கரை தாண்டி வா காதலே
எழுத்தாளருக்கு: காதலின் கதைகள் காதலை மட்டுமே மையமாக வைத்து எழுத வேண்டும் என்ற போட்டி கதையில் தமிழ் மகளின் மனதை வென்ற ஒரு ஆங்கிலேயனின் புனிதமான காதலை மிக அழகாகவும் கண்ணியமாகவும் நமக்கு வாசிக்க தந்தமைக்கு எழுத்தாளருக்கு வாசகர்களின் பாராட்டுகளும் நன்றிகளும்
மிருதுளா நம் கதையின் நாயகி: தமிழக மண்ணில் மதிவாணன் _ கலைவாணி தம்பதிகளுக்கு மகளாக பிறந்து சகோதரன் மகேந்திரன் உடன் செல்லமாக வளர்ந்து....அத்தை மகனை மணந்து ஆங்கிலேய காலனி லண்டனிற்கு குடிபெயர்கிறாள்
அங்கு சென்ற பிறகு தான் தெரிகிறது கணவனுக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் தொடர்பு
பெற்றவர்களின் சம்மதத்துடன் அத்திருமணத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விலகி.... பிறந்த வீட்டிற்கு வர விருப்பம் இல்லாமல் அங்கேயே தங்கி அவளுக்கு என்று ஒரு வேலையை அமைத்து கொண்டு தோழி ஜெனியுடன் அறை எடுத்து தனியாக வாழ தொடங்குகிறாள்
அலெக்சாண்டர் ஸ்டோன் நம் கதையின் நாயகன்: லண்டன் மாநகரில் பிறந்து பெற்றவர்கள் உற்றவர்கள் இன்றி காப்பகத்தில் வளர்ந்து தனக்கென இருக்கும் ஒரே நண்பன் ராபர்ட் உடன் இணைந்து தனக்கென ஒரு தொழில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு நல்லொழுக்கத்துடனும் நற்பண்புகளுடனும் சமுதாய சீர்திருத்த சிந்தனைகளுடன் வாழ்ந்து வருபவன் அவனுக்கென்று அவன் வகுத்த பாதை அவனுக்கு சரி ஆனால் சட்டத்திற்கு....????
மிருதுளா .... தொடர் வண்டியில் ஒரு பெண்ணை வம்பு செய்பவர்களை தட்டி கேட்கும் ஒருவனை பார்க்கிறாள் அவளின் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் அவனை கடந்து வந்து விடுகிறாள்.
தோழி ஜெனி காதலன் பீட்டர் உடன் விடுமுறையை செலவழிக்க ஸ்காட்லாந்து செல்ல மிருதுளாவையும் தங்கள் பயணத்தில் இனைத்து கொள்கிறாள்.... அங்கு தனியே சுற்றிப்பார்க்க மிதிவண்டியில் செல்லும் மிருதுளாவிற்கு சிறு விபத்து ஏற்பட அவளை காக்கிறான் நம் நாயகன் அலெக்ஸ் ஏற்கனவே மிருதுளா தொடர்வண்டியில் சந்தித்த அந்த ஒருவன்
முதன் சந்திப்பிலேயே தன் மனதை ஈரத்த பெண்ணான மிருவிடம் பழகி பார்க்க ஆசை கொள்கிறான் நம் நாயகன்
இரண்டாம் சந்திப்பில் தன் மனதின் விருப்பத்தை மிருவிடம் தெரிவித்து அவளை டேட்டிங்கிற்கு அழைக்கிறான் அலெக்ஸ்.... தான் வளர்ந்த கலாசாரத்திற்காகவும் தன் கடந்த கால வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை நினைத்தும் மிரு அதனை மறுக்க....விடாக்கன்டனாக எடுத்த காரியத்தில் வெற்றியடையாமல் பின் வாங்கும் பழக்கம் இல்லாத அலெக்ஸ் மிருவிடம் நட்புக்கரம் நீட்டுகிறான்
மிரு _ அலெக்ஸ் நட்பு காதலாக உருமாற அலெக்ஸ் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் அபாரம் மிரு மீது கொண்ட தன் தூய்மையான காதலுக்காக தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் கற்றுத் தேறி.... அவன் விரும்பி செய்யும் தொழிலையும் மிருவின் காதலுக்காக மாற்றி அமைத்து கொண்டு மிருவின் மனதை மட்டும் அல்ல அவளின் அண்ணன் பெற்றவர்களின் மனதையும் கொள்ள கொள்கிறான் அந்த கள்வன்
தன் காதலால் மிருதுளாவின் மனக்கிளேசங்களை கலைந்து கடந்த கால கசப்பான அனுபவங்களை மறக்க செய்து அவனின் எதிர்பார்ப்பில்லா அன்பில் மூழ்க செய்து அவளின் காதலுக்காக தன்னை முழுமையாக மாற்றி அமைத்து கொண்டு....பெற்றவர்கள் நண்பர்கள் முன்னிலையில் அலெக்ஸ் _ மிருதுளா திருமணம் லண்டன் மாநகரில் கோலாகலமாக நடைபெறுகிறது
அலெக்ஸின் திருமண வாக்குறுதி Lovely அதனை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
மாமியார் மெச்சும் மருமகனாக மாமனார் மற்றும் மச்சானின் மனம் கவர்ந்தவனாக மிருவின் ஆசை கணவனாக....அலெக்ஸ் எடுக்கும் பரிமாணங்கள் படிப்பவரின் மனங்களை வியக்க வைக்கிறது
மொழி, இனம், மதம், உணவு முறை, பழக்கவழக்கம், கலாச்சாரம், வளர்ந்த விதம் அனைத்திலும் மாறுபட்ட இருவேறு உள்ளங்கள் இனைவது காதல் என்ற அற்புத உணர்வில் மட்டுமே சாத்தியமாகும்
கரை தாண்டி செனற தமிழ் மகளின் மனதை தன் அளப்பரிய காதலால் வென்ற அலெக்ஸின் குணமும், மனவுறுதியும் நம்மை பிரமிக்க செய்கிறது என்று சொன்னால் மிகையில்லை
அருமையான கதை
நிறைவான முடிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
எழுத்தாளருக்கு: காதலின் கதைகள் காதலை மட்டுமே மையமாக வைத்து எழுத வேண்டும் என்ற போட்டி கதையில் தமிழ் மகளின் மனதை வென்ற ஒரு ஆங்கிலேயனின் புனிதமான காதலை மிக அழகாகவும் கண்ணியமாகவும் நமக்கு வாசிக்க தந்தமைக்கு எழுத்தாளருக்கு வாசகர்களின் பாராட்டுகளும் நன்றிகளும்
மிருதுளா நம் கதையின் நாயகி: தமிழக மண்ணில் மதிவாணன் _ கலைவாணி தம்பதிகளுக்கு மகளாக பிறந்து சகோதரன் மகேந்திரன் உடன் செல்லமாக வளர்ந்து....அத்தை மகனை மணந்து ஆங்கிலேய காலனி லண்டனிற்கு குடிபெயர்கிறாள்
அங்கு சென்ற பிறகு தான் தெரிகிறது கணவனுக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் தொடர்பு
பெற்றவர்களின் சம்மதத்துடன் அத்திருமணத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விலகி.... பிறந்த வீட்டிற்கு வர விருப்பம் இல்லாமல் அங்கேயே தங்கி அவளுக்கு என்று ஒரு வேலையை அமைத்து கொண்டு தோழி ஜெனியுடன் அறை எடுத்து தனியாக வாழ தொடங்குகிறாள்
அலெக்சாண்டர் ஸ்டோன் நம் கதையின் நாயகன்: லண்டன் மாநகரில் பிறந்து பெற்றவர்கள் உற்றவர்கள் இன்றி காப்பகத்தில் வளர்ந்து தனக்கென இருக்கும் ஒரே நண்பன் ராபர்ட் உடன் இணைந்து தனக்கென ஒரு தொழில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு நல்லொழுக்கத்துடனும் நற்பண்புகளுடனும் சமுதாய சீர்திருத்த சிந்தனைகளுடன் வாழ்ந்து வருபவன் அவனுக்கென்று அவன் வகுத்த பாதை அவனுக்கு சரி ஆனால் சட்டத்திற்கு....????
மிருதுளா .... தொடர் வண்டியில் ஒரு பெண்ணை வம்பு செய்பவர்களை தட்டி கேட்கும் ஒருவனை பார்க்கிறாள் அவளின் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் அவனை கடந்து வந்து விடுகிறாள்.
தோழி ஜெனி காதலன் பீட்டர் உடன் விடுமுறையை செலவழிக்க ஸ்காட்லாந்து செல்ல மிருதுளாவையும் தங்கள் பயணத்தில் இனைத்து கொள்கிறாள்.... அங்கு தனியே சுற்றிப்பார்க்க மிதிவண்டியில் செல்லும் மிருதுளாவிற்கு சிறு விபத்து ஏற்பட அவளை காக்கிறான் நம் நாயகன் அலெக்ஸ் ஏற்கனவே மிருதுளா தொடர்வண்டியில் சந்தித்த அந்த ஒருவன்
முதன் சந்திப்பிலேயே தன் மனதை ஈரத்த பெண்ணான மிருவிடம் பழகி பார்க்க ஆசை கொள்கிறான் நம் நாயகன்
இரண்டாம் சந்திப்பில் தன் மனதின் விருப்பத்தை மிருவிடம் தெரிவித்து அவளை டேட்டிங்கிற்கு அழைக்கிறான் அலெக்ஸ்.... தான் வளர்ந்த கலாசாரத்திற்காகவும் தன் கடந்த கால வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை நினைத்தும் மிரு அதனை மறுக்க....விடாக்கன்டனாக எடுத்த காரியத்தில் வெற்றியடையாமல் பின் வாங்கும் பழக்கம் இல்லாத அலெக்ஸ் மிருவிடம் நட்புக்கரம் நீட்டுகிறான்
மிரு _ அலெக்ஸ் நட்பு காதலாக உருமாற அலெக்ஸ் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் அபாரம் மிரு மீது கொண்ட தன் தூய்மையான காதலுக்காக தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் கற்றுத் தேறி.... அவன் விரும்பி செய்யும் தொழிலையும் மிருவின் காதலுக்காக மாற்றி அமைத்து கொண்டு மிருவின் மனதை மட்டும் அல்ல அவளின் அண்ணன் பெற்றவர்களின் மனதையும் கொள்ள கொள்கிறான் அந்த கள்வன்
தன் காதலால் மிருதுளாவின் மனக்கிளேசங்களை கலைந்து கடந்த கால கசப்பான அனுபவங்களை மறக்க செய்து அவனின் எதிர்பார்ப்பில்லா அன்பில் மூழ்க செய்து அவளின் காதலுக்காக தன்னை முழுமையாக மாற்றி அமைத்து கொண்டு....பெற்றவர்கள் நண்பர்கள் முன்னிலையில் அலெக்ஸ் _ மிருதுளா திருமணம் லண்டன் மாநகரில் கோலாகலமாக நடைபெறுகிறது
அலெக்ஸின் திருமண வாக்குறுதி Lovely அதனை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
மாமியார் மெச்சும் மருமகனாக மாமனார் மற்றும் மச்சானின் மனம் கவர்ந்தவனாக மிருவின் ஆசை கணவனாக....அலெக்ஸ் எடுக்கும் பரிமாணங்கள் படிப்பவரின் மனங்களை வியக்க வைக்கிறது
மொழி, இனம், மதம், உணவு முறை, பழக்கவழக்கம், கலாச்சாரம், வளர்ந்த விதம் அனைத்திலும் மாறுபட்ட இருவேறு உள்ளங்கள் இனைவது காதல் என்ற அற்புத உணர்வில் மட்டுமே சாத்தியமாகும்
கரை தாண்டி செனற தமிழ் மகளின் மனதை தன் அளப்பரிய காதலால் வென்ற அலெக்ஸின் குணமும், மனவுறுதியும் நம்மை பிரமிக்க செய்கிறது என்று சொன்னால் மிகையில்லை
அருமையான கதை
நிறைவான முடிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Last edited: