Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

பாரதிப்பிரியன்
Reaction score
866

Profile posts Latest activity Postings About

  • மீண்டும் ஒரு
    வாழ்நாள்
    மகிழ்வுடன் புலர்ந்துள்ளது
    மகள்களை
    பெற்ற பெற்றோரே
    பிள்ளைகளை
    கவனியுங்கள்
    மகன்களை பெற்ற
    பெற்றோரே
    மிக கவனமாய்
    கண்காணியுங்கள்
    சமுதாயம் காட்டும்
    சாக்கடைகள் மலிந்து கிடக்கிறது
    புதிய தலைமுறையின்
    புத்தியை பேதலிக்க செய்ய
    போர்க்கோலம் பூண்டுள்ளது...
    அன்பு ஒன்றே
    பிள்ளைகளை
    பேணும் கவசம்
    "மறுப்பு" ஒன்றே
    பெண் பிள்ளைகளின்
    "ஆயுதம்"
    நம் பிள்ளைகள்
    "வேல்விழிகள்" அல்ல
    "ஆலிமாக்கள்" ஆகட்டும்
    இனிய காலை வணக்கம்
    அன்புள்ள வாசகர், எழுத்தாளர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய புதிய சிறுகதை கலங்கரை கோபுரம், மல்லிகா மணிவண்ணன் தளத்தில் பதிப்பித்துள்ளேன். கிரேக்க மணிமகுடம் 12ம் அத்தியாயம் இந்த தளத்தில் வாசிக்க தயாராக உள்ளது. இரண்டையும் வாசித்து மகிழ உங்களை அன்புடன் வேண்டுகின்றேன். பாரதிப்பிரியன்
    எம்மதமும்
    சொல்லும்
    தாரக மந்திரம்
    அன்பு...

    அன்பின் இலக்கணத்தை
    அய்யன் வள்ளுவர்
    இலக்கியமாக்கிட

    அறிஞர் பலரும்
    அறிவுறுத்தி ஓய்ந்திட
    இன்று

    அன்பை விதைக்காமல்
    தேடித் திரிகின்றோம் - உலகில்
    விதையோ நம் கரங்களில்

    நாளைய தலைமுறைக்கு
    அன்பை கற்றுத்தாருங்கள்
    அன்புடன் கற்றுத் தாருங்கள்

    அதுவே உலகிற்கு
    அத்தியாவசிய தடுப்பு மருந்து...

    இனிய காலை வணக்கம்
    தமிழ் நாவல் எழுத்தாளர்கள் குழுமத்தில், கதை போட்டியில் பங்கேற்று இருக்கும் அத்தனை சகோதர சகோதரிகளையும் வாழ்த்துகின்றேன். இன்று இறுதி நாள். அனைவரும் முழு வீச்சில் கதைகளை பதிவேற்றம் செய்ய உறக்கம் தொலைத்து உழைத்து இருப்பீர்கள். போட்டியாளர்கள் அத்தனை பேரின் ஆக்கபூர்வமான உழைப்பிற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்... தமிழின் இளமை உங்களை போன்ற அர்பணிப்பாளர்களால் தான் இன்றும் பொலிவோடு உள்ளது...
    பூமிப் பந்தை
    முற்றுகை செய்த
    இருளின் திரைகள்
    விலகி விட்டன...
    பகலவனின் பயணம்
    பல்லக்கில் ஏறி
    பவனிவர தொடங்கி விட்டது.
    கிரேக்க மணிமகுடமும்
    கலங்கரை கோபுரமும்
    உங்கள் உள்ளத்தை
    புத்துணர்ச்சியாக்க
    அலுவல்களை
    ஆனந்தமாக
    ஆக்கபூர்வமாக நிறைவேற்றுங்கள்
    இனிய காலை வணக்கம்...
    அன்புடன்
    பாரதிப்பிரியன்
    அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்.
    கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 12ம் அத்தியாயம், பதிப்பித்து உள்ளேன்.வாசித்து மகிழுங்கள். உங்கள் ஆதரவை தாருங்கள். மிக்க நன்றி
    "மாநாக்காவாரம் - இந்திரா முனை - நறுமண பிசின் கட்டி - ஸ்ரீவிசயம், கடாரம், பெகு, லெமூரியா - மனித நேயம்- அரசனின் அன்பு- இவை குறித்து ஒரு புரிதல் வேண்டுமா? வாசியுங்கள் "கலங்கரை கோபுரம்" சிறுகதை. மல்லிகா மணிவண்ணன் தளத்தில் இப்போது..... அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டிய நிறைய விஷயங்கள் இதில் இலவசமாக உள்ளது...

    நன்றி
    புலர்ந்திருக்கும்
    புதுநாளின்
    புத்துணர்ச்சியை
    புன்னகையாக கொண்டு

    ஆற்றலோடும்
    ஆன்மாவின் எழுச்சியோடும்
    அற்புதமாக தொடங்குங்கள்
    ஆக்கப்பூர்வமாய் செயல்படுங்கள்

    ரோஜாவின் இதழ் தூவி
    பறவைகள் பாடும் இசை கூட்டி
    கடலலையின் ஆர்ப்பரிப்போடு
    வாழ்த்துகின்றேன்

    இனிய காலை வணக்கம்
    பிரியமுள்ள உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்.
    மல்லிகா மணிவண்ணன் தளத்தில் கலங்கரை கோபுரம் என்னும் புதிய வரலாற்று சிறுகதையை பதிப்பித்து உள்ளேன். ராஜேந்திர சோழன் காலத்து சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த கதை, வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. வாசித்து பாருங்கள். தினமும் வாசிக்கும் கதைகளோடு இதையும் வாசிக்க கொஞ்சம் மனது வையுங்கள். உங்கள் ஆதரவு வேண்டுகின்றேன்.
    பிரியமுடன்
    பாரதிப்பிரியன்
    அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். என்னுடைய புதிய வரலாற்று சிறுகதை, "கலங்கரை கோபுரம்" (அன்பின் நினைவுச் சின்னம்) மல்லிகா மணிவண்ணன் தளத்தில் பதிப்பித்துள்ளேன். இராஜேந்திர சோழன் காலத்தில் நிகழ்ந்த சம்வவங்களின் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு, பல தெளிவுகளுக்குப் பின் இந்த புனைவு கதை எழுதியுள்ளேன். வாசித்துவிட்டு உங்களின் ஏகோபித்த ஆதரவை எதிர்பார்க்கின்றேன்.
    அன்புடன்
    பாரதிப்பிரியன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top