Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 37(2)

Advertisement

எப்பவும் பசங்க தான மறப்பாங்க😂 வினயன் சொன்ன மாதிரி காஞ்சிபுரம் போய் ஜெய்ய மறந்திட்டா😏 ஆனாலும் ரெண்டு தடவை ஊர்மி கண்ணீரோட முடிச்சு நாங்களும் கண்டமேனிக்கு கற்பனை பண்ணி😒

அச்சச்சனுக்காக விடாது கறுப்பா ஊர்மி கிட்ட பேசுறான்...அவன் சொன்ன மாதிரி ஊர்மி இங்க வளர்ந்திருந்தானா மதங்களுக்கிடையே மாட்டிட்டு இருந்திருக்கனும்...
 
சரஸ்வதி பூஜைக்காக ஒரு pleasant 'க்' வெச்சு முடிச்சிருக்கீங்க போல - மகிழ்ச்சி.

கடந்த 4 update - ஆ twist வெச்சு முடிச்சு, எனக்கு நிறைய bulb குடுத்துடீங்க போதும்.

நீதிபதி வினையன் ஒருவர் தனது நெருங்கிய உறவினறது ( especially spouse ) பிறந்த நாளை மறந்தால் அது இன்று முதல் தேசத்துரோகக் குற்றத்திற்கு நிகராக கருத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் - இப்படி தான் எனக்கு தோணிச்சு.

As usual ஜெய் அவனோட maturity and தெளிவை காமிச்சுட்டான். இந்த குணதால தான் அவன் ரத்னவேல் தாத்தாவையே கவுத்துட்டான்.

இந்த ஊர்மி பிறப்பு விஷயம் - ரகசியமாவே இருந்துருக்க கூடாதான்னு தோண வைக்குது.

பிரபாகரன் மேல என்ன தப்பு? ஒரு துளி அளவு கூட அவர் மீது தவறு இருப்பதாக எனக்கு தோணலை. ராஜீவனுக்கு அவரோட அம்மா - அப்பாவிடம் தொடர்பு இல்லாமல் இருக்கறப்ப அவங்களோட பாசமெல்லாம் எப்படி இருக்கும் என்று யோசித்து அவங்ககிட்ட போய் ராஜீவன் பத்தி பேசணும் என்று நினைப்பதெல்லாம் too much. அவராக கொடுத்த குழந்தையை தானே இவங்க வளர்க்கறாங்க, இவங்களா ஒன்னும் அவரிடம் இருந்து வாங்கலியே. அப்புறம் அவரோடது எப்படி சுயநல எண்ணம் ஆகும்?

எல்லார் பக்கமும் ஒரு நியாயம் இருக்கலாம் - இருக்கும். ஆனாலும் எப்பவுமே நியாயத்துடன் சேர்ந்த நிதர்சனம் ஒன்னு இருக்கும். அதை புரிஞ்சு ஏத்துக்காதவங்களுக்கு எந்த காலத்திலும் மனக்குறை தீராது.

இதுல பையன் காதலை ஏத்துக்காத அச்சுதன் அய்யாவும் சரி, மனைவியின் மரணத்தையும் தாண்டி மகளின் ஜனனத்தை ஏத்துக்கொள்ள முடியாத ராஜீவனும் சரி - ஒன்னு தான்.
 
Top