அத்தியாயம்: 17
சமீராவுடன் சிறிது கண்ணசந்த சுமித்ரா எழும்போதே சமீராவும் எழுத்திருந்தாள்..
சுமித்ரா எவ்வளவு சொல்லியும் ஒரு மணிநேரத்திற்கு மேல் தூங்கவில்லை அவள்..
சுமித்ராவின் வேண்டுக்கோளிற்கிணங்க கோவிந்த்துடன் சென்று, தன் இருப்பிடத்திலிருந்த உடைமைகள் சிலவற்றை கொண்டுவந்தாள்..
தன் உடைமைகளுடன் குளித்துவிட்டு வந்த சமீரா, வீட்டினுள் நுழைந்ததுமே சுமித்ராவிற்கு சமையலில் உதவினாள்.
பெரிதாக ஒன்றும் சமையல் அறிந்தவளில்லை தான்.. ஆனால் சுமித்ராவினுடன் பேசிக்கொண்டே சமையல் வேலைப் பார்ப்பது சமீராவின் மனதிற்கு இதமாக இருந்ததால், சுமித்ராவை விட்டு அகலாமலே இருந்தாள்..
பின் கோவிந்துடன் மருத்துவமனைக்கு சென்றாள்..
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சமர்த்திற்காக அவளிடம் சிறிது பேச்சுக்கொடுத்தான் கோவிந்த்.
"மீரா, உன்னோட பேரன்ட்ஸ் பத்தி அந்த போலிஸ்காராக் கிட்ட சொல்றச்ச தெரிஞ்சுண்டேன்.. உனக்கு கூடப் பிறந்தவா யாராணும் இருக்காளா?" என்றுக் கேட்டான் கோவிந்த்.
அவனை திரும்பிப் பார்த்த சமீரா 'யாரும் இல்லை!' என்பது போல் தோள்களை குலுக்கிக்கொண்டே, தலையை இடம் வலமாக ஆட்டினாள்.
"என்ன(என்னை) நீ உன் கூடப் பொறந்தவனா நினைச்சுக்கோம்மா.!"
அதற்கும் பதிலளிக்காமல், 'சரி!' என்பதாக தலையை ஆட்டினாள்.
மீண்டும் காரினுள் அமைதி நிலவியது..
சமர்த்தின் எண்ணத்தை மீராவிடம் எப்படி சொல்வது என்று யோசித்தபடி வந்தான் கோவிந்த்..
"மீரா உன் மேரேஜ் பத்தி என்ன பிளான் வச்சுண்டிருக்க?" என்று நேரடியாகவே பேச்சை ஆரம்பித்தான் கோவிந்த்.
"ஹான்!!" என்று விழித்தாள் சமீரா.
"சாரி! உன்னை இப்படி அதிர்ச்சியடைய வைக்கறது என் நோக்கமில்லை.. இப்போ தானே அண்ணனா நினைச்சுக்க சொன்னேன்.. அந்த உரிமைல தான் கேட்டேன்.." என்ற கோவிந்திற்கு
"என்னோட பர்சனல் லைப் ல யாரும் தலையிடுவது எனக்கு பிடிக்காது மிஸ்டர்!! அதே மாதிரி நினைச்சுக்க சொன்னவங்க எல்லாம் சொந்த அண்ணன் ஆகிவிட முடியாது.." என்று பதிலளித்தாள் சமீரா.
"ஆனா, எங்காத்து சமீரை நீ கல்யாணம் பண்ணிண்டா, எனக்கு நீ சொந்த தங்கை தான்.. அதுக்காக மட்டும் தான் உன்னண்ட பேசிண்டிருக்கேன்.. இல்லைன்னா நேக்கு என்ன தலை எழுத்து!!" என்று கடிந்துக்கொண்டான்.
டிரைவரின் முன்னேயே அவனை அவள் எடுத்தெறிந்து பேசியதால் வந்த எரிச்சலே கோவிந்த் கடிந்ததுக்கான காரணம்.
கூடப் பிறந்த சகோதரிகளின் வாரிசுகள் தாம் இவர்களிருவரும் என்பதை கோவிந்தும், சமீராவும் தெரிந்துக்கொண்டிருந்தால் இப்படி பேசிக்கொள்வார்களா என்பது தெரியாது..
நிறைய நேரங்களில் மௌனத்தை துணைக்கு அழைக்கும் சமீரா இந்த நேரத்திலும் கடைப்பிடித்திருந்தால் கோவிந்தின் உதாசீனத்தை தவிர்த்திருக்கலாம் ..
கோவிந்தும் சற்று தன்மையாக பேசியிருந்தால் சமீராவின் அடுத்த அதிரடி நடவடிக்கையை தவிர்த்திருக்கலாம்..
இதெல்லாம் நடந்தால் தானே சமீராவை 'மீராவாக' குடும்பத்துடன் இணைக்க முடியும்..
"ட்ரைவர் சார் வண்டியை நிறுத்துங்க..!"
"மீரா! இப்போ எதுக்கு வண்டியை நிறுத்த சொல்ற?"
கேள்வி கேட்ட கோவிந்திற்கு எந்த வித பதிலும் அளிக்காமல், "ட்ரைவர் சார் ப்ளீஸ் நிறுத்துங்க நான் இறங்கணும்..!" என்றாள் சமீரா..