AshrafHameedaT
Administrator
அலை – 8
நேத்ராவிடம் மொக்கை வாங்கிய சூடு தணியாமல் இருந்தவனின் உள்ளத்தில் மேலும் நெருப்பை பற்றவைக்கவென இருந்தது வருகையும் அவன் தாங்கி வந்த செய்தியும். வீட்டினுள் கோபமாக நுழைந்தவன் சுமங்கலியை தேடினான். அதே நேரம் தந்தை சிவராமன் வீட்டில் இருக்கவே கூடாதென்ற வேண்டுதலோடு. காரியமே கெட்டுவிடுமே.
“மாம்...” வீடே அலறும் படி கத்தியவனின் கூச்சலில் அடித்துப்பிடித்து ஓடிவந்தார் சுமங்கலி.
“வாட் இஸ் திஸ் ரிஷி?...” கண்டிப்பாக கேட்டவரை,
“அதை நான் கேட்கனும் மாம்...” கொஞ்சமும் குரலை தாழ்த்தாமல் கத்த,
“டோன்ட் ஷவுட்...” என்றவர்,
“வா ஆபீஸ் ரூம் போய் பேசிப்போம் எதுவானாலும்...”
அவனின் கை பிடிக்க வர அவரை தவிர்த்து தாண்டிக்கொண்டு அந்த அறைக்கு சென்றான். செல்லும் அவனையே பார்த்தவர் கிட்சன் நோக்கி சென்றார்.
அவனின் கோவத்தை குறைப்பதற்காக குளிர்ந்த முலாம்பழச்சாறை தயாரிக்க ஆரம்பித்தார். அவரின் பின்னே மீண்டும் வந்தவன்,
“மாம் இங்க நான் கூப்ட்டிட்டு இருக்கேன். நீங்க கிட்சனுக்கு போனா என்ன அர்த்தம்?...”
கோவத்தை அடக்கிய குரலில் பல்லைகடித்துக்கொண்டு கேட்க அவனை ஒரு பார்வை அழுத்தமாக பார்த்தவர் சமையல் செய்ய உதவியாய் இருக்கும் பெண்ணிடம் திரும்பி,
“சாலா ப்ரிட்ஜ்ல இருந்து மில்க்மெய்ட் டின்னை எடு...” என சொல்லி பழத்தை சிறிதாக நறுக்க ஆரம்பித்தார்.
தாயின் பார்வையிலேயே கொஞ்சம் அடங்கியவன் வேறு வழியில்லாமல் காலை உதைத்துக்கொண்டு மீண்டும் அலுவலக அறைக்குள் நுழைந்தான்.
“அம்மா தம்பி ரொம்ப கோவமா போகுது...” சாலா சொல்ல,
“தெரியாமலா? அதெல்லாம் தெரியும். நீ ஐஸ் க்யூப்ஸ் எடுத்து வெளில வை...” கடமையே கண்ணாக ஜூஸ் தயாரித்து தங்கள் இரண்டு பேருக்கும் எடுத்துக்கொண்டவர்,
“சாலா ஜூஸ் இன்னும் இருக்கு. நீயும் குடிச்சிட்டு வேலையை பார்...” சொல்லி ரிஷியை பார்க்க செல்ல அவனோ இன்னமும் கோபம் மட்டுபடாமல் இங்குமங்கும் நடந்துகொண்டிருந்தான்.
சுமங்கலியை பார்த்ததும், “மாம்...” என ஆரம்பிக்க அவனை கையமர்த்தி தடுத்தவர்,
“இதை குடிச்சு முடி. ரெண்டாவது பேசுவோம்...” என்று சொல்லி தன்னுடைய க்ளாஸை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.
ரிஷியும் ஒரே மடக்கில் ஜூஸை காலி செய்துவிட்டு சுமங்கலி குடித்துமுடிக்க காத்திருக்க அவரோ பொறுமையாக குடித்து முடித்த பின்னே மகனை பார்த்தார்.
“இப்போ சொல்லு. என்ன உனக்கு அவ்வளோ டென்ஷன்? என்னைக்குமே நம்மோட மனநிலையை மத்தவங்க கணிக்கிற அளவுக்கு நாம நடந்துக்க கூடாது ரிஷி...”
“என்னதான் உனக்கு கோவம் இருந்தாலும் அதை நம்ம வீட்ல வேலை செய்யிறவங்க வெளில உன்னோட பழகறவங்கன்னு எல்லோருக்கும் இப்படித்தான் காமிச்சு குடுப்பியா?...”
சுமங்கலியின் பேச்சில் உள்ள உண்மை சுட தன்னை தான் நடந்துகொண்டதை உணர்ந்தான்.
“தான் என்றைக்கும் இந்தளவிற்கு நிதானம் தவறியதில்லையே...” நினைத்தவன் சுமங்கலியிடம் சொல்லியும் விட,
“அதை நானும் கேட்கலாமே? இதுவரை செய்யாத தவறை இப்போ ஏன் செய்யற?...”
அவரின் கேள்வியில் கண்ணிமைக்கும் நொடியில் மனதிற்குள் நேத்ரா வந்து செல்ல மீண்டும் கடுமையை பூசியது அவன் முகம்.
“என்ன ரிஷி உன் ப்ராப்ளம்?...” தாயின் குரல் கனிவாக கேட்டதும் கொஞ்சம் இலகுவானவன்,
“மாம் தாத்தா எனக்கு பொண்ணு பார்த்திருக்கிறாராம். தினேஷ் வந்து காலேஜ்ல சொன்னான். எனக்கு சுத்தமா பிடிக்கலைமா. இப்போ மேரேஜ் பண்ணிக்கற கண்டிஷன்ல என்னோட மைண்ட் இல்லை...”
“ஓஹ் இதுதான் உன் ப்ராப்ளமா? இதை ப்ராப்ளம்னு கூட சொல்லமுடியாது...” என்றவரிடம் முறைத்து,
“உங்களுக்கு இது ப்ராப்ளம் இல்லை. ஆனா எனக்கு இருக்கு. இப்போ மேரேஜ் வேண்டாம்னா வேண்டாம் தான்...” உடும்பாய் நிற்க,
“நீ லவ் பன்றியா ரிஷி...”
“ஹைய்யோ மேரேஜ் வேண்டாம்னா உடனே இதுவா தான் இருக்கும்னு எல்லா டிபிகல்ட் பேரன்ட்ஸ் மாதிரி நீங்களும் நினைக்காதீங்க மாம்...” அத்தனை சலிப்பு குரலில்.
“இப்போ உடனே கல்யாணம்னு யார் சொன்னா? உனக்கும் கல்யாணம் செய்துவைக்கிற வயசாகிடுச்சே. தாத்தா ஒரு ப்ரபோசல் கொண்டு வந்திருக்காங்க. இது யூஸ்வலா எல்லா பேமிலிலையும் நடக்கிறதுதானே?...”
சாதாரணம் போல் பேசியவருக்கு எப்படி புரியவைக்க என ரிஷி திருதிருத்தான். ஏனோ திருமணம் என்றதும் சுத்தமாக மனதிற்கு ஒப்பவில்லை.
“தினேஷ் என்ன சொன்னான் ரிஷி?...” முகம் தெளியாமல் குழப்பத்திலும் பிடித்தமின்மையிலுமே ரிஷி உழல அவனை தெளிவுபடுத்த எண்ணினார்.
“அதான் சொன்னேனே. எனக்கு பொண்ணு பார்திருக்காங்கன்னு...”
“அதை மட்டும் தானே சொன்ன. வேற என்ன சொன்னான்னு சொல்லு...” அதில் எரிச்சலானவன்,
“ஏன் மாம் இப்டி ஒன்னோன்னுத்துக்கும் எதிர்கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க. இரிட்டேட்டிங்கா இருக்கு...” ரிஷியின் இந்த பேச்சில் திகைத்தவர்,
“ரிஷி ஆர் யூ ஆல்ரைட்?...” கவலையான முகத்தோடு சுமங்கலி கேட்டதும் சுதாரித்தவன்,
“அந்த வாயாடி பேசினதுல அம்மாவை ஹர்ட் பண்ணிட்டேன். இன்னும் இவளால நான் என்னவெல்லாம் செய்ய இருக்கேனோ?...” தன்னையே கடிந்துகொண்டான்.
“அச்சோ சாரி மாம். டென்ஷன்ல ஏதோ டங் ஸ்லிப் ஆகி...” இறைஞ்சுதலாக கேட்க அப்போதும் அமைதியாகவே இருந்தார் அவனின் முகம் பார்த்து.
“மாம், தாத்தா பொண்ணு பார்த்திருக்கிறதா மட்டும் தான் சொல்லிருக்கார். மத்த விபரம் எல்லாம் வீட்ல போய் கேட்டுக்க சொல்லிருக்கார். அடுத்த வாரம் ரெண்டு நாள் ப்ரீ பண்ணிக்க சொன்னாராம்...”
வேறெங்கோ பார்த்துக்கொண்டே கூறி முடிக்க சரியாக சிவராமனும் சுமங்கலிக்கு மொபைலில் அழைத்தார். அவரிடம் பேசி முடித்த சுமங்கலி அடுத்ததாக துரைச்சாமிக்கு அழைத்து பேசி முடித்து ரிஷியிடம் வந்து அமர்ந்தார்.
“பொண்ணு நமக்கு தூரத்து சொந்தம் தானாம் ரிஷி. நம்ம குடும்பத்துக்கு பொருத்தமா அமைதியான நல்ல பொண்ணாம். தாத்தாவே விசாரிச்சுட்டாங்க போல...”
“மாம்...”
“இரு நான் சொல்லி முடிச்சிடறேன். இது சும்மா ஒரு பார்மாலிட்டி தானே. போய் முதல்ல பொண்ணை பாரு. அவங்க பேமிலியோட பேசு. உனக்கு பிடிச்சா ப்ரசீட் பண்ணலாம். பிடிக்கலைனா ட்ராப் பண்ணிடலாம்...”
“ஆர் யூ சூர்...” நம்பாமல் கேட்க,
“கண்டிப்பா. உன்னோட விருப்பம் இல்லாம நீ சொல்லாம நிச்சயம் எதுவும் நடக்காது...” அவனின் சீண்டல் பார்வையில் சிலிர்த்தவர்,
“உன் கல்யாண விஷயத்துல மட்டும் தான்...” என சுமங்கலி தெளிவாக்க வாய்விட்டே சிரித்துவிட்டான்.
“எப்போ போகனும்னு முதல்லையே சொல்லிடுங்க மாம்...”
“இன்னும் ரெண்டு வாரத்துல சிவராத்திரி வருது. அதுக்கு முன்னாடி போகவேண்டி இருக்கும். அவங்களுக்கும் தோது பார்க்கனும்ல...”
“ஓகே மாம். உங்க மேல உள்ள நம்பிக்கையில போறேன்...” என எழுந்துகொள்ள,
“டேய் டீட்டயில்ஸ் கேட்டுட்டு போயேண்டா...” அவனை இழுத்து பிடித்து உட்கார்த்தி,
“பொண்ணோட அப்பாவும் அம்மாவும் வொர்க் பன்றாங்க. ஒரு பொண்ணு ஒரு பையன். சென்னைல இருக்காங்க...”
சென்னை என்றதும், “ என் ஊர் காஞ்சிபுரம்...” என நேத்ராவை முதல்முதல் பார்த்தபோது அவள் கூறியது சம்பந்தமே இல்லாமல் ஞாபகத்திற்கு வந்தது. நொடியில் இனிப்பும் கசப்புமாய் ஒரு புரியாத உணர்வு.
“பொண்ணு ஊர் காஞ்சிபுரமா?...” வாய் உளற,
“இல்லையே சென்னைன்னு தானே தாத்தா சொன்னாங்க...” சுமங்கலியின் குரலில் தன்னை மீட்டவன்,
“இல்லையில்லை. சென்னை பக்கத்துல தானே காஞ்சிபுரம் இருக்கு. அது ஞாபகம் வந்துச்சு...” திடீரென தொண்டை அடைக்க சமாளித்தான்.
எதிலிருந்தோ விலகிச்செல்லும் வலி. அது விருப்பமாயும் விருப்பமில்லாமலும் அவனை சுழற்றியடிக்க திணறினான்.
“ஏன் நீ அந்த ஊர் போய்ருக்கிறயா? உனக்கு தெரிஞ்சவங்க யாரும் அந்த ஊர்ல இருக்காங்களா?. இவ்வளோ டிஸ்டர்ப் ஆகற?...”
சுமங்கலியின் முகத்தில் இருந்த யோசனை ரிஷிக்குள் அபாயமணி அடித்தது.
நேத்ராவிடம் மொக்கை வாங்கிய சூடு தணியாமல் இருந்தவனின் உள்ளத்தில் மேலும் நெருப்பை பற்றவைக்கவென இருந்தது வருகையும் அவன் தாங்கி வந்த செய்தியும். வீட்டினுள் கோபமாக நுழைந்தவன் சுமங்கலியை தேடினான். அதே நேரம் தந்தை சிவராமன் வீட்டில் இருக்கவே கூடாதென்ற வேண்டுதலோடு. காரியமே கெட்டுவிடுமே.
“மாம்...” வீடே அலறும் படி கத்தியவனின் கூச்சலில் அடித்துப்பிடித்து ஓடிவந்தார் சுமங்கலி.
“வாட் இஸ் திஸ் ரிஷி?...” கண்டிப்பாக கேட்டவரை,
“அதை நான் கேட்கனும் மாம்...” கொஞ்சமும் குரலை தாழ்த்தாமல் கத்த,
“டோன்ட் ஷவுட்...” என்றவர்,
“வா ஆபீஸ் ரூம் போய் பேசிப்போம் எதுவானாலும்...”
அவனின் கை பிடிக்க வர அவரை தவிர்த்து தாண்டிக்கொண்டு அந்த அறைக்கு சென்றான். செல்லும் அவனையே பார்த்தவர் கிட்சன் நோக்கி சென்றார்.
அவனின் கோவத்தை குறைப்பதற்காக குளிர்ந்த முலாம்பழச்சாறை தயாரிக்க ஆரம்பித்தார். அவரின் பின்னே மீண்டும் வந்தவன்,
“மாம் இங்க நான் கூப்ட்டிட்டு இருக்கேன். நீங்க கிட்சனுக்கு போனா என்ன அர்த்தம்?...”
கோவத்தை அடக்கிய குரலில் பல்லைகடித்துக்கொண்டு கேட்க அவனை ஒரு பார்வை அழுத்தமாக பார்த்தவர் சமையல் செய்ய உதவியாய் இருக்கும் பெண்ணிடம் திரும்பி,
“சாலா ப்ரிட்ஜ்ல இருந்து மில்க்மெய்ட் டின்னை எடு...” என சொல்லி பழத்தை சிறிதாக நறுக்க ஆரம்பித்தார்.
தாயின் பார்வையிலேயே கொஞ்சம் அடங்கியவன் வேறு வழியில்லாமல் காலை உதைத்துக்கொண்டு மீண்டும் அலுவலக அறைக்குள் நுழைந்தான்.
“அம்மா தம்பி ரொம்ப கோவமா போகுது...” சாலா சொல்ல,
“தெரியாமலா? அதெல்லாம் தெரியும். நீ ஐஸ் க்யூப்ஸ் எடுத்து வெளில வை...” கடமையே கண்ணாக ஜூஸ் தயாரித்து தங்கள் இரண்டு பேருக்கும் எடுத்துக்கொண்டவர்,
“சாலா ஜூஸ் இன்னும் இருக்கு. நீயும் குடிச்சிட்டு வேலையை பார்...” சொல்லி ரிஷியை பார்க்க செல்ல அவனோ இன்னமும் கோபம் மட்டுபடாமல் இங்குமங்கும் நடந்துகொண்டிருந்தான்.
சுமங்கலியை பார்த்ததும், “மாம்...” என ஆரம்பிக்க அவனை கையமர்த்தி தடுத்தவர்,
“இதை குடிச்சு முடி. ரெண்டாவது பேசுவோம்...” என்று சொல்லி தன்னுடைய க்ளாஸை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.
ரிஷியும் ஒரே மடக்கில் ஜூஸை காலி செய்துவிட்டு சுமங்கலி குடித்துமுடிக்க காத்திருக்க அவரோ பொறுமையாக குடித்து முடித்த பின்னே மகனை பார்த்தார்.
“இப்போ சொல்லு. என்ன உனக்கு அவ்வளோ டென்ஷன்? என்னைக்குமே நம்மோட மனநிலையை மத்தவங்க கணிக்கிற அளவுக்கு நாம நடந்துக்க கூடாது ரிஷி...”
“என்னதான் உனக்கு கோவம் இருந்தாலும் அதை நம்ம வீட்ல வேலை செய்யிறவங்க வெளில உன்னோட பழகறவங்கன்னு எல்லோருக்கும் இப்படித்தான் காமிச்சு குடுப்பியா?...”
சுமங்கலியின் பேச்சில் உள்ள உண்மை சுட தன்னை தான் நடந்துகொண்டதை உணர்ந்தான்.
“தான் என்றைக்கும் இந்தளவிற்கு நிதானம் தவறியதில்லையே...” நினைத்தவன் சுமங்கலியிடம் சொல்லியும் விட,
“அதை நானும் கேட்கலாமே? இதுவரை செய்யாத தவறை இப்போ ஏன் செய்யற?...”
அவரின் கேள்வியில் கண்ணிமைக்கும் நொடியில் மனதிற்குள் நேத்ரா வந்து செல்ல மீண்டும் கடுமையை பூசியது அவன் முகம்.
“என்ன ரிஷி உன் ப்ராப்ளம்?...” தாயின் குரல் கனிவாக கேட்டதும் கொஞ்சம் இலகுவானவன்,
“மாம் தாத்தா எனக்கு பொண்ணு பார்த்திருக்கிறாராம். தினேஷ் வந்து காலேஜ்ல சொன்னான். எனக்கு சுத்தமா பிடிக்கலைமா. இப்போ மேரேஜ் பண்ணிக்கற கண்டிஷன்ல என்னோட மைண்ட் இல்லை...”
“ஓஹ் இதுதான் உன் ப்ராப்ளமா? இதை ப்ராப்ளம்னு கூட சொல்லமுடியாது...” என்றவரிடம் முறைத்து,
“உங்களுக்கு இது ப்ராப்ளம் இல்லை. ஆனா எனக்கு இருக்கு. இப்போ மேரேஜ் வேண்டாம்னா வேண்டாம் தான்...” உடும்பாய் நிற்க,
“நீ லவ் பன்றியா ரிஷி...”
“ஹைய்யோ மேரேஜ் வேண்டாம்னா உடனே இதுவா தான் இருக்கும்னு எல்லா டிபிகல்ட் பேரன்ட்ஸ் மாதிரி நீங்களும் நினைக்காதீங்க மாம்...” அத்தனை சலிப்பு குரலில்.
“இப்போ உடனே கல்யாணம்னு யார் சொன்னா? உனக்கும் கல்யாணம் செய்துவைக்கிற வயசாகிடுச்சே. தாத்தா ஒரு ப்ரபோசல் கொண்டு வந்திருக்காங்க. இது யூஸ்வலா எல்லா பேமிலிலையும் நடக்கிறதுதானே?...”
சாதாரணம் போல் பேசியவருக்கு எப்படி புரியவைக்க என ரிஷி திருதிருத்தான். ஏனோ திருமணம் என்றதும் சுத்தமாக மனதிற்கு ஒப்பவில்லை.
“தினேஷ் என்ன சொன்னான் ரிஷி?...” முகம் தெளியாமல் குழப்பத்திலும் பிடித்தமின்மையிலுமே ரிஷி உழல அவனை தெளிவுபடுத்த எண்ணினார்.
“அதான் சொன்னேனே. எனக்கு பொண்ணு பார்திருக்காங்கன்னு...”
“அதை மட்டும் தானே சொன்ன. வேற என்ன சொன்னான்னு சொல்லு...” அதில் எரிச்சலானவன்,
“ஏன் மாம் இப்டி ஒன்னோன்னுத்துக்கும் எதிர்கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க. இரிட்டேட்டிங்கா இருக்கு...” ரிஷியின் இந்த பேச்சில் திகைத்தவர்,
“ரிஷி ஆர் யூ ஆல்ரைட்?...” கவலையான முகத்தோடு சுமங்கலி கேட்டதும் சுதாரித்தவன்,
“அந்த வாயாடி பேசினதுல அம்மாவை ஹர்ட் பண்ணிட்டேன். இன்னும் இவளால நான் என்னவெல்லாம் செய்ய இருக்கேனோ?...” தன்னையே கடிந்துகொண்டான்.
“அச்சோ சாரி மாம். டென்ஷன்ல ஏதோ டங் ஸ்லிப் ஆகி...” இறைஞ்சுதலாக கேட்க அப்போதும் அமைதியாகவே இருந்தார் அவனின் முகம் பார்த்து.
“மாம், தாத்தா பொண்ணு பார்த்திருக்கிறதா மட்டும் தான் சொல்லிருக்கார். மத்த விபரம் எல்லாம் வீட்ல போய் கேட்டுக்க சொல்லிருக்கார். அடுத்த வாரம் ரெண்டு நாள் ப்ரீ பண்ணிக்க சொன்னாராம்...”
வேறெங்கோ பார்த்துக்கொண்டே கூறி முடிக்க சரியாக சிவராமனும் சுமங்கலிக்கு மொபைலில் அழைத்தார். அவரிடம் பேசி முடித்த சுமங்கலி அடுத்ததாக துரைச்சாமிக்கு அழைத்து பேசி முடித்து ரிஷியிடம் வந்து அமர்ந்தார்.
“பொண்ணு நமக்கு தூரத்து சொந்தம் தானாம் ரிஷி. நம்ம குடும்பத்துக்கு பொருத்தமா அமைதியான நல்ல பொண்ணாம். தாத்தாவே விசாரிச்சுட்டாங்க போல...”
“மாம்...”
“இரு நான் சொல்லி முடிச்சிடறேன். இது சும்மா ஒரு பார்மாலிட்டி தானே. போய் முதல்ல பொண்ணை பாரு. அவங்க பேமிலியோட பேசு. உனக்கு பிடிச்சா ப்ரசீட் பண்ணலாம். பிடிக்கலைனா ட்ராப் பண்ணிடலாம்...”
“ஆர் யூ சூர்...” நம்பாமல் கேட்க,
“கண்டிப்பா. உன்னோட விருப்பம் இல்லாம நீ சொல்லாம நிச்சயம் எதுவும் நடக்காது...” அவனின் சீண்டல் பார்வையில் சிலிர்த்தவர்,
“உன் கல்யாண விஷயத்துல மட்டும் தான்...” என சுமங்கலி தெளிவாக்க வாய்விட்டே சிரித்துவிட்டான்.
“எப்போ போகனும்னு முதல்லையே சொல்லிடுங்க மாம்...”
“இன்னும் ரெண்டு வாரத்துல சிவராத்திரி வருது. அதுக்கு முன்னாடி போகவேண்டி இருக்கும். அவங்களுக்கும் தோது பார்க்கனும்ல...”
“ஓகே மாம். உங்க மேல உள்ள நம்பிக்கையில போறேன்...” என எழுந்துகொள்ள,
“டேய் டீட்டயில்ஸ் கேட்டுட்டு போயேண்டா...” அவனை இழுத்து பிடித்து உட்கார்த்தி,
“பொண்ணோட அப்பாவும் அம்மாவும் வொர்க் பன்றாங்க. ஒரு பொண்ணு ஒரு பையன். சென்னைல இருக்காங்க...”
சென்னை என்றதும், “ என் ஊர் காஞ்சிபுரம்...” என நேத்ராவை முதல்முதல் பார்த்தபோது அவள் கூறியது சம்பந்தமே இல்லாமல் ஞாபகத்திற்கு வந்தது. நொடியில் இனிப்பும் கசப்புமாய் ஒரு புரியாத உணர்வு.
“பொண்ணு ஊர் காஞ்சிபுரமா?...” வாய் உளற,
“இல்லையே சென்னைன்னு தானே தாத்தா சொன்னாங்க...” சுமங்கலியின் குரலில் தன்னை மீட்டவன்,
“இல்லையில்லை. சென்னை பக்கத்துல தானே காஞ்சிபுரம் இருக்கு. அது ஞாபகம் வந்துச்சு...” திடீரென தொண்டை அடைக்க சமாளித்தான்.
எதிலிருந்தோ விலகிச்செல்லும் வலி. அது விருப்பமாயும் விருப்பமில்லாமலும் அவனை சுழற்றியடிக்க திணறினான்.
“ஏன் நீ அந்த ஊர் போய்ருக்கிறயா? உனக்கு தெரிஞ்சவங்க யாரும் அந்த ஊர்ல இருக்காங்களா?. இவ்வளோ டிஸ்டர்ப் ஆகற?...”
சுமங்கலியின் முகத்தில் இருந்த யோசனை ரிஷிக்குள் அபாயமணி அடித்தது.