காதல் 15:
அன்று மாலை ராஜ்நந்தன் வீடு திரும்பிய போது ஆறரை மணி. வீட்டுக்குள் நுழைந்தவனின் கண்கள் வழக்கம்போலவே மனைவியைத் தேடின.
“மது…மதும்ம்மா…” என அழைக்க அவளை எங்கும் காணவில்லை.
சோர்வாக இருந்தவனுக்கு மனைவி வீட்டில் இல்லாது இருக்க, அது அதீத சோர்வைத் தர, அப்படியே அயர்ச்சியுடன் சோஃபாவில் சாய்ந்தான். அவளின் எண்ணுக்கு முயற்சிக்க அவள் எடுக்கவே இல்லை.
அமைதியாய் வாசலை நோக்கிய வண்ணம் அமர்ந்திருந்தான். ஆனால் அமைதி எல்லாம் எவ்வளவு நேரத்திற்கு…??
மதுரவசனி மாமியாரின் அழைப்புக்கு இணங்க, அவரைப் பார்க்க அவர்கள் இல்லத்துக்குச் சென்று விட்டு, நேரம் போவதே தெரியாமல் பேச்சில் இருந்து விட்டு அரக்கப் பறக்க ஓடி வந்தாள்.
அவள் கால் டாக்சி பிடித்து, இருந்த வாகன நெரிசலில் வீடு வர தாமதம் ஆகிற்று. ராஜா எப்போதும் வீடு திரும்ப ஏழுக்கு மேல் ஆகும். மதியம் வந்து அவளோடு சாப்பிட்டு விட்டுச் செல்பவன் இரவில் தாமதமாக வருவதால், இன்று அவன் சாப்பிட்டு விட்டுச் சென்றப் பின்னே அவள் மாமியார் வீட்டிற்குச் சென்றாள்.
ராஜாவிடம் சொல்லாமல் சென்றதால் அவன் வருவதற்குள் வீடு திரும்ப எண்ண, பார்த்தால் அவளது கெட்ட நேரம் அவன் அவளுக்கு முன்பே வந்து சட்டமாக அமர்ந்திருக்கக் கண்டவள்,
“என்னங்க… சீக்கிரம் வந்துட்டீங்களா…? ஒரு நிமிஷம்….நான் வரேன்..” என அறைக்குள் நுழையப் போனவளைத் தடுத்தவன்,
“உனக்கு நான் என்ன சொல்லியிருக்கேன்…. நான் வரும்போது வீட்டில இருக்கனும்னு சொல்லியிருக்கேன் இல்லையா..? என்றான் அதட்டலாக.
இதே அவன் கொஞ்சம் அமைதியாகக் கேட்டிருந்தால் மதுவும் அமைதியாகப் பதில் தந்திருப்பாளோ என்னவோ அவன் அப்படி அதட்டி கேட்கவும் அவளுக்கும் கோபம் வர,
“அதுக்காக இந்த நாலு சுவத்தைப் பார்த்துட்டேவா இருக்க முடியும்…?” என்றாள் அவனுக்குக் குறையாதக் கோபத்தோடு.
“நாலு சுவத்தைப் பார்க்கச் சொல்லல.. ஆனா நான் வர நேரத்துல நீ வீட்டுல இருக்கனும் இல்லையா…? அரை மணி நேரமா நீ இல்லாம டென்ஷன்ல இருக்கேன் நான்…. போன் செஞ்சா எடுக்க மாட்ட மது நீ..” என்றான் கடுப்புடன்.
“கார்ல சத்தம் கேட்கல.. இந்த ஊர் ட்ராஃபிக்ல நான் மாட்டிக்கிட்டேன்… அதுக்கு எதுக்கு வந்தவுடனே நிக்க வைச்சு கேள்வி கேட்கிறீங்க…?”
“அப்படி எங்க போன நீ..?”
“அத்த வீட்டுக்குப் போனேன்…”
“அங்க போகாதன்னு சொன்னா நீ கேட்க மாட்ட இல்ல.. எனக்கு வேண்டாம்னு நான் நினைக்கறவங்க உனக்கு வேணுமா… போனது தான் போனேன்… சொல்ல மாட்டியா நீ…. ஒரே தலைவலி…. நீ வேற வீட்டில இல்ல…” என மீண்டும் எரிந்து விழ
“என்ன சும்மா டென்ஷன் ஆகுறீங்க… எனக்கு எல்லாரும் வேணும்.. சும்மா வீட்டுக்குள் அடைஞ்சு கிடக்க முடியாது.. கல்யாணத்துக்கு முன்னாடி எங்க வீட்ல தான் இப்படி ரூல்ஸ் போட்டு டார்ச்சர்னா இப்ப நீங்களும் என்னை அடிமை மாதிரி நடத்துறீங்க…” எனக் கோபத்தில் கத்தினாள் மதுரவசனி.
ஒருவர் கோபத்தில் தகிக்கும் சமயம் அடுத்தவர் தணிந்து செல்ல வேண்டும் இல்லாவிடில் கோபம் தணியாமல் தகித்து அழிவையே தரும். இங்கும் ஒருவரும் விட்டுக்கொடுக்காமல் நீயா நானா என்று சண்டையிட துவங்கினர்.
அதீத அன்பின் காரணமாய் அவளைக் காணாத தவிப்பில் ஏக்கத்தில் அவன் பேசினான். ஆனால் அவளுக்கோ அது அடிமைத்தனமாய்த் தோன்றியது.
‘அடிமை’ என்று வார்த்தை ராஜாவுக்கு ஆத்திரத்தைக் கிளப்ப,
“என்னடி அடிமை… எல்லாம் உன்னிஷ்டத்துக்குத் தானே இருக்கு… என்ன அடிமைன்னு கேட்கிறேன்.. உன்னை ராணி மாதிரி தானே நான் பார்த்துக்கிறேன்..” என்றான் உணர்ச்சி மிகுதியில்.
ஆனால் அது புரிய வேண்டியவளுக்குப் புரியவில்லையே..!
சிறுவயதிலிருந்துப் பெண்பிள்ளை என்பதால் வீட்டில் ஆண்மக்களுக்குக் கிடைத்த சுதந்திரம் கிடைக்காமல், தன் ஆசைகளைப் பூட்டியே வைத்துப் பழகி, அது கிடைக்கப் போராடி வாழ்ந்தவளுக்குத் திருமணத்துக்குப் பின்னும் கணவனின் அடக்குமுறைப் பிடிக்காமல் போனது. அவன் அவள் மீது காட்டும் அதிகமான உரிமையுணர்வு, கட்டுப்பாட்டை அவள் வெறுத்தாள்.
‘அடக்குமுறையின் போது சுதந்திரமாய் இரு’ என்ற கூற்றிற்கேற்ப, அவள் வெடிக்க, அது ராஜாவின் காதல் உணர்வுகளை அடிவாங்கச் செய்தது. பொக்கிஷமாகப் போற்றிப் பாதுக்காக்கும் மனைவி அவன் காட்டும் அன்பை அடிமைத்தனம் என்று சொல்வதை அவனால் தாங்க முடியவில்லை.
மதுரவசனிக்கோ அவன் இருக்கும் நேரம் உணராத தனிமை, அவன் இல்லா நேரங்களில் எல்லா வேலைகளையும் செய்துக் கொண்டு சுயத்தை இழந்து தனியாகத் தனிமையில் இருப்பதை மனச்சோர்வைத் தர, அவளும் வெடித்தாள்.
அவள் வீட்டு ஆண்கள் எல்லாரும் இரவில் தான் வீடு திரும்புவர். அப்போது அவர்களிடம் பேச நினைத்தால் கூட சிறிது நேரமே பேச அனுமதிப்பான் ராஜா. போன வாரம் அவள் தங்கை ப்ரியாவுக்குப் பிறந்த நாள் பரிசு வாங்க அவள் கடைக்குச் சென்று தாமதமாய் வீடு திரும்ப, அதற்கும் அவன் சண்டையிட, இவள் தான் சமாதானமாகப் போக வேண்டி இருந்தது.
இப்படி அவள் பிறந்த வீட்டுக்குப் பேசவும், வெளியே செல்லவும் என ஒவ்வொன்றிருக்கும் அவனிடம் அனுமதி கேட்டு, அவளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையை, அதுவும் அவள் சிறுவயது லட்சியத்தைக் கூடக் கணவனுக்காக, அவனின் அன்பிற்காக துறந்தவளை ஒவ்வொன்றிருக்கும் இப்படி நடத்துவது மதுரவசனியை வெகுவாக பாதிக்க, ஏற்கனவே காலையில் இருந்து சமையல் செய்து, விரைவாக மாமியார் வீடு செல்ல வேண்டும், பின்னர் இவனுக்காக சீக்கிரம் திரும்ப வேண்டும் என்ற அலைச்சல் எல்லாம் உடலையும் சோர்வுறச் செய்ய, அது மனச்சோர்வையும் தர என்றும் இல்லாமல் அதிகமாக கணவனிடம் வார்த்தையை விட்டாள்.
“சும்மா எல்லாத்துக்கும் உங்க பெர்மிஷன் கேட்கனுமா நான்..? நான் மனுஷி இல்லை… எனக்கும் ஆசாபாசம் எல்லாம் இருக்காதா…? உங்களுக்காக என் லட்சியம்..… சின்ன வயசிலர்ந்து பிஸீனஸ் செய்யனும்.. நானும் தனியா ரன் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்… ஆனா உங்களுக்காக நான் அதையெல்லாம் விட்டேன்…. அதைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சிக்காம.. எப்பவும் உங்க சந்தோஷம் தான் முக்கியம் இல்ல.. உங்க மனசுபடி நான் நடக்கனும்… நீங்க என் மனசு படி நடக்க மாட்டிங்க.. இல்ல…? என்ன ராணி மாதிரி நடத்துறீங்க.? தங்கக் கூண்டில இருக்கக் கிளி சந்தோஷமா இருக்குமா..? ராணி மாதிரி நீங்க நடத்துனா போதுமா… நான் உணர வேண்டாமா…? நான் அப்படி உணரலங்க…” என்று கத்தி விட்டுக் கதவை அடைத்து அறையினுள் சென்றாள்.
அவள் கதவை அடைக்க, ராஜாவுக்கு இங்கே மனம் அடைத்துக் கொண்டது. காதலையும் கட்டுப்பாட்டையும் இங்கே தான் குழப்பிக் கொள்கிறோமா இல்லை மனைவி குழம்புகிறாளா எனப் புரியவில்லை. ஆனால் மதுவே அவனிடம் பிடிவாதமாக வேலைக்குப் போக வேண்டும் என்று சொல்லியிருந்தால் அவன் நிச்சயமாக அவள் ஆசையை நிறைவேற்றி இருப்பான்.
அதை செய்யத் தவறிவிட்டாள் மதுரவசனி. கணவனின் காதலில் சுகமாய் நனையும்போது தோன்றாத எண்ணங்கள் அவன் இல்லா சமயம் தோன்றி அவள் மனதை வாட்டியதின் விளைவு தான் இச்சண்டை.
மதுரவசனி கோபத்தில் கத்தினாலும் சிறிது நேரம் கழித்து அவள் மனம் கணவனுக்காக வருந்த ஆரம்பித்தது. என்னதான் கோபம் இருந்தாலும் அவளுக்கும் ராஜாவின் மீது குறையாதப் பேரன்பும் பெருங்காதலும் உண்டல்லோ..??
‘அதிகமாகப் பேசி விட்டோம்’ என உணர்ந்தவள் அவனைப் பார்க்க விழைந்து ஹாலுக்கு விரைய, அவனோ வீட்டைப் பூட்டி விட்டு வெளியேச் சென்று விட்டான்.
மனதின் புகைச்சல் அவனது வேகத்தில் தெரிந்தது. காரில் வெகு தூரம் சென்றவனுக்கு வாழ்வு எவ்வளவு தூரம் செல்லும் என தெரியவில்லை. மதுரவசனியை நோக வைத்து விட்டோம் என மனம் ஒரு புறம் வருந்தினாலும் தன் காதலை அவள் வலிக்க வலிக்க வார்த்தைகளால் அடித்ததை அவனால் தாங்க முடியவில்லை.
வலி வேதனையெல்லாம் கோபமாகி அவனை அமைதியிழக்கச் செய்தது. அடுத்த நாள் ஒரு நிகழ்ச்சிக்காக அவன் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும். அதனால் மனைவியை பிரிய வேண்டுமே என்ற மன உளைச்சலோடு வீட்டிற்கு வந்துப் பார்த்தால் மதுரவசனி இல்லாத தனிமை மனதைத் தாக்க, அவளைக் கண்டதும் வார்த்தைத் தடிக்க இப்போது கோபத்தில் தகிக்கிறான்.
வெகு நேரம் சுற்றி விட்டு வீட்டை அடைந்து விட, அங்கே மதுரவசனி கையில் அவள் அலைப்பேசியை வைத்து வண்ணம் சோஃபாவில் தூங்கிப்போயிருந்தாள்.
அவனது அலைப்பேசியை வீட்டிலேயே விட்டுச் சென்றதால் அவளால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. மனைவியின் நிலை கண்டவனின் மனம் கோபத்தில் கனன்றாலும் அவளைத் தூக்கிச் சென்று மெத்தையில் படுக்க வைத்தான்.
மறு நாள் காலையில் எழுந்தவுடன் அமைதியாக அவன் வேலைகளைப் பார்த்தவன், மதுரவசனியிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பேச அவன் திமிர் இடம் கொடுக்கவில்லை. எதுக்காகவும் வாழ்வில் நிலை இறங்கக் கூடாதென்ற அவனது பிடிவாதமும் வைராக்கியமும் அவனுக்குத் தூபம் போட்டன.
அவன் ப்ரட்டை எடுத்து டோஸ்ட் செய்து, சாப்பிட்டு விட்டு ,ஒரு பையில் அவன் துணிகள் எல்லாம் பேக் செய்தவனைக் கண்டு,
“எங்க கிளம்பிட்டீங்க நீங்க..?” என மது கேட்க, அவளை முறைத்தவன்
“உங்கிட்ட சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்ல…” என்றபடி வீட்டை விட்டு வெளியேறப் போனவன் ,
அவனின் செயலில் திகைத்து நின்றவளைக் கண்டு ,
“மது…. நம்ம பிரச்சனை நமக்குள்ள இருக்கனும்…சும்மா ஊரெல்லாம் சொல்லாத… ரகுவுக்குப் போன் செய்ற வேலையெல்லாம் வைச்சிக்காத… நான் ஆஸ்திரேலியா போறேன் ஒரு கான்சர்ட்… என் மனசு சரியானுதும் தான் வருவேன்..” என்றவன் விரைந்து சென்று விட்டான். அவள் பதில் பேசும் முன் அவன் சென்று விட,
மனம் நொறுங்க அப்படியே தரையில் அமர்ந்தாள் மதுரவசனி. எப்படி அவளை சுற்றி வருபவன் இன்று இப்படி நடந்து கொள்கிறான் என. அவள் பேசியது சற்றே அதிகப்படி என அவளுக்குத் தெரியும். ஆனாலும் அவன் காதல் அவனது கோபத்தைத் தணிக்கும் என அவள் நம்ப, அவளுக்கே அவனது கோபம் கண்டு அதிர்ச்சி தான்.
அன்று மாலை ராஜ்நந்தன் வீடு திரும்பிய போது ஆறரை மணி. வீட்டுக்குள் நுழைந்தவனின் கண்கள் வழக்கம்போலவே மனைவியைத் தேடின.
“மது…மதும்ம்மா…” என அழைக்க அவளை எங்கும் காணவில்லை.
சோர்வாக இருந்தவனுக்கு மனைவி வீட்டில் இல்லாது இருக்க, அது அதீத சோர்வைத் தர, அப்படியே அயர்ச்சியுடன் சோஃபாவில் சாய்ந்தான். அவளின் எண்ணுக்கு முயற்சிக்க அவள் எடுக்கவே இல்லை.
அமைதியாய் வாசலை நோக்கிய வண்ணம் அமர்ந்திருந்தான். ஆனால் அமைதி எல்லாம் எவ்வளவு நேரத்திற்கு…??
மதுரவசனி மாமியாரின் அழைப்புக்கு இணங்க, அவரைப் பார்க்க அவர்கள் இல்லத்துக்குச் சென்று விட்டு, நேரம் போவதே தெரியாமல் பேச்சில் இருந்து விட்டு அரக்கப் பறக்க ஓடி வந்தாள்.
அவள் கால் டாக்சி பிடித்து, இருந்த வாகன நெரிசலில் வீடு வர தாமதம் ஆகிற்று. ராஜா எப்போதும் வீடு திரும்ப ஏழுக்கு மேல் ஆகும். மதியம் வந்து அவளோடு சாப்பிட்டு விட்டுச் செல்பவன் இரவில் தாமதமாக வருவதால், இன்று அவன் சாப்பிட்டு விட்டுச் சென்றப் பின்னே அவள் மாமியார் வீட்டிற்குச் சென்றாள்.
ராஜாவிடம் சொல்லாமல் சென்றதால் அவன் வருவதற்குள் வீடு திரும்ப எண்ண, பார்த்தால் அவளது கெட்ட நேரம் அவன் அவளுக்கு முன்பே வந்து சட்டமாக அமர்ந்திருக்கக் கண்டவள்,
“என்னங்க… சீக்கிரம் வந்துட்டீங்களா…? ஒரு நிமிஷம்….நான் வரேன்..” என அறைக்குள் நுழையப் போனவளைத் தடுத்தவன்,
“உனக்கு நான் என்ன சொல்லியிருக்கேன்…. நான் வரும்போது வீட்டில இருக்கனும்னு சொல்லியிருக்கேன் இல்லையா..? என்றான் அதட்டலாக.
இதே அவன் கொஞ்சம் அமைதியாகக் கேட்டிருந்தால் மதுவும் அமைதியாகப் பதில் தந்திருப்பாளோ என்னவோ அவன் அப்படி அதட்டி கேட்கவும் அவளுக்கும் கோபம் வர,
“அதுக்காக இந்த நாலு சுவத்தைப் பார்த்துட்டேவா இருக்க முடியும்…?” என்றாள் அவனுக்குக் குறையாதக் கோபத்தோடு.
“நாலு சுவத்தைப் பார்க்கச் சொல்லல.. ஆனா நான் வர நேரத்துல நீ வீட்டுல இருக்கனும் இல்லையா…? அரை மணி நேரமா நீ இல்லாம டென்ஷன்ல இருக்கேன் நான்…. போன் செஞ்சா எடுக்க மாட்ட மது நீ..” என்றான் கடுப்புடன்.
“கார்ல சத்தம் கேட்கல.. இந்த ஊர் ட்ராஃபிக்ல நான் மாட்டிக்கிட்டேன்… அதுக்கு எதுக்கு வந்தவுடனே நிக்க வைச்சு கேள்வி கேட்கிறீங்க…?”
“அப்படி எங்க போன நீ..?”
“அத்த வீட்டுக்குப் போனேன்…”
“அங்க போகாதன்னு சொன்னா நீ கேட்க மாட்ட இல்ல.. எனக்கு வேண்டாம்னு நான் நினைக்கறவங்க உனக்கு வேணுமா… போனது தான் போனேன்… சொல்ல மாட்டியா நீ…. ஒரே தலைவலி…. நீ வேற வீட்டில இல்ல…” என மீண்டும் எரிந்து விழ
“என்ன சும்மா டென்ஷன் ஆகுறீங்க… எனக்கு எல்லாரும் வேணும்.. சும்மா வீட்டுக்குள் அடைஞ்சு கிடக்க முடியாது.. கல்யாணத்துக்கு முன்னாடி எங்க வீட்ல தான் இப்படி ரூல்ஸ் போட்டு டார்ச்சர்னா இப்ப நீங்களும் என்னை அடிமை மாதிரி நடத்துறீங்க…” எனக் கோபத்தில் கத்தினாள் மதுரவசனி.
ஒருவர் கோபத்தில் தகிக்கும் சமயம் அடுத்தவர் தணிந்து செல்ல வேண்டும் இல்லாவிடில் கோபம் தணியாமல் தகித்து அழிவையே தரும். இங்கும் ஒருவரும் விட்டுக்கொடுக்காமல் நீயா நானா என்று சண்டையிட துவங்கினர்.
அதீத அன்பின் காரணமாய் அவளைக் காணாத தவிப்பில் ஏக்கத்தில் அவன் பேசினான். ஆனால் அவளுக்கோ அது அடிமைத்தனமாய்த் தோன்றியது.
‘அடிமை’ என்று வார்த்தை ராஜாவுக்கு ஆத்திரத்தைக் கிளப்ப,
“என்னடி அடிமை… எல்லாம் உன்னிஷ்டத்துக்குத் தானே இருக்கு… என்ன அடிமைன்னு கேட்கிறேன்.. உன்னை ராணி மாதிரி தானே நான் பார்த்துக்கிறேன்..” என்றான் உணர்ச்சி மிகுதியில்.
ஆனால் அது புரிய வேண்டியவளுக்குப் புரியவில்லையே..!
சிறுவயதிலிருந்துப் பெண்பிள்ளை என்பதால் வீட்டில் ஆண்மக்களுக்குக் கிடைத்த சுதந்திரம் கிடைக்காமல், தன் ஆசைகளைப் பூட்டியே வைத்துப் பழகி, அது கிடைக்கப் போராடி வாழ்ந்தவளுக்குத் திருமணத்துக்குப் பின்னும் கணவனின் அடக்குமுறைப் பிடிக்காமல் போனது. அவன் அவள் மீது காட்டும் அதிகமான உரிமையுணர்வு, கட்டுப்பாட்டை அவள் வெறுத்தாள்.
‘அடக்குமுறையின் போது சுதந்திரமாய் இரு’ என்ற கூற்றிற்கேற்ப, அவள் வெடிக்க, அது ராஜாவின் காதல் உணர்வுகளை அடிவாங்கச் செய்தது. பொக்கிஷமாகப் போற்றிப் பாதுக்காக்கும் மனைவி அவன் காட்டும் அன்பை அடிமைத்தனம் என்று சொல்வதை அவனால் தாங்க முடியவில்லை.
மதுரவசனிக்கோ அவன் இருக்கும் நேரம் உணராத தனிமை, அவன் இல்லா நேரங்களில் எல்லா வேலைகளையும் செய்துக் கொண்டு சுயத்தை இழந்து தனியாகத் தனிமையில் இருப்பதை மனச்சோர்வைத் தர, அவளும் வெடித்தாள்.
அவள் வீட்டு ஆண்கள் எல்லாரும் இரவில் தான் வீடு திரும்புவர். அப்போது அவர்களிடம் பேச நினைத்தால் கூட சிறிது நேரமே பேச அனுமதிப்பான் ராஜா. போன வாரம் அவள் தங்கை ப்ரியாவுக்குப் பிறந்த நாள் பரிசு வாங்க அவள் கடைக்குச் சென்று தாமதமாய் வீடு திரும்ப, அதற்கும் அவன் சண்டையிட, இவள் தான் சமாதானமாகப் போக வேண்டி இருந்தது.
இப்படி அவள் பிறந்த வீட்டுக்குப் பேசவும், வெளியே செல்லவும் என ஒவ்வொன்றிருக்கும் அவனிடம் அனுமதி கேட்டு, அவளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையை, அதுவும் அவள் சிறுவயது லட்சியத்தைக் கூடக் கணவனுக்காக, அவனின் அன்பிற்காக துறந்தவளை ஒவ்வொன்றிருக்கும் இப்படி நடத்துவது மதுரவசனியை வெகுவாக பாதிக்க, ஏற்கனவே காலையில் இருந்து சமையல் செய்து, விரைவாக மாமியார் வீடு செல்ல வேண்டும், பின்னர் இவனுக்காக சீக்கிரம் திரும்ப வேண்டும் என்ற அலைச்சல் எல்லாம் உடலையும் சோர்வுறச் செய்ய, அது மனச்சோர்வையும் தர என்றும் இல்லாமல் அதிகமாக கணவனிடம் வார்த்தையை விட்டாள்.
“சும்மா எல்லாத்துக்கும் உங்க பெர்மிஷன் கேட்கனுமா நான்..? நான் மனுஷி இல்லை… எனக்கும் ஆசாபாசம் எல்லாம் இருக்காதா…? உங்களுக்காக என் லட்சியம்..… சின்ன வயசிலர்ந்து பிஸீனஸ் செய்யனும்.. நானும் தனியா ரன் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்… ஆனா உங்களுக்காக நான் அதையெல்லாம் விட்டேன்…. அதைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சிக்காம.. எப்பவும் உங்க சந்தோஷம் தான் முக்கியம் இல்ல.. உங்க மனசுபடி நான் நடக்கனும்… நீங்க என் மனசு படி நடக்க மாட்டிங்க.. இல்ல…? என்ன ராணி மாதிரி நடத்துறீங்க.? தங்கக் கூண்டில இருக்கக் கிளி சந்தோஷமா இருக்குமா..? ராணி மாதிரி நீங்க நடத்துனா போதுமா… நான் உணர வேண்டாமா…? நான் அப்படி உணரலங்க…” என்று கத்தி விட்டுக் கதவை அடைத்து அறையினுள் சென்றாள்.
அவள் கதவை அடைக்க, ராஜாவுக்கு இங்கே மனம் அடைத்துக் கொண்டது. காதலையும் கட்டுப்பாட்டையும் இங்கே தான் குழப்பிக் கொள்கிறோமா இல்லை மனைவி குழம்புகிறாளா எனப் புரியவில்லை. ஆனால் மதுவே அவனிடம் பிடிவாதமாக வேலைக்குப் போக வேண்டும் என்று சொல்லியிருந்தால் அவன் நிச்சயமாக அவள் ஆசையை நிறைவேற்றி இருப்பான்.
அதை செய்யத் தவறிவிட்டாள் மதுரவசனி. கணவனின் காதலில் சுகமாய் நனையும்போது தோன்றாத எண்ணங்கள் அவன் இல்லா சமயம் தோன்றி அவள் மனதை வாட்டியதின் விளைவு தான் இச்சண்டை.
மதுரவசனி கோபத்தில் கத்தினாலும் சிறிது நேரம் கழித்து அவள் மனம் கணவனுக்காக வருந்த ஆரம்பித்தது. என்னதான் கோபம் இருந்தாலும் அவளுக்கும் ராஜாவின் மீது குறையாதப் பேரன்பும் பெருங்காதலும் உண்டல்லோ..??
‘அதிகமாகப் பேசி விட்டோம்’ என உணர்ந்தவள் அவனைப் பார்க்க விழைந்து ஹாலுக்கு விரைய, அவனோ வீட்டைப் பூட்டி விட்டு வெளியேச் சென்று விட்டான்.
மனதின் புகைச்சல் அவனது வேகத்தில் தெரிந்தது. காரில் வெகு தூரம் சென்றவனுக்கு வாழ்வு எவ்வளவு தூரம் செல்லும் என தெரியவில்லை. மதுரவசனியை நோக வைத்து விட்டோம் என மனம் ஒரு புறம் வருந்தினாலும் தன் காதலை அவள் வலிக்க வலிக்க வார்த்தைகளால் அடித்ததை அவனால் தாங்க முடியவில்லை.
வலி வேதனையெல்லாம் கோபமாகி அவனை அமைதியிழக்கச் செய்தது. அடுத்த நாள் ஒரு நிகழ்ச்சிக்காக அவன் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும். அதனால் மனைவியை பிரிய வேண்டுமே என்ற மன உளைச்சலோடு வீட்டிற்கு வந்துப் பார்த்தால் மதுரவசனி இல்லாத தனிமை மனதைத் தாக்க, அவளைக் கண்டதும் வார்த்தைத் தடிக்க இப்போது கோபத்தில் தகிக்கிறான்.
வெகு நேரம் சுற்றி விட்டு வீட்டை அடைந்து விட, அங்கே மதுரவசனி கையில் அவள் அலைப்பேசியை வைத்து வண்ணம் சோஃபாவில் தூங்கிப்போயிருந்தாள்.
அவனது அலைப்பேசியை வீட்டிலேயே விட்டுச் சென்றதால் அவளால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. மனைவியின் நிலை கண்டவனின் மனம் கோபத்தில் கனன்றாலும் அவளைத் தூக்கிச் சென்று மெத்தையில் படுக்க வைத்தான்.
மறு நாள் காலையில் எழுந்தவுடன் அமைதியாக அவன் வேலைகளைப் பார்த்தவன், மதுரவசனியிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பேச அவன் திமிர் இடம் கொடுக்கவில்லை. எதுக்காகவும் வாழ்வில் நிலை இறங்கக் கூடாதென்ற அவனது பிடிவாதமும் வைராக்கியமும் அவனுக்குத் தூபம் போட்டன.
அவன் ப்ரட்டை எடுத்து டோஸ்ட் செய்து, சாப்பிட்டு விட்டு ,ஒரு பையில் அவன் துணிகள் எல்லாம் பேக் செய்தவனைக் கண்டு,
“எங்க கிளம்பிட்டீங்க நீங்க..?” என மது கேட்க, அவளை முறைத்தவன்
“உங்கிட்ட சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்ல…” என்றபடி வீட்டை விட்டு வெளியேறப் போனவன் ,
அவனின் செயலில் திகைத்து நின்றவளைக் கண்டு ,
“மது…. நம்ம பிரச்சனை நமக்குள்ள இருக்கனும்…சும்மா ஊரெல்லாம் சொல்லாத… ரகுவுக்குப் போன் செய்ற வேலையெல்லாம் வைச்சிக்காத… நான் ஆஸ்திரேலியா போறேன் ஒரு கான்சர்ட்… என் மனசு சரியானுதும் தான் வருவேன்..” என்றவன் விரைந்து சென்று விட்டான். அவள் பதில் பேசும் முன் அவன் சென்று விட,
மனம் நொறுங்க அப்படியே தரையில் அமர்ந்தாள் மதுரவசனி. எப்படி அவளை சுற்றி வருபவன் இன்று இப்படி நடந்து கொள்கிறான் என. அவள் பேசியது சற்றே அதிகப்படி என அவளுக்குத் தெரியும். ஆனாலும் அவன் காதல் அவனது கோபத்தைத் தணிக்கும் என அவள் நம்ப, அவளுக்கே அவனது கோபம் கண்டு அதிர்ச்சி தான்.