Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 10

Advertisement

அனைவருமே எப்போதடா சிவகாமி கண் விழிப்பார் என்று பார்த்துக்கொண்டு இருக்க, அந்த இந்தாவென்று சிவகாமி கண் விழிக்க மணி பத்தாகிவிட்டது.

“ம்மா..” என்று கமலி அவரின் அருகே செல்ல, அவளை பார்த்தவரோ பின் மெதுவாய் பார்வையை சுழல விட, சங்கிலிநாதன், ராணி, சற்று தள்ளி வனமாலி நிற்பது கண்டு அவரின் முகம் பிரகாசமாய் தோன்ற, இங்கே வா என்பதுபோல் இமைகளை வனமாலியை பார்த்து அசைத்தார்..

“ம்மா..” என்று கமலி இப்போது பிடிவாதமாய் அவரை அழைக்க,

“என்ன அத்தை.. ” என்று இலகுவாய் கேட்டபடி வனமாலி அவரின் அருகே வர, சிவகாமியே மெதுவாய் “உக்கார்..” என்று சொன்னார்..

தான் ஒருத்தி இருப்பதை விட்டு இவனோடு என்ன பேச்சு என்று கமலியோ “ம்மா இங்க பாரும்மா..” என்றுசொல்ல,

அவளை முறைத்தவர் “வனா... எ.. எனக்கு பயமாருக்கு..” என்றார் மெதுவாய் வார்த்தைகளை கோர்த்து..

சிவகாமி இப்படி சொன்னது அனைவருக்குமே ஒரு திகைப்பைக் கொடுத்தாலும், வனமாலி சுதாரித்து

“என்ன அத்தை.. உங்களுக்கு ஒண்ணுமில்ல.. நாளைக்கே வீட்டுக்கு போயிடலாம்..” என்றான் சமாதானமாய்..

“ம்ம்ஹும்...” என்று தலையை ஆட்டியவர், “இவளை நினைச்சு...” என்றுசொல்ல,

“ம்மா..!!!!” என்று அதிர்ந்து போய் பார்த்தாள் கமலி..

“என்னத்தை...” என்று வனமாலியும் புரியாது பார்க்க,

“அவ.. கல்யாணம்..” என்று எதுவோ அவர் சொல்ல வர,

“அத்தை ப்ளீஸ்.. இப்போ எதுவும் பேச வேணாமே... நாளைக்கு வீட்டுக்கு போயிட்டு, நீங்க நல்லாகிட்டு பேசலாமே..” என்று வனமாலி சொல்லும்போதே,

“ம்மா ப்ளீஸ் ம்மா... நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுப்பேன் சரியா...” என்றாள் கமலி கண்ணீரோடு..

சங்கிலிநாதனோ “என்ன சிவகாமி பேச்சு...” என்று கண்டிக்க,

“இல்ல..” என்று தலையை ஆட்டியவர், மகளை நேருக்கு நேராய்ப் பார்த்து “அ.. அப்போ நான் யாரை சொன்னாலும் பண்ணிக்கணும்...” என்று கேட்க,

“ம்ம் சரி...” என்றாள் யோசிக்கவே யோசிக்காது..

வனமாலிக்கும் அவ்விடத்தில் வேறெதுவும் யோசிக்க முடியவில்லை, அவனின் பார்வை சிவகாமி கமலி என்று மாறி மாறி பார்த்துக்கொண்டு இருக்க, மகள் சரி என்று சொன்ன அடுத்த நொடி சிவகாமி வனமாலியிடம்

“வனா நீ கமலியை கல்யாணம் பண்ணிக்கணும்...” என்றார் முடிவாய்..

அவன் முடிவை கேட்கவில்லை.. ஆனா சிவகாமி முடிவெடுத்துவிட்டார்..
Nice Ep
 
Top