பொழியும் மேகம்!... அத்தியாயம் 27

Advertisement

இதுல குழந்தைகள் பேசக்கூடாதுனு, சொல்லவே இல்லையே🤔 இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கறேன். நான் சொன்னது என்னனா, வித்யா or சுசீலா தேவையில்லாமல் பேசும் போது நித்திலா பதில் பேச வேண்டாம்னு மட்டும் தான். ஒருத்தருக்கு ஒரே கேள்வி தன்னை நோக்கி வரும் போது அதற்கு ஏற்கனவே சொன்ன பதிலையே திருப்பி, திருப்பி சொல்லி புரிய வைக்கிறது விட..அவங்களுக்கு பதிலாக அவளை சார்ந்தவங்க ஏதாவது திருப்பி கொடுத்தா கேள்வி கேட்கிறவங்க கொஞ்சம் வாய் அடங்க வாய்ப்பு இருக்கு.

அதுவும் இல்லாமல் நித்திலா பெத்தவங்களை தான் பதில் கொடுக்க சொன்னேன். பிருந்தாவையோ,அவ தம்பியையோ இல்லை. நித்திலா,நிரஞ்சன் இவங்க வாழ்க்கை இனியாவது சிக்கல் இல்லாம இருக்கனும் அப்படின்ற நோக்கத்தில் தான்.
@Mrs.Gnanasekarr ரொம்ப tension ஆகியாச்சோ...
நர்மதா பதில் நித்திலா வருது...

🤗🤗🤗
 
Last edited:
சுசீலா எல்லாம் திருந்தாத ஜென்மம்.....😡. எங்க இதே அதிகாரத்தை வித்யாகிட்டயோ அவ வீட்டு ஆளுங்ககிட்டயோ காட்டுங்க பார்ப்போம்..... நர்மதா தான் இளிச்சவாயி அவளும் அப்படி தான் இருக்கா.....🤦‍♀️

தாமோதரன் தான் எதிர்ப்பார்க்கல ..... ரொம்ப நியாயவாதின்னு காட்டிக்க நினைக்குறாரா என்ன.....சுயநலவாதி..... நிரஞ்சனோட இந்த இக்கட்டான சூழ்நிலையில கூட உதவ முன்வரலை..... ஆனா அவன் விலகிப் போயிடுவானோன்னு பயம் ரெண்டு பேருக்கும்....

இப்போ தான் மூத்த மகனும் மருமகளும் அங்க தானே இருக்காங்க அவங்களை கூப்பிட வேண்டியது தானே... அதை விட்டுட்டு தன்னை நிலைநிறுத்திக்க கஷ்டப்படுறவங்களை குற்றம் சொல்லிட்டு இருக்காங்க......

வித்யா அவ மாமனார் எதுவும் பணம் குடுத்துட்டாருன்னு பஞ்சாயத்தை கிளப்பப் போறா போல...... அமர்க்களமா இருக்குமே சீக்கிரம் தொடங்கி வை மா 🤩🤩🤩🤩🤩

நிரஞ்சன் அருமையான மாற்றம்.... 😍😍😍😍😍😍
 
வித்யா பண்ற ஒவ்வொரு தப்பும் நர்மதா வாழ்வில் விடியலை ஏற்படுத்தும். இன்னும் நிரஞ்சனுக்கு தெளிவு பிறக்கும். புது தொழில் சிறந்து இன்னும் வாழ்வில் முன்னேறட்டும்.
 
ரொம்ப tension ஆகியாச்சோ...
நர்மதா பதில் நித்திலா வருது...

🤗🤗🤗
ஆமாங்க சிஸ்டர் 🤭
சீக்ரெட் வெளியில் சொல்லிப் போடாதீங்கோ. நானு போயி சைலண்டா எடிட் பண்ணிப் போடறேன்😁😁😁
 
நிரஞ்சன் சூப்பர்.
சுசீலா பேச்சு சரியில்லை.
அப்பா சுதாரிச்சுக்கிட்டார்.
வித்யா தப்பாவே யோசி.
Very interesting update ma
 
நர்மதா, நிரஞ்சன் ரெண்டு பேரும் அடுத்து அடுத்து முன்னேறிகிட்ட இருக்க போறாங்க! அப்பவும் இந்த வித்யா எப்படி குறை கண்டு பிடிக்கிறதுனு மட்டும்தான் யோசிக்க போறா! அழகு பதிவு சகோதரி
 

Advertisement

Advertisement

Back
Top