ஹாய் ப்பா. இரண்டு பேருக்கும் பாதிப்பு சூழ்நிலை + சொந்தபந்த சூழ்ச்சியால ஏற்பட்ட அவமரியாதைகள்+ சோசியல் மீடியாவுல ஏற்பட்ட அவமரியாதைகள் ஏற்பட்டுச்சு.என்னடா இப்படி வரிஞ்சு கட்டிட்டு வராங்கள்ன்னு நீங்க நினைக்க கூடாது.
இப்படி ஒரு கற்பனை செஞ்சு பாருங்க.
அவ கல்யாணம் ஒரு 20 நாள் தள்ளி நடந்திருந்தால் அவளுக்கு 18 வயசு நிறைந்திருக்கும். சட்டப்படி அவ திருமணம் தவறான நிகழ்வாக கருத்தப்பட மாட்டாது. சரிதானே.
சில நாட்கள் இடைவெளி சட்டத்தை வேணும்னா சரிக்கட்டும், ஆனால் அவ உடம்பு அந்த முதிர்ச்சியை அடைந்திடுமா? அப்பவும் அவளுக்கு திருமண தாம்பத்திய உறவு வலியை ஏற்படுத்தி இருக்க சாத்தியம் இருக்கு தானே. இல்ல அவ்வளவு நுணுக்கமா ஒருத்தரால உருவத்தை வைத்து ஒருத்தரோட வயதை கணக்கிட்டு விட முடியுமா. பெரும்பான்மை மக்கள் வயதும் தோற்றமும் ஒத்து இருந்தாலும், சில பேர் விதி விலக்கா இருக்ககூடும் தானே. So இவ நிலைமை 20 நாள் முன்னாடியோ பின்னாடியோ அதே தான். அவ அக்கா மற்றும் பெற்றோரின் சுயநலத்துக்கு அவ பலி.
அதேபோல் அவனும் அவங்கப்பாவோட ஜாதி வெறிக்கு பலி ஆனான்.
அதிலிருந்து அவங்கப்பா அவனை மீட்ட உடனே தப்பிச்சு போய்ட்டான். இவ அப்பா அம்மாவெல்லாம் என்ன ஆனாங்க? இன்னமும் ஏன் தன் மகளுக்கு நல்லது செய்ய நினைக்கலை?
அவனுக்கு இப்பவும் குற்ற உணர்ச்சி தான், காதல் எல்லாம் இல்லை இருக்கணும்னு அவசியமும் இல்லை. அவ அவனுக்கு செஞ்சது துரோகம். அதுக்கு அவன் அவகிட்ட கோவப்படாமல் இருந்தாலே பெருசு. அவன் நீங்க சொல்லற உச்ச பட்ச நேர்மையோடும் நியாய மனசோடும் செயல்பட்டு இருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் விட்டதால அவன் எந்த விதத்திலும் தவறானவன் ஆகமாட்டான். அவனுக்கு குழந்தை இருப்பதே தெரியாமல் வைத்திருப்பது தப்பு தான்.
இவ தான் அட்லீட் 18 வயசு முடிஞ்சு மன முதிர்ச்சி வந்த பின்னராவது அவனை தேடி இருக்கணும். இல்லை தன் வாழ்வுக்காக தங்கையை அடகு வெச்சுட்டு போனாலே இவளோட அக்கா, அவளாவது அதை பற்றி இவளிடம் பேசி அவங்க இருவரோட திருமண பந்தத்திற்கு அர்த்தம் இருக்கா இல்லையான்னு ஒரு தீர்வு வர வெச்சுருக்கணும். இவங்க தரப்புல இவங்க யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க. சும்மா அவனை வில்லனாட்ட பார்ப்பாங்க. அவன் மட்டும் பொண்டாட்டின்னு பற்றோட இருந்துருக்கணுமா. என்னங்க நியாயம்?
இதுல இந்த சின்னப்பொண்ணோட பாசத்தால் பயத்தால் விபரீதம் தெரியாம செஞ்ச செயலால் ஏற்பட்ட அவசரகண்ணாலம் வூட்டு ஆட்களோட மிரட்டல் எல்லாம் சேந்து அவளை உண்மை சொல்லவுடாம பண்ணிடுச்சுப்பா.
அதுவும் வளத்த பெத்தவிகளே அப்படி இருக்கும்போது முன்னபின்ன பழக்கம் இல்லாதவன்கிட்ட எப்படி சொல்லுவா? சாதிவெறி பதவி பேராசை ஈகோ எல்லாம் சேந்து இந்த நிலைமையை உருவாக்கிடுச்சு.