மௌனத்தின் மறுபக்கம்.
ஆரம்பம் முதல் முடிவு வரை, கதையை மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் நகர்த்தி கொண்டு சென்று உள்ளீர்கள். அனுவுடைய தடுமாற்றத்தை சொன்னவர், அதன் எல்லையை சொல்லவில்லை, ஆனால் ராகினியிடம் பேசும் இடத்தில் கோடிட்டு காட்டி, அதுக்கு ஒரு வரையறையை காட்டி விட்டர்கள்.
ஷ்யாம் , மனைவியின் தடுமாற்றம் தெரிந்து தடுமாறும் இடங்கள் பாவமாக இருந்தது. நிச்சயமாக அவனுடைய கணவன் ,தோழன் என்ற இடத்தில வாங்கும் அடி . அதை அவன் சமாளிக்கும் விதம் அருமை.
ஒழுக்க கேடு என்ற விஷயம், எப்போதும் இலை மறை காயாக மறைந்து இருக்கத்தான் செய்கிறது. இது ஆண் , பெண் இருபாலாரிலும் உண்டு. அதை மறைத்து வாழ்க்கையை வாழ்பவர்களும் உண்டு. குழந்தைகள் நலன், குடும்பத்துக்காக அதை கடந்து தான் வாழ்கிறார்கள். அது தான் உண்மை நிலை.
உங்கள் கதை படி, அனு இன்னும் , கணவனிடமும் காதலை உணரவே இல்லை. ஈர்ப்பு என்னும் இடத்தில தான் இருக்கிறாள். அப்படி இருந்திருந்தால் நிகிலை தள்ளி நிறுத்தியிருப்பாள்.
நிகில் மேலும் ஒரு ஈர்ப்பு தான், அது இரண்டு பெண்குழந்தைகள் அம்மா, ஒருவனுக்கு மனைவி என்ற ஸ்தானங்கள், சமூக கட்டமைப்பு அவளை அதற்கு மேல் செல்ல விடவில்லை. நிகிலுக்கு எங்கோ ஹோப் கொடுத்திருக்கோமே என்ற மன உளைச்சல் , அவளை தற்கொலை வரை தூண்டுகிறது.
நிச்சயமாக இன்றைய கால கட்டத்துக்கு தேவையான கதை தான்.
ஆணோ, பெண்ணோ குடும்ப சூழல், முன்னிறுத்தி தான், இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தன் மனதை அலைபாய விடாமல் இருக்கவும், தேவையான இடத்தில், நமக்கு பிடித்தவராக இருந்தாலும் கடுமை காட்டவும் தெரிந்திருக்க வேண்டும் , என்ற பாடமும் உள்ளது.
நம்முடைய ரியாக்சன் தான் , நமது கேரக்டரை மற்றவரிடத்தில் கட்டமைக்கும். அதை சொன்ன விதமும் அருமை.
கத்தி மேல் நடக்கும் நிலை, ஒரு எழுத்தாளராக மிகவும் சிறப்பாக, வாசகரும் ஏற்று கொள்ளும் விதமாக கதையை கொண்டு சென்று இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.