heyyyyyyyyyyyyy dearsssssssss...thanks much...
---------------------------------------------------------------------------------
காதல் 14:
அடுத்த தினம் அழகாய் விடிய, ராஜாவுக்கு மிகவும் அழகாய் விடிந்தது. பின்னே இல்லையா… அவனுக்கென்று ஒருத்தி அவனுக்கானவள்.. அவனானவள்… அவனவள்… அவள் அருகாமை தந்த திருப்தி..! அவள் வாசம் தந்த சுவாசம்..! அதை ஆழ்ந்து அனுபவித்து என்று அவன் நிம்மதியாக உறங்கி எழுந்தான்.
குளித்து விட்டு பனியனும் ட்ராக் சூட்டுமாய் மனைவியைத் தேட
அவள் கிச்சனில் சமையல் செய்து கொண்டிருந்தாள். அவளைப் பின்னோடு அணைத்தவன் ,
“மதும்மா… என்னடா.. சீக்கிரமா எழுந்திட்ட…. பாவம்… நீ நைட்லாம் தூங்கல…. நானே சமைச்சிருப்பேன்ல… என்னை ஏன் எழுப்பல…” எனத் தாங்கலாகக் கேட்க
“நீங்களே நல்லா தூங்கினீங்க… எப்படி எழுப்பறதாம்..? டெய்லி நீங்களே சமைப்பீங்களா….என்ன..? நானும் நல்லாதான் சமைப்பேன்..” எனச் சொல்ல
அவளை மேலும் இறுக அணைத்தவன், “எஸ் மது நல்லா தூங்கினேன்… ரொம்ப நல்லா தூங்கினேன் நான்…. நீ எனக்காக இருக்க… எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்குன்னு நிம்மதில தூங்கினேன்..” என்றான் குரலிலும் நிம்மதியும் அமைதியும் இழையோட.
“சரி..சரி…தள்ளுங்க…நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..” என நகரப் போக,
“என் ராணி இப்படி கஷ்டப்படக் கூடாது…. நீ உட்கார.. நான் செர்வ் செய்றேன்…” எனச் சொல்ல
அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ,
“என் ராஜாவுக்கு நான் செய்யக் கூடாதா என்ன..?” என மையலோடு கேட்க
“மது….. நைட் தான் தூங்கல.. பகல்ல நீ ரெஸ்ட் எடுக்கனும்னு நான் நினைக்கிறேன்…. நீங்க என்ன நினைக்கிறீங்க மேடம்..” எனப் புருவம் உயர்த்திக் கிண்டலாகக் கேட்க
“அய்யே..போதும் போங்க…” என அவள் நகர்ந்து விட
“பாடல் தீர்ந்த
போன பின்னும்
மௌனம் கூட தீர்ந்த பின்னும்
கோடி முத்தம் வைத்த பின்னும்
போதவில்லையே போதவில்லையே
உன்னைப் போல போதை ஏதுமில்லையே..”
என்று அவன் பாட
“பசிக்குதுப்பா.. வாங்க..” என்றதும் அவனும் வம்பு செய்யாமல் சாப்பிட அமர்ந்தான்.
அவள் செய்திருந்த காரச்சட்னியும் இட்லியும் சாப்பிட்டுப் பார்த்தவன் ,
“சூப்பர்டா மது… செம…. உன் கைப்பக்குவத்தை அடிச்சிக்க ஆளே இல்ல..” என வேகமாய் சொல்ல
“ஆஹான்…நிஜமாவா..?”
“ஹே..! நிஜமா தான் டி…. ம்ம்ம்.. உனக்குத் தெரியுமா மது…. ஆத்தா கூட சொல்வாங்க இப்ப உன் அம்மா சாப்பாட்டை சொல்ற.. நாளைக்கு உனக்கு ஒருத்தி வந்தா உங்கப்பன் மாதிரி மாத்திப் பேசுவேன்னு…ம்ம்..” என்று இயல்பாக பேசியவனின் முகம் ஒரு நொடி புன்னகையில் உறைந்தாலும் அடுத்த நொடியே சொன்ன செய்தி உரைத்து அமைதியானான். கடந்துச் சென்ற நாட்களும் காய்ந்துப் போன தழும்புகளும் ரணங்களும் நினைவில் வர அப்படியே உணவை வெறித்தான்.
இத்தனை நாள் அவன் தனிமனிதன். ரகுவிடம் கூட அவனால் அனைத்தையும் மனம் திறந்துப் பேச முடியாது. ஆனால் மதுரவசனி அவன் மனைவியாயிற்றே.. அவளிடம் அவனுக்கு மறைக்க என்னவிருக்கிறது..? இயல்பாக மிக மிக இயல்பாக உரையாடி விட்டு அதன்பிறகே அவனுக்கு அனைத்தும் புரிந்தது.
மதுவோ அவனின் தோளில் தொட்டு, “இம்புட்டு பாசம் இருக்கவருக்கு அப்படி என்ன வெட்டிப் பந்தா…. அம்மா அப்பா கிட்ட கௌரவம்லாம் பார்க்க கூடாது…”என்றாள்.
அவனோ அவளை இழுத்துத் தன் மடியில் அமரவைத்து ,
“மனைவியை நேசிக்கிறவங்க ப்ரஸ்டீஜ் எப்படி வேண்டாம்னு சொல்வாங்க..?” என அவள் காதில் உரச
அவனின் செயலில் கிறங்கி மயங்கினாலும், அவன் பேச்சை மாற்றுவதை உணர்ந்தவள் அப்படியே அந்த பேச்சை விட்டாள்.
அவன் அனுபவித்த வலிகள் அதிகம்.. அடையாளமாய் இருந்த அனைத்தும் ஒரு நாள் அடையாளமின்றிப் போவதும் அதை அனுபவித்தவனுக்குமே அடையாளம் என்பது அற்றுப்போனதும் கொடுமை தானே… உறவு போய் உரிமை போய் அனைத்தும் போய் நிர்கதியாய் அவன் நின்ற நிலையைக் கற்பனை செய்துப் பார்த்தாலுமே அவள் தேகம் சிலிர்க்கிறதே… அதை அனுபவித்தவனுக்கு எப்படி இருக்கும்.. காலம் மாற்றும் அவனை என்று நம்பினாள். அவனுக்குக் பாசமும் அதிகம் ரோஷமும் அதிகம்.. காலம் மாற்றாவிட்டாலும் அவள் காதல் மாற்ற வேண்டும் என்று முடிவுச் செய்து கொண்டாள்.
நந்தன் சீக்கிரமாக உண்டவன் மனைவியையும் சாப்பிட வைத்து,அடர் நீல நிற முழுக்கை சட்டையும் மெட்டாலிக் ப்ளூவில் ப்ளேசரும் அணிந்து வர அவனை மையல் கொண்ட விழிகளோடு அவள் நோக்க,அவனும் அவளை ஆழ்ந்து பார்க்க அதன் வீச்சு தாங்க முடியாவிட்டாலும் அவனை திமிராய்ப் பார்த்து வைக்க,
அருகில் வந்து அவள் முகம் நோக்கியவன்,
“என்ன பொண்டாட்டி நான் ஹேண்ட்சமா…? நீ ரொம்ப சாஃப்ட்னு நினைச்சா சைட் அடிக்கிற… கேடி தான் நீ..?” எனச் சொல்ல
“அய்யே அப்படியே அடிச்சிட்டாலும்.. அதெல்லாம் உங்களை நான் பார்க்கல… டெய்லி தான் பார்க்கிறேனே..” என்று கெத்தாகச் சொல்ல
“அப்ப நீ எங்கிட்ட மயங்கல…”
“மயங்கல..”
“நிஜமா..?”
“நிஜமா..”
“அப்போ நான் டெஸ்ட் பண்ணிக்கிறேன்..” என்ற ராஜா அவள் அருகில் வர,
அவன் அருகில் வரப் பின் வாங்கியவள்,
“என்னை டச் பண்ணக்கூடாது..” என்றாள் அழுத்தமாக.
“டச் பண்ண மாட்டேன்..” என்றான் அவளை விட அழுத்தமாய்.
அடுத்து அவன் செய்த செயலில் மூச்சைடைத்துப் போனது. அவளை நெருங்கி நின்றாலும் அவன் மேனி அவளை உரசவில்லை மாறாக அவன் மூச்சுக்காற்றை அவள் முகத்தில் ஊத அதைத் தாங்க முடியாதவள் அப்படியே சிலையென சமைந்து நிற்க,
அவன் மேலும் அவள் மேனியில் ஊத, அவன் மூச்சுக் காற்றில் சிலிர்த்தவள், அவனைக் கைவைத்துத் தள்ளி விட்டு,
“மயங்கிட்டேன் போதுமா…. இம்சை பண்ணாதீங்க…” என்றாள் நாணத்தோடு.
“அப்படி வா வழிக்கு…” என்றவன் சோபாவில் அமர்ந்து ஷூவைப் போட்டுக் கொண்டு ,
“மது.. இன்னிக்கு உன்னைத் தனியா விட்டுப் போக மனசில்ல.. ஆனா கொடுத்த வாக்கைக் காப்பாத்துனும் இல்ல.. ஏற்கனவே ஃபிக்ஸ் ஆன ரெகார்டிங்.. அதான் டா… நீ நல்லா ரெஸ்ட் எடும்மா… எப்படியும் நான் உன்னை தூங்க விட போறதில்லை….. போர் அடிக்காது… அப்படி அடிச்சா டீவி பாரு… முக்கியமா உன்னோட ஊர்க்காரங்க.. உறவுக்காரங்க எல்லாருக்கும் போன் செஞ்சிடு மதும்மா…” என
“அதெல்லாம் நான் செஞ்சிடுறேன்…. ஆனால் இப்படி நீங்க டெய்லி போகும்போது நான் தனியா இருந்து நான் என்ன செய்ய…? நான் பேசாம வேலைக்குப் போகவா?” என்றதும் தான் போதும் கணவனின் முகம் கனலைக் கக்க,
“அய்யோ.. நான் அந்த கம்பெனிக்குப் போகனும்னு சொல்லவே இல்ல.. புதுசா வேற எதாவது …?” என்றாள் மென்மையாய்..
“எந்த ஈர வெங்காயமும் வேண்டாம்.. கட்டின பொண்டாட்டியை வைச்சுக் காப்பாத்த முடியாம நான் இல்ல..” என்றான் சுள்ளென்று.
“எதுக்கு இப்படி எரிஞ்சு விழுறீங்க..? வேலைக்குப் போறது காசுக்காக இல்ல.. அது ஒரு சுதந்திரம்.. அவ்வளவு தான் எனக்கு.. எங்க வீட்ல ஏன் அனுப்புனாங்க.. காசு இல்லாமையா..? பொண்ணுப் போய் வெளி உலகத்தைத் தெரிஞ்சிக்கனும்னு தான்…” என்றாள் அவளும் அவனுக்குக் குறையாதக் கோபத்தோடு.
அவளின் கோபம் பார்த்து அவனும் கொஞ்சம் தணிந்தான்.
“சரி சரி… விடு.. ப்ளீஸ் மது… நீ இன்னொருத்தர்கிட்ட வேலைப் பார்க்கறது எனக்குப் பிடிக்கல… அது மட்டுமில்லாம என் வேலை ஒன்னும் இந்த நேரம்னு இல்ல… சில மணி நேரம் ரெகார்டிங்…. அவ்வளவு தான்.. எப்ப வேணும்னாலும் நான் வீட்டுக்கு வரலாம்..வரும்போது இத்தனை வருஷம் வெறும் கதவு தான் என்னை வரவேற்கும்….இனிமே நீ இருக்கனும் மதும்மா…ப்ளீஸ்..” என அவளை அணைத்துக் கொண்டே கேட்க
வார்த்தை ஜாலத்தில் அவனை மிஞ்ச முடியுமா..? அவன் பிடிவாதத்தை விஞ்ச முடியுமா..?அன்பால் அவளைக் கட்டுக்குள் வைத்தான் ராஜ் நந்தன்.
ஆனால் கட்டுப்பாடுகள் எல்லாம் கட்டவிழ்க்கும் நாள் வரும் தானே..!!
மதுவும் அவன் உருகலில் உருகிக் கரைந்து, “சரி நான் வேலைக்குப் போகல… போதுமா…”எனச் சொல்ல
“தேங்க்ஸ்டா என் மதுன்னா என் மது தான்” என்றான்.
அவன் வேலைக்குச் சென்றப் பின் தனிமையில் யோசனைகள் பலமாய் இருந்தன மதுவுக்கு.
‘முன்னர் தான் வேலைக்குப் போக எவன் அனுமதி வேண்டும் என நினைத்தது எங்கே..? இன்று கணவனின் கையணைப்பில் அவனிடம் கட்டுண்டு கிடப்பது எங்கே..? வீட்டில் எதிர்த்து எதிர்த்துப் பேசியவள் இங்கே அவனிடம் அடங்கி கிடப்பது எதனால்..? யோசனைகள் தாக்க எண்ண சுழல்களில் சிக்கினாள். அவளை மேலும் யோசிக்க விடாமல் அவர்களின் வீட்டினர் அழைப்பேசி மூலமாய் அழைக்க, அவர்களோடு பேசுவதில் மூழ்கினாள்.
மாலையில் வீட்டிற்கு வந்த ராஜா உள்ளே நுழைந்ததுமே மனைவியைத் தேடி அவள் மடி சாய்ந்தான்.
“அப்புறம்… மது எப்படி போச்சு இன்னிக்கு…என்னை மிஸ் பண்ணியா…?”
“மிஸ் பண்ணாம தான் அத்தனை தடவ கால் பண்ணினேனா…. நீங்க இல்லாம செம போர்… எனக்குப் பிடிக்கவே இல்ல…”
“சாரிடாம்மா… போன் செஞ்சு உங்கிட்ட பேசினேன் வைச்சிக்கோ என்னால் அப்புறம் கன்ட்ரோலா இருக்க முடியாதே…. உன்னைப் பார்க்கனும்.. பேசனும்… இப்படி படுத்துக்கனும்… இப்படி அணைச்சிக்கனும்னு தோணும்.. அதான்… அது மட்டுமில்லாம பாடும்போது அந்த கேரக்டரை உள்வாங்கிப் பாடனும்.. சோ வேற டிஸ்ட்ராக்ஷன்ஸ் இருக்கக் கூடாது…”
“ம்ம்ம்..”
“அப்புறம் இன்னொன்னு தெரியுமா.. நான் இதுவரைக்கும் இவ்வளவு நல்லா பாடினதே இல்லையாம்..? டைரக்டர் சொல்றார்… இன்னிக்குக் கொடுத்த லவ் சாங்கை அப்படி பாடினேனாம்… உருகி உருகி…. எல்லாம் உன்னை நினைச்சான்னு கேட்டு ஒரே கிண்டல் தான்…. ஆனா அதான் உண்மையும் கூட…. நீ என்னை மாத்திட்டே இருக்க மது..” என அவன் சொல்ல, அவளுக்குமே அதே எண்ணம்.
---------------------------------------------------------------------------------
காதல் 14:
அடுத்த தினம் அழகாய் விடிய, ராஜாவுக்கு மிகவும் அழகாய் விடிந்தது. பின்னே இல்லையா… அவனுக்கென்று ஒருத்தி அவனுக்கானவள்.. அவனானவள்… அவனவள்… அவள் அருகாமை தந்த திருப்தி..! அவள் வாசம் தந்த சுவாசம்..! அதை ஆழ்ந்து அனுபவித்து என்று அவன் நிம்மதியாக உறங்கி எழுந்தான்.
குளித்து விட்டு பனியனும் ட்ராக் சூட்டுமாய் மனைவியைத் தேட
அவள் கிச்சனில் சமையல் செய்து கொண்டிருந்தாள். அவளைப் பின்னோடு அணைத்தவன் ,
“மதும்மா… என்னடா.. சீக்கிரமா எழுந்திட்ட…. பாவம்… நீ நைட்லாம் தூங்கல…. நானே சமைச்சிருப்பேன்ல… என்னை ஏன் எழுப்பல…” எனத் தாங்கலாகக் கேட்க
“நீங்களே நல்லா தூங்கினீங்க… எப்படி எழுப்பறதாம்..? டெய்லி நீங்களே சமைப்பீங்களா….என்ன..? நானும் நல்லாதான் சமைப்பேன்..” எனச் சொல்ல
அவளை மேலும் இறுக அணைத்தவன், “எஸ் மது நல்லா தூங்கினேன்… ரொம்ப நல்லா தூங்கினேன் நான்…. நீ எனக்காக இருக்க… எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்குன்னு நிம்மதில தூங்கினேன்..” என்றான் குரலிலும் நிம்மதியும் அமைதியும் இழையோட.
“சரி..சரி…தள்ளுங்க…நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..” என நகரப் போக,
“என் ராணி இப்படி கஷ்டப்படக் கூடாது…. நீ உட்கார.. நான் செர்வ் செய்றேன்…” எனச் சொல்ல
அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ,
“என் ராஜாவுக்கு நான் செய்யக் கூடாதா என்ன..?” என மையலோடு கேட்க
“மது….. நைட் தான் தூங்கல.. பகல்ல நீ ரெஸ்ட் எடுக்கனும்னு நான் நினைக்கிறேன்…. நீங்க என்ன நினைக்கிறீங்க மேடம்..” எனப் புருவம் உயர்த்திக் கிண்டலாகக் கேட்க
“அய்யே..போதும் போங்க…” என அவள் நகர்ந்து விட
“பாடல் தீர்ந்த
போன பின்னும்
மௌனம் கூட தீர்ந்த பின்னும்
கோடி முத்தம் வைத்த பின்னும்
போதவில்லையே போதவில்லையே
உன்னைப் போல போதை ஏதுமில்லையே..”
என்று அவன் பாட
“பசிக்குதுப்பா.. வாங்க..” என்றதும் அவனும் வம்பு செய்யாமல் சாப்பிட அமர்ந்தான்.
அவள் செய்திருந்த காரச்சட்னியும் இட்லியும் சாப்பிட்டுப் பார்த்தவன் ,
“சூப்பர்டா மது… செம…. உன் கைப்பக்குவத்தை அடிச்சிக்க ஆளே இல்ல..” என வேகமாய் சொல்ல
“ஆஹான்…நிஜமாவா..?”
“ஹே..! நிஜமா தான் டி…. ம்ம்ம்.. உனக்குத் தெரியுமா மது…. ஆத்தா கூட சொல்வாங்க இப்ப உன் அம்மா சாப்பாட்டை சொல்ற.. நாளைக்கு உனக்கு ஒருத்தி வந்தா உங்கப்பன் மாதிரி மாத்திப் பேசுவேன்னு…ம்ம்..” என்று இயல்பாக பேசியவனின் முகம் ஒரு நொடி புன்னகையில் உறைந்தாலும் அடுத்த நொடியே சொன்ன செய்தி உரைத்து அமைதியானான். கடந்துச் சென்ற நாட்களும் காய்ந்துப் போன தழும்புகளும் ரணங்களும் நினைவில் வர அப்படியே உணவை வெறித்தான்.
இத்தனை நாள் அவன் தனிமனிதன். ரகுவிடம் கூட அவனால் அனைத்தையும் மனம் திறந்துப் பேச முடியாது. ஆனால் மதுரவசனி அவன் மனைவியாயிற்றே.. அவளிடம் அவனுக்கு மறைக்க என்னவிருக்கிறது..? இயல்பாக மிக மிக இயல்பாக உரையாடி விட்டு அதன்பிறகே அவனுக்கு அனைத்தும் புரிந்தது.
மதுவோ அவனின் தோளில் தொட்டு, “இம்புட்டு பாசம் இருக்கவருக்கு அப்படி என்ன வெட்டிப் பந்தா…. அம்மா அப்பா கிட்ட கௌரவம்லாம் பார்க்க கூடாது…”என்றாள்.
அவனோ அவளை இழுத்துத் தன் மடியில் அமரவைத்து ,
“மனைவியை நேசிக்கிறவங்க ப்ரஸ்டீஜ் எப்படி வேண்டாம்னு சொல்வாங்க..?” என அவள் காதில் உரச
அவனின் செயலில் கிறங்கி மயங்கினாலும், அவன் பேச்சை மாற்றுவதை உணர்ந்தவள் அப்படியே அந்த பேச்சை விட்டாள்.
அவன் அனுபவித்த வலிகள் அதிகம்.. அடையாளமாய் இருந்த அனைத்தும் ஒரு நாள் அடையாளமின்றிப் போவதும் அதை அனுபவித்தவனுக்குமே அடையாளம் என்பது அற்றுப்போனதும் கொடுமை தானே… உறவு போய் உரிமை போய் அனைத்தும் போய் நிர்கதியாய் அவன் நின்ற நிலையைக் கற்பனை செய்துப் பார்த்தாலுமே அவள் தேகம் சிலிர்க்கிறதே… அதை அனுபவித்தவனுக்கு எப்படி இருக்கும்.. காலம் மாற்றும் அவனை என்று நம்பினாள். அவனுக்குக் பாசமும் அதிகம் ரோஷமும் அதிகம்.. காலம் மாற்றாவிட்டாலும் அவள் காதல் மாற்ற வேண்டும் என்று முடிவுச் செய்து கொண்டாள்.
நந்தன் சீக்கிரமாக உண்டவன் மனைவியையும் சாப்பிட வைத்து,அடர் நீல நிற முழுக்கை சட்டையும் மெட்டாலிக் ப்ளூவில் ப்ளேசரும் அணிந்து வர அவனை மையல் கொண்ட விழிகளோடு அவள் நோக்க,அவனும் அவளை ஆழ்ந்து பார்க்க அதன் வீச்சு தாங்க முடியாவிட்டாலும் அவனை திமிராய்ப் பார்த்து வைக்க,
அருகில் வந்து அவள் முகம் நோக்கியவன்,
“என்ன பொண்டாட்டி நான் ஹேண்ட்சமா…? நீ ரொம்ப சாஃப்ட்னு நினைச்சா சைட் அடிக்கிற… கேடி தான் நீ..?” எனச் சொல்ல
“அய்யே அப்படியே அடிச்சிட்டாலும்.. அதெல்லாம் உங்களை நான் பார்க்கல… டெய்லி தான் பார்க்கிறேனே..” என்று கெத்தாகச் சொல்ல
“அப்ப நீ எங்கிட்ட மயங்கல…”
“மயங்கல..”
“நிஜமா..?”
“நிஜமா..”
“அப்போ நான் டெஸ்ட் பண்ணிக்கிறேன்..” என்ற ராஜா அவள் அருகில் வர,
அவன் அருகில் வரப் பின் வாங்கியவள்,
“என்னை டச் பண்ணக்கூடாது..” என்றாள் அழுத்தமாக.
“டச் பண்ண மாட்டேன்..” என்றான் அவளை விட அழுத்தமாய்.
அடுத்து அவன் செய்த செயலில் மூச்சைடைத்துப் போனது. அவளை நெருங்கி நின்றாலும் அவன் மேனி அவளை உரசவில்லை மாறாக அவன் மூச்சுக்காற்றை அவள் முகத்தில் ஊத அதைத் தாங்க முடியாதவள் அப்படியே சிலையென சமைந்து நிற்க,
அவன் மேலும் அவள் மேனியில் ஊத, அவன் மூச்சுக் காற்றில் சிலிர்த்தவள், அவனைக் கைவைத்துத் தள்ளி விட்டு,
“மயங்கிட்டேன் போதுமா…. இம்சை பண்ணாதீங்க…” என்றாள் நாணத்தோடு.
“அப்படி வா வழிக்கு…” என்றவன் சோபாவில் அமர்ந்து ஷூவைப் போட்டுக் கொண்டு ,
“மது.. இன்னிக்கு உன்னைத் தனியா விட்டுப் போக மனசில்ல.. ஆனா கொடுத்த வாக்கைக் காப்பாத்துனும் இல்ல.. ஏற்கனவே ஃபிக்ஸ் ஆன ரெகார்டிங்.. அதான் டா… நீ நல்லா ரெஸ்ட் எடும்மா… எப்படியும் நான் உன்னை தூங்க விட போறதில்லை….. போர் அடிக்காது… அப்படி அடிச்சா டீவி பாரு… முக்கியமா உன்னோட ஊர்க்காரங்க.. உறவுக்காரங்க எல்லாருக்கும் போன் செஞ்சிடு மதும்மா…” என
“அதெல்லாம் நான் செஞ்சிடுறேன்…. ஆனால் இப்படி நீங்க டெய்லி போகும்போது நான் தனியா இருந்து நான் என்ன செய்ய…? நான் பேசாம வேலைக்குப் போகவா?” என்றதும் தான் போதும் கணவனின் முகம் கனலைக் கக்க,
“அய்யோ.. நான் அந்த கம்பெனிக்குப் போகனும்னு சொல்லவே இல்ல.. புதுசா வேற எதாவது …?” என்றாள் மென்மையாய்..
“எந்த ஈர வெங்காயமும் வேண்டாம்.. கட்டின பொண்டாட்டியை வைச்சுக் காப்பாத்த முடியாம நான் இல்ல..” என்றான் சுள்ளென்று.
“எதுக்கு இப்படி எரிஞ்சு விழுறீங்க..? வேலைக்குப் போறது காசுக்காக இல்ல.. அது ஒரு சுதந்திரம்.. அவ்வளவு தான் எனக்கு.. எங்க வீட்ல ஏன் அனுப்புனாங்க.. காசு இல்லாமையா..? பொண்ணுப் போய் வெளி உலகத்தைத் தெரிஞ்சிக்கனும்னு தான்…” என்றாள் அவளும் அவனுக்குக் குறையாதக் கோபத்தோடு.
அவளின் கோபம் பார்த்து அவனும் கொஞ்சம் தணிந்தான்.
“சரி சரி… விடு.. ப்ளீஸ் மது… நீ இன்னொருத்தர்கிட்ட வேலைப் பார்க்கறது எனக்குப் பிடிக்கல… அது மட்டுமில்லாம என் வேலை ஒன்னும் இந்த நேரம்னு இல்ல… சில மணி நேரம் ரெகார்டிங்…. அவ்வளவு தான்.. எப்ப வேணும்னாலும் நான் வீட்டுக்கு வரலாம்..வரும்போது இத்தனை வருஷம் வெறும் கதவு தான் என்னை வரவேற்கும்….இனிமே நீ இருக்கனும் மதும்மா…ப்ளீஸ்..” என அவளை அணைத்துக் கொண்டே கேட்க
வார்த்தை ஜாலத்தில் அவனை மிஞ்ச முடியுமா..? அவன் பிடிவாதத்தை விஞ்ச முடியுமா..?அன்பால் அவளைக் கட்டுக்குள் வைத்தான் ராஜ் நந்தன்.
ஆனால் கட்டுப்பாடுகள் எல்லாம் கட்டவிழ்க்கும் நாள் வரும் தானே..!!
மதுவும் அவன் உருகலில் உருகிக் கரைந்து, “சரி நான் வேலைக்குப் போகல… போதுமா…”எனச் சொல்ல
“தேங்க்ஸ்டா என் மதுன்னா என் மது தான்” என்றான்.
அவன் வேலைக்குச் சென்றப் பின் தனிமையில் யோசனைகள் பலமாய் இருந்தன மதுவுக்கு.
‘முன்னர் தான் வேலைக்குப் போக எவன் அனுமதி வேண்டும் என நினைத்தது எங்கே..? இன்று கணவனின் கையணைப்பில் அவனிடம் கட்டுண்டு கிடப்பது எங்கே..? வீட்டில் எதிர்த்து எதிர்த்துப் பேசியவள் இங்கே அவனிடம் அடங்கி கிடப்பது எதனால்..? யோசனைகள் தாக்க எண்ண சுழல்களில் சிக்கினாள். அவளை மேலும் யோசிக்க விடாமல் அவர்களின் வீட்டினர் அழைப்பேசி மூலமாய் அழைக்க, அவர்களோடு பேசுவதில் மூழ்கினாள்.
மாலையில் வீட்டிற்கு வந்த ராஜா உள்ளே நுழைந்ததுமே மனைவியைத் தேடி அவள் மடி சாய்ந்தான்.
“அப்புறம்… மது எப்படி போச்சு இன்னிக்கு…என்னை மிஸ் பண்ணியா…?”
“மிஸ் பண்ணாம தான் அத்தனை தடவ கால் பண்ணினேனா…. நீங்க இல்லாம செம போர்… எனக்குப் பிடிக்கவே இல்ல…”
“சாரிடாம்மா… போன் செஞ்சு உங்கிட்ட பேசினேன் வைச்சிக்கோ என்னால் அப்புறம் கன்ட்ரோலா இருக்க முடியாதே…. உன்னைப் பார்க்கனும்.. பேசனும்… இப்படி படுத்துக்கனும்… இப்படி அணைச்சிக்கனும்னு தோணும்.. அதான்… அது மட்டுமில்லாம பாடும்போது அந்த கேரக்டரை உள்வாங்கிப் பாடனும்.. சோ வேற டிஸ்ட்ராக்ஷன்ஸ் இருக்கக் கூடாது…”
“ம்ம்ம்..”
“அப்புறம் இன்னொன்னு தெரியுமா.. நான் இதுவரைக்கும் இவ்வளவு நல்லா பாடினதே இல்லையாம்..? டைரக்டர் சொல்றார்… இன்னிக்குக் கொடுத்த லவ் சாங்கை அப்படி பாடினேனாம்… உருகி உருகி…. எல்லாம் உன்னை நினைச்சான்னு கேட்டு ஒரே கிண்டல் தான்…. ஆனா அதான் உண்மையும் கூட…. நீ என்னை மாத்திட்டே இருக்க மது..” என அவன் சொல்ல, அவளுக்குமே அதே எண்ணம்.