கரிசல் 20:
அவர்கள் பேசியதைக் கேட்ட விநோதினிக்கும் கூட அதிர்ச்சிதான்.அவள் மதியைத் திரும்பிப் பார்க்க, அவளோ கண்கள் கலங்கி ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள்.
“என்னடி இப்படி பேசுறாங்க..?” என்றாள் வினோ.
அவளின் கேள்விக்கு வண்ண மதி எந்த பதிலையும் சொல்லவில்லை. அவளுக்கே கேட்ட விஷயத்தை ஜீரணிக்க கொஞ்ச நேரம் தேவைப்பட்டது.
“இது உன்னைக் கட்டிக்க போற அந்த மாப்பிள்ளைக்குத் தெரியுமா..?” என்றாள் வினோ.
“தெரியலை..!” என்று தலையை ஆட்டினாள் வண்ண மதி.
“இதுக்கு என்ன தான் வழி..?” என்றாள்.
“விடு வினோ, எது நடக்கணும்ன்னு இருக்கோ அது தான் நடக்கும். நாம நினைக்கிறது எங்க நடக்குது..?” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
“அதெப்படி அவரோட பையன் சொல்லாம இவர் சொல்லுவார். அப்ப எல்லாரும் சேர்ந்து உன்னை வீட்டுலையே இருக்க வச்சிடலாம்ன்னு பார்க்குறாங்களா..? இதை பார்வது பெரியம்மாகிட்ட சொல்லணும் முதல்ல..!” என்று வினோதினி சொல்ல,
‘வேண்டாம் வினோ..! அம்மாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப சங்கடப் படுவாங்க..! விடு நடக்கறது நடக்கட்டும்..!” என்று மதி அந்த பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.
“நடக்கறது எதுவுமே எனக்கு என்னமோ சரியா படலை மதி..? இப்ப உனக்கு என்ன வயசாகுது..? எதுக்கு இப்படி அவசர அவசரமா கல்யாணம் பண்றாங்க..!” என்று வினோதினி கோபத்தில் கத்திக் கொண்டிருந்தாள்.
அங்கு மணி முகிலனோ எப்படி மதியைப் பார்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான். யாராவது ஒருவர் அந்த வீட்டிற்குள் போய் கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர்.
கங்காவும், செல்வியும் அந்த படத்திலேயே லயித்து விட்டனர்.
“இதென்னப்பா தம்பி பொண்டாட்டின்னு தெரிஞ்சும் அண்ணன்காரன் இப்படி பண்றான்..?” என்று அந்த திரைப்படத்தின் கதையை ஆராய்ந்து கொண்டிருந்தனர் சிலர்.
சுற்றும் முற்றும் பார்த்த முகிலனுக்கு எரிச்சல் வந்தது தான் மிச்சம். அவன் தவித்துக் கொண்டிருக்க, அவனுக்காகவே அந்த நேரம் பவர்கட் ஆனது.
“நல்ல படம் ஓடுது..! இப்ப பார்த்து இந்த கரண்ட் காரனுக்கு நோக்காடு வரணுமா..?” என்று சில கிழவிகள் சகட்டு மேனிக்கு திட்டிக் கொண்டிருக்க, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான் மணி முகிலன்.
“என்ன மதி..? கரண்ட் போய்டுச்சு..!” என்று வினோ கேட்க,
“மண்ணெணெய் விளக்கு வச்சிருப்பாங்க..! கொஞ்ச நேரத்துல ஏத்திடுவாங்க..!” என்று சொன்னாள் மதி.
“நான் போய் பார்க்குறேன்..!” என்று வினோ நகர..
“இரு வினோ..! எங்கயும் போகாத. கொஞ்ச நேரத்துல அவங்களே கொண்டு வருவாங்க..!” என்று மதி சொல்ல, அதைக் கேட்காமல் அவள் சுவரை தடவிக் கொண்டே வெளியே நடந்தாள். மதிக்கு இதெல்லாம் பழக்கம் என்பதால் அப்படியே அமர்ந்து விட்டாள்.
முகிலனும் இருட்டில் தட்டுத் தடுமாறி மதி இருந்த அறையை அடைந்தான். அந்த அறையின் ஜன்னல் வழியே லேசாக நிலவின் வெளிச்சம் தெரிய, அதில் மதி நிழல் உருவமாய் தெரிந்தாள்.
“கூட யாரையும் காணோம்..?” என்றபடி மெதுவாக எட்டு வைத்து உள்ளே சென்றான் முகிலன்.
“என்ன வினோ ! விளக்கு எங்க..?” என்று மதி கேட்க,
“மதி..!” என்றான் முகிலன் ஆழ்ந்த குரலில்.
“மணி மாமா..!” என்றாள் அதிர்ச்சியாய்.
“தன்னுடைய குரலை அவள் உடனே கண்டு கொள்ளவும் அவனுக்குள் மகிழ்ச்சி ஊற்று.
“இங்க எதுக்கு வந்திங்க..? யாராவது பார்த்தா அவ்வளவு தான்..! கிளம்புங்க மாமா..!” என்று அவள் ஒரு பக்கம் பார்த்து சொல்லிக் கொண்டிருக்க, அவனோ அவளின் பின்னால் வந்து நின்றிருந்தான்.
பின்னிருந்து அவள் கையைப் பிடிக்க, மதிக்கு சர்வாங்கமும் ஒடுங்கியது. கைகால்கள் நடுக்கம் குடுக்க,
“விடுங்க மாமா..! இப்போ வினோதினி வந்திடுவா..! இங்க இருந்து கிளம்புங்க முதல்ல..!” என்று அவள் சொல்ல....காற்றாய் வந்தது அவள் குரல் பயத்தில்.
“வந்தா நான் பார்த்துக்கறேன்..! ப்ளீஸ் ரெண்டு நிமிஷம். இனிமேல் இது மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் வராது..!” என்று சொல்லியவன்..பின்னிருந்து அவளை அணைத்தான்.
அறியாத வயதில் ஒரு ஆணின் தொடுதல் அவளுக்குள் பல ரசாயன மாற்றங்களைக் கொடுக்க, அவனிடம் இருந்து விலக முற்பட்டாள்.ஆனால் முடியவில்லை. அவளின் காதோரத்தில் முத்தமிட்டவன்....முகத்தைத் திருப்பி முகம் முழுவதும் முத்தமிட...எதுவும் பேசவும், மறுக்கவும் திராணியற்று நின்றாள் மதி.
அவனிடம் மயங்கி நின்றவளுக்கு, சற்று முன் அவன் அப்பா பேசியது நினைவிற்கு வர, பட்டென்று அவனை உதறினாள் அவனை.
“மதி..!” என்று மீண்டும் அவளை அணைக்கப் போக,
“இப்ப கிளம்ப போறிங்களா..? இல்லை நான் சத்தம் போட்டு எல்லாரையும் கூப்பிடவா..?” என்றாள்.
“எதுக்கு இப்ப இப்படி கோவமா பேசுற..? இவ்வளவு நேரம் நல்லா தான இருந்த..?” என்றான் புரியாமல்.
அதற்குள் வினோவின் குரல் கேட்க,
“கிளம்புங்க மணி மாமா..!” என்றாள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு. அந்த அரை இருளில் அவளின் முகம் சரியாக தெரியா விட்டாலும், அவள் குரலில் இறுக்கம் இருந்தது முகிலனுக்கு நன்றாகத் தெரிந்தது.
அவன் கோபத்துடன் வெளியே செல்ல, பலமாக ஒருவர் மீது இடித்துக் கொண்டான்.
“ஸ்ஸா..!” என்று வினோ முகத்தை சுழிக்க, போன கரண்ட்டும் வந்தது.
அவனோ அவளிடம் மன்னிப்பு கூட கேட்காமல் போக, உள்ளே வந்த வினோ..
“ஹேய் யாருடி அது..! எருமை மாடு மாதிரி இடிச்சுட்டு ஒரு சாரி கூட சொல்லாம போறான்..!” என்றான் வினோதினி.
“ஐயோ கத்தாத வினோ..! அவர் தான் மணி மாமா..!” என்றாள் மதி.
“என்னது மணி மாமாவா..?” என்று வினோ முகத்தை சுருக்க, மதி தலை குனிந்த விதத்தில் அப்போது தான் விநோதினிக்கும் புரிந்தது.
அவள் வந்ததில் இருந்து முகிலனைப் பார்க்கவில்லை.இப்போது தான் பார்க்கிறாள்.
“இந்த பட்டிக்காட்ல இப்படி ஒரு ஹேண்ட்சம்..! எப்படி இருக்காரு..?” என்று மனதில் எண்ணியவள்,
“ஹேய் மதி..! நிஜமாவே மாமா செம்ம அழகுடி..!” என்றாள்.
“கொஞ்ச நேரம் பேசாம இருடி..! யாராவது வந்து, அவங்க காதுல விழுந்தா, அப்பறம் அதுக்கு ஒரு பிரச்சனை பண்ணுவாங்க..!” என்றாள் மதி.
“அடிபோடி இவளே..! எதுக்கெடுத்தாலும் பயந்துகிட்டு...! யார் என்ன சொன்னலும் எனக்கு கவலையில்லை..!” என்றாள் வினோ.
“நீ மெட்ராஸ்ல இருக்க வினோ..! அதனால உனக்கு இதெல்லாம் சாதரணமா தெரியும். ஆனா இந்த ஊர்ல அப்படி இல்லை.
ஒண்ணுன்னா ஒன்போதுன்னு உடனே பரப்பிடுவாங்க..! யாருக்கும் கவலைப் படாம, நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன். அதுக்கான பரிசுதான் இந்த கல்யாணம்..! இதெல்லாம் அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும்..” என்றாள் மதி.
“சரி விடுடி..! கவலைப்படாத.எல்லாம் நல்லதே நடக்கும்..” என்றாள் வினோ ஆறுதலாக.
அங்கே அரசியின் வீட்டில்...
“நாளைக்கு கல்யாணத்துல மதிக்கு ஏதாவது செய்வோமா?” என்றார் வடிவேல்.
“என்ன சொன்னிங்க..? அவளுக்கு செய்யனும்ன்னு எனக்கு என்ன தலை எழுத்தா..? அதெல்லாம் செய்ய முடியாது..!” என்றார் அரசி திட்டவட்டமாக.
“நமக்கு இருக்குறது ரெண்டும் பையனுக தான..? அதனால..” என்று அவர் இழுக்க,
“அதனால..! சொல்லுங்க அதனால..! இருக்கறதை எல்லாம் போய் தூக்கிக் குடுத்துட்டு வந்துடுங்க..! யார் வேணாம்ன்னு சொன்னா..? ஏற்கனவே நான் பெத்த ரெண்டும் சொன்ன பேச்சு கேட்காம அங்க தான் எடுபிடி வேலை செஞ்சிட்டு இருக்கானுக..! இப்ப நீங்க இப்படி சொல்றிங்க..? உங்களுக்கும் சொக்குப் போடி போட்டாளுங்களா..?” என்று அரசி ஒரு சண்டைக்கே தயாராக,
இதற்கு மேல் அரசியிடம் பேச முடியாது என்று நினைத்த வடிவேலும் அந்த இடத்தை காலி செய்தார்.
“என்னாக்கா..? உங்க புருஷன் முகத்தை தொங்கப் போட்டுட்டுப் போறாரு..!” என்ற படி சரியான நேரத்திற்கு வந்தார் திலகா.
“அவரு தம்பி மகளுக்கு ஏதாவது செய்யணுமாம். என்கிட்டயே சொல்றாக. அதான் நாலு குடு குடுத்தேன்..!” என்றார் அரசி கோபமாக.
“என்னக்கா...! திடீர்ன்னு அவளுக மேல பாசம் பொங்குது..?” என்றார்.
“அது தான் எனக்கும் புரியலை திலகா. நேத்து வரைக்கும் அமைதியா இருந்த மனுஷன், இன்னைக்கு இப்படிப் பேசுறாருன்னு சொன்னா யார் காரணம்..” என்றார் அரசி.
“எல்லாம் அந்த மேனா மினுக்கிக சொல்லிக் குடுத்திருப்பாளுக..!” என்று திலகா மேலும் அரசிக்கு மகுடி ஊதினார்.
அவர்கள் பேசியதைக் கேட்ட விநோதினிக்கும் கூட அதிர்ச்சிதான்.அவள் மதியைத் திரும்பிப் பார்க்க, அவளோ கண்கள் கலங்கி ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள்.
“என்னடி இப்படி பேசுறாங்க..?” என்றாள் வினோ.
அவளின் கேள்விக்கு வண்ண மதி எந்த பதிலையும் சொல்லவில்லை. அவளுக்கே கேட்ட விஷயத்தை ஜீரணிக்க கொஞ்ச நேரம் தேவைப்பட்டது.
“இது உன்னைக் கட்டிக்க போற அந்த மாப்பிள்ளைக்குத் தெரியுமா..?” என்றாள் வினோ.
“தெரியலை..!” என்று தலையை ஆட்டினாள் வண்ண மதி.
“இதுக்கு என்ன தான் வழி..?” என்றாள்.
“விடு வினோ, எது நடக்கணும்ன்னு இருக்கோ அது தான் நடக்கும். நாம நினைக்கிறது எங்க நடக்குது..?” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
“அதெப்படி அவரோட பையன் சொல்லாம இவர் சொல்லுவார். அப்ப எல்லாரும் சேர்ந்து உன்னை வீட்டுலையே இருக்க வச்சிடலாம்ன்னு பார்க்குறாங்களா..? இதை பார்வது பெரியம்மாகிட்ட சொல்லணும் முதல்ல..!” என்று வினோதினி சொல்ல,
‘வேண்டாம் வினோ..! அம்மாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப சங்கடப் படுவாங்க..! விடு நடக்கறது நடக்கட்டும்..!” என்று மதி அந்த பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.
“நடக்கறது எதுவுமே எனக்கு என்னமோ சரியா படலை மதி..? இப்ப உனக்கு என்ன வயசாகுது..? எதுக்கு இப்படி அவசர அவசரமா கல்யாணம் பண்றாங்க..!” என்று வினோதினி கோபத்தில் கத்திக் கொண்டிருந்தாள்.
அங்கு மணி முகிலனோ எப்படி மதியைப் பார்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான். யாராவது ஒருவர் அந்த வீட்டிற்குள் போய் கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர்.
கங்காவும், செல்வியும் அந்த படத்திலேயே லயித்து விட்டனர்.
“இதென்னப்பா தம்பி பொண்டாட்டின்னு தெரிஞ்சும் அண்ணன்காரன் இப்படி பண்றான்..?” என்று அந்த திரைப்படத்தின் கதையை ஆராய்ந்து கொண்டிருந்தனர் சிலர்.
சுற்றும் முற்றும் பார்த்த முகிலனுக்கு எரிச்சல் வந்தது தான் மிச்சம். அவன் தவித்துக் கொண்டிருக்க, அவனுக்காகவே அந்த நேரம் பவர்கட் ஆனது.
“நல்ல படம் ஓடுது..! இப்ப பார்த்து இந்த கரண்ட் காரனுக்கு நோக்காடு வரணுமா..?” என்று சில கிழவிகள் சகட்டு மேனிக்கு திட்டிக் கொண்டிருக்க, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான் மணி முகிலன்.
“என்ன மதி..? கரண்ட் போய்டுச்சு..!” என்று வினோ கேட்க,
“மண்ணெணெய் விளக்கு வச்சிருப்பாங்க..! கொஞ்ச நேரத்துல ஏத்திடுவாங்க..!” என்று சொன்னாள் மதி.
“நான் போய் பார்க்குறேன்..!” என்று வினோ நகர..
“இரு வினோ..! எங்கயும் போகாத. கொஞ்ச நேரத்துல அவங்களே கொண்டு வருவாங்க..!” என்று மதி சொல்ல, அதைக் கேட்காமல் அவள் சுவரை தடவிக் கொண்டே வெளியே நடந்தாள். மதிக்கு இதெல்லாம் பழக்கம் என்பதால் அப்படியே அமர்ந்து விட்டாள்.
முகிலனும் இருட்டில் தட்டுத் தடுமாறி மதி இருந்த அறையை அடைந்தான். அந்த அறையின் ஜன்னல் வழியே லேசாக நிலவின் வெளிச்சம் தெரிய, அதில் மதி நிழல் உருவமாய் தெரிந்தாள்.
“கூட யாரையும் காணோம்..?” என்றபடி மெதுவாக எட்டு வைத்து உள்ளே சென்றான் முகிலன்.
“என்ன வினோ ! விளக்கு எங்க..?” என்று மதி கேட்க,
“மதி..!” என்றான் முகிலன் ஆழ்ந்த குரலில்.
“மணி மாமா..!” என்றாள் அதிர்ச்சியாய்.
“தன்னுடைய குரலை அவள் உடனே கண்டு கொள்ளவும் அவனுக்குள் மகிழ்ச்சி ஊற்று.
“இங்க எதுக்கு வந்திங்க..? யாராவது பார்த்தா அவ்வளவு தான்..! கிளம்புங்க மாமா..!” என்று அவள் ஒரு பக்கம் பார்த்து சொல்லிக் கொண்டிருக்க, அவனோ அவளின் பின்னால் வந்து நின்றிருந்தான்.
பின்னிருந்து அவள் கையைப் பிடிக்க, மதிக்கு சர்வாங்கமும் ஒடுங்கியது. கைகால்கள் நடுக்கம் குடுக்க,
“விடுங்க மாமா..! இப்போ வினோதினி வந்திடுவா..! இங்க இருந்து கிளம்புங்க முதல்ல..!” என்று அவள் சொல்ல....காற்றாய் வந்தது அவள் குரல் பயத்தில்.
“வந்தா நான் பார்த்துக்கறேன்..! ப்ளீஸ் ரெண்டு நிமிஷம். இனிமேல் இது மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் வராது..!” என்று சொல்லியவன்..பின்னிருந்து அவளை அணைத்தான்.
அறியாத வயதில் ஒரு ஆணின் தொடுதல் அவளுக்குள் பல ரசாயன மாற்றங்களைக் கொடுக்க, அவனிடம் இருந்து விலக முற்பட்டாள்.ஆனால் முடியவில்லை. அவளின் காதோரத்தில் முத்தமிட்டவன்....முகத்தைத் திருப்பி முகம் முழுவதும் முத்தமிட...எதுவும் பேசவும், மறுக்கவும் திராணியற்று நின்றாள் மதி.
அவனிடம் மயங்கி நின்றவளுக்கு, சற்று முன் அவன் அப்பா பேசியது நினைவிற்கு வர, பட்டென்று அவனை உதறினாள் அவனை.
“மதி..!” என்று மீண்டும் அவளை அணைக்கப் போக,
“இப்ப கிளம்ப போறிங்களா..? இல்லை நான் சத்தம் போட்டு எல்லாரையும் கூப்பிடவா..?” என்றாள்.
“எதுக்கு இப்ப இப்படி கோவமா பேசுற..? இவ்வளவு நேரம் நல்லா தான இருந்த..?” என்றான் புரியாமல்.
அதற்குள் வினோவின் குரல் கேட்க,
“கிளம்புங்க மணி மாமா..!” என்றாள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு. அந்த அரை இருளில் அவளின் முகம் சரியாக தெரியா விட்டாலும், அவள் குரலில் இறுக்கம் இருந்தது முகிலனுக்கு நன்றாகத் தெரிந்தது.
அவன் கோபத்துடன் வெளியே செல்ல, பலமாக ஒருவர் மீது இடித்துக் கொண்டான்.
“ஸ்ஸா..!” என்று வினோ முகத்தை சுழிக்க, போன கரண்ட்டும் வந்தது.
அவனோ அவளிடம் மன்னிப்பு கூட கேட்காமல் போக, உள்ளே வந்த வினோ..
“ஹேய் யாருடி அது..! எருமை மாடு மாதிரி இடிச்சுட்டு ஒரு சாரி கூட சொல்லாம போறான்..!” என்றான் வினோதினி.
“ஐயோ கத்தாத வினோ..! அவர் தான் மணி மாமா..!” என்றாள் மதி.
“என்னது மணி மாமாவா..?” என்று வினோ முகத்தை சுருக்க, மதி தலை குனிந்த விதத்தில் அப்போது தான் விநோதினிக்கும் புரிந்தது.
அவள் வந்ததில் இருந்து முகிலனைப் பார்க்கவில்லை.இப்போது தான் பார்க்கிறாள்.
“இந்த பட்டிக்காட்ல இப்படி ஒரு ஹேண்ட்சம்..! எப்படி இருக்காரு..?” என்று மனதில் எண்ணியவள்,
“ஹேய் மதி..! நிஜமாவே மாமா செம்ம அழகுடி..!” என்றாள்.
“கொஞ்ச நேரம் பேசாம இருடி..! யாராவது வந்து, அவங்க காதுல விழுந்தா, அப்பறம் அதுக்கு ஒரு பிரச்சனை பண்ணுவாங்க..!” என்றாள் மதி.
“அடிபோடி இவளே..! எதுக்கெடுத்தாலும் பயந்துகிட்டு...! யார் என்ன சொன்னலும் எனக்கு கவலையில்லை..!” என்றாள் வினோ.
“நீ மெட்ராஸ்ல இருக்க வினோ..! அதனால உனக்கு இதெல்லாம் சாதரணமா தெரியும். ஆனா இந்த ஊர்ல அப்படி இல்லை.
ஒண்ணுன்னா ஒன்போதுன்னு உடனே பரப்பிடுவாங்க..! யாருக்கும் கவலைப் படாம, நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன். அதுக்கான பரிசுதான் இந்த கல்யாணம்..! இதெல்லாம் அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும்..” என்றாள் மதி.
“சரி விடுடி..! கவலைப்படாத.எல்லாம் நல்லதே நடக்கும்..” என்றாள் வினோ ஆறுதலாக.
அங்கே அரசியின் வீட்டில்...
“நாளைக்கு கல்யாணத்துல மதிக்கு ஏதாவது செய்வோமா?” என்றார் வடிவேல்.
“என்ன சொன்னிங்க..? அவளுக்கு செய்யனும்ன்னு எனக்கு என்ன தலை எழுத்தா..? அதெல்லாம் செய்ய முடியாது..!” என்றார் அரசி திட்டவட்டமாக.
“நமக்கு இருக்குறது ரெண்டும் பையனுக தான..? அதனால..” என்று அவர் இழுக்க,
“அதனால..! சொல்லுங்க அதனால..! இருக்கறதை எல்லாம் போய் தூக்கிக் குடுத்துட்டு வந்துடுங்க..! யார் வேணாம்ன்னு சொன்னா..? ஏற்கனவே நான் பெத்த ரெண்டும் சொன்ன பேச்சு கேட்காம அங்க தான் எடுபிடி வேலை செஞ்சிட்டு இருக்கானுக..! இப்ப நீங்க இப்படி சொல்றிங்க..? உங்களுக்கும் சொக்குப் போடி போட்டாளுங்களா..?” என்று அரசி ஒரு சண்டைக்கே தயாராக,
இதற்கு மேல் அரசியிடம் பேச முடியாது என்று நினைத்த வடிவேலும் அந்த இடத்தை காலி செய்தார்.
“என்னாக்கா..? உங்க புருஷன் முகத்தை தொங்கப் போட்டுட்டுப் போறாரு..!” என்ற படி சரியான நேரத்திற்கு வந்தார் திலகா.
“அவரு தம்பி மகளுக்கு ஏதாவது செய்யணுமாம். என்கிட்டயே சொல்றாக. அதான் நாலு குடு குடுத்தேன்..!” என்றார் அரசி கோபமாக.
“என்னக்கா...! திடீர்ன்னு அவளுக மேல பாசம் பொங்குது..?” என்றார்.
“அது தான் எனக்கும் புரியலை திலகா. நேத்து வரைக்கும் அமைதியா இருந்த மனுஷன், இன்னைக்கு இப்படிப் பேசுறாருன்னு சொன்னா யார் காரணம்..” என்றார் அரசி.
“எல்லாம் அந்த மேனா மினுக்கிக சொல்லிக் குடுத்திருப்பாளுக..!” என்று திலகா மேலும் அரசிக்கு மகுடி ஊதினார்.