எனக்கும் இந்த வெற்றியை பிடிக்கவேயில்லை…தனம் எத்தனை பெரிய நியாயவாதி... என்ன அழகா தீர்ப்பு சொல்லிட்டாங்க.... கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத ஜென்மம்.... சரண்யா மேல அப்படி என்ன விரோதம்... பேரப்பிள்ளைகள் மேல துளி கூட பாசம் இல்லை.... அவங்க இருக்கும் போது எப்படி வாரிசு இல்லாம போகும்.....
இப்போ அபிக்காக இவ்வளவு போராடுறவங்க அப்போவே அவ வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருந்து ஏன் தீக்குளிச்சு வெற்றி அபியை சேர்த்து வச்சுருக்க வேண்டியது தானே....
சரண்யாவை ஏன் கல்யாணம் பண்ணி வைக்கணும்.. பணம் காசு வந்தவுடனே இவங்க வசதிக்கு தகுந்த அபி வேணுமோ.....
வெற்றி என்ன பேசுனாலும் இவனை எனக்கு பிடிக்கவே இல்லை.... இப்போவும் பிள்ளைகளை பத்தி தான் யோசிக்கிறான் சரண்யான்ற ஒருத்திக்கு செஞ்ச தப்பு நியாபகத்துலயே இல்லை..
அபி எல்லாம் என்ன சொல்ல ரெண்டு பெண் பிள்ளைகளோட அப்பாவை கல்யாணம் பண்ணிக்க இப்படி துடிக்கிறா.... வெறி தான் பிடிச்சுருக்கு இவளுக்கு... எப்படியும் வெற்றி கிடைக்காம பைத்தியமா அலையப் போறா....
இவங்க குடும்பமா சேர்ந்து ஏதோ அனாதை குழந்தையை தத்தெடுக்கப் போறதை போல பேசிகிட்டு இருக்காங்க.... சரண்யா தான் இதுல முடிவு எடுக்கணும்னு மறந்துட்டாங்க..
அவளுக்கு இவங்க எல்லாம் ஒரு பொருட்டே இல்லைன்னு தெரியல.... தனம் அவங்களை போல அவளையும் நினைச்சுட்டாங்க பணத்தை குடுத்தா மூஞ்சிலயே விட்டெறிஞ்சுடுவா....
இப்போ இந்த வெற்றி என்ன பண்ணப் போறான்னு பார்க்கணும்....