நிலை,திருடு போன நகை, பணம் கிடைத்ததா இல்லையா என நடுத்தர குடும்பத்தில் ஏற்படும் பணப்பிரச்சனை,சொந்தங்கள் என்ற பெயரில் வேடிக்கை பார்ப்பது,இளாக்காரமாக பேசுவது பற்றி கூறியது அருமை????.
யமுனா,யமுனாவின் குடும்பம்,அங்கை மனதை கவர்ந்து விட்டனர்????.குடும்ப கஷ்டத்தை புரிந்து நடந்து கொள்ளும் தாமரை,நிவி போல மகள்கள் கிடைத்தது வரம் தான்???.
செங்கதிரவனின் வருகையால் இன்று தாமரை மலர்ந்து மணம் வீசுகிறது????.
அருமையான குடும்பகதை.எளிமையான நடை.இனிமையான,நிறைவான முடிவு????.
வாழ்த்துக்கள் சரண்யா ஹேமா?????.