வெற்றியோட திருமணம் அதன் பின்னான வாழ்க்கை இது ரெண்டுலயுமே வெற்றி குடும்பத்துல ஆளாளுக்கு கொஞ்சமும் விகிதாச்சாரம் குறையாமல் சரண்யா வாழ்க்கையில் விளையாடி இருக்காங்க வெற்றியையும் சேர்த்து தான் சொல்றேன்.
யார் என்ன செஞ்சுருந்தாலும் கோவம் எனக்கு வெற்றி மேல தான் அதிகமா வருது. ஒன்னு அப்பா செத்தா சாகட்டும் என்று விட்டுருக்கணும் இல்லையா அப்பாவை மதிக்காத வீட்டு பொண்ணு வேண்டாம் என்று இருக்கணும் இல்லை அவனோட ஆருயிர் lover அவங்க வீட்டு உறவை விட்டுட்டு இவங்க வீட்டுக்கு வந்துருக்கணும். இப்படி எதுவும் செய்யாமல் அநியாயமா ஒரு பொண்ணோட வாழ்க்கையை சிதைச்சுருக்காங்களே இவங்க எல்லாரும் சேர்ந்து.
எப்படியோ இப்ப சரண்யாவோட நிதானம் ஒரு அம்மா வா ரொம்ப தெளிவா இருக்கு. அது சரியும் கூட.
ஆனால் வெற்றி இனிமேல் அவனோட அம்மா உடலுக்கு இறுதிக்கடமை செய்யக்கூட சரண்யா அனுமதி வாங்கி தான் போகணும். அவங்களோட வேற எந்த வகையிலும் அவன் தொடர்பு வெச்சுக்க கூடாது. அப்படி ஒரு கேவலமான பிறவி தான் தனம்.