காதல் 30:
காலமும், நேரமும் தனி ஒருவருக்காக, எப்போதும் காத்திருக்காது. அது தான் மதி - முகிலனின் வாழ்க்கையிலும் நடந்தது. காலத்தின் போக்கில் மட்டுமே சில தவறுகள் மன்னிக்கப்படும். அதன் போக்கில் மட்டுமே சிலரின் வாழ்க்கை மாறும்.
மதி அன்று ஆறுதல் தேடி முகிலனிடம் அடைக்கலம் புகுந்ததோடு சரி. அதன்பிறகு அவனிடம் பேசவேயில்லை. அவனிடம் என்று இல்லை, யாருடனும் சரியாக பேசவில்லை.முத்துவின் வாழ்க்கை சீர்கெட்டுப் போனதற்கு, தானும் ஒரு காரணம் என்று எண்ணி மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தாள்.
முகிலனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. எந்த ஒரு விஷயத்திலும், அவளாக தெளிந்து வர வேண்டும் என்று எண்ணினான். அவளுக்கு தெளிய நேரம் தேவைப்படும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவள் வீட்டிற்கு சென்றவள், மீண்டும் தங்கள் வீட்டிற்கு வராமல் இருந்த போது கூட, அவன் பெரிதாய் ஒன்றும் சொல்லவில்லை. இந்த ஒரு வார காலமாக பள்ளியும் செல்லவில்லை அவள்.
அன்று காலை முகிலன் ஹாஸ்பிட்டல் கிளம்பிக் கொண்டிருக்க,
“மதிக்கு என்னாச்சு முகிலா...? ஏன் அங்கயே இருக்கா...? அவளை எதுவும் சொன்னியா..?” என்றார் மலர். அவரின் கேள்வியில், அவரை முறைத்துப் பார்த்தான் முகிலன்.
மலரும், இந்த ஒருவார காலமாக இந்த கேள்வியைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறார். கேள்விக்கு பதிலாய், அவனும் முறைத்துக் கொண்டு தான் இருக்கிறான்.
“அதை நான் கேட்கணும் உங்ககிட்ட. தினமும் நான் போன பிறகு, உங்க மருமக கூடவே தான இருக்கீங்க..?” என்றான் முகிலன்.
“மதி தான் வாயைத் திறந்து ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறாளே...?” என்று சலித்தவர்,
“இன்னையில இருந்து அவளும் ஸ்கூலுக்கு போவான்னு நினைக்கிறேன். அவளையும் கூட்டிட்டு போ முகிலா..” என்றார்.
“உங்க மருமகளுக்கு, நான் என்ன டிரைவரா...?” என்றான் நக்கலாய். ஆனால் உள்ளுக்குள் உல்லாசமாய் இருந்தது அவனுக்கு.
“பச்சைக்கிளி இன்னைக்கு வர்றாளா...? வரட்டும் வரட்டும். இன்னைக்கு மாமனோட பெர்பார்மன்ஸ் சும்மா அதிர போகுது..!” என்று அவன் மனதிற்குள் பேசிக் கொண்டிருக்க,
“முகிலா...முகிலா..!” என்று மலர், இரண்டு முறை அழைத்த பின்னரே நினைவுக்கு வந்தான்.
அங்கு மதியின் வீட்டில்,
ரோஜா வண்ண நிறத்தில் காட்டன் புடவையும், அதற்கு ஏற்ற வண்ணத்தில், சிறு காதணிகளும்... நீண்டு தொங்கிய பின்னலும், அதில் சூடியிருந்த ஒற்றை ரோஜாவுமாய் அட்டகாசமாய் கிளம்பியிருந்தாள் வண்ண மதி. அவளின் பெயரில் இருந்த வண்ணம், இன்று வழக்கத்திற்கு மாறாய் அவள் முகத்திலும் இருந்தது.
“இன்னைக்கு என்ன விசேஷம்...? அக்காவைப் பார்க்க பார்க்க, சும்மா அள்ளுதே..!” என்றாள் சுமதி.
“என்னடி கிண்டலா..? எப்பவும் போல தான் கிளம்பியிருக்கேன்..!” என்றாள் மதி.
“இல்லையே...! ஏதோ இடிக்குதே..!” என்று அவளைச் சுற்றி வந்தவள்,
“இந்த ரோஜாப் பூ எது..? நம்ம வீட்ல இந்த கலர் பூ இல்லையே...?” என்றாள் ஆராய்ச்சியாய்.
“ஆமா...! ஆனா எங்க வீட்ல பூத்திருந்ததே....!” என்றாள் புன்னகையாய்.
“உங்க வீடா...?” என்று சுமதி அதிர்ந்து கேட்க,
“ஆமா...! பக்கத்து வீடு..அதாவது என் புருஷன் வீடு..!” என்றவள், பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப,
“என்னமோ, சண்டை போட்டுட்டு வந்தவ மாதிரி இருந்த. இப்ப என்னடான்னா...?” என்று சுமதி யோசிக்க,
“நீயெல்லாம் சின்னப் பிள்ளை. உனக்கு இது புரியாது..!” என்றாள் மதி.
“கிளம்பிட்டியா மதி..! இந்தா மதிய சாப்பாடு..!” என்றபடி வந்த பார்வதி, மகளைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டார். எப்போதும் நீட்டாகத் தான் செல்வாள் மதி. ஆனால் இன்று அனைத்தையும் தாண்டிய ஒரு பொலிவு அவள் முகத்தில். அழகு பிம்பமாய் இருந்த மகளைப் பார்த்த பார்வதிக்கு கண்கள் பனித்து விட்டது.
“நீ கிளம்பிட்ட...! இன்னும் உங்க அப்பாவைக் காணோமே..?” என்று பார்வதி சொல்ல,
“அப்பாவா...!!!!!” என்று மனதிற்குள் வழிந்தவள்,
“அப்பாவுக்கு எதுக்கும்மா சிரமம். நான் மணி மாமா கூடவே போய்க்கிறேன்..!” என்றாள் மதி.
“அப்படி வாடி மகளே..!!!” என்று மனதிற்குள் நினைத்தவர்,
“முகிலன் தம்பி அப்பவே கிளம்பிடுச்சே...!” என்றார் வேண்டுமென்றே.
“என்னது கிளம்பிட்டாரா...? எப்போ கிளம்பினார்...? என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லவே இல்லை...? யாரைக் கேட்டுக் கிளம்பினார்...?” என்றாள் மூச்சு விடாமல்.
“ஒருவேளை, இன்னைக்கும் நீ லீவ்ன்னு நினைச்சாரோ என்னவோ...?” என்றார் பார்வதி.
“அதெப்படி அவரா நினைக்கலாம்...!” என்றவள், கோபமாக மலரைத் தேடி சென்றாள்.
“அத்தை...அத்தை..!” என்று கத்திக் கொண்டே உள்ளே செல்ல,
“மலரு மேல இருக்காம்மா...!” என்றார் பெரியசாமி.
அவரையும் முறைத்துக் கொண்டே சென்றாள் மதி. பெரியசாமிக்கு ஒன்றும் புரியவில்லை.
“அத்தை..அத்தை..!”
“என்ன மதி..கிளம்பிட்டியா...?” என்றார் மலர்.
“என்ன கிளம்பிட்டியா...? உங்க மகன் கிட்ட சொன்னிங்களா இல்லையா...? நான் தான் காலையிலையே உங்ககிட்ட சொல்லிட்டு தான போனேன். இருந்தும், என்னை விட்டுட்டு போயிருக்காருன்னா என்ன அர்த்தம்...? சொல்லுங்க என்ன அர்த்தம்..?” என்றாள் மூச்சு விடாமல்.
“கொஞ்சம் பொறுமையா பேசு மதி.முகிலன் இன்னும்...!” என்று மலர் முடிக்கக் கூட இல்லை,
“என்னத்த பொறுமையா பேசுறது. நானா எங்க அப்பா கூடவே போய்க்கிறேன். என்னை சொல்லணும், என் புத்திய சொல்லணும். சொல்லி வச்சுக்கங்க உங்க புள்ளை கிட்ட. நான் எல்லா நேரமும் இப்படி நல்லவளாவே இருக்கமாட்டேன்...” என்ற மதி, திரும்பி கீழே செல்ல எத்தனிக்க, அவளின் நீண்ட பின்னலை, உள்ளிருந்து இழுத்தான் முகிலன். மலர் சிரித்துக் கொண்டே கீழே செல்ல, அவர் சென்றவுடன் கதவை அடைக்க, திடீரென்று அவனைப் பார்த்ததில் முழித்துக் கொண்டு நின்றாள்.
அவளை சாத்திய கதவின் மேல் சாத்தியவன், மேலிருந்து கீழாக...ஒரு மார்க்கமாகப் பார்த்து வைக்க,
அவன் இல்லை என்ற தைரியத்தில் பேசியவளின் வாய், இப்போது தந்தி அடிக்க ஆரம்பித்தது.காலையிலேயே, இப்படி ஒரு தரிசனத்தை முகிலன் எதிர் பார்க்கவில்லை.
“நீ..நீங்க..இ..இன்னும் கிளம்பலையா..?” என்றாள் திக்கித் திணறி.
முகிலனோ பதில் சொல்லும் நிலையில் இல்லை. அவன் முற்றிலும் மதியின் நினைவில் தொலைந்து போயிருந்தான்.அவனுடைய இதழ்கள் முத்தத்தை வேண்டி நிற்க, மதிக்கு தான் படபடவென்று அடித்துக் கொண்டது. அவளின் இடுப்பில் பதிந்திருந்த அவனின் கைகள், அவளின் மனதிற்குள் வர்ணஜாலம் காட்டிக் கொண்டிருக்க, அவளின் இதழ் அருகில் நெருங்கியவன்...
“கிளம்பலாமா....??” என்றான்.
எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவள் போல,
“என்ன சொன்னிங்க..??” என்றாள் திக்கி.
“கிளம்பலாம்ன்னு சொன்னேன்...!” என்றான். அவன் சொன்னது தான் மாயம், பட்டென்று அந்த அறையை விட்டு சென்றாள் மதி. அவள் சென்றபின், ஆசுவாசமாய் மூச்சு விட்டவன், முன்னுச்சி முடியைக் கோதிய படி,
“ஆத்தி...இவ செம்ம ஹாட் பிகர். பக்கத்துல வந்தாலே, மனசுக்குள்ள என்னென்னவோ தோணுதே. முகிலா...ஸ்டெடி,ஸ்டெடி...!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் கீழே வர, அங்கே மதியின் நிலையும் அப்படித்தான் இருந்தது.
“அவன் இருக்குறது தெரியாம போய் பேசி, இப்படி சிக்கி...இதெல்லாம் தேவையா மதி உனக்கு. பார்வையிலையே எப்படி பீல் பண்ண வைக்கிறான். மதி ஸ்டெடி, ஸ்டெடி..!” என்று அவளும் உள்ளே உறுப் போட்டுக் கொண்டாள்.
அவன் புல்லட்டை எடுத்துக் கொண்டு வரும் வரை, அவளின் தவிப்பு அடங்கவில்லை.அவனைப் பார்த்ததும், ஒரு வித வெட்கம் வந்து அவளை சூழ்ந்து கொள்ள,ஏதோ முதன் முறையாக அவனுடன் பைக்கில் செல்வதைப் போல உணர்ந்தாள்.
“போகலாமா..?”
“ம்ம்ம்..!”
அவர்கள் கிளம்பியவுடன்,
“என்ன மதினி..? இப்போ சந்தோஷமா..?” என்றார் மலர்.
“சந்தோஷமா...சொல்ல வார்த்தையே இல்லை மதினி. ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம். சாயங்காலம் ரெண்டு பேருக்கும் சுத்தி வைக்கணும்...!” என்றார் பார்வதி.
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்தார் திலகாவின் கணவர் கணபதி. பல வருடங்களுக்குப் பிறகு தம்பி வீட்டிற்கு வருகிறார்.
“வாங்க அண்ணா..!” என்றார் மலர்.
“வாங்க...!!” என்றார் பார்வதி.
“மனோகர் இல்லையாம்மா...?” என்றார்.
“வெளிய ஒரு ஜோலியா போயிருக்கார். எதுவும் முக்கியமான விஷயமா..?” என்றார் பார்வதி.
“ஆமாம்..!”என்றவர்,
“அவ செஞ்சதுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டா மட்டும் பத்தாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா இப்போதைக்கு மன்னிப்பு மட்டும் தான் என்னால கேட்க முடியும்..! முடிஞ்சா ரெண்டு பேரும் மன்னிச்சிடுங்க. மலர் நீயும் மன்னிச்சிடும்மா..!” என்றார் கணபதி.
“மன்னிக்கக் கூடிய காரியமாண்ணா அது. உங்க முகத்துக்காக மட்டும் தான் பேசாம இருக்கோம்..!” என்றார் மலர்.
“அது எனக்கும் தெரியும்மா..!” என்று அவர் சொல்ல,
“துர்காவுக்கு இப்போ எப்படி இருக்கு...?” என்றார் பார்வதி.
“இப்போ நல்லா இருக்காம்மா...! அவ விஷயமா பேசத்தான் வந்தேன்...!” என்றார் கணபதி.
“துர்கா விஷயமாவா...?” என்று இருவரும் புரியாமல் பார்க்க,
“துர்காவுக்கு, முத்துவைப் பேசி முடிக்கலாம்ன்னு இருக்கேன். அது மட்டும் தான் முத்துவுக்கு நான் பண்ற நல்லதா இருக்க முடியும்..!” என்றார்.
“இதுக்கு அவங்க ரெண்டு பேரும் சரின்னு சொல்லணுமே...?” என்றார் மலர்.
“துர்கா சரின்னு சொல்லிட்டாம்மா..! மாட்டேன்னு சொன்ன பிள்ளைய, திலகா தான் வம்படியா எல்லாமே பண்ண வச்சிருக்கா....!” என்றார் கணபதி.
“இது சரியா வரும்ன்னு எனக்குத் தோணலை அண்ணா..!” என்றார் மலர்.
“திலகாவுக்கு இது மட்டும் தான் பெரிய தண்டனை. அது மட்டும் இல்லாம, இவ்வளவு பிரச்னைக்கு அப்பறம், துர்காவை வெளிய கட்டிக் குடுக்கவும் எனக்கு மனசில்லை..” என்றார்.
“முத்து அம்மாகிட்ட பேசிப்பாருங்க அண்ணா..!” என்றார் மலர்.
“அதான்...பார்வதி பேசுனா...அவங்க கேட்பாங்க..” என்றார்.
“நான் என்ன பேசுறது...? இப்போ கூட உங்க சுயநலம் தான் இதுல இருக்கு. உங்க பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போகக் கூடாதுன்னு வந்திருக்கிங்க. பொண்ணப் பெத்த தகப்பனா, உங்க யோசனை சரி தான். ஆனா முத்து, இதுக்கு கண்டிப்பா சம்மதிக்க மாட்டான். அப்படியும் மீறி அவன் சரின்னு சொன்னாலும், துர்காவை பார்க்கும் போதெல்லாம், அவ அம்மா செஞ்சது தான் அவனுக்கு நினைப்புக்கு வரும். அதனால துர்காவுக்கு வெளிய பார்த்து முடிக்கிறது தான் சரியா வரும்..!” என்றார் பார்வதி.
“மதினி சொல்றதும் சரிதாண்ணே..! இன்னைக்கு ஒரு வேகத்துல கல்யாணத்தைப் பண்ணி வச்சுப் போட்டு, பின்னும் பிறகும் அவதிப் படக் கூடாது. துர்காவுக்கு நல்ல இடமாப் பார்ப்போம். கொஞ்ச நாள் போகட்டும்..” என்றார் மலர்.
“அப்போ சரிம்மா...! எது நடக்கணுமோ..அது தான நடக்கும்..!” என்றபடி சென்று விட்டார் கணபதி.
அவர் சென்ற அடுத்த நிமிடம், உள்ளே இருந்து வந்த சுமதி,
“அம்மா..! நான் வேணுமின்னா முத்து மாமாவ கட்டிக்கவா..??” என்றாள். அவளை அதிர்ந்து பார்த்தனர் இருவரும். அவள் அறிந்து சொன்னாளா..? இல்லை அறியாமல் சொன்னாளா..? என்று பார்வதிக்குத் தெரியாது. ஆனால் அவரின் மனதில் உறுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயத்திற்கு ஒரு முடிவைச் சொல்லியிருந்தாள்.
காலமும், நேரமும் தனி ஒருவருக்காக, எப்போதும் காத்திருக்காது. அது தான் மதி - முகிலனின் வாழ்க்கையிலும் நடந்தது. காலத்தின் போக்கில் மட்டுமே சில தவறுகள் மன்னிக்கப்படும். அதன் போக்கில் மட்டுமே சிலரின் வாழ்க்கை மாறும்.
மதி அன்று ஆறுதல் தேடி முகிலனிடம் அடைக்கலம் புகுந்ததோடு சரி. அதன்பிறகு அவனிடம் பேசவேயில்லை. அவனிடம் என்று இல்லை, யாருடனும் சரியாக பேசவில்லை.முத்துவின் வாழ்க்கை சீர்கெட்டுப் போனதற்கு, தானும் ஒரு காரணம் என்று எண்ணி மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தாள்.
முகிலனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. எந்த ஒரு விஷயத்திலும், அவளாக தெளிந்து வர வேண்டும் என்று எண்ணினான். அவளுக்கு தெளிய நேரம் தேவைப்படும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவள் வீட்டிற்கு சென்றவள், மீண்டும் தங்கள் வீட்டிற்கு வராமல் இருந்த போது கூட, அவன் பெரிதாய் ஒன்றும் சொல்லவில்லை. இந்த ஒரு வார காலமாக பள்ளியும் செல்லவில்லை அவள்.
அன்று காலை முகிலன் ஹாஸ்பிட்டல் கிளம்பிக் கொண்டிருக்க,
“மதிக்கு என்னாச்சு முகிலா...? ஏன் அங்கயே இருக்கா...? அவளை எதுவும் சொன்னியா..?” என்றார் மலர். அவரின் கேள்வியில், அவரை முறைத்துப் பார்த்தான் முகிலன்.
மலரும், இந்த ஒருவார காலமாக இந்த கேள்வியைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறார். கேள்விக்கு பதிலாய், அவனும் முறைத்துக் கொண்டு தான் இருக்கிறான்.
“அதை நான் கேட்கணும் உங்ககிட்ட. தினமும் நான் போன பிறகு, உங்க மருமக கூடவே தான இருக்கீங்க..?” என்றான் முகிலன்.
“மதி தான் வாயைத் திறந்து ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறாளே...?” என்று சலித்தவர்,
“இன்னையில இருந்து அவளும் ஸ்கூலுக்கு போவான்னு நினைக்கிறேன். அவளையும் கூட்டிட்டு போ முகிலா..” என்றார்.
“உங்க மருமகளுக்கு, நான் என்ன டிரைவரா...?” என்றான் நக்கலாய். ஆனால் உள்ளுக்குள் உல்லாசமாய் இருந்தது அவனுக்கு.
“பச்சைக்கிளி இன்னைக்கு வர்றாளா...? வரட்டும் வரட்டும். இன்னைக்கு மாமனோட பெர்பார்மன்ஸ் சும்மா அதிர போகுது..!” என்று அவன் மனதிற்குள் பேசிக் கொண்டிருக்க,
“முகிலா...முகிலா..!” என்று மலர், இரண்டு முறை அழைத்த பின்னரே நினைவுக்கு வந்தான்.
அங்கு மதியின் வீட்டில்,
ரோஜா வண்ண நிறத்தில் காட்டன் புடவையும், அதற்கு ஏற்ற வண்ணத்தில், சிறு காதணிகளும்... நீண்டு தொங்கிய பின்னலும், அதில் சூடியிருந்த ஒற்றை ரோஜாவுமாய் அட்டகாசமாய் கிளம்பியிருந்தாள் வண்ண மதி. அவளின் பெயரில் இருந்த வண்ணம், இன்று வழக்கத்திற்கு மாறாய் அவள் முகத்திலும் இருந்தது.
“இன்னைக்கு என்ன விசேஷம்...? அக்காவைப் பார்க்க பார்க்க, சும்மா அள்ளுதே..!” என்றாள் சுமதி.
“என்னடி கிண்டலா..? எப்பவும் போல தான் கிளம்பியிருக்கேன்..!” என்றாள் மதி.
“இல்லையே...! ஏதோ இடிக்குதே..!” என்று அவளைச் சுற்றி வந்தவள்,
“இந்த ரோஜாப் பூ எது..? நம்ம வீட்ல இந்த கலர் பூ இல்லையே...?” என்றாள் ஆராய்ச்சியாய்.
“ஆமா...! ஆனா எங்க வீட்ல பூத்திருந்ததே....!” என்றாள் புன்னகையாய்.
“உங்க வீடா...?” என்று சுமதி அதிர்ந்து கேட்க,
“ஆமா...! பக்கத்து வீடு..அதாவது என் புருஷன் வீடு..!” என்றவள், பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப,
“என்னமோ, சண்டை போட்டுட்டு வந்தவ மாதிரி இருந்த. இப்ப என்னடான்னா...?” என்று சுமதி யோசிக்க,
“நீயெல்லாம் சின்னப் பிள்ளை. உனக்கு இது புரியாது..!” என்றாள் மதி.
“கிளம்பிட்டியா மதி..! இந்தா மதிய சாப்பாடு..!” என்றபடி வந்த பார்வதி, மகளைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டார். எப்போதும் நீட்டாகத் தான் செல்வாள் மதி. ஆனால் இன்று அனைத்தையும் தாண்டிய ஒரு பொலிவு அவள் முகத்தில். அழகு பிம்பமாய் இருந்த மகளைப் பார்த்த பார்வதிக்கு கண்கள் பனித்து விட்டது.
“நீ கிளம்பிட்ட...! இன்னும் உங்க அப்பாவைக் காணோமே..?” என்று பார்வதி சொல்ல,
“அப்பாவா...!!!!!” என்று மனதிற்குள் வழிந்தவள்,
“அப்பாவுக்கு எதுக்கும்மா சிரமம். நான் மணி மாமா கூடவே போய்க்கிறேன்..!” என்றாள் மதி.
“அப்படி வாடி மகளே..!!!” என்று மனதிற்குள் நினைத்தவர்,
“முகிலன் தம்பி அப்பவே கிளம்பிடுச்சே...!” என்றார் வேண்டுமென்றே.
“என்னது கிளம்பிட்டாரா...? எப்போ கிளம்பினார்...? என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லவே இல்லை...? யாரைக் கேட்டுக் கிளம்பினார்...?” என்றாள் மூச்சு விடாமல்.
“ஒருவேளை, இன்னைக்கும் நீ லீவ்ன்னு நினைச்சாரோ என்னவோ...?” என்றார் பார்வதி.
“அதெப்படி அவரா நினைக்கலாம்...!” என்றவள், கோபமாக மலரைத் தேடி சென்றாள்.
“அத்தை...அத்தை..!” என்று கத்திக் கொண்டே உள்ளே செல்ல,
“மலரு மேல இருக்காம்மா...!” என்றார் பெரியசாமி.
அவரையும் முறைத்துக் கொண்டே சென்றாள் மதி. பெரியசாமிக்கு ஒன்றும் புரியவில்லை.
“அத்தை..அத்தை..!”
“என்ன மதி..கிளம்பிட்டியா...?” என்றார் மலர்.
“என்ன கிளம்பிட்டியா...? உங்க மகன் கிட்ட சொன்னிங்களா இல்லையா...? நான் தான் காலையிலையே உங்ககிட்ட சொல்லிட்டு தான போனேன். இருந்தும், என்னை விட்டுட்டு போயிருக்காருன்னா என்ன அர்த்தம்...? சொல்லுங்க என்ன அர்த்தம்..?” என்றாள் மூச்சு விடாமல்.
“கொஞ்சம் பொறுமையா பேசு மதி.முகிலன் இன்னும்...!” என்று மலர் முடிக்கக் கூட இல்லை,
“என்னத்த பொறுமையா பேசுறது. நானா எங்க அப்பா கூடவே போய்க்கிறேன். என்னை சொல்லணும், என் புத்திய சொல்லணும். சொல்லி வச்சுக்கங்க உங்க புள்ளை கிட்ட. நான் எல்லா நேரமும் இப்படி நல்லவளாவே இருக்கமாட்டேன்...” என்ற மதி, திரும்பி கீழே செல்ல எத்தனிக்க, அவளின் நீண்ட பின்னலை, உள்ளிருந்து இழுத்தான் முகிலன். மலர் சிரித்துக் கொண்டே கீழே செல்ல, அவர் சென்றவுடன் கதவை அடைக்க, திடீரென்று அவனைப் பார்த்ததில் முழித்துக் கொண்டு நின்றாள்.
அவளை சாத்திய கதவின் மேல் சாத்தியவன், மேலிருந்து கீழாக...ஒரு மார்க்கமாகப் பார்த்து வைக்க,
அவன் இல்லை என்ற தைரியத்தில் பேசியவளின் வாய், இப்போது தந்தி அடிக்க ஆரம்பித்தது.காலையிலேயே, இப்படி ஒரு தரிசனத்தை முகிலன் எதிர் பார்க்கவில்லை.
“நீ..நீங்க..இ..இன்னும் கிளம்பலையா..?” என்றாள் திக்கித் திணறி.
முகிலனோ பதில் சொல்லும் நிலையில் இல்லை. அவன் முற்றிலும் மதியின் நினைவில் தொலைந்து போயிருந்தான்.அவனுடைய இதழ்கள் முத்தத்தை வேண்டி நிற்க, மதிக்கு தான் படபடவென்று அடித்துக் கொண்டது. அவளின் இடுப்பில் பதிந்திருந்த அவனின் கைகள், அவளின் மனதிற்குள் வர்ணஜாலம் காட்டிக் கொண்டிருக்க, அவளின் இதழ் அருகில் நெருங்கியவன்...
“கிளம்பலாமா....??” என்றான்.
எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவள் போல,
“என்ன சொன்னிங்க..??” என்றாள் திக்கி.
“கிளம்பலாம்ன்னு சொன்னேன்...!” என்றான். அவன் சொன்னது தான் மாயம், பட்டென்று அந்த அறையை விட்டு சென்றாள் மதி. அவள் சென்றபின், ஆசுவாசமாய் மூச்சு விட்டவன், முன்னுச்சி முடியைக் கோதிய படி,
“ஆத்தி...இவ செம்ம ஹாட் பிகர். பக்கத்துல வந்தாலே, மனசுக்குள்ள என்னென்னவோ தோணுதே. முகிலா...ஸ்டெடி,ஸ்டெடி...!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் கீழே வர, அங்கே மதியின் நிலையும் அப்படித்தான் இருந்தது.
“அவன் இருக்குறது தெரியாம போய் பேசி, இப்படி சிக்கி...இதெல்லாம் தேவையா மதி உனக்கு. பார்வையிலையே எப்படி பீல் பண்ண வைக்கிறான். மதி ஸ்டெடி, ஸ்டெடி..!” என்று அவளும் உள்ளே உறுப் போட்டுக் கொண்டாள்.
அவன் புல்லட்டை எடுத்துக் கொண்டு வரும் வரை, அவளின் தவிப்பு அடங்கவில்லை.அவனைப் பார்த்ததும், ஒரு வித வெட்கம் வந்து அவளை சூழ்ந்து கொள்ள,ஏதோ முதன் முறையாக அவனுடன் பைக்கில் செல்வதைப் போல உணர்ந்தாள்.
“போகலாமா..?”
“ம்ம்ம்..!”
அவர்கள் கிளம்பியவுடன்,
“என்ன மதினி..? இப்போ சந்தோஷமா..?” என்றார் மலர்.
“சந்தோஷமா...சொல்ல வார்த்தையே இல்லை மதினி. ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம். சாயங்காலம் ரெண்டு பேருக்கும் சுத்தி வைக்கணும்...!” என்றார் பார்வதி.
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்தார் திலகாவின் கணவர் கணபதி. பல வருடங்களுக்குப் பிறகு தம்பி வீட்டிற்கு வருகிறார்.
“வாங்க அண்ணா..!” என்றார் மலர்.
“வாங்க...!!” என்றார் பார்வதி.
“மனோகர் இல்லையாம்மா...?” என்றார்.
“வெளிய ஒரு ஜோலியா போயிருக்கார். எதுவும் முக்கியமான விஷயமா..?” என்றார் பார்வதி.
“ஆமாம்..!”என்றவர்,
“அவ செஞ்சதுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டா மட்டும் பத்தாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா இப்போதைக்கு மன்னிப்பு மட்டும் தான் என்னால கேட்க முடியும்..! முடிஞ்சா ரெண்டு பேரும் மன்னிச்சிடுங்க. மலர் நீயும் மன்னிச்சிடும்மா..!” என்றார் கணபதி.
“மன்னிக்கக் கூடிய காரியமாண்ணா அது. உங்க முகத்துக்காக மட்டும் தான் பேசாம இருக்கோம்..!” என்றார் மலர்.
“அது எனக்கும் தெரியும்மா..!” என்று அவர் சொல்ல,
“துர்காவுக்கு இப்போ எப்படி இருக்கு...?” என்றார் பார்வதி.
“இப்போ நல்லா இருக்காம்மா...! அவ விஷயமா பேசத்தான் வந்தேன்...!” என்றார் கணபதி.
“துர்கா விஷயமாவா...?” என்று இருவரும் புரியாமல் பார்க்க,
“துர்காவுக்கு, முத்துவைப் பேசி முடிக்கலாம்ன்னு இருக்கேன். அது மட்டும் தான் முத்துவுக்கு நான் பண்ற நல்லதா இருக்க முடியும்..!” என்றார்.
“இதுக்கு அவங்க ரெண்டு பேரும் சரின்னு சொல்லணுமே...?” என்றார் மலர்.
“துர்கா சரின்னு சொல்லிட்டாம்மா..! மாட்டேன்னு சொன்ன பிள்ளைய, திலகா தான் வம்படியா எல்லாமே பண்ண வச்சிருக்கா....!” என்றார் கணபதி.
“இது சரியா வரும்ன்னு எனக்குத் தோணலை அண்ணா..!” என்றார் மலர்.
“திலகாவுக்கு இது மட்டும் தான் பெரிய தண்டனை. அது மட்டும் இல்லாம, இவ்வளவு பிரச்னைக்கு அப்பறம், துர்காவை வெளிய கட்டிக் குடுக்கவும் எனக்கு மனசில்லை..” என்றார்.
“முத்து அம்மாகிட்ட பேசிப்பாருங்க அண்ணா..!” என்றார் மலர்.
“அதான்...பார்வதி பேசுனா...அவங்க கேட்பாங்க..” என்றார்.
“நான் என்ன பேசுறது...? இப்போ கூட உங்க சுயநலம் தான் இதுல இருக்கு. உங்க பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போகக் கூடாதுன்னு வந்திருக்கிங்க. பொண்ணப் பெத்த தகப்பனா, உங்க யோசனை சரி தான். ஆனா முத்து, இதுக்கு கண்டிப்பா சம்மதிக்க மாட்டான். அப்படியும் மீறி அவன் சரின்னு சொன்னாலும், துர்காவை பார்க்கும் போதெல்லாம், அவ அம்மா செஞ்சது தான் அவனுக்கு நினைப்புக்கு வரும். அதனால துர்காவுக்கு வெளிய பார்த்து முடிக்கிறது தான் சரியா வரும்..!” என்றார் பார்வதி.
“மதினி சொல்றதும் சரிதாண்ணே..! இன்னைக்கு ஒரு வேகத்துல கல்யாணத்தைப் பண்ணி வச்சுப் போட்டு, பின்னும் பிறகும் அவதிப் படக் கூடாது. துர்காவுக்கு நல்ல இடமாப் பார்ப்போம். கொஞ்ச நாள் போகட்டும்..” என்றார் மலர்.
“அப்போ சரிம்மா...! எது நடக்கணுமோ..அது தான நடக்கும்..!” என்றபடி சென்று விட்டார் கணபதி.
அவர் சென்ற அடுத்த நிமிடம், உள்ளே இருந்து வந்த சுமதி,
“அம்மா..! நான் வேணுமின்னா முத்து மாமாவ கட்டிக்கவா..??” என்றாள். அவளை அதிர்ந்து பார்த்தனர் இருவரும். அவள் அறிந்து சொன்னாளா..? இல்லை அறியாமல் சொன்னாளா..? என்று பார்வதிக்குத் தெரியாது. ஆனால் அவரின் மனதில் உறுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயத்திற்கு ஒரு முடிவைச் சொல்லியிருந்தாள்.
*******