காதல் 6:
மதி வீட்டிற்கு வந்து இன்றோடு பத்து நாட்கள் முடிந்திருந்தது.அன்று அரசு விடுமுறை என்பதால்...தொடர்ந்து வந்த வார கடைசி கிழமைகளையும் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அந்த முதல் நாளைத் தவிர..முகிலன் அவளைப் பின் தொடர்ந்து செல்லவும் இல்லை...அவளை வம்பு செய்யவும் இல்லை...அப்படி என்றால் அவன் திருந்தி விட்டான் என்று அர்த்தம் கிடையாது...அவன் ஒரு வார காலமாக ஊரிலேயே இல்லை என்பது தான் உண்மை.
ஆனால் அது தெரியாத மதியோ..அவன் தன்னை தொந்தரவு செய்யவில்லை என்று நினைத்து...கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள்.
முதல் நாள் இரவு ஆரம்பித்த மழை....கொஞ்சம் கொட்டித் தீர்த்து...பின்பு சாரலாய் மாறி அதிகாலை ஐந்து மணிக்கு...தன் சேவையை நிறுத்தியது.
இரவு பெய்த மழையின் விளைவாக...ஊரே குளிர்ந்து காணப்பட.. அதிகாலையில் வீசிய காற்று உடலை ஊடுருவிச் சென்றது.மதி சுகமாய் போர்வைக்குள் முடங்க...
“மதி விடிய போகுது....எந்திருச்சு வாசல்ல கோலம் போடு...லேசா கூட்டி மட்டும் விட்டுட்டு கோலத்தைப் போடு..!” என்று பார்வதி சொல்லிக் கொண்டிருக்க...அம்மாவின் குரலில் எழுந்துவிட்டாள் சுமதி.
“அம்மா..! அக்கா தூங்குறா...நான் போய் போடுறேன்.! எப்பவும் நான் தான போடுவேன்..!” என்று சுமதி சொல்ல..அதுவரை போர்வைக்குள் சுகமாய் முடங்கியிருந்தவள்....வேகமாய் எழுந்து வந்தாள்.
“நீ இரு சுமதி..! நான் கோலம் போடுறேன்..! நீ இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறதுன்னா தூங்கு..!” என்றாள் பெரியவளாய்.
“மறுபடியும் தூங்க போனா..அம்மா முதுகுல டின்னு கட்டிடும்...நான் போய் பின்னாடி மாட்டுக் கொட்டகையை கூட்டி அள்ளுறேன்..! நீங்க கோலத்தைப் போடுங்க..” என்றபடி பெருக்குமாறும் கையுமாக சென்றாள்.
முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு வெளியே சென்றாள் மதி.
“சப்பா..என்னா குளுரு...ஒரு மழைக்கே ஊரும்,உடம்பும் தாங்காது போலேயே..!” என்று எண்ணியபடி வாசலைக் கூட்டி முடித்தாள்.
ஒருவாறு உட்கார்ந்து கோலம் போட்டுக் கொண்டிருக்கும் போது..சரட்டென்று ஒரு வண்டி அவளைக் கடந்து போக...வீதியில் குழிகளில் தேங்கியிருந்த நீரை வாரி..வண்ண மதியின் மேல்..வண்ணமாய் தெளித்து விட்டு போனது.
எதிர்பாராத இந்த செயலில்..மதி சேற்றுத் தண்ணியால் நனைந்திருந்தாள். யாரென்று அவள் பார்க்கும் முன் அந்த வண்டி அவள் கண்களை விட்டு மறைந்திருந்தது.
“ச்ச்ச..யாரு இது..காலங்கத்தால இப்படி பண்ணது..!” என்ற எரிச்சலில்.. மீண்டும் முனங்கிக் கொண்டு கோலத்தைப் போட ஆரம்பிக்க...மீண்டும் மறு பக்கத்தில் இருந்து வந்த வண்டி...அதே குழிக்குள் இறங்கி தண்ணியை அவள் மேல் வாரி இரைக்க..
“அறிவுகெட்ட முண்டம்..ஆள் இருக்குறது தெரியலை...!” என்று கத்த...அரை இருள்..இப்போது கொஞ்சம் விலக ஆரம்பிக்க...விடியலும் ஆரம்பித்தது.. முகிலனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு.
எதிரில் இருக்கும் முகிலனைப் பார்த்து மூச்சடைத்தது மதிக்கு.இரவு முழுவதும் தூங்கவில்லை என்பதைப் போல்..கண்கள் ரத்த சிவப்பில் இருக்க....அவன் முகம் முழுவதும் தூக்கம் அப்பிக் கிடந்தது.
“ஆள் இருக்குறது தெரியலை..தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லா... ஸ்பீடா ஓட்டியிருப்பேன்...” என்றான்.
“இதென்ன உங்கப்பன் வீட்டு ரோடா..உங்க இஷ்ட்டத்துக்கு போக..” என்றாள் எரிச்சலாய்.
“இது உங்க அப்பன் வீட்டு ரோடும் கிடையாது..உன் இஷ்ட்டத்துக்கு கத்த...வந்துட்டா காலைலயே மனுஷனைக் கடுப்பேத்த..” என்றபடி வண்டியைக் கிளப்பியவன்...
“இந்த நைட்டி அது இதுன்னு கண்ட கருமத்தை எல்லாம் போட்டுட்டு திரியாத....! பொண்ணா ஒழுங்கா லட்சணமா இருக்க பாரு..!” என்றபடி அவன் செல்ல முற்பட..
“ஹலோ..! இந்த பேண்ட் சட்டை எல்லாம் போடுறதை விட்டுட்டு, வேட்டி சட்டை எல்லாம் போட்டு..ஒழுங்கா ஆம்பிளை மாதிரி இருக்க பாருங்க...! வந்துட்டாக காலைலயே வக்கனைக்கு..” என்றபடி உள்ளே சென்று விட்டாள்.
அவளின் பேச்சில் திகைத்தவன்..”இவளுக்கு இவ்வளவு தைரியம் எங்க இருந்து வந்துச்சு..!” என்று யோசித்தபடி சென்றான்.
“நான் நைட்டி போட்டா இவனுக்கென்ன..? பெரிய இவன் மாதிரி பேசுறான்..!” என்று புலம்பியவள்..தன்னையே ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.அப்படி ஒன்னும் மோசமால்லாம் போடலை.. என்றபடி குளிக்க சென்றாள்.
கடுப்புடன் வீட்டிற்குள் நுழைந்தவனை..”வாப்பா முகிலா...போன வேலை எல்லாம் நல்ல படியா முடுஞ்சதா..?” என்றார் மலர்.
“ஆமாம்மா...ஆனா சரியா தூக்கமே இல்லை..நான் போய் கொஞ்சம் நேரம் தூங்குறேன்..! என்னை எழுப்பாதிங்க!” என்றபடி அறைக்கு சென்றவன்.. கட்டிலில் விழுந்து கண்ணை மூட...
“அறிவு கெட்ட முண்டம்..” என்ற வார்த்தையுடன்,நைட்டியோடு காட்சி அளித்த மதி தான் கண் முன் தோன்றினாள்.
“ராட்ச்சசி...காலைலயே இப்படி நைட்டியோட மனுஷன் முன்னாடி நின்னு...கொஞ்ச நேரத்துல...சப்பா..” என்று தலையை உலுக்கியவன்..
அவளின் நினைவைத் தள்ளி வைத்து உறங்க முற்பட...அது முடியாமல்.. கடைசியில் அவளின் நினைப்புடனேயே தூங்கிப் போனான்.
ஹாஸ்பிட்டல் சார்பாக..கிராமப்புற மக்களுக்கு இலவச ரத்த தானம்,முழு உடல் பரிசோதனை என்று நான்கைந்து ஊர்களுக்கு சென்று விட்டு..ஒரு வரம் கழித்து இன்று தான் வீடு திரும்பினான் முகிலன்.
ஒரு வாரம் கழித்து..மதியை எப்படி பார்ப்பது என்று யோசித்துக் கொண்டே வந்து தான்..முன்னால் இருக்கும் குழியை கவனிக்காமல் வண்டியை விட்டான்.கடைசியில் அந்த சம்பவமே ..மதியின் தரிசனத்திற்கு வித்திட்டது அவனுக்கு.எப்படியோ அவன் நினைத்தது அவனுக்கு நடந்துவிட்ட சந்தோசம்.
“வெளிய எங்கயும் போக வேண்டாம் மதி..!தோட்டத்துக்கு போயிட்டு மதியம் வந்திடுறோம்..!” என்று மதிக்கு சொன்னவர்..
“ஏய் சுமதி..! ரேசன் கடைல இன்னைக்கு ஜீனி போடுவாங்க..போய் வாங்கிட்டு வந்திடு..!” என்று அவளுக்கும் சொல்லி விட்டு மாடுகளைப் பிடித்துக் கொண்டு அவர் தோட்டத்துக்கு செல்ல...
“இன்னும் எத்தனை நாளைக்குப்பா இப்படியே கஷ்ட்டப்படுவிங்க..? அடுத்தவங்க தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பார்க்குறதை விட...நம்ம சொத்தைப் பிரிச்சு பாக்கலாம்ல..”என்றாள்.
“எங்கம்மா...! நானும் எவ்வளவோ பொறுத்துப் பார்த்துட்டேன்...இனி கோர்ட்க்கு போனாதான் முடியும் போல...ஒருத்தன் சரிண்ணா..ஒருத்தன் மாட்டேன்றான்..மனசுல என்னதான் வச்சிருக்கானுகன்னு தெரியலமா..” என்றார் சலிப்புடன்.
“அவங்க மனசுல இருக்குறது தான் நமக்கு தெரியுமேப்பா...ஆனா அது கனவுல கூட நடக்காது.பேசாமா நாம சேலத்துக்கு குடி போய்டலாமாப்பா.. இப்ப நான் தான் வேலைக்கு போறேன்னே..! அப்பறம் ஏன் நீங்க கஷ்ட்டப்படனும்..” என்றாள்.
“அது சரியா வராதும்மா..இந்த ஊரை விட்டு வேற எங்கயும் போயி நிம்மதியா இருக்க முடியாதும்மா...எங்களுக்கு இதுவே பழகிப் போய்டுச்சு..பொம்பளை புள்ள வேலைக்குப் போகுதுன்ற காரணத்துக்காக.. நாங்க வீட்ல உட்கார்ந்து சாப்பிட முடியுமாம்மா..என்ன இருந்தாலும் நாளைக்கு ஒருத்தன் வீட்டுக்கு நீங்க போய்தான ஆகணும்..” என்றார்.
“ஏன்ப்பா..பொம்பளைப் பிள்ளைங்கன்னா..அப்பா,அம்மாவை வச்சு பார்த்துக்க கூடாதுன்னு ஏதும் சட்டம் இருக்கா..?” என்றாள்.
“சட்டத்தைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியாது மதி..! ஆனா பொண்ணையும் குடுத்துட்டு..மருமகன் வீட்ல போய் எப்படி உட்கார்ந்து சாப்பிட முடியும்..?”
“அப்படின்னா..நின்னுகிட்டே சாப்பிடுங்கப்பா..” என்று சுமதி சொல்ல..அவளை மதி முறைக்க..மனோகரனோ சிரித்து வைத்தார்.
“இந்த சின்ன வாண்டுதான் மதி இன்னும் விளையாட்டுப் புள்ளையாவே இருக்கு..!”என்று சொல்ல..
“நான் பெரிய பிள்ளையாகி ரொம்ப வருஷம் ஆகிடுச்சு... உங்களுக்கு தான் தெரியலை..!” என்றாள்.
“அம்மா தாயே..விடு..எங்களுக்கு தான் தெரியலை...நீ பெரிய மனுஷிதான் போதுமா..?” என்று மதி பேசிக் கொண்டிருக்க...மனோகரனும் கிளம்பினார்.
“எதுக்குக்கா நம்ம மட்டும் இன்னொரு வீட்டுக்கு வாழப் போகணும்..! ஆம்பிள்ளைங்க வாழ வரமாட்டங்களா..?” என்றாள்.
“நல்ல கேள்விதான்..உனக்கு மாப்பிள்ளை பார்ப்பாங்க இல்ல..அப்ப பையன்கிட்ட இந்த கேள்வியை கேளு..பதில் சொல்லுவாக..!” என்றாள்.
“அப்படின்ற..? கண்டிப்பா கேட்கணும்..இல்லைன்னா எனக்குத் தலையே வெடிச்சுடும்..!” என்றாள்.
சுமதி ரேசன் கடைக்கு செல்ல....மதி தன்னுடைய உடைகளை எல்லாம் துவைக்க எடுத்துக் கொண்டு வீட்டின் கொல்லைப்பக்கம் சென்றாள்.
நைட்டியை கண்டுபிடித்தது என்னவோ டவுனில் தான்.ஆனால் கிராமத்தில் பெண்கள் சிலர் அதையே முழு நேர உடையாக அணிந்து கொண்டிருந்தனர். அதில் இவர்களின் கிராமமும் அடங்கும்.
காலையில் முகிலனின் முகச்சுளிப்பிற்கு பின் ஏனோ அந்த நைட்டியை போட விரும்பவில்லை.தனது சுடிதாரில் ஒன்றை எடுத்துப் போட்டவள் தூக்கிப் போடப்பட்ட கொண்டையுடன்....அமர்ந்து துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் வீட்டில், திருகிவிட்டால் தண்ணீர் வரும் குழாய்கள் எல்லாம் இல்லை.கிணற்றில் இருந்து தான் நீரை இரைக்க வேண்டும்.துவைத்து முடித்தவள்,அலசுவதற்காக நீரை இறைக்க போக...அந்த நேரம் பார்த்து அவளின் செல்போன் ஒலித்தது.
கைகளைக் கழுவிக் கொண்டு வீட்டிற்குள் சென்றவள்..அழைத்தது வினோதினி என்பதை அறிந்ததும்...மகிழ்ச்சியில் அவளுடன் பேச ஆரம்பித்தாள்.
மதி வீட்டிற்கு வந்து இன்றோடு பத்து நாட்கள் முடிந்திருந்தது.அன்று அரசு விடுமுறை என்பதால்...தொடர்ந்து வந்த வார கடைசி கிழமைகளையும் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அந்த முதல் நாளைத் தவிர..முகிலன் அவளைப் பின் தொடர்ந்து செல்லவும் இல்லை...அவளை வம்பு செய்யவும் இல்லை...அப்படி என்றால் அவன் திருந்தி விட்டான் என்று அர்த்தம் கிடையாது...அவன் ஒரு வார காலமாக ஊரிலேயே இல்லை என்பது தான் உண்மை.
ஆனால் அது தெரியாத மதியோ..அவன் தன்னை தொந்தரவு செய்யவில்லை என்று நினைத்து...கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள்.
முதல் நாள் இரவு ஆரம்பித்த மழை....கொஞ்சம் கொட்டித் தீர்த்து...பின்பு சாரலாய் மாறி அதிகாலை ஐந்து மணிக்கு...தன் சேவையை நிறுத்தியது.
இரவு பெய்த மழையின் விளைவாக...ஊரே குளிர்ந்து காணப்பட.. அதிகாலையில் வீசிய காற்று உடலை ஊடுருவிச் சென்றது.மதி சுகமாய் போர்வைக்குள் முடங்க...
“மதி விடிய போகுது....எந்திருச்சு வாசல்ல கோலம் போடு...லேசா கூட்டி மட்டும் விட்டுட்டு கோலத்தைப் போடு..!” என்று பார்வதி சொல்லிக் கொண்டிருக்க...அம்மாவின் குரலில் எழுந்துவிட்டாள் சுமதி.
“அம்மா..! அக்கா தூங்குறா...நான் போய் போடுறேன்.! எப்பவும் நான் தான போடுவேன்..!” என்று சுமதி சொல்ல..அதுவரை போர்வைக்குள் சுகமாய் முடங்கியிருந்தவள்....வேகமாய் எழுந்து வந்தாள்.
“நீ இரு சுமதி..! நான் கோலம் போடுறேன்..! நீ இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறதுன்னா தூங்கு..!” என்றாள் பெரியவளாய்.
“மறுபடியும் தூங்க போனா..அம்மா முதுகுல டின்னு கட்டிடும்...நான் போய் பின்னாடி மாட்டுக் கொட்டகையை கூட்டி அள்ளுறேன்..! நீங்க கோலத்தைப் போடுங்க..” என்றபடி பெருக்குமாறும் கையுமாக சென்றாள்.
முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு வெளியே சென்றாள் மதி.
“சப்பா..என்னா குளுரு...ஒரு மழைக்கே ஊரும்,உடம்பும் தாங்காது போலேயே..!” என்று எண்ணியபடி வாசலைக் கூட்டி முடித்தாள்.
ஒருவாறு உட்கார்ந்து கோலம் போட்டுக் கொண்டிருக்கும் போது..சரட்டென்று ஒரு வண்டி அவளைக் கடந்து போக...வீதியில் குழிகளில் தேங்கியிருந்த நீரை வாரி..வண்ண மதியின் மேல்..வண்ணமாய் தெளித்து விட்டு போனது.
எதிர்பாராத இந்த செயலில்..மதி சேற்றுத் தண்ணியால் நனைந்திருந்தாள். யாரென்று அவள் பார்க்கும் முன் அந்த வண்டி அவள் கண்களை விட்டு மறைந்திருந்தது.
“ச்ச்ச..யாரு இது..காலங்கத்தால இப்படி பண்ணது..!” என்ற எரிச்சலில்.. மீண்டும் முனங்கிக் கொண்டு கோலத்தைப் போட ஆரம்பிக்க...மீண்டும் மறு பக்கத்தில் இருந்து வந்த வண்டி...அதே குழிக்குள் இறங்கி தண்ணியை அவள் மேல் வாரி இரைக்க..
“அறிவுகெட்ட முண்டம்..ஆள் இருக்குறது தெரியலை...!” என்று கத்த...அரை இருள்..இப்போது கொஞ்சம் விலக ஆரம்பிக்க...விடியலும் ஆரம்பித்தது.. முகிலனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு.
எதிரில் இருக்கும் முகிலனைப் பார்த்து மூச்சடைத்தது மதிக்கு.இரவு முழுவதும் தூங்கவில்லை என்பதைப் போல்..கண்கள் ரத்த சிவப்பில் இருக்க....அவன் முகம் முழுவதும் தூக்கம் அப்பிக் கிடந்தது.
“ஆள் இருக்குறது தெரியலை..தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லா... ஸ்பீடா ஓட்டியிருப்பேன்...” என்றான்.
“இதென்ன உங்கப்பன் வீட்டு ரோடா..உங்க இஷ்ட்டத்துக்கு போக..” என்றாள் எரிச்சலாய்.
“இது உங்க அப்பன் வீட்டு ரோடும் கிடையாது..உன் இஷ்ட்டத்துக்கு கத்த...வந்துட்டா காலைலயே மனுஷனைக் கடுப்பேத்த..” என்றபடி வண்டியைக் கிளப்பியவன்...
“இந்த நைட்டி அது இதுன்னு கண்ட கருமத்தை எல்லாம் போட்டுட்டு திரியாத....! பொண்ணா ஒழுங்கா லட்சணமா இருக்க பாரு..!” என்றபடி அவன் செல்ல முற்பட..
“ஹலோ..! இந்த பேண்ட் சட்டை எல்லாம் போடுறதை விட்டுட்டு, வேட்டி சட்டை எல்லாம் போட்டு..ஒழுங்கா ஆம்பிளை மாதிரி இருக்க பாருங்க...! வந்துட்டாக காலைலயே வக்கனைக்கு..” என்றபடி உள்ளே சென்று விட்டாள்.
அவளின் பேச்சில் திகைத்தவன்..”இவளுக்கு இவ்வளவு தைரியம் எங்க இருந்து வந்துச்சு..!” என்று யோசித்தபடி சென்றான்.
“நான் நைட்டி போட்டா இவனுக்கென்ன..? பெரிய இவன் மாதிரி பேசுறான்..!” என்று புலம்பியவள்..தன்னையே ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.அப்படி ஒன்னும் மோசமால்லாம் போடலை.. என்றபடி குளிக்க சென்றாள்.
கடுப்புடன் வீட்டிற்குள் நுழைந்தவனை..”வாப்பா முகிலா...போன வேலை எல்லாம் நல்ல படியா முடுஞ்சதா..?” என்றார் மலர்.
“ஆமாம்மா...ஆனா சரியா தூக்கமே இல்லை..நான் போய் கொஞ்சம் நேரம் தூங்குறேன்..! என்னை எழுப்பாதிங்க!” என்றபடி அறைக்கு சென்றவன்.. கட்டிலில் விழுந்து கண்ணை மூட...
“அறிவு கெட்ட முண்டம்..” என்ற வார்த்தையுடன்,நைட்டியோடு காட்சி அளித்த மதி தான் கண் முன் தோன்றினாள்.
“ராட்ச்சசி...காலைலயே இப்படி நைட்டியோட மனுஷன் முன்னாடி நின்னு...கொஞ்ச நேரத்துல...சப்பா..” என்று தலையை உலுக்கியவன்..
அவளின் நினைவைத் தள்ளி வைத்து உறங்க முற்பட...அது முடியாமல்.. கடைசியில் அவளின் நினைப்புடனேயே தூங்கிப் போனான்.
ஹாஸ்பிட்டல் சார்பாக..கிராமப்புற மக்களுக்கு இலவச ரத்த தானம்,முழு உடல் பரிசோதனை என்று நான்கைந்து ஊர்களுக்கு சென்று விட்டு..ஒரு வரம் கழித்து இன்று தான் வீடு திரும்பினான் முகிலன்.
ஒரு வாரம் கழித்து..மதியை எப்படி பார்ப்பது என்று யோசித்துக் கொண்டே வந்து தான்..முன்னால் இருக்கும் குழியை கவனிக்காமல் வண்டியை விட்டான்.கடைசியில் அந்த சம்பவமே ..மதியின் தரிசனத்திற்கு வித்திட்டது அவனுக்கு.எப்படியோ அவன் நினைத்தது அவனுக்கு நடந்துவிட்ட சந்தோசம்.
“வெளிய எங்கயும் போக வேண்டாம் மதி..!தோட்டத்துக்கு போயிட்டு மதியம் வந்திடுறோம்..!” என்று மதிக்கு சொன்னவர்..
“ஏய் சுமதி..! ரேசன் கடைல இன்னைக்கு ஜீனி போடுவாங்க..போய் வாங்கிட்டு வந்திடு..!” என்று அவளுக்கும் சொல்லி விட்டு மாடுகளைப் பிடித்துக் கொண்டு அவர் தோட்டத்துக்கு செல்ல...
“இன்னும் எத்தனை நாளைக்குப்பா இப்படியே கஷ்ட்டப்படுவிங்க..? அடுத்தவங்க தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பார்க்குறதை விட...நம்ம சொத்தைப் பிரிச்சு பாக்கலாம்ல..”என்றாள்.
“எங்கம்மா...! நானும் எவ்வளவோ பொறுத்துப் பார்த்துட்டேன்...இனி கோர்ட்க்கு போனாதான் முடியும் போல...ஒருத்தன் சரிண்ணா..ஒருத்தன் மாட்டேன்றான்..மனசுல என்னதான் வச்சிருக்கானுகன்னு தெரியலமா..” என்றார் சலிப்புடன்.
“அவங்க மனசுல இருக்குறது தான் நமக்கு தெரியுமேப்பா...ஆனா அது கனவுல கூட நடக்காது.பேசாமா நாம சேலத்துக்கு குடி போய்டலாமாப்பா.. இப்ப நான் தான் வேலைக்கு போறேன்னே..! அப்பறம் ஏன் நீங்க கஷ்ட்டப்படனும்..” என்றாள்.
“அது சரியா வராதும்மா..இந்த ஊரை விட்டு வேற எங்கயும் போயி நிம்மதியா இருக்க முடியாதும்மா...எங்களுக்கு இதுவே பழகிப் போய்டுச்சு..பொம்பளை புள்ள வேலைக்குப் போகுதுன்ற காரணத்துக்காக.. நாங்க வீட்ல உட்கார்ந்து சாப்பிட முடியுமாம்மா..என்ன இருந்தாலும் நாளைக்கு ஒருத்தன் வீட்டுக்கு நீங்க போய்தான ஆகணும்..” என்றார்.
“ஏன்ப்பா..பொம்பளைப் பிள்ளைங்கன்னா..அப்பா,அம்மாவை வச்சு பார்த்துக்க கூடாதுன்னு ஏதும் சட்டம் இருக்கா..?” என்றாள்.
“சட்டத்தைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியாது மதி..! ஆனா பொண்ணையும் குடுத்துட்டு..மருமகன் வீட்ல போய் எப்படி உட்கார்ந்து சாப்பிட முடியும்..?”
“அப்படின்னா..நின்னுகிட்டே சாப்பிடுங்கப்பா..” என்று சுமதி சொல்ல..அவளை மதி முறைக்க..மனோகரனோ சிரித்து வைத்தார்.
“இந்த சின்ன வாண்டுதான் மதி இன்னும் விளையாட்டுப் புள்ளையாவே இருக்கு..!”என்று சொல்ல..
“நான் பெரிய பிள்ளையாகி ரொம்ப வருஷம் ஆகிடுச்சு... உங்களுக்கு தான் தெரியலை..!” என்றாள்.
“அம்மா தாயே..விடு..எங்களுக்கு தான் தெரியலை...நீ பெரிய மனுஷிதான் போதுமா..?” என்று மதி பேசிக் கொண்டிருக்க...மனோகரனும் கிளம்பினார்.
“எதுக்குக்கா நம்ம மட்டும் இன்னொரு வீட்டுக்கு வாழப் போகணும்..! ஆம்பிள்ளைங்க வாழ வரமாட்டங்களா..?” என்றாள்.
“நல்ல கேள்விதான்..உனக்கு மாப்பிள்ளை பார்ப்பாங்க இல்ல..அப்ப பையன்கிட்ட இந்த கேள்வியை கேளு..பதில் சொல்லுவாக..!” என்றாள்.
“அப்படின்ற..? கண்டிப்பா கேட்கணும்..இல்லைன்னா எனக்குத் தலையே வெடிச்சுடும்..!” என்றாள்.
சுமதி ரேசன் கடைக்கு செல்ல....மதி தன்னுடைய உடைகளை எல்லாம் துவைக்க எடுத்துக் கொண்டு வீட்டின் கொல்லைப்பக்கம் சென்றாள்.
நைட்டியை கண்டுபிடித்தது என்னவோ டவுனில் தான்.ஆனால் கிராமத்தில் பெண்கள் சிலர் அதையே முழு நேர உடையாக அணிந்து கொண்டிருந்தனர். அதில் இவர்களின் கிராமமும் அடங்கும்.
காலையில் முகிலனின் முகச்சுளிப்பிற்கு பின் ஏனோ அந்த நைட்டியை போட விரும்பவில்லை.தனது சுடிதாரில் ஒன்றை எடுத்துப் போட்டவள் தூக்கிப் போடப்பட்ட கொண்டையுடன்....அமர்ந்து துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் வீட்டில், திருகிவிட்டால் தண்ணீர் வரும் குழாய்கள் எல்லாம் இல்லை.கிணற்றில் இருந்து தான் நீரை இரைக்க வேண்டும்.துவைத்து முடித்தவள்,அலசுவதற்காக நீரை இறைக்க போக...அந்த நேரம் பார்த்து அவளின் செல்போன் ஒலித்தது.
கைகளைக் கழுவிக் கொண்டு வீட்டிற்குள் சென்றவள்..அழைத்தது வினோதினி என்பதை அறிந்ததும்...மகிழ்ச்சியில் அவளுடன் பேச ஆரம்பித்தாள்.