யப்பா ஈரோ பொண்டாட்டியாவது அடையாளம் தெரிஞ்சுகிட்டியே.
உன்ற நிலைமையை நினைச்சா பாவமாதான் இருக்கு.
உனக்கு உன்ற குடும்பத்தால மீடியாவால பிரச்சினை ஆச்சுதான்.
ஆனா அதே பாதிப்பு தாலிகட்டி குடும்பம் நடத்துனியே அந்த பொண்ணுக்கும் தானே. அதைய சிந்திக்காம நாடுவுட்டு நாடு போன உனக்கு பெத்த புள்ள யாருன்னே தெரியாம இருக்குற தண்டனை கரக்கிட்டு தான்.
அதெப்படி சரி? தான் யாரு என்னன்னு புருஷன்கிட்ட தனிமையிலாவது சொன்னாளா அவ. பெயர் கூட உண்மை தெரியாமல் அடுத்தவன் பொண்டாட்டி பெயரை சொல்லி தன் மனைவியை அழைக்கும் நிலைமை அவனுக்கு. இவளுக்கு அப்ப அக்கா மேல இருந்த அக்கறை தன் வாழ்க்கையை பலி கொடுக்க துணிஞ்சா சரி, அவன் வாழ்க்கையையும் சேர்த்து தானே அடகு வெச்சா. நல்லா யோசிங்க இவளுக்கு எல்லாம் தெரியும், ஆனால் அவனுக்கு எதுவும் தெரியாது. அந்த உண்மை இவளுக்கு தெரியும். சொல்லப்போனால் இவ அவன்கிட்ட நம்பிக்கை வெச்சு சொல்லி ஏதாவது மாற்று வழி இருக்கான்னு கேட்ககூட செய்யலை. அவன் எதை நினைத்து இப்பவும் வேதனை படறான் யோசிங்க.
பாவம் ஹர்ஷா. ஆனால் ஜோதி அவ அக்காவுக்காக தெரிஞ்சே வாங்கிகிட்ட வேதனை இது. Atleast இப்ப அவளுக்கு குழந்தையாவது பற்றுகோலா இருக்கு. அவனுக்கு குற்றவுணர்ச்சி தவிர எதுவுமே மிஞ்சலை.
தெரிஞ்சு கல்யாணம் செய்துகிட்ட ஜோதிக்கு எந்த தண்டனையும் கிடையாது. தெரியாமல் மணந்தவனுக்கு தான் சிறை தண்டனை.
இப்ப சட்டப்படி அவங்க திருமணம் செல்லாது. அப்ப எந்த உரிமையில் அவன் அவளைத் தேடி வருவான்?
பிரச்சனையில் இருந்து வெளிவந்த உடனே அவன் அதற்கான மூல காரணம் என்னன்னு தெரிஞ்சுகிட்டான். So அக்காவுக்காக தான் அந்த பொண்ணு பொறுத்து அமைதியா எல்லாத்துக்கும் உடன்பட்டு இருக்கா என்று தானே எடுத்துக்கணும்.அதுக்கு அப்புறமும் எப்படிங்க அவளை தேடி வருவான்? மனிதாபிமானம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது தானே. இவ அபலை, அவன் குற்றவாளியா?
அவளுக்கு உடல் கஷ்டம். அவனுக்கு ஆறாத மனக்காயம். ஏன் இவ சுபாஷ் மூலமாக அவனை பற்றி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலை. கல்யாணம் செல்லாது தான். ஆனால் குழந்தை மேல அவனுக்கு உரிமை இருக்கே. அவ அதை மறைச்சது எவ்வளவு பெரிய தப்பு. மற்றவங்க கண்ணுக்கு அவன் எவ்வளவு மோசமானவனா தெரியறான். ஆனால் அவன் அப்படிப்பட்டவன் இல்லை. அதுனால தானே அதை தன் குழந்தையாவே ஊருக்கு காட்ட நினைக்கிறா ஜோதி.
அதுக்கும் மேல இவளோட மனஉளைச்சல் விளைவித்த கவனக்குறைவால் தானே கருச்சிதைவு செய்ய முடியலை.
சொந்த அக்காவுக்காக இவ பார்த்தா, அவளோட அக்கா minor பெண்ணை கூட்டிப்போனால் தன் காதலனுக்கு ஆபத்துன்னு நினைச்சா , ஆக யாருமே அவனுக்கு நேர்ந்த இழப்பை பற்றி யோசிக்கலை.
இப்ப கூட கமலேஷ்க்கு வேற வாழ்க்கை துணை அமையப்போய், ஹர்ஷா இன்னமும் ரொம்ப யோக்கியனா இருக்கறவன் என்றும் தெரியப்போய் தானே சுபாஷ் இந்த ஜெர்மனி விஜயத்தை செயல் படுத்தி இருக்கான். இல்லைனா அவன் நிலைமை அதே தானே.
பெற்றோர், கல்யாணம் முடிவு செய்யப்பட்ட பொண்ணு, கல்யாணம் செஞ்சுகிட்ட பொண்ணு இப்படி எல்லாராலையும் வஞ்சிக்கப்பட்டவன் அவன் தான். அவன் மட்டும் தான்.