மக்களே! இந்த போஸ்ட் இப்போ நான் போடுறேன்னா ரொம்ப மனமுடைஞ்சு இருக்கேன். என் மாமா என் அம்மாவோட சித்தப்பா பையன் வயசு 35 நேத்து நைட் கொரோனாவுல இறந்துட்டார். இத்தனைக்கும் மிக ஆரம்ப கட்டத்திலே அவரை ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்தாச்சு. கடந்த 13 நாட்களா ஹாஸ்பிடல்ல இருந்தார். 2017ல தான் அவருக்கு கல்யாணம் ஆச்சு. மூணு வயசு கூட முடியாத ஒரு பெண் குழந்தை அவருக்கு. நல்லா ரெக்வர் ஆகி வந்திருக்கார். திடீர்னு மூச்சு திணறல் வந்திடுச்சு. 10 லட்சம் செலவு பண்ணியும் அவரைக் காப்பாற்ற முடியல. அவருக்கு எந்த இணை நோயும் இல்ல. ஆனா அவர் கடந்த எட்டு வருடங்களா நைட் ஷிப்ட்ல வேலை பார்த்தார். நைட் வேலை பார்த்ததால் அவருக்கு இம்முனிட்டி பவர் தானாவே குறைஞ்சிடுச்சாம். இது டாக்டர் சொன்னது. கடந்த ஒரு வருஷமாவே சொந்த ஊர்ல தான் இருந்தார். ஒர்க் பிரம் ஹோம். அவர் மாமனார் வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் அரை மணிநேர தொலைவு தான். அங்கேயும் இங்கயும் மாறி மாறி போனதாலவோ என்னவோ உடம்பு பாதிச்சிடுச்சு. அதனால் தயவு செஞ்சு தடுப்பூசி போட்டுக்கோங்க வீட்ல பத்திரமா இருங்க. இறுதியா, அப்பா செத்து பையன் இறுதி காரியம் செய்யுறது தான் முறை. இங்க மகன் செத்து அப்பா இறுதி காரியம் செய்ய வேண்டிய நிலை வந்திடுச்சு. நான் உங்களை பயம்புறுதல... ஆனா கவனமா இருங்க...