வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)
"ஆ... ஆஅ... ஆஅ...
ஆஆ... ஆஅ... ஆஅ... ஆஅ...
ஆஅ... ஆஅ...
நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே...
இந்தக் கண்கள் மட்டும்
உன்னைக் காணும்...
தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே...
சின்ன கைகள் மட்டும்
உன்னைத் தீண்டும்...
காற்று வீசும் வெயில்
காயும் காயும்
அதில் மாற்றும் ஏதும் இல்லையே...
ஆஆ... வானும் மண்ணும்
நம்மை வாழச் சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்..."
என்று கண்களை மூடி ஆத்மார்த்தமாக மஞ்சள் மற்றும் சிகப்பு நிறைந்த பட்டுப் பாவாடையில் பாடிய அந்த பனிரெண்டு வயது சிறுமியின் மழலை நிரம்பிய காந்தக் குரல் அந்த அரங்கில் நிரம்பியிருந்த நடுவர்களை மட்டுமல்லாமல் பார்வையாளர்களாகவும் பிற போட்டியாளர்களின் பெற்றோர்களாகவும் இருந்தவர்களைக் கூட எழுந்து நின்று கைத்தட்டுமளவுக்குச் செய்திருந்தது என்றால் அது துளியும் மிகையல்ல. ரியாலிட்டி ஷோக்களின் மீது தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்திய அந்தப் பிரபலமான சேனலின் மழலையர் சிறந்த பாடகர் நிகழ்ச்சியின் ப்ரீ பினாலே சுற்றுக்கான ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அன்றைய ஷூட்டிங் முடிந்ததும் பெற்றோர் தாத்தா பாட்டி புடைசூழ தங்கள் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் அன்றைய விழா நாயகி. ஏனோ அந்த காரில் இருந்த எல்லோருக்கும் அடுத்த வாரம் நடைபெற போகும் இறுதிப் போட்டியின் முடிவைப் பற்றிய எண்ணமே மேலோங்கியது. ஆனால் அந்தக் கவலை துளியும் இல்லாமல் வழக்கம் போல் தன் தந்தையின் மடியில் அமர்ந்து தன்னைச் சுற்றி வளைந்திருக்கும் தந்தையின் கரத்திலிருக்கும் பிரேஸ் லெட்டை சுரண்டிக்கொண்டிருந்தாள் அஞ்சனா.
என்ன தான் மகளின் திறமை மீது அலாதி நம்பிக்கை இருந்தாலும் எதிர்பாராமல் அவளுக்கு வெற்றிக்கனி தட்டிப் போய் விடுமானால் அவளது பிஞ்சு மனதில் சலனம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஒரு தந்தையாக முரளிதரனுக்கு இருக்கவே செய்தது.
"பட்டு... ஏ பட்டுமா அப்பா உன்கிட்ட ஒன்னு கேக்கவா?" என்றதும் அவர் மடிமீது இருந்தவள் தன்னுடைய தலையை மட்டும் மேலே நிமிர்த்தி புருவத்தை உயர்த்தி என்னவென்று வினவினாள்.
"நீங்க எத்தனை பேருடா அம்மு ஃபைனல்ஸ்க்கு செலக்ட் ஆகியிருக்கிங்க?"
"ஐஞ்சு பேரு ப்பா. நீ தான் பார்த்தயில்ல?"
"ஆனா ஒருத்தர் தானடா அம்மு வின் பண்ண முடியும். வேணுனா ரெண்டு பேர் ரன்னர் அப் ஆகலாம். எப்படிப் பார்த்தாலும் ரெண்டு பேர்..." என்றவர் தோல்வியை எவ்வாறு தன்னுடைய மகளுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று யோசித்தார். படிப்பில் அஞ்சனா படு ஜூட்டி. விளையாட்டு மீது பெரிய ஆர்வமிருந்ததில்லை. ஏழு வயதில் திடீரென்று சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வந்து நின்ற மகளை ஒரு பிரபல சங்கீத ஆசானிடம் சேர்த்து விட்டார். போன வருட ஆனுவல் டேவில் பாடிய அஞ்சனாவின் குரல் வளத்தைக் கண்ட முரளியின் நண்பன் தான் அந்தப் பாடகர் போட்டியின் ஆடிசனுக்கு கூட்டிச்செல்ல சொன்னார். இன்று இவ்வளவு புகழ் வெளிச்சத்திற்கு ஆளாகக்கூடும் என்று முன்னமே தெரிந்திருந்தால் நிச்சயம் முரளிதரன் ஒன்றுக்கு இரு முறை யோசித்து இருப்பார் தான்.மகளின் முகம் தொலைக்காட்சியில் தோன்றியது முதல் சொந்த பந்தம் அக்கம் பக்கம் என்று எல்லோரும் இவளிடம் பெரியதாக எதிர்பார்க்க தொடக்கி விட்டார்கள். இந்த எதிர்பார்ப்பு ஒருகாலும் தன் மகளின் பிஞ்சு மனதில் சுமையாகி ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாது என்ற பயமே அவர் மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதில் வீட்டில் இருப்பவர்களும் சும்மா இல்லாமல் தங்கள் நட்பு அலுவலகம் என்று எல்லோரிடமும் பெருமைப்பட்டு தம்பட்டம் அடித்து விட்டார்களே என்ற கவலையும் அவரை வாட்டியது.
"ஜெயிக்கிறோம் தோக்குறோம் இட்ஸ் ஆல் இன் தி கேம்னு நீ தானப்பா சொல்லியிருக்க? அண்ட் நான் வின் பண்ணாட்டிக் கூட நிச்சயம் ஒரு டிசர்விங் கேண்டிடேட் தானப்பா வின் பண்ணுவாங்க. எனக்கு ஒன்னு இல்லப்பா..." என்றவள் மீண்டும் தன் தந்தையின் மீதே சாய்ந்து வாகாக உறங்கினாள்.
இந்தக் கணம் அஞ்சனா போட்டியில் வெற்றிப்பெற்றதைக் காட்டிலும் அதிகம் மகிழ்ந்தார் முரளிதரன்.
பனிரெண்டு வயதில் டேக் இட் ஈசியாக எடுத்துக்கொள்ள முடிந்த அஞ்சனாவால் இருபத்தி ஐந்து வயதிலும் டேக் இட் ஈசியாக எடுத்துக்கொள்ள முடியுமா? காலம் தான் அதற்கு பதில் சொல்லணும்...
"ஆ... ஆஅ... ஆஅ...
ஆஆ... ஆஅ... ஆஅ... ஆஅ...
ஆஅ... ஆஅ...
நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே...
இந்தக் கண்கள் மட்டும்
உன்னைக் காணும்...
தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே...
சின்ன கைகள் மட்டும்
உன்னைத் தீண்டும்...
காற்று வீசும் வெயில்
காயும் காயும்
அதில் மாற்றும் ஏதும் இல்லையே...
ஆஆ... வானும் மண்ணும்
நம்மை வாழச் சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்..."
என்று கண்களை மூடி ஆத்மார்த்தமாக மஞ்சள் மற்றும் சிகப்பு நிறைந்த பட்டுப் பாவாடையில் பாடிய அந்த பனிரெண்டு வயது சிறுமியின் மழலை நிரம்பிய காந்தக் குரல் அந்த அரங்கில் நிரம்பியிருந்த நடுவர்களை மட்டுமல்லாமல் பார்வையாளர்களாகவும் பிற போட்டியாளர்களின் பெற்றோர்களாகவும் இருந்தவர்களைக் கூட எழுந்து நின்று கைத்தட்டுமளவுக்குச் செய்திருந்தது என்றால் அது துளியும் மிகையல்ல. ரியாலிட்டி ஷோக்களின் மீது தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்திய அந்தப் பிரபலமான சேனலின் மழலையர் சிறந்த பாடகர் நிகழ்ச்சியின் ப்ரீ பினாலே சுற்றுக்கான ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அன்றைய ஷூட்டிங் முடிந்ததும் பெற்றோர் தாத்தா பாட்டி புடைசூழ தங்கள் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் அன்றைய விழா நாயகி. ஏனோ அந்த காரில் இருந்த எல்லோருக்கும் அடுத்த வாரம் நடைபெற போகும் இறுதிப் போட்டியின் முடிவைப் பற்றிய எண்ணமே மேலோங்கியது. ஆனால் அந்தக் கவலை துளியும் இல்லாமல் வழக்கம் போல் தன் தந்தையின் மடியில் அமர்ந்து தன்னைச் சுற்றி வளைந்திருக்கும் தந்தையின் கரத்திலிருக்கும் பிரேஸ் லெட்டை சுரண்டிக்கொண்டிருந்தாள் அஞ்சனா.
என்ன தான் மகளின் திறமை மீது அலாதி நம்பிக்கை இருந்தாலும் எதிர்பாராமல் அவளுக்கு வெற்றிக்கனி தட்டிப் போய் விடுமானால் அவளது பிஞ்சு மனதில் சலனம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஒரு தந்தையாக முரளிதரனுக்கு இருக்கவே செய்தது.
"பட்டு... ஏ பட்டுமா அப்பா உன்கிட்ட ஒன்னு கேக்கவா?" என்றதும் அவர் மடிமீது இருந்தவள் தன்னுடைய தலையை மட்டும் மேலே நிமிர்த்தி புருவத்தை உயர்த்தி என்னவென்று வினவினாள்.
"நீங்க எத்தனை பேருடா அம்மு ஃபைனல்ஸ்க்கு செலக்ட் ஆகியிருக்கிங்க?"
"ஐஞ்சு பேரு ப்பா. நீ தான் பார்த்தயில்ல?"
"ஆனா ஒருத்தர் தானடா அம்மு வின் பண்ண முடியும். வேணுனா ரெண்டு பேர் ரன்னர் அப் ஆகலாம். எப்படிப் பார்த்தாலும் ரெண்டு பேர்..." என்றவர் தோல்வியை எவ்வாறு தன்னுடைய மகளுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று யோசித்தார். படிப்பில் அஞ்சனா படு ஜூட்டி. விளையாட்டு மீது பெரிய ஆர்வமிருந்ததில்லை. ஏழு வயதில் திடீரென்று சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வந்து நின்ற மகளை ஒரு பிரபல சங்கீத ஆசானிடம் சேர்த்து விட்டார். போன வருட ஆனுவல் டேவில் பாடிய அஞ்சனாவின் குரல் வளத்தைக் கண்ட முரளியின் நண்பன் தான் அந்தப் பாடகர் போட்டியின் ஆடிசனுக்கு கூட்டிச்செல்ல சொன்னார். இன்று இவ்வளவு புகழ் வெளிச்சத்திற்கு ஆளாகக்கூடும் என்று முன்னமே தெரிந்திருந்தால் நிச்சயம் முரளிதரன் ஒன்றுக்கு இரு முறை யோசித்து இருப்பார் தான்.மகளின் முகம் தொலைக்காட்சியில் தோன்றியது முதல் சொந்த பந்தம் அக்கம் பக்கம் என்று எல்லோரும் இவளிடம் பெரியதாக எதிர்பார்க்க தொடக்கி விட்டார்கள். இந்த எதிர்பார்ப்பு ஒருகாலும் தன் மகளின் பிஞ்சு மனதில் சுமையாகி ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாது என்ற பயமே அவர் மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதில் வீட்டில் இருப்பவர்களும் சும்மா இல்லாமல் தங்கள் நட்பு அலுவலகம் என்று எல்லோரிடமும் பெருமைப்பட்டு தம்பட்டம் அடித்து விட்டார்களே என்ற கவலையும் அவரை வாட்டியது.
"ஜெயிக்கிறோம் தோக்குறோம் இட்ஸ் ஆல் இன் தி கேம்னு நீ தானப்பா சொல்லியிருக்க? அண்ட் நான் வின் பண்ணாட்டிக் கூட நிச்சயம் ஒரு டிசர்விங் கேண்டிடேட் தானப்பா வின் பண்ணுவாங்க. எனக்கு ஒன்னு இல்லப்பா..." என்றவள் மீண்டும் தன் தந்தையின் மீதே சாய்ந்து வாகாக உறங்கினாள்.
இந்தக் கணம் அஞ்சனா போட்டியில் வெற்றிப்பெற்றதைக் காட்டிலும் அதிகம் மகிழ்ந்தார் முரளிதரன்.
பனிரெண்டு வயதில் டேக் இட் ஈசியாக எடுத்துக்கொள்ள முடிந்த அஞ்சனாவால் இருபத்தி ஐந்து வயதிலும் டேக் இட் ஈசியாக எடுத்துக்கொள்ள முடியுமா? காலம் தான் அதற்கு பதில் சொல்லணும்...