Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💕💙💕நெஞ்சமெல்லாம் அலரே 💕💙💕

Advertisement

Narmadha mf

Well-known member
Member
couple-love-standing-path-heart-shaped-frame_878402-702.jpg
கதையின் தொடக்கம் முதல் இறுதிவரை கதைக்களம் மிகவும் சுவாரசியமாக இருந்தது👌👌.

அகனெழிலன் :☺️☺️☺️☺️☺️
அகனெழிலன் அகத்தை நிறைத்து விட்டான்🥰🥰🥰. அனைவருக்கும் தாய் என்பவள் வரம் அடிப்படையில் மிருகங்கள் கூட தன் குழந்தையை தாய் அன்புடன் போற்றி பாதுகாக்கும் ஆனால் எழிலனுக்கு தாயன்பும் கிட்டவில்லை, அரவணைப்பும் கிட்டவில்லை. எவ்வளவு ஏங்கியிருப்பான் அவனது அறியா வயதில் 🙁🙁🙁தந்தை அன்பாக அரவணைத்தாலும் தாயுடன் போராட்டமான ஒரு வாழ்க்கையை கடவுள் அவனுக்கு அளித்து மிகவும் சோதித்து விட்டார். தாய்மாமன், பெரியண்ணை, அத்தை தயவில் சிறிதளவு மன ஏக்கம் நீங்கி நன்முறையில் வளர்ந்து மென்மையும் மேன்மையும் கொண்டு விவேகத்துடன் தனக்கான அங்கீகாரத்தையும், பணியையும் திறம்பட அமைத்துக் கொண்டு வாழ்க்கையின் முன்னேற்ற பாதையை நோக்கிய இவனது நகர்வு நிம்மதியை கொடுத்தது🥰🥰🥰🥰🥰🥰🥰.
எழிலின் காதல் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது, முறை பெண்கள் எத்தனை பேர் இருந்தாலும் தன்னகம் நுழைந்து காதலை மலரச் செய்த அலர்விழியை தவிர்த்து மற்ற அனைவரின் மீதும் தாய் அன்புடன் கூடிய பாசத்தை பொழிந்து தன் நிலை மாறாமல் மனம் கவர்ந்தான் 💞💞💞💞💞💞💞💞.

அலர்விழி :😍😍😍😍😍

அலர்விழி பெயருக்கு ஏற்றார் போல் அழகான விழியை கொண்டவள். பிறருக்கு உதவும் பண்பும், இவளது தெளிவும் துணிச்சலும் ரசிக்கும்படி இருந்தது😊😊😊. தந்தையின் மீதான இவளது பாசம் அவளது தந்தைக்கு வரமே அதே சமயம் தன் அன்னையின் மீதான முக்கியத்துவம் குறைந்து இரண்டாம் பட்சமானது கவலையை கொடுத்தது, ஆனால் தாயின் நிலையையும் அவர்களது போராட்டமான மன வலியையும் அறிந்த பின்னர் அவரைப் புரிந்து சரணடைந்த செயல் மகிழ்ச்சியை கொடுத்தது.
அலர்விழியால் நியாயத்திற்காக நியாயமான முறையில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைவரையும் சுழன்று அடித்தது அதில் கணவன், தந்தை, அத்தை என யாரும் விதிவிலக்கு இல்லை இந்தப் பண்பு பாராட்டுக்குரியது👏👏👏👏👏ஆனால் இவளது முன்கோபம்( முந்திரிக்கொட்டைத்தனம்🙄🙄🙄) சற்று அதிருப்தியையும் ஏற்படுத்தியது😒😒😒😒😒.

அகனலர்: 💞💞💞💞💞💞💞

கடவுள் முடி போட்ட பந்தத்தில் பல இடர்பாடுகள் இருந்தாலும் காதலின் சக்தியே இருவரையும் வாழ்க்கை பந்தத்தில் ஒன்றிணைத்தது🧡❤️🧡❤️🧡.

எழிலின் ஆழமான பரிசுத்தமான காதல் அலர்விழிக்கு விலைமதிப்பில்லாதது💕💕💕💕💕. அலர்விழிக்கு கௌரவத்தை கொடுக்கும் வகையில் அவளுக்கென வீடு முதல் அத்தியாவசிய தேவைகளையும் அவளது சௌகரியத்தையும் பார்த்து பார்த்து செய்த ஒவ்வொரு செயலும் மனதை நெகிழ செய்தது.


அலரில் மனபெட்டகத்தின் நுழைந்து வாசம் செய்த எழிலனை தவிர்க்க முடியாமலும், தந்தையின் கௌரவத்திற்காக போலியாக அவனிடமும் தன் மனதை மறைத்து தன்னை நிலைப்படுத்த முடியாமலும் இவள் பட்டப்பாடு கவலையை ஏற்படுத்தியது.
விதியின் மதியோ இவளையும் மீறி அவள் ஆழ் மனம் விரும்பிய மணாளனை கரம் சேர்க்க வைத்தது💞💞💞💞💞💞.

இருவரும் காலம் முழுவதும் இதே காதலுடன், புரிந்துணர்வுடன் தங்கம் அவிரனுடன் வாழ வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐.

அயவந்திநாதன் -வளர்மதி:
அயவந்தி நாதன் நல்ல மனிதர் தான் அதில் சந்தேகம் இல்லை.

அன்பான தந்தை தான் தன் செல்ல மகளுக்கு ஆனால் மகன் கதிருக்கு இவர் நியாயம் செய்தாரா? என்றால் நிச்சயம் இல்லை😒😒😒😒.

தன் மனைவி வளர்மதியை இவர் நடத்திய விதம் மிகவும் அதிருப்தியை கொடுத்தது, அதே சமயம் அவரின் மூலம்தான் வளர்மதியின் உறவுகள் கரை சேர்ந்தனர் என்பதையும் நிச்சயமா மறுக்க இயலாது. என்ன செய்ய சிலரது சுபாவமும் வரட்டு பிடிவாதமும் ஒரு எல்லையை வகுத்து தினிக்கத்தான் செய்யும் இதனை தான் நாதனிடமும் உணர முடிந்தது....
மகள் மீது பாசம் இருக்க வேண்டியதுதான் அதற்காக கண்மூடித்தனமான பாசத்திற்காக மருமகனை இவர் எடுத்தெறிந்து நடத்தும் விதம் மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியது😐😐😐😐😐😐😐.
தன் தவறை உணர்ந்து சில மாற்றங்கள் இவரிடம் காண முடிந்தாலும் முழுதாக மாறுவாரா? வருங்காலத்தில் என்பது காலத்தின் கையில்🤷🤷🤷🤷.

வளர்மதி🥰🥰🥰🥰🥰
இவரது குணத்தையும், பொறுமையையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை🥰🥰🥰🥰🥰🥰. கணவர் பேச்சும் செயல்களும் மனதை காயப்படுத்தினாலும் பொறுமையில் பூமா தேவியாய் அமைதி காத்து குடும்பத்தை திறம்பட வழிநடத்தினார்.
தன் மகள் மீதான அவதூறு பேச்சை பொறுக்காமல் இவர் வெடித்து சிதறிய தருணம் கலங்கச் செய்தது. குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக் கொடுத்தும், தட்டிக்கொடுத்தும்
சென்ற இவரது செயல்கள் அளப்பரியது🙏🙏🙏🙏🙏.

தாயம்மாள்: யாரையும் பாரபட்சம் பார்க்காமல் தன் மக்களை இவர் நடத்திய விதம் அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏.

நீலவேணி: உண்மையான தாய்மையின் சொரூபம்🙏🙏🙏🙏 தன் மக்களையும் உடன் பிறந்தோர் மக்களையும் போற்றிப் பாதுகாத்து அன்பு செய்து மிகவும் மனதை நெகிழ செய்தார். வளர்மதியின் மீதான இவரது பாசமும் அவருக்கு பக்க பலமாக துணை இருந்து கடின சூழலை கடப்பதற்கு இவர் எடுத்த முயற்சியும் நன்றிக்கு உரியது 🥰🥰🥰🥰🥰🥰.

வெற்றி -தாமரை செல்வி:💞💞
வெற்றி எழிலனுக்கு நல்ல நண்பன்😊😊.
அலர்விழிக்கு நல்ல சகோதரன்😊😊😊😊😊.
தாமரைச்செல்விக்கு ஏற்ற மணவாளன் வெற்றி 💕💕💕💕💕💕.

தாமரைச்செல்வி அலர்வழிக்கு நல்ல தோழி😍😍😍😍😍.

வெற்றி- தாமரை செல்வியின் காதல் கண்ணியமானது❤️❤️❤️❤️.

சுடர்க்கொடி -பாலன்🥰🥰🥰🥰🥰.

நந்தன்: உண்மையில் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு தான் கொடுக்கணும் பேய் கூட தைரியமா இத்தனை வருஷம் குடும்பம் பண்ணிட்டீங்க😟😟😟ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. போராட்டமான வாழ்வில் மகனையும் மகளையும் நினைத்து இத்தனை ஆண்டுகள் பொறுமையாக இருந்ததே மிகப்பெரிய விஷயம்🙏🙏🙏🙏🙏🙏🙏 இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும் இவர்.

சரஸ்வதி👹👹👹👹👹👹:
பெயரில் இருக்கும் சரஸ்வதி நாவிலும் எண்ணத்திலும் இல்லாத கொடூர அரக்க ஜென்மமாக தான் எனக்கு தோன்றினார். பெற்ற மகனின் சந்தோஷத்தை பறிக்க மதிகெட்டு திரிந்த இவரைப் பற்றி விமர்சிக்க கூட எனக்கு பிடிக்கவில்லை, நிச்சயம் இவர் நரகத்தில் தான் இருப்பார்.

பெரிய குடும்ப பின்னணியில் ஒவ்வொருவரின் நிலையையும், உறவு முறைகளையும், கதையின் நாயகன் நாயகி மன உணர்வுகளையும் மிக அழகாக வார்த்தையில் கோர்த்து வாசகர் கண்களுக்கு வண்ணக்கோலமாய்😍😍😍😍😍 அமைந்திருந்தது கதைக்களம்.☺️☺️☺️☺️☺️☺️☺️☺️.
 
Last edited:
அட்ராசக்கை 🥳🥳🥳🥳🥳🥳🥳
அட்ராசக்கை 💃💃💃💃💃💃💃
அட்ராசக்கை 😘😘😘😘😘😘😘😘😘
மச்சி கலக்கல் ரிவியூடா 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

ஒவ்வொரு கேரக்டரையும் அக்குவேற ஆணி வேற பிரிச்சு எழுதியிருக்க... தலைவனுக்கு போட்டிருக்க பாட்டை எத்தனை முறை கேட்டேன்னு தெரியல ரீபீட் மோட்ல போயிட்டு இருக்கு செம சாங் 🥳🥳

இனிவரும் ஜென்மம் மொத்தம் நீயும் தான் உறவா வரணும் மறுபடி உனக்கென பிறந்திடும் வரம் நான் பெறனும் அப்படியே தலைவருக்காக எழுதின மாதிரி இருக்கு 🥰🥰🥰🥰🥰

என்னடா இது போற போக்குல கோளாறை தெளிவுன்னு சொல்லிட்ட😜🤪🤪😜 நாதன் கிட்ட இருந்தவரை லூசா இருந்தவ தலைவன் கிட்ட வந்த அப்புறம் தான் தெளிவானா 😏😏 அலருக்கு போட்டிருக்க வரியும் பொருத்தமா இருக்கு 🤩🤩🤩

சரியா சொன்ன நர்மூ சரசு நரகத்துல இருக்க வேண்டிய ஆளு😡 கவர்பிக் அழகா இருக்குடா 😍😍😍😍😍 வாழ்த்துக்கள் மச்சி 💐💐💐💐
 
Last edited:
Wow 😲👏🏻👏🏻👏🏻👏🏻
Superb song and cover pic 💕💕💕💕💕🤩🤩
ஓவ்வொரு மனிதர்களின் குணமும் விவரித்து அழகா சொல்லிட்டீங்க.... 🤩🤩🤩
@ருத்ரபிரார்த்தனா....dear உங்கள விட நான் அதிகமாக சந்தோஷம் அடைகிறேன் இவர்களின் விமர்சனத்தை பார்த்து..... 🤩🤩🤩
Superb மா...... 💐💐💐💐
 
Top